Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுக்குடியிருப்பில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Untitled-23.png

 புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள 20 ஏக்கர் தனியார் காணியை இராணுவத்தினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காணிகளின் உரிமையாளர்கள் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் காரணமாக காணிகளை அளவீடு செய்ய வந்திருந்த நில அளவையாளர் குழு, தமது நடவடிக் கையைக் கைவிட்டுச் சென்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பிர தேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள காணியை, இராணுவத்தின ரிடம் கையளிப்பதற்கு நேற்று திட்ட மிடப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலர் இதற்குரிய முயற்சிகளை மேற் கொண்டிருந்தார். இந்த நடவடிக்கை களை நிறுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சரும், காணி அமைச்சரு மான க.வி.விக்னேஸ்வரன் அனுப் பிய கடிதத்தையும் மீறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 
 
குறித்த காணி கையளிப்பு நடவ டிக்கை தொடர்பில் தகவல்கள் வெளி வந்திருந்தமையினால், காணி உரி மையாளர்கள், ஊர் மக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோக ராதலிங்கம் மற்றும் மாகாணசபை உறுப்பினர் க.சிவமோகன் ஆகியோர் நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.
 
புதுக்குடியிருப்பு பிரதேச செயல கத்தின் முன்பக்க வாயிலைப் பூட்டி, பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்பு நடவடிக்கையில் ஈடு பட்டனர். இதன் போது, அந்தப் பகு திக்கு வந்த கிளிநொச்சி மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலர், பிர தேச செயலகத்திற்குள் செல்லாமல்,  கையளிக்க வேண்டிய காணிக்குள் d இராணுவத்தினரின் முகாமினுள் d சென்றார். 
 
இதனையடுத்து மக்கள் இராணுவ முகாமுக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது மக்கள் பிரதிநிதிகளுக் கும், காணி சுவீகரிப்பு அலுவலருக் கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர், காணி சுவீகரிப்பு அலுவலர், காணி கைய ளிப்பு நடவடிக்கையைப் பிற்போட் டுள்ளதாக பிரதேச செயலகத்துக்கு தெரியப்படுத்திய பின்னர், இரா ணுவ முகாமின் பின்வாசல் வழி யாக வெளியேறிச் சென்றுள்ளார்.   

http://onlineuthayan.com/News_More.php?id=575263925618307918

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவம் இப்ப காணிகளை சுவீகரிக்கிறேல்லை எண்டு சொல்லுறதுக்கும் இஞ்சை ஒரு கூட்டம் இருக்குது.

இராணுவம் இப்ப காணிகளை சுவீகரிக்கிறேல்லை எண்டு சொல்லுறதுக்கும் இஞ்சை ஒரு கூட்டம் இருக்குது.

 

இல்லை குமாரசாமி அண்ணை இப்போதும் இராணுவத்திற்காக காணிகள் அபகரிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 
 
ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இந்நிகழ்வுகளிற்கு எதிராக மக்களால் ஜனநாயக ரீதியாக போராட முடிகின்றது, எதிர்த்து நிற்கவும் முடிகின்றது. ஒருவகையில் இது இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்தானே.

இல்லை குமாரசாமி அண்ணை இப்போதும் இராணுவத்திற்காக காணிகள் அபகரிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இந்நிகழ்வுகளிற்கு எதிராக மக்களால் ஜனநாயக ரீதியாக போராட முடிகின்றது, எதிர்த்து நிற்கவும் முடிகின்றது. ஒருவகையில் இது இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்தானே.

ஜீவன் நீங்கள் கூறிய அந்த முன்னேற்றம் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை மீளப்பெற உதவப்போவதில்லை. மாறாக இலங்கை அரசு ஜனநாயரீதியான போராட்டங்களை அனுமதிக்கும் நாடு என்ற நல்ல பெயரை போலியாக்க எடுத்து கொடுக்க மட்டும் தான் உதவப்போகிறது.

அந்த நல்ல பெயருடன் சர்வதேசத்துக்கு போக்கு காட்ட ஏதோ சில காணிகளை மீளக் கையளித்து விட்டு மிகுதியை நிரந்தரமாக வைத்திருந்தாலும் உலக நாடுகள் மெளன அங்கீகாரம் கொடுக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இல்லை குமாரசாமி அண்ணை இப்போதும் இராணுவத்திற்காக காணிகள் அபகரிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 
 
ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இந்நிகழ்வுகளிற்கு எதிராக மக்களால் ஜனநாயக ரீதியாக போராட முடிகின்றது, எதிர்த்து நிற்கவும் முடிகின்றது. ஒருவகையில் இது இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்தானே.

 

 

அடுத்த சந்ததி தமிழருக்கு பிரச்சனையே இல்லையென்று சொல்லும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இந்நிகழ்வுகளிற்கு எதிராக மக்களால் ஜனநாயக ரீதியாக போராட முடிகின்றது, எதிர்த்து நிற்கவும் முடிகின்றது. ஒருவகையில் இது இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்தானே.

 

 

இத்தனை ராணுவப்பிரசன்னத்திற்குள்ளும் இலங்கையில் ஜனநாயகம் ஜொலிக்கின்றதாம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புதுக்குடியிருப்பு பிரச்சினை மைத்திரி வரமுதல் இருந்து போய்கொண்டிருக்கு. சனம் போராடியபடி இருக்கு.

இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் இப்ப காணிகளை சுவீகரிக்கிறேல்லை எண்டு சொல்லுறதுக்கும் இஞ்சை ஒரு கூட்டம் இருக்குது.

 

இப்போது ஒட்டிய கூட்டம் ஒட்டாத கூட்டம் என்று எல்லோரும் கூத்தமைப்பில் இருப்பதால் எந்தக்கூட்டம் எங்கே இருக்கின்றது எனத் தெரியாமல் இருக்கின்றது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா யாவாரிகள் கூட்டம் மட்டும் இன்னும் புலிவாலை ப்டித்துகொண்டிருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வருடமாக தமிழர் பிரச்சினை இருக்கு

மைத்திரி பிறந்தே இருக்கமாட்டார்....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.