Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா .....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா ...?
 
ஒவ்வரு நாளும் உலகில் உள்ள ஓவரு மனிதரும் வாழ்விற்காக எதோ ஒருவகையில் போராடி கொண்டுதான் இருக்கிறோம்.
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பிடித்தமாக அமைவதில்லை என்று பலரும் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்.
 பிடித்தமாக ..? என்றால் என்ன ..? 
வாழ்க்கை பிடிக்காவிட்டால் தற்கொலை செய்து இறந்துபோகும் வசதி எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன்.
ஆக தற்கொலை செய்யாது எல்லோரும் வாழ்வதால் ...
எல்லோருக்கும் வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று கொள்ளலாமா ?
இப்போதைய காலகட்டம் பிடிக்காது போனாலும் .....
எதிர்கால நாட்களை எமக்கு பிடித்ததாக அமைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு போராட்டமாக வாழ்கையை கொண்டிருக்கிறோம். 
வசதியான வாழ்வு அமைப்பது என்பதற்காக பலரும் போராடுகிறோம்.
இதில் வசதி எனும் சொல் ஆளுக்கு ஆள் வித்தியாசமான பொருளை கொடுக்கும்.
ஒருவருடைய கடந்த கால வாழ்வு தற்போதைய வாழ்வின் சூழ்நிலை என்பது "வசதி" எனும் சொல்லின் அர்த்தத்தை மாற்றிகொள்கிறது.
இதிலும் சில மனிதர் புதிராக இருக்கிறார்கள் .....
வசதியான வாழ்வு உடையவர் என்று பலர் பார்த்து சொல்லும்  வாழ்வை கொண்டிருந்த சிலர் 
மற்றவர்கள் வசதியாக இல்லையே ....??
என்று தமது வசதியை துறந்து மற்றவர்கள் வசதி பெறுவதற்கு போராடுகிறார்கள் அல்லது சேவை செய்கிறார்கள். 
எல்லா வசதியும் இருந்த புத்தர் அனைத்தையும் துறந்து ஆன்மீகவாதியாகி அடுத்தவருக்கு வழி காட்டியாக மாறினார்.
அதே புத்தரை எமக்கு வரம்தாரும் என்று கேட்டு அவரை கடவுளாக வணங்கும் மனிதர்கள். ... ..  வரமாக.... இருக்கும் நிலையில் இருந்து 
அடுத்த நிலைக்கு குத்துகரணம் அடிக்கும் வசதியைதான் கேட்கிறார்கள்.
அனைத்தையும் துறந்து இருக்கும் புத்தரால் மனிதர்களுக்கு எதை கொடுக்க முடியும் ...?
புத்தரிடம் இருப்பது தூய்மையான மனம் ஒன்றே ...... அதை புத்தரை வணங்கும் எத்தனை மனிதர் பெற தயாராக இருக்கிறார்கள் ?
புத்தருக்கு பிடிக்கதுபோய் ..... புத்தரே தூக்கி எறிந்துவிட்டு போன வசதியான வாழ்வு வேண்டும் என்று 
புத்தரை தேடி சென்று பல மனிதர்கள் நாளும் கேட்கிறார்கள்.
இது ஒரு முரண்பாடாக இருக்கிறது இல்லையா ......??
 
நான் என்ன சொல்லவருகிறேன் ...... என்று குழப்பாமாக உங்களுக்கு இருக்கலாம்.
முற்றையும் துறந்து .... மனிதன் நித்திய சாந்தி அடைவதன் மூலமே 
நிரந்தரமான மகிழ்ச்சியை வாழ்வில் எட்டமுடியும். அதுதான் வாழ்வின் பூரணம்.
இன்று தொடங்கிய புத்த மதம் இன்று ...
வசதியான வாழ்வை தேடும் மனிதருக்கு ஒரு கோவிலாக மாறி .... நாளும் நாளும் வசதி வேண்டும் என்று கேட்டு வணங்கும் மனித கூட்டத்தால் நிறைந்து வழிகிறது. 
மனிதன் முரண்பட்டு நிற்கிறான்!
முரண்பாடு என்பதும் வாழ்வின் ஓர் அங்கமா ??
கெட்டது என்று பலர் சொல்லும் மதுவை நான் பலமுறை குடித்திருக்கிறேன் ....
இனியும் குடிப்பேன். நண்பர்களுடன் கூடினால் அவர்களோடு சேர்ந்து அதை குடித்து கொள்கிறேன்.
அது எந்த கெடுதலையும் எனக்கு இதுவரை செய்யவில்லை....
அதை குடிப்பதால் எந்த கெடுதலையும் நான் யாருக்கும் செய்ததும் இல்லை.
அதனால் நான் இனியும் அதை குடிக்கலாம் என்று நம்புகிறேன்.
உலகில் இன்னொரு மனித கூட்டம் என்னை மது குடிப்பவர் என்று தள்ளிவைக்கவோ அல்லது கேவலமாக பார்க்கவோ கூடும்.
 
எது சரி ........?
எது பிழை ..........?
என்பதை எது தீர்மானிக்கிறது என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது.
 
தற்செயலாக கீழே இருக்கும் வீடியோவை பார்த்தேன் ...
பின்பு இவருடைய எல்லா வீடியோவையும் பார்த்தேன் ...
இவர் ஒரு யாழ்பாண தமிழர் என்பதை இவருடைய வீடியோக்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
இவருடைய பிள்ளையின் வாழ்வின் தேடல் எதுவாக இருக்கும்?
என்றொரு கேள்வி எனக்குள் பிறந்தது .............
எனது பிள்ளை வசதியாக இருக்க வேண்டும் என்று நான் இப்போதே பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன் என்பதால்.
எனது பிள்ளை எந்த குளத்தில் தொலைந்துபோகும் .........?
என்று ஒரு கேள்வி எனக்குள் வர தொடங்கியது.
 
 
கீழே இருக்கும் வீடியோவை 
நேரம் இருந்தால் ஒருமுறை பாருங்கள் 
உங்களுக்கு உங்கள் மனதில் வரும் எண்ணங்களை முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
உங்கள் எண்ணங்கள் தனக்கும் வேண்டுமாம் என்று இந்த பிள்ளை சொல்கிறது விரும்பினால் யூ ட்டுப் சென்று அவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இவை அனைத்தும் யூ டூப் தளத்தில் புப்ளிக்காக இருப்பதால் 
நான் எந்த பிரைவசி மீறலையும் செய்யவில்லை என்று நம்புகிறேன். 
இன்னொரும் ஒரு வீடியோ இதில் இன்னொரு .....
எனக்கு சிந்தனையை தூண்டும் விடயம் இருக்கிறது.
உங்களில் சிலருக்கும் அது புரியலாம். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா ...?
 
ஒவ்வரு நாளும் உலகில் உள்ள ஓவரு மனிதரும் வாழ்விற்காக எதோ ஒருவகையில் போராடி கொண்டுதான் இருக்கிறோம்.
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பிடித்தமாக அமைவதில்லை என்று பலரும் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்.
 பிடித்தமாக ..? என்றால் என்ன ..? 
வாழ்க்கை பிடிக்காவிட்டால் தற்கொலை செய்து இறந்துபோகும் வசதி எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன்.
ஆக தற்கொலை செய்யாது எல்லோரும் வாழ்வதால் ...
எல்லோருக்கும் வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று கொள்ளலாமா ?
இப்போதைய காலகட்டம் பிடிக்காது போனாலும் .....
எதிர்கால நாட்களை எமக்கு பிடித்ததாக அமைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு போராட்டமாக வாழ்கையை கொண்டிருக்கிறோம். 
வசதியான வாழ்வு அமைப்பது என்பதற்காக பலரும் போராடுகிறோம்.
இதில் வசதி எனும் சொல் ஆளுக்கு ஆள் வித்தியாசமான பொருளை கொடுக்கும்.
ஒருவருடைய கடந்த கால வாழ்வு தற்போதைய வாழ்வின் சூழ்நிலை என்பது "வசதி" எனும் சொல்லின் அர்த்தத்தை மாற்றிகொள்கிறது.
இதிலும் சில மனிதர் புதிராக இருக்கிறார்கள் .....
வசதியான வாழ்வு உடையவர் என்று பலர் பார்த்து சொல்லும்  வாழ்வை கொண்டிருந்த சிலர் 
மற்றவர்கள் வசதியாக இல்லையே ....??
என்று தமது வசதியை துறந்து மற்றவர்கள் வசதி பெறுவதற்கு போராடுகிறார்கள் அல்லது சேவை செய்கிறார்கள். 
எல்லா வசதியும் இருந்த புத்தர் அனைத்தையும் துறந்து ஆன்மீகவாதியாகி அடுத்தவருக்கு வழி காட்டியாக மாறினார்.
அதே புத்தரை எமக்கு வரம்தாரும் என்று கேட்டு அவரை கடவுளாக வணங்கும் மனிதர்கள். ... ..  வரமாக.... இருக்கும் நிலையில் இருந்து 
அடுத்த நிலைக்கு குத்துகரணம் அடிக்கும் வசதியைதான் கேட்கிறார்கள்.
அனைத்தையும் துறந்து இருக்கும் புத்தரால் மனிதர்களுக்கு எதை கொடுக்க முடியும் ...?
புத்தரிடம் இருப்பது தூய்மையான மனம் ஒன்றே ...... அதை புத்தரை வணங்கும் எத்தனை மனிதர் பெற தயாராக இருக்கிறார்கள் ?
புத்தருக்கு பிடிக்கதுபோய் ..... புத்தரே தூக்கி எறிந்துவிட்டு போன வசதியான வாழ்வு வேண்டும் என்று 
புத்தரை தேடி சென்று பல மனிதர்கள் நாளும் கேட்கிறார்கள்.
இது ஒரு முரண்பாடாக இருக்கிறது இல்லையா ......??
 
நான் என்ன சொல்லவருகிறேன் ...... என்று குழப்பாமாக உங்களுக்கு இருக்கலாம்.
முற்றையும் துறந்து .... மனிதன் நித்திய சாந்தி அடைவதன் மூலமே 
நிரந்தரமான மகிழ்ச்சியை வாழ்வில் எட்டமுடியும். அதுதான் வாழ்வின் பூரணம்.
இன்று தொடங்கிய புத்த மதம் இன்று ...
வசதியான வாழ்வை தேடும் மனிதருக்கு ஒரு கோவிலாக மாறி .... நாளும் நாளும் வசதி வேண்டும் என்று கேட்டு வணங்கும் மனித கூட்டத்தால் நிறைந்து வழிகிறது. 
மனிதன் முரண்பட்டு நிற்கிறான்!
முரண்பாடு என்பதும் வாழ்வின் ஓர் அங்கமா ??
கெட்டது என்று பலர் சொல்லும் மதுவை நான் பலமுறை குடித்திருக்கிறேன் ....
இனியும் குடிப்பேன். நண்பர்களுடன் கூடினால் அவர்களோடு சேர்ந்து அதை குடித்து கொள்கிறேன்.
அது எந்த கெடுதலையும் எனக்கு இதுவரை செய்யவில்லை....
அதை குடிப்பதால் எந்த கெடுதலையும் நான் யாருக்கும் செய்ததும் இல்லை.
அதனால் நான் இனியும் அதை குடிக்கலாம் என்று நம்புகிறேன்.
உலகில் இன்னொரு மனித கூட்டம் என்னை மது குடிப்பவர் என்று தள்ளிவைக்கவோ அல்லது கேவலமாக பார்க்கவோ கூடும்.
 
எது சரி ........?
எது பிழை ..........?
என்பதை எது தீர்மானிக்கிறது என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது.
 
தற்செயலாக கீழே இருக்கும் வீடியோவை பார்த்தேன் ...
பின்பு இவருடைய எல்லா வீடியோவையும் பார்த்தேன் ...
இவர் ஒரு யாழ்பாண தமிழர் என்பதை இவருடைய வீடியோக்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
இவருடைய பிள்ளையின் வாழ்வின் தேடல் எதுவாக இருக்கும்?
என்றொரு கேள்வி எனக்குள் பிறந்தது .............
எனது பிள்ளை வசதியாக இருக்க வேண்டும் என்று நான் இப்போதே பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன் என்பதால்.
எனது பிள்ளை எந்த குளத்தில் தொலைந்துபோகும் .........?
என்று ஒரு கேள்வி எனக்குள் வர தொடங்கியது.
 
 
கீழே இருக்கும் வீடியோவை 
நேரம் இருந்தால் ஒருமுறை பாருங்கள் 
உங்களுக்கு உங்கள் மனதில் வரும் எண்ணங்களை முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
உங்கள் எண்ணங்கள் தனக்கும் வேண்டுமாம் என்று இந்த பிள்ளை சொல்கிறது விரும்பினால் யூ ட்டுப் சென்று அவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

அந்த பிள்ளை எனது மருமகள் .மற்றவர்கள்  எனது மச்சாள்மார்களும் மருமக்களும் மருதர். :o

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி மருது...!   அந்த புல்லாங்குழல் வாசிப்பும் நன்று...!! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி மருது...!   அந்த புல்லாங்குழல் வாசிப்பும் நன்று...!! :)

அது  யாழ்பாணம் நாயன்மார்கட்டில் இருந்து .........

அந்த பிள்ளை எனது மருமகள் .மற்றவர்கள்  எனது மச்சாள்மார்களும் மருமக்களும் மருதர். :o

எனக்குள் பல சிந்தனைகளை விதைக்கிருக்கிறார் .....
கல்வியிலும் முன்னேற்றமாக இருக்கிறாரா ?
இருக்கவேண்டும் என்று எதிர்பார்கிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

நான் நீச்சல் பழகிய குளங்களில் நாயன்மார்கட்டு பிள்ளையார் கோவில் குளமும் ஒன்று...! முதல் அதை சரியாய்க் கவனிக்கவில்லை...!! இப்ப விளங்குது...!!!

 

நன்றி மருது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.