Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவளைப் பாய்ச்சல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூநகரி என்ற இடத்தின் பெயர் ஓரளவு பிரபலமானது. இப்போது பாதை திறப்பு விவகாரத்திலும் அடிபடத் தொடங்கியுள்ளது இப்பெயர். நீண்டகாலமாக சிங்களப்படைகளின் வசமிருந்த இந்நிலம் தற்போது தமிழர் சேனையிடமுள்ளது. பூநகரி கூட்டுப்படைத் தளத்தின் மீது புலிப்படை நடத்திய மிகப்பெரும் பாய்ச்சலொன்றின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும்.

பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு.

ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூநகரிப்படைத்தளம்.

அப்போது யாழ்.குடாநாட்டு மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக கிளாலி - நல்லூர் பாதையே இருந்தது. யாழ்ப்பாணத்தின் கிளாலிக் கடற்கரையிலிருந்து மன்னார் மாவட்டத்தின் நல்லூர் அல்லது ஆலங்கேணிக் கடற்கரைக்கு இரவில் படகிற் பயணம் செய்ய வேண்டும். அப்பாதை இரு பெரும் இராணுவ முகாம்களுக்க நடுவால் வருகிறது. ஒருபுறம் ஆனையிறவு, மறுபுறம் பூநகரி.

இரவில் பல படகுகள் பயணிக்கும். தொடக்கத்தில் வஞ்சகமில்லாமல் நிறையப்பேர் அக்கடலிற் கொன்றுகுவிக்கப்பட்டனர். வெட்டுக்காயங்களோடுகூட தமிழரின் சடலங்கள் கரையொதுங்கின. ஆயினும் பயணம் தொடர்ந்தது. கடலில் இறங்கிவிட்டால் அக்கரை போய்ச்சேர்வோம் என்ற நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. ஆனாலும் யாழ்.குடாநாட்டுக்கான ஒரேயொரு பாதை அதுதான்.

பூநகரியில் சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் இருந்தது. நாகதேவன்துறையை மையகமாகவைத்து ஒரு கடற்படைத்தளமும் மிகப்பெரிய இராணுவ முகாமும் இருந்தது. கிளாலிக் கடனீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத்தளமே காரணம்.

இப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அதற்கான வேவு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. ("உறங்காத கண்மணிகள்" என்ற தமிழீழ முழுநீளத் திரைப்படம், இப்பூநகரிப் படைத்தளத்துள் வேவு பார்த்த வீரர்களையும், அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களையும் தழுவி எடுக்கப்பட்டது)

யாழ். தென்மராட்சியில் இப்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு புலியணிகள் பயிற்சியிலீடுபட்டுக்கொண்ட

பின்னர் இது ஒரு பெரிய வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதற்கென ஒரு முத்திரை பொறிக்கப்பட்ட சின்னமும் வழங்கப்பட்டது. ஒரு கண்காட்சி நாவற்குளிப்பகுதியில் நடைபெற்றது. அங்கே அத்தளம் போன்றே நீருக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆயுதங்களும் டம்மி பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன.

நினைவூட்டியமைக்கு நன்றி.

பின்னர் இது ஒரு பெரிய வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதற்கென ஒரு முத்திரை பொறிக்கப்பட்ட சின்னமும் வழங்கப்பட்டது. ஒரு கண்காட்சி நாவற்குளிப்பகுதியில் நடைபெற்றது. அங்கே அத்தளம் போன்றே நீருக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆயுதங்களும் டம்மி பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன.

நினைவூட்டியமைக்கு நன்றி.

வல்வைய் வெளியில் நடத்தப்பட்டது.................

வல்லைவெளியில் வெற்றிவிழா கொண்டாடினார்கள் 13 மார்கழி

லெப் கேணல் அன்பு அவரின் முகம் உங்களில் யாருக்காவது ஞாபகம் இருக்கா?

அன்பு அவர் பெயர் மட்டுமல்ல குணமும்தான். போரின் வடு தெரியாத அழகான முகம். அவரோடு விளையாடிய சிறுவர்களுள் நானும் ஒருவன். என்னை கவலைப்பட வைத்ததுக்கு நன்றி

வல்லைவெளியில் வெற்றிவிழா கொண்டாடினார்கள் 13 மார்கழி

லெப் கேணல் அன்பு அவரின் முகம் உங்களில் யாருக்காவது ஞாபகம் இருக்கா?

அன்பு அவர் பெயர் மட்டுமல்ல குணமும்தான். போரின் வடு தெரியாத அழகான முகம். அவரோடு விளையாடிய சிறுவர்களுள் நானும் ஒருவன். என்னை கவலைப்பட வைத்ததுக்கு நன்றி

அவரை தாடி(அண்ணா) எண்றும் செல்லமாக கூப்பிடுவார்கள்... எதிரிக்கு மட்டும் அல்ல போராளிகளுக்கும் மிகவும் சிம்ம சொப்பனமானவர்... அவ்வளவு உறுதி... நேர்த்தியான வளிநடத்தல்... பலபோராளிகளுக்கு அவர் ஒரு நல்லமுன்னுதாரணம்...

யாழ்தேவிச்சமரில் முக்கிய முன்னணி தளபதியாக வளிநடத்தினார். அந்த முன்னரங்கு சமரில் மயிரிழையில் உயிர்தப்பினார்...

ஆனால் இந்த சமரில் லெ;கேணல் நவநிதன். அன்பு இருவரும் தாக்குதல் தொடங்க முன்னரே இறந்தனர்....??

எவ்வாறு...??

இதன் பின்னணியல் மாத்தையா என முழங்கப் பட்டது...???

வரலாறு தெரிந்தால் வைய்யுங்கள்...

இரண்டு டாங்கிகளையும் புலிகள் கைப்பறிறினர்..எவ்வாறு மற்ரையது அழிக்கப்பட்டது...???

தவளை பாய்ச்சல் விடுதலை போரட்டத்தின் ஒரு திருப்பு முனை...அன்றய காலத்தில் அது ஒரு ஓயாத அலை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இந்த சமரில் லெ;கேணல் நவநிதன். அன்பு இருவரும் தாக்குதல் தொடங்க முன்னரே இறந்தனர்....??

எவ்வாறு...??

இதன் பின்னணியல் மாத்தையா என முழங்கப் பட்டது...???

வரலாறு தெரிந்தால் வைய்யுங்கள்...

இரண்டு டாங்கிகளையும் புலிகள் கைப்பறிறினர்..எவ்வாறு மற்ரையது அழிக்கப்பட்டது...???

தவளை பாய்ச்சல் விடுதலை போரட்டத்தின் ஒரு திருப்பு முனை...அன்றய காலத்தில் அது ஒரு ஓயாத அலை...

வன்னிமைந்தன்,

நவநீதனும் அன்புவும் தாக்குதல் தொடங்கமுதல் வீரச்சாவென்பது தவறான கருத்து. அதுமட்டுமன்றி இதில் மாத்தையா சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

லெப்.கேணல் குணா அவர்கள் தாக்குதல் தொடங்கியவுடன் வீரச்சாவு. ஆனால் இதிற்கூட சதியென்று சொல்ல ஏதுமில்லை. கடல்வழியாக இறங்கிய ஓரணி உடனடியாகவே எதிரியின் பலமான தாக்குதலொன்றை எதிர்கொண்டது, அதில் முதலாவது களப்பலியே குணாதான் என்று அதிற் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன்.

கைப்பற்றிய டாங்கியொன்றை இயக்கத் தெரியாத காரணத்தால் (அதாவது அதற்கு ஏற்படுத்தப்பட்ட இயங்குநிலைத் தடையொன்றை அகற்றத் தெரியாததால்) டோபிட்டோ வைத்துத் தகர்த்ததாகவே அறிந்திருக்கிறேன்.

ஆனால் இதற்குக் கட்டளை வழங்கிச் செயற்படுத்தியவர் சுசிலம்மான் என்றும் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

பூனகரி தாக்குதல் காலத்தில் நான் இந்தியாவில் இருந்ததினான். தமிழகப்பத்திரிகையில் அப்பொழுது இராணுவத்தின் வெற்றி என்றே குறிப்பிட்டிருந்தது. தமிழர்களின் வெற்றிச் செய்தியினை அச்சமயத்தில் அப்பத்திரிகைகளில் சொல்லவில்லை. இந்தியாவினை விட்டு புலம் பெயர்ந்தபின்பு இத்தாக்குதல் பற்றிய தகவல்கள் அறிந்தேன். தமிழகத்தில் அந்தக்காலத்தில் எவ்வாறு ஈழச்செய்திகள் மறைக்கப்பட்டன என்பதற்கு இது ஒரு உதாரணம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.