Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகவரி இடப்படாத கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
முகவரி இடப்படாத கடிதம்
 
முகவரி இடப்படாத கடிதம் இது
முடிந்தால் எவராவது 
உரியவரிடம் சேர்ப்பிப்பீர்களா?
 
ஓலமிட்டு அழுகின்றோம்
ஓடி ஓடி நீதி கேட்கின்றோம்
ஆனால் எந்த விழிகளிலும்
மனித நேயத்தை காணமுடியவில்லையே.
 
மார்ச் எட்டு என்றவுடன்
உலகமெங்கும் 
அனைத்துலக பெண்கள் நாள்
ஆடம்பரமாக கொண்டாடப்படும்.
ஆனால் ஒடுக்கப்பட்டோர் எம் குரல் கேட்க
உலகில் எவருக்கும் நேரமில்லை.
 
காணாமல் போகடிக்கப்பட்டவர்கள்
எங்கள் உறவுகள்.
கணவன்,மகன்,தந்தை என
நாங்கள் எங்கள் உறவுகளைத் தேடுகின்றோம்
 
ஆறு ஆண்டுகளாக உளவலிகளால் 
அலைந்து உலைந்து கொணடிருக்கின்றோம்
அழுது அரற்றுகின்றோம்.
எந்த நாட்டுப் பிரதிநிதி வந்தாலும்
ஓடி ஓடி அவர்களிடம்
எங்கள் நிலைமையை எடுத்தரைத்து
எவராவது எம் உறவுகளைத் 
தேடித்தர உதவ மாட்டார்களா என
ஏக்கத்துடன் அவர்களைப் பார்க்கின்றோம்.
எங்களின் ஓலம் 
எவர் செவிகளையும் எட்டவில்லையே
 
காணாமல் போகடிக்கப்ட்ட உறவுளைத் தேடி
உலகத்தின் காதுகளுக்கு உண்மை சொன்னதால்
பிடித்துச் செல்லப்பட்டவர்களுக்கு 
என்ன நடந்தது என்பதும் தெரியாமல்
எங்களுக்கும் அந்த நிலை வரலாம் 
என்ற உண்மை தெரிந்தாலும்
எங்கள் உறவுகளைத் தேடி 
நீதிகேட்டு அலைகின்றோம்
 
வேண்டுமென்றே விழி மூடி
செவி அடைத்தவர்களிடம் தான்
நாங்கள் நீதி கேட்கின்றோம் என்ற
உண்மை நிலைமை புரிந்தாலும்
நாளும் பொழுதும் அழுது அழுது
அவலநிலைமையை சொல்கின்றோம்.
 
இன்னும் எவ்வளவு காலம் 
இப்படியே நாங்கள்
இரக்கமற்றவர்களிடம் இறைஞ்சுவது
 
 
எதுவுமே புரியாமல்
மீண்டும் மீண்டும் நீதிகேட்டு
வீதிகளில் இறங்கிப்போராடுகின்றோம்
 
இனி அழுதிடக் கண்ணீருமில்லை
இதயத்தில் வலுவுமில்லை
உயிரற்ற வெறும் மனிதக்கூடுகளாக
மெல்ல மெல்ல ஒடுங்கும் எங்கள் நிலையை 
எண்ணிப்பார்க்க எவருக்கும் 
நேரமுமுமில்லை இதயமும் இல்லை.
 
இனி முடியவில்லை
அதனால் 
இந்த முகவரி இல்லாத கடிதத்தை
எங்கள் கண்ணீரால் எழுதுகின்றோம்
எஞ்சிஇருக்கும் உள்ளவலுவை
முழுவதுமாக திரட்டி 
இந்த அஞ்சலை அனுப்புகின்றோம்
 
முடிந்தால் மனித நேயமுள்ள 
எவரையாவது யாராவது சந்தித்தால்
மறக்காமல் இதனை 
அவர்களிடம் சேர்ப்பித்துவிடுங்கள்
உள்ளம் நொந்து நைந்து 
நாங்கள் சாவதற்கிடையில்
எவராவது விழி திறந்தால்
எமக்கு நீதி கிடைக்கும்.
காணாமல் போகடிக்கப்பட்ட
எங்கள் உறவுகளை நாங்கள்
உயிருடன் உள்ள போதே
காணுவோம் என்ற நம்பிக்கை
ஊசலாட காத்திருக்கின்றோம்
 
 
மந்தாகினி
 
 
 
 

 

 
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி. நல்ல வரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மனதிலிருந்து பெருகிவரும் வார்த்தைகள் ஆனால் அவற்றை காது கொடுத்துக் கேட்பதற்குத்தான் யாரும் இல்லை இவ்வுலகில்... இந்த உலகம் வலிப்பட்டவர்களுக்காக பேசாது வல்லமை உள்ளவர்களையே கண்டுகொள்ளும். இது மனிதம் செத்தபூமி அதனைத்தேடிக்கொண்டிருந்தால் காலங்கள் கடப்பதைத்தவிர வேறு எதுவும் நடக்காது. மந்தாகினி உங்கள் கவிதையைப்பார்த்ததும் எனக்குள் எழுந்த ஆற்றாமை, கோபத்தை.... மானுடம் செத்தவர்களிடம் எதிர்பார்த்து ஏமாந்த கணங்களை எல்லாம் விரக்தியோடு மீளப்பார்க்க வைக்கின்றன..... நல்ல எழுத்து..... வளர்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி. நல்ல வரிகள்

 

நன்றி. ஆற்றாமையும், வேதனையும் என்னை இதனை எழுதவைத்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதிலிருந்து பெருகிவரும் வார்த்தைகள் ஆனால் அவற்றை காது கொடுத்துக் கேட்பதற்குத்தான் யாரும் இல்லை இவ்வுலகில்... இந்த உலகம் வலிப்பட்டவர்களுக்காக பேசாது வல்லமை உள்ளவர்களையே கண்டுகொள்ளும். இது மனிதம் செத்தபூமி அதனைத்தேடிக்கொண்டிருந்தால் காலங்கள் கடப்பதைத்தவிர வேறு எதுவும் நடக்காது. மந்தாகினி உங்கள் கவிதையைப்பார்த்ததும் எனக்குள் எழுந்த ஆற்றாமை, கோபத்தை.... மானுடம் செத்தவர்களிடம் எதிர்பார்த்து ஏமாந்த கணங்களை எல்லாம் விரக்தியோடு மீளப்பார்க்க வைக்கின்றன..... நல்ல எழுத்து..... வளர்க.

 

இன்று அனைத்துலகபெண்கள்நாள். இன்று என்ன நடக்கும் என யோசித்தேன். வாழ்த்துக்கள்,சாதனையாளர்கள் தகவல் சொல்லுதல்,பெண்களை உயர்த்தி கூறுதல்,பெண்கள் மாநாடு என ஊடகங்கள் உட்பட பல நாடகங்கள் அரங்கேறும்.இதனை நினைத்தேன். 

எங்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்பற்றி பேச ஒருவருக்கும் நேரமில்லை. காணாமல்போகடிக்கப்பட்ட தங்கள் உறவுகளைத்தேடி கண்ணீருடன் நீதிகேட்டு அலையும் எங்கள் உறவுகளைப்பற்றி யோசிக்க எவருக்கும் மனமில்லையே. அவர்களின் உள்ளவலிகளை புரிந்துகொள்ள எவருமேயில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

ஒலமிட்டு அழுதாலும் ஓடிஓடி நீதி கேட்டாலும் பதில் மட்டும் பூச்சியம் தான். மனிதத்தை இழந்து விட்ட மகத்தான பூமி இது. இங்கு பெண்களை வெறும் போகப் பொருளாக பார்ப்பவர்கள்தான் அதிகம். மகளிர் தினம் இழப்புக்களையோ வேதனைகளையோ தணிக்கப் போவதில்லை. எம் மண்ணில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை செய்திகளாகத்தான் பார்ப்பார்களே அன்றி அதற்கு எந்த நிவாரணமும் செய்ய அரசாங்கம் முயற்சி எடுக்காது. ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம். முகவரி இல்லாத கடிதம் என்றுமே உரிய இடம் போய்ச் சேரப் போவதில்லை. நல்ல கவிதை பாராட்டுக்கள் மந்தாகினி.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான காலம் ஒன்று வரும் என்று நம்புவோம்

அதைத்தவிர வேறு எதுவும் இல்லாதநிலை...

 

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி

பாராட்டுக்களும் நன்றிகளும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலமிட்டு அழுதாலும் ஓடிஓடி நீதி கேட்டாலும் பதில் மட்டும் பூச்சியம் தான். மனிதத்தை இழந்து விட்ட மகத்தான பூமி இது. இங்கு பெண்களை வெறும் போகப் பொருளாக பார்ப்பவர்கள்தான் அதிகம். மகளிர் தினம் இழப்புக்களையோ வேதனைகளையோ தணிக்கப் போவதில்லை. எம் மண்ணில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை செய்திகளாகத்தான் பார்ப்பார்களே அன்றி அதற்கு எந்த நிவாரணமும் செய்ய அரசாங்கம் முயற்சி எடுக்காது. ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம். முகவரி இல்லாத கடிதம் என்றுமே உரிய இடம் போய்ச் சேரப் போவதில்லை. நல்ல கவிதை பாராட்டுக்கள் மந்தாகினி.

ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம் என நாம் சோர்ந்துவிடாமல் என்னஎன்ன வழிகள் உண்டு என தேடினால் நல்ல வழி ஒன்று கண்ணில் தென்படலாம் என்ற நம்பிக்கையுடன்தான் தாயகத்தில் எம் உறவுகள் தாங்களே அந்த வழியைத்தேடி புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதிலாவது ஒன்றுபட்டால் நல்லது.நடக்குமா ?

எமக்கான காலம் ஒன்று வரும் என்று நம்புவோம்

அதைத்தவிர வேறு எதுவும் இல்லாதநிலை...

 

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி

பாராட்டுக்களும் நன்றிகளும்..

நன்றி. எங்கள் மக்களுக்கு ஒரு நல்ல காலம் வரும். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் சில நாட்களாக தாயகத்தில் இயல்பாக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் என் எண்ணுகின்றேன்

நன்றி. எங்கள் மக்களுக்கு ஒரு நல்ல காலம் வரும். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் சில நாட்களாக தாயகத்தில் இயல்பாக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் என் எண்ணுகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கொரு காலம் வரும்.  இல்லையெனில், நமக்கான காலத்தைச் செய்வோம்.

நற்கவிதைக்கு வணக்கம்.

சொற்களைக் கொஞ்சம் சுருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.