Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்தமிழர்கள் இலங்கைக்கு வரவேண்டாம்-சுரேஸ்பிரேமசந்திரன் அறிவுரை - சிலோன் ருடே-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிருதுளா தம்பையா - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

suresh-premachandran_CI.jpg

 

கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள்
 
அவர்கள் நம்பிக்கையுடன் நாடு திரும்பியபோதிலும், விமான நிலையத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம், அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் அவர்கiளை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. அவர்கள் பல மணிநேரங்களுக்கு மேல் விசாரிக்கப்பட்டு உள்ளனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் மீதான கண்காணிப்பு தொடர்கின்றது.
 
புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்கு திரும்பி இயல்பு வாழ்கையை வாழலாம் என புதிய அரசாங்கம் பல தடவை தெரிவித்திருந்தது.எனினும் அவர்கள் இங்கு வந்தவுடன் எதிர்கொள்ளும் அனுபவம் வேறுமாதிரியானதாக காணப்படுகின்றது.
 
இலங்கை மாற்றமடைந்துள்ளது, ஜனநாயகம் மலர்ந்துள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது,அரசாங்கம் மாறியுள்ளது ஆனால் நிர்வாக முறை மாறவில்லை
 
இலங்கை அரசாங்கம் புலம்பெயர்களை நாடுதிரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளது,நாட்டில் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக அது குறிப்பிடுகின்றது, எனினும் உண்மையில் மாறியுள்ளது அரசாங்கமே தவிர அதன் நிர்வாக முறையில் எந்த வித மாற்றங்களும் எற்படவில்லை. அதேநபர்கள் அதே மனோநிலையுடன் அப்பதவிகளில் காணப்படுகின்றனர்.என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சிலோன் ருடேயிற்கு தெரிவித்தார்.
 
இலங்கைக்கு திரும்ப வேண்டாமென புலம்பெயர் தமிழர்களுக்கு நான் ஆலோசனை வழங்கவிரும்புகிறேன், இங்கு வருவதில் எந்தவித பலனுமில்லை.10 நாட்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து ஓரு குடும்பம் இலங்கை வந்தது. அவர்கள் விமான நிலையத்தில பல மணிநேரமாக தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதிகாரிகள் அவர்களிடம் விசாரணைசெய்த பின்னர் இறுதியில் அவர்களை விடுவித்துள்ளனர். என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
 
குறிப்பிட்ட குடும்பம் யாழ்ப்பாணம் சென்ற வேளை, அவாகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் பின் தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாங்கள் இலங்கைக்கு வந்தது குறித்து ஏமாற்றமடைந்துள்ளனர். மிரட்டப்பட்டதாக கருதுகின்றனர்.
 
அவர்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழவொன்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது, அங்கும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்றதுடன் அவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
 
இதன் காரணமாக அச்சம் கொண்ட குடும்பத்தினர் என்னை தொடர்புகொண்டனர். நான் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரை தொடர்பு கொண்டவேளை குறிப்பிட்ட குடும்பம் குறித்து தங்களுக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என  தெரிவித்தனர் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
 
இதன் பின்னர் தான் குறிப்பிட்ட குடும்பத்தினரை தொடர்புகொண்டு கனடா தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டதாகவும், தூதரகம் அந்த குடும்பத்தினர் அச்சுறுத்தப்படுவதால் அவர்களை இலங்கையிலிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தியதாகவும் சுரேஸ்பிரேமசந்திரன் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் உண்மையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாததால் புலம்பெயர் தமிழர்களை  இலங்கைகு வருவதை தவிர்க்குமாறு தான் கடுமைiயான ஆலோசனையை வழங்குவதாவும் அவர் குறிப்பிட்டார்.
 
புலம்பெயர் தமிழர்கள் இங்கு வந்தால் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்புமில்லை, மேலே குறிப்பிட்ட குடும்பத்தினரை தனியான ஓரு இடத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர். அது பொலிஸ் நிலையமுமில்லை, இதன் காரணமாக இலங்கை திரும்பும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.
 
கடற்புலிகள் அமைப்பில்  இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 41 வயது பெண் அவரது குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஸ் பிரேமசந்திரன்  உண்மையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரா என்பது தெரியாது, எனக்கு தெரிந்த அளவில் அவர் ஒரு பிரான்ஸ் பிரஜை, அங்கு பிறந்த எட்டு வயது குழந்தையுடன் இலங்கை வந்தவர், அந்த குழந்தையும் எவ்வாறு விடுதலைப்புலியாக முடியும்,
 
பகீரதியை பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுடன் பேசுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவேண்டும்,ஆனால் அவர்கள் அவரை ஜனநாயக வழியில் நடத்தவில்லை,அவர் சட்டத்தரணியொருவரை வைத்திருப்பதற்கு கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.
 
புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலை குறித்து நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை, மாறாக புலம்பெயர்ந்த தமிழர்களi இலங்கை வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை இந்த சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னைய அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் இந்த விடயங்களை பார்க்கும் விதத்தில் வித்தியசமுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் இந்தவிடயத்தை அணுகவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார். இது குறித்து தான் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்போவதாகவும் அவா குறிப்பிட்டுள்ளார்.
 
 
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117364/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பாலும் தேனும் run பன்னபோவதாய் கதை கட்டியவர்கள் வருசையில் வரவும்!   அப்படியே இலவு காத்த கிளிகள் அடுத்த பக்கம் ஓரமாய்  :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மாற்றமடைந்துள்ளது, ஜனநாயகம் மலர்ந்துள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது,அரசாங்கம் மாறியுள்ளது ஆனால் நிர்வாக முறை மாறவில்லை

இருந்தாலும் நம்பி ஏமாறவேண்டியது நம் கடமை.. :o

  • கருத்துக்கள உறவுகள்

பாலும் தேனும் run பன்னபோவதாய் கதை கட்டியவர்கள் வருசையில் வரவும்!   அப்படியே இலவு காத்த கிளிகள் அடுத்த பக்கம் ஓரமாய்  :D

 

 

என்ன இப்படி சொல்லிட்டீங்க

 

 

சுரேஸ்பிரேமசந்திரன் 

எடுத்த முடிவு எத்தனை நாளைக்கு நிலையானது என்ற அவரிடம் கேட்டுச்சொல்லுங்கள்

நானும் ஒருக்கா வாற மாசம் போகவேண்டியிருக்கு..

சுரேசின் ஒன்றுவிட்ட தம்பி எனது நண்பர் .ஒவ்வொருவருடமும் இலங்கை சென்றுவருவார்.

போன மாதம் தான் போய் சுற்றியடித்துவிட்டு வந்தார் .

 

எனது குடும்பத்திலும் இருவர் இப்போ நாட்டில் தான் நிற்கின்றார்கள் .

மக்களுக்கு  சேவை  செய்பவர்கள்  கண்டிப்பா  அங்கு  போய் நின்று  நேரடியா  மக்களுக்கு  சேவை செய்ய  வேணும் அவரின் அழைப்பை  ஏற்று போவது  உகந்தது  ஆகும்  இல்லையா  :D

 

அப்புறம்  இங்க யாரு  ஈழத்தை கவனிப்பது  என்னும்  கேள்விக்கு என்னிடம் விடையில்லை சொல்லிட்டன்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
நான் நினைக்கிறேன் அவர் தமிழர்கள் பற்றிதான் பேசுகிறார் என்று .......
கடந்தவருடம் ஆயிர கணக்காக சீனர்கள் பலர் எந்த பிரச்சனையும் இல்லாது போய்வந்து இருக்கிறார்கள்.

சிலர் தம்மால் வாவ் வாவ் என்று காத்த முடிவதால் தாமும் நாய்கள் என்று நினைக்கிறார்கள். 
நன்றி விடயத்தில் பரிசோதிப்பது இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.