Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே இனியவனின் கஸல் கவிதைகள்

Featured Replies

உன் 
இதயத்தில் 
நான் 
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!

நீ கடந்து 
வந்த பாதை 
கவிதையானது 

காதலில் 
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள் 
காதல் சிரிகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;780

 

 

+++++++++++++++

 


நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 
 
வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 
 
மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!
+
கஸல் கவிதை 
 
++++++++++++++++

இதயத்தை நானே 
வெட்கப்படுகிறேன்
என்னை தூக்கி எறிந்து 
உன்னை வைத்திருப்பதற்காக ....

உனக்காகவே வாழ்கிறேன் 
எனக்காக 
நீ எப்போது வாழ்வாய் ...?

கடிகாரத்தைப்போல் 
நம் காதல் 
எப்போது நிற்பாய் ..?
பயப்பிடுகிறது இதயம் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;776

Edited by கவிப்புயல் இனியவன்

  • Replies 219
  • Views 25.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

என்
காதல் கனவானது
நான் கவிஞனானேன் ...!!!

ஒரு சின்ன தீ பொறி
இடத்தையே சாம்பலாக்கிடும்...
உன் கண் பட்டு என் காதல்
சாம்பலானது ...!!!

நானும்
ஒரு பிச்சைக்காரன்
உன் பதிலை எதிர் பார்த்து ...
பட்டினியுடன் இருக்கிறேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;785

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கண்ணீர் வரிகளை கஸல் கண்ணிகளில் தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்குப் பாராட்டுக்கள் :)

Edited by கிருபன்

கண்ணீர் மணிகளில் கவிதை தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்கு எனது வாழ்த்துகள். 

 

பெரும்பாலான ஆண்கள் கஸல் கவிதை எழுதவேண்டுமே... 

ஏன் இன்னும் எழுது முன்வரவில்லை?!

  • தொடங்கியவர்

காதல் கண்ணீர் வரிகளை கஸல் கண்ணிகளில் தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்குப் பாராட்டுக்கள் :)

மிக்க நன்றி தங்களின் ஊக்கிவிப்பு கருத்துக்கு 

கண்ணீர் மணிகளில் கவிதை தொடுக்கும் கவிப்புயல் இனியவனுக்கு எனது வாழ்த்துகள். 

 

பெரும்பாலான ஆண்கள் கஸல் கவிதை எழுதவேண்டுமே... 

ஏன் இன்னும் எழுது முன்வரவில்லை?!

மிக்க நன்றி தங்களின் ஊக்கிவிப்பு கருத்துக்கு ...

 

கவிதை முழுக்க முழுக்க கற்பனையே ...
 
இந்தளவு வலிகள் இருந்தால் யாரும் வாழமுடியாது  ...
 
ஆணும் தான் பெண்ணும் தான் ...
 
எல்லோரும் கஸல் எழுதவேண்டும் 
 
:)  :)
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நம் காதல் ...
பன்னீராக இருக்கும் ...
கனவாக போனது ...
உன் கண்ணீரால் ....!!!

தனிமையில் இருந்து ...
தவறி விழுந்தேன் 
காதலில் - இப்போ ...
தனியே தத்தளிக்கிறேன்...
காதலால் ....!!!

இதயத்துக்குள் என்னை ...
காதலாய் வைத்திரு ...
கைதியாய் துன்புறுத்தாதே ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;786

  • தொடங்கியவர்
காதல் பூவானால்....
காயத்தை குணமாக்கும் ...
பூவாக இருந்த நீ -எப்போ ..?
முள்ளானாய் ....?
 
எப்போது 
நீ காதலித்தாய் ...?
மறந்தே விட்டேன் ...
நீ தந்த காதல் வலியால்....!!!
 
என் 
காதல் செடியின் வேர்கள் 
கருகிகொண்டு வருகின்றன ...
கண்ணீரால் எப்படி ...?
வளரமுடியும் ....?
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;787
 
  • தொடங்கியவர்
இறைவா 
என்னை மன்னித்துவிடும் 
இவளை தெரியாமல் ...
காதலித்து விட்டேன் ....!!!
 
சந்திரனுக்கு 
வளர்பிறை தேய்பிறை 
இருப்பதுபோல் -நம் 
காதலுக்கும் உண்டு ....!!!
 
கண்ணே என்று உன்னை ...
வர்ணித்த என்னை ...
கண்ணீரில் நீந்த வைத்து ...
அழகு பார்க்கிறாய் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;788
  • தொடங்கியவர்
நான் வீதி 
நீ வீதி விளக்கு 
செயல்படுவோம் 
காதல் விபத்தை 
தவிர்ப்போம் ......!!!
 
காதலில் 
இறுதி கட்டம் ...
மாலையா ....?
மரணமா .......?
உன் கையில் ....!!!
 
உன்னை 
காதல் தீபமாக நினைத்தேன் 
தீப்பந்தமாக எரிகிறாய் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;789
  • தொடங்கியவர்
எண்ணங்களும் 
வர்ணங்களும் 
ஒன்றுதான் ...
நிலைத்து நிற்காது ...!!!
 
உனக்கும் எனக்கும் 
உள்ள உறவும் காதல் 
பிரிவும் காதல் தான் ...!!!
 
என் இதயத்தை 
பலூனாக நினைத்து...
ஊதி விளையாடுகிறாய் ...
கவனம் உள்ளே இருப்பது ...
நீ ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;790
  • தொடங்கியவர்
என் கவிதையின் 
விசிறி எழுத்து - நீ 
விசிறி விட்டு போய் ...
விட்டாய் .....!!!
 
விட்டு கொடுப்பது நல்லது ...
என்னை விட்டு கொடுத்தது ...
தப்பாய் போயிற்றே ...!!!
 
காதலில் விழலாம் ...
காதலே விழுந்துவிட்டதே ...
நமக்கு ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;791
 
  • தொடங்கியவர்

காதல் தோற்றத்துக்கு 
குற்றம் சொல்லேன் ...
உன்னை படைத்த ...
இறைவனை நிந்திக்கிறேன் ...!!!

என் கவிதைகள் 
உன்னை பற்றிய தீ 
பந்தங்கள் - கண்ணீரால் 
அணைக்கிறேன் ....!!!

நீ அழகு ...
உன் காதல் .....
அழகாகவில்லை...
காத்திருப்பேன் -உன் 
அழகு மறைந்தாலும் 
காதலுக்காய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;792

  • தொடங்கியவர்

உலகமே காதலால் ...
இயங்குகிறது ....
அப்படிஎன்றால் நம் 
காதல் தோற்றதேன் ...?

பூவை தந்து காதல் 
செய்த நீ - ஏன்
வாடி விழுந்தாய் ...?

அழவும் ஆசையாய் 
இருக்கிறது - நீ 
சுட்டுவிரலால் கண்ணீரை 
துடைத்து விடுவதுபோல் ..
உன் நினைவால் ...!!!

 +
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;793

  • தொடங்கியவர்
என்னை 
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!
 
காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!
 
உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும் 
துரத்துவதும் உன் கையில் ...!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;795
  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில் நான்

மரமேறும் கரடி

ஆற்றில் முதலை

தீர்ப்பு என்னிடம்

எதை அடித்து

புசிப்பது...!

  • தொடங்கியவர்

மரத்தில் நான்

மரமேறும் கரடி

ஆற்றில் முதலை

தீர்ப்பு என்னிடம்

எதை அடித்து

புசிப்பது...!

:)  :)

  • தொடங்கியவர்
உன் 
நினைவுகளை ...
எண்ண கயிற்றால் ...
கட்டுகிறேன் - நீ 
அறுத்து எறிகிறாயே ....!!!
 
காதல் கப்பலில் ...
வந்து விட்டு நீ 
மட்டும் நீந்தி சென்று ...
விட்டாயே ....!!!
 
நீ 
காதல் சூரியன் 
காலை உதயமாய் ...
மாலை அஸ்தமனமாய் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;796
  • தொடங்கியவர்

மகுடிக்கு தான் பாம்பு ...
படமெடுத்து ஆடும் ...
நீ பாம்பாய் இருந்து ..
மகுடியை ஆடவைகிறாய்....!!!
 
உன் நுனிநாக்கில் காதல் ...
என் அடிமனதில் காதல் ...
நம் காதல் இடைவெளி ....
இதுதான் ....!!!
 
உன் மௌனத்தை... 
காதலென்று தப்பாய் ...
நினைத்துவிட்டேன் ....
கண்ணீரால் கவிதை ...
வடிகிறது .....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;797

  • தொடங்கியவர்
உன்னை பூ என்று ...
வண்டாக சுற்றி வந்தேன் ...
நீ கடதாசி பூ ....!!!
 
கனவுலகில் 
வாழும் ஜீவன் ...
ஒரே ஜீவன் நான் ..
அதை குழப்பி விடாதே ...!!!
 
நீ வீசிய காதல் ...
வலையில் சிக்கி துடிக்கும் ...
காதல் மீன் நான் ...
நீ கருவாடு போடுகிறாய் ...!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;798
  • தொடங்கியவர்
உன் கண்ணீரில் ...
வெந்து துடிக்கும் ...
காதல் வண்டு நான் ...
அதுவும் சுகம் தான் ...!!!
 
ஆற்றில் நிழலாய் ...
விழுந்த நிலவை ....
காதல் என்று நினைத்தது ...
ஆற்றின் தப்புதானே ...!!!
 
புகை போல் ஊரில் ..
பரவிய நம் காதல் ...
நெருப்பாய் எரிந்து ...
சாம்பலாய் போய்விட்டது ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;799
  • தொடங்கியவர்

நான் 

எழுதிய கவிதையை ...

நீ ஒரு நிமிட கனவாக்கி ....

கலைத்து விட்டாய் ....!!!

நீ 

என்னை காதலிக்கிறாய் ...

திமிர்பிடித்து அலைந்தேன் ...

தீக்குச்சியின் கதையானேன் ...

உன் திருமணத்தால் ....!!!

பயணத்தில் உன்னை ..

கண்டேன் காதலித்தேன் ...

பயணம் முடிந்ததுபோல் ...

காதலும் முடிந்தது .....!!!

இறைவா ...

எனக்கு மரணத்தை கொடு ...

இல்லையேல் அவளின் ...

கனவையாவது கொடு ...

வதைக்காதே .....!!!

நீ 

சொல்ல கூடாத ஒரு சொல் ...

நான் உன்னிடம் கேட்ககூடாத ...

ஒரு சொல் - காதல் 

இருவரும் பிரிந்தபோது ....

புரிந்தது .....!!!

+

கே இனியவனின் கஸல்

தொடர்கிறது காதல் கவிதை 

800 வது பதிவு

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்
இதயமும் கருகும் ....
இதயத்தில் இருப்பவர் ....
வெளியேறினால் ....!!!
 
மூச்சும் தீயாய் சுடும் ...
மூச்சாக நினைத்தவர் ...
முடிவு கட்டினால் ....!!!
 
நான் கோயில் ....
நீ அதில் தெய்வம் ...
அருள் தான் இல்லை ....
நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;801
  • தொடங்கியவர்
என் காதலுக்கு ...
என் கண் தான் கண்டம் ....
பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!!
 
நான் உன் மூச்சு ....
நீ கடைசி மூச்சு ...
விடும் வரை -நான் ...
இருப்பேன் .....!!!
 
நீ காதலை விட ..
அழகானவள் 
உன்னிடம் காதல் ....
எப்போது வரும் ....?
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;802
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
மது கொடியது ....
மாதுவும் கொடியது ....
காதல் எல்லாவற்றையும்....
விட கொடியது ....!!!
 
உயிரே ...
எண்ணத்தால் கவிதை ...
எழுதி - கண்ணீரால் ...
அழிக்கிறேன் ....!!!
 
தோல்வி ஒன்று ...
இல்லாவிட்டால் ....
காதல் என்ற ஒன்றுக்கு ....
மதிப்பு பூச்சியம் .....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;803
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.