Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னேனே? :D amazingly predictable!!

  • Replies 108
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சில உறவுகளுக்கு இப்போது உள்ள சந்தோசம் என்னவென்றால்

 

தமிழ்க்கட்சிகளாலோ அல்லது தமிழ் அமைப்புக்களாலோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களாலோ போராடி ஜெயக்குமாரி அவர்கள்  விடுவிக்கப்படாமல்....

சில சிங்களவர்களின் போராட்டத்தினால் விடுவிக்கப்பட்டதுதான்.

 

அதற்காக சிங்களவர்களைத் தோளில் தூக்கி வைத்து ஊர்வலம் வருகின்றார்கள்.

 

என் இந்தச் சிங்களப்புரட்சியாளர்களால் இன்னும் சிறையில் இருக்கும்  ஒரு கண்ணம்மாவையோ
பொன்னம்மாவையோ அல்லது சிவகுமாரியையோ விடுதலை செய்ய முடியவில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்மாவோ, கண்ணம்மாவோ சிவகுமாரியோ சிறை மீண்டால் அதுவும் அநேகமாய் சிங்கள முற்போக்குவாதிகளால்தானாய் இருக்கும்.

போலிப் புலத்து தேசியவாதிகளால் இராது.-- ஏனெனில் பொன்னம்மாவும், கண்ணம்மாவும், சிவகுமாரியும் சிறையில் தொடர்ந்து இருந்தாலே இவர்களால் தற்கொலை/யாவார அரசியலை தொடர முடியுமாயிருக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்மாவோ, கண்ணம்மாவோ சிவகுமாரியோ சிறை மீண்டால் அதுவும் அநேகமாய் சிங்கள முற்போக்குவாதிகளால்தானாய் இருக்கும்.

போலிப் புலத்து தேசியவாதிகளால் இராது.-- ஏனெனில் பொன்னம்மாவும், கண்ணம்மாவும், சிவகுமாரியும் சிறையில் தொடர்ந்து இருந்தாலே இவர்களால் தற்கொலை/யாவார அரசியலை தொடர முடியுமாயிருக்கும்.

 

மைத்திரிக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யவேண்டாம் என்று மன்றாட்டமாகக் கேட்ட சுமந்திரன் அதற்குப்பதிலாக மைத்திரி மூலம்

ஏதாவது டீல் செய்து ஜெயக்குமாரி அவர்களை

வெளியே எடுத்திருக்கலாம் என்று  எனக்கு இன்னொரு சந்தேகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்படி நம்பவில்லை. ஆனால் ஏற்றுக்கொண்டது போல், மைத்திரி அரசியல் கைதிகளை படிப்படியாக விடுவித்தால் - நிச்சயமாக அது கூட்டமைப்பின் உழைப்பின் பலனாவே அமையும்.

சுமந்திரன் சும்மா கிடந்து இந்த பனங்கொட்டைகளுடன் மல்லுக்கட்டாமல் - மனோ தலைமையில், அசாத் சாலியையும், விக்ரமபாகுவையும் சேர்த்து தமிழர்களின் கோரிக்கை நியாயத்தை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு grass routes அமைப்பை தெற்க்கில் ஆரம்பிக்க வேண்டும்.

ஒன்று பட்ட இலங்கைக்குள் உச்சபட்ச சுயாட்சியை வடகிழக்கு பெறுவதால் சிங்கள நலன் ஒரு போதும் பாதிப்படையாது என்பதை, கிராமம் கிராமமாக எடுத்து சொல்ல வேண்டும், சிங்களத்தில்.

இப்படிச் செய்வதால் சுமந்திரனுக்கு எம்பி சீட் வெல்ல முடியாமல் போகும். கள்ள பாஸ்போர்ட், கள்ள மட்டைக் கூட்டம் எல்லாம் "பின் கதவு எம்பி" என்று பழிக்கும் நிலை வரும். ஆனாலும் நீண்ட காலநோக்கில் இது ஒட்டு மொத்த சமூகத்தையே, நாட்டையே நல்லவழிப் படுத்த உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று பட்ட இலங்கைக்குள் உச்சபட்ச சுயாட்சியை வடகிழக்கு பெறுவதால் சிங்கள நலன் ஒரு போதும் பாதிப்படையாது என்பதை, கிராமம் கிராமமாக எடுத்து சொல்ல வேண்டும், சிங்களத்தில்.

இப்படிச் செய்வதால் சுமந்திரனுக்கு எம்பி சீட் வெல்ல முடியாமல் போகும்.

 

நீங்கள் இப்படிக்கூறுகின்றீர்கள் ஆனால் சுமந்திரன் தெளிவாகத்தான் இருக்கின்றாரா?

அண்மையில் வடபகுதி மக்கள் தங்களின் நிலையில் தெளிவாக இருக்கின்றார் எனக் கூறியிருந்தாரே? அப்படி மக்கள் தெளிவாக இருந்தால் மக்களுக்கு வேண்டியதைக் கேட்டு வேண்டித்தரும் வல்லமையுள்ள சுமந்திரனுக்கு ஏன் எம் பி பதவி கிடைக்காது?

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். சுமந்திரன் என்ன கடவுளே வந்தாலும் தமக்கு வேண்டியதை கேட்டவுடன் தரும் நிலையில் தெற்கு இல்லை என்பது மக்களுக்கும் தெரியும், சுமந்திரனுக்கும் தெரியும்.

ஆனால் தேர்தல் அரசியல் என்பது அப்படியல்ல. கூட்டமைப்பு என்பது பல வகை மனிதர்களின் சுயநலக் கலவை. கூடவே சாதி, மத, ஊர் ரீதியான வாக்கு விகிதமும் உண்டு. கட்சிப் பலமும் உண்டு.

குறிப்பாக யாழ்ப்பாண எம்பிகளை எடுத்தால் - மாவை, சுரேஸ், விநாயகமூர்த்தி, சிறீதரன்,சரவணபவன்,அலண்டீன், சந்த்ஹிரகுமார், விஜயகலா, டக்கிளஸ்.

இதில் இப்போ 5 சீட் ஆகப் போகுது. அநேகமாக டக்கிளசுக்கு ஒரு சீட் (ஊர்காவற்துறை) நிச்சயம். ஆனால் விஜயகலாவிடம் இருந்து கடும் போட்டி இருக்கும் ( காரைநகர் வாக்குகள்). மிச்சம் 4 சீட்டிற்கு, மாவை, சிறீதரன் நிச்சயம் (காங்கேசந்துறை, கிளிநொச்சி). மீதமுள்ள 2 சீட்டுக்கு சரவணபவன்(பத்திரிகைப்பலம்), விநாயக மூர்த்தி(காங்கிரஸ்), சுரேஸ்(ஈபி) யுடன் அனந்தி(இப்பவே உண்ணாவிரதம் எண்டு தேர்தல் வேலையில் பிசி), சித்தர் (புளொட்டின் பலம், மானிப்பாய் வாக்குகள், தர்மரின் நற்பெயர்) இவ்வளவு பேரும் ஆசைப்படுவார்கள். கூடவே கஜன் கம்பேனி வேறு. எனவே கொழும்பான் என்று அறியப்படும், கட்சி பலமில்லாத, சுமந்திரனுக்கு யாழில் ஒரு தொகுதியை கொடுக்கும் நிலையில் கூட்டமைப்பு இல்லை என்பதுதான் கள யதார்தம்.

நடக்கும் தேர்தல் 2:1 எனும் ஒரு முறையில் நடக்கும் என்பது பலரின் ஊகம். அதாவது ஒரு மாவட்டம் 10 தொகுதி எம்பி களை கொண்டிருந்தால், 5 மாவட்ட எம்பிக்களை கொண்டிருக்குமாம். அப்படியாயின் யாழிற்க்கு 2 மாவட்ட, விருப்பு வாக்கு எம்பிக்கள் கிடைப்பர். அப்படிக் கிடைத்தால் அதில் மாவட்ட மொத்த விருப்பு வாக்குகள் கருதப்படுமாம். இதில் சுமந்திரன் வெல்ல வாய்ப்பிருக்கு.

இதையும் தவிர, 15 எம்பிக்கள் தேசிய பட்டியலில் வருவராம்.

ஆனால் இந்த 15 சீட்டில் ஒரு சீட்டை பெற கூட்டமைப்பு மொத்தமாக 15 சீட்டாவது பெற வேண்டி வருமாம். ஆகவே இதில் 1 சீட் தானும் கூட்டமைப்பு பெறுமா என்பது கேள்விக்குறியே.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் - சுமந்திரன் எம்பியாக வர வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை என்றே சொல்லலாம். மாவட்ட விருப்பு எம்பி யாக வந்தாலே ஒழிய.

நீங்கள் நினைப்பது போல இல்லை தேர்தல் அரசியல். உந்தளவு சிம்பிளாக அரசியல் இருக்கும் என்றால் - சரி விடுங்கோ வழமையா வாத்தியார் பிள்ளைதான் மக்கு எண்டு சொல்லுவீனம் :)

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். சுமந்திரன் என்ன கடவுளே வந்தாலும் தமக்கு வேண்டியதை கேட்டவுடன் தரும் நிலையில் தெற்கு இல்லை என்பது மக்களுக்கும் தெரியும், சுமந்திரனுக்கும் தெரியும்.

 

 

ஏன் தெற்கிற்கு அவ்வளவு என்ன பிரச்சனை? சிங்களச்சனமா?

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. தமது இனவாத தலைமைகளால், பிட்சுக்களால், காலம் காலமாக தமிழனை, வெளியாளாக, துவேசித்து வளர்தெடுக்கப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் ( பெரும்பாலானோர் மத்தியில்) காணப்படும் தமிழன் மேலான இனக்குரோதம், நம்பிக்கையீனம் மற்றும் சந்தேகம்.

ஒரு பேரினமானது, ஒரு சிற்றினத்தை போல கூட்டுத் தாழ்வுசிக்கலுக்கு இலக்காகியுளது இலங்கையில் (a majority with a minority complex).

இதற்க்கு காலனித்துவ காலத்தில் நாம் காட்டிய போக்கும் உந்து சக்தியாயிற்று.

சுருங்க சொல்லின், பாலசிங்கத்தார் சொன்ன " மஹாவம்ச மனோநிலை".

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.