Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே இனியவனின் கஸல் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
உன்னை காதலித்து ...
வெய்யிலில் பூத்த பூ ...
ஆகிவிட்டேன் .....!!!
 
உன்னை 
காதலித்த நாள் ....
ஆத்மா என்னை விட்டு ....
போய்விட்ட நாள் ....!!!
 
இருண்டிருக்கும் ...
இதயத்தின் சிறிய ஒளி ....
உன் நினைவுகள் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;804
  • Replies 219
  • Views 26k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
உனக்கு 
இரு வழிதான் உண்டு ...
என்னை காதலிப்பது ...
என்னை கொல்லவைப்பது....!!!
 
உன் புன்னகை ...
என் அனைத்து உறவையும் ...
எதிரியாக்கி விட்டது ....!!!
 
நான் இக்கரை ...
நீ அக்கரை 
அதுதான் நீ காதலில் ..
அக்கறையில்லை ....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;805
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
கற்கண்டாக இருந்த ....
இதயத்தை உப்புக்கல்....
ஆக்கிவிட்டாய் .....!!!
 
காதல் ...
பொது விதி ....
எனக்கு தலைவிதி....!!!
 
ஆசைக்கு....
அளவு வேண்டும் ....
நான் உன்னில் பேராசை ...
பட்டேன் இப்போ ...
படுகிறேன் .....!!!
 
+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;806
  • கருத்துக்கள உறவுகள்

ஆசைக்கு....

அளவு வேண்டும் ....

நான் உன்னில் பேராசை ...

பட்டேன் இப்போ ...

படுகிறேன் .....!!!

 

 

நன்றாய் இருக்கு...!

 

  • தொடங்கியவர்

மிக்க நன்றி 

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இரவு புல்மேல் பனி ....
நான் அழுத்த கண்ணீர் ....
துளிகள் ...
இரவில் தானே நீ 
நினைவுகளையும் ...
தந்தாய் .....!!!

உன்னை வர்ணிக்க ...
வார்த்தைகளை தேடினேன் ...
கண்ணீராய் வருகிறது ...!!!

காதல் தூவானம் அழகு ....
எனக்கு காதல் புயல் ...
வீசிவிட்டது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;811

 

@@@@@
 

கவிதையால் உன்னை ....
அழவைக்கவில்லை....
உன்னை காதலித்ததால் ...
கவிதையால் அழுகிறேன் ....!!!

எம் 
விடுதலை பேராட்டத்தின் ....
வடுபோல் தான் நீயும் ...
அழியவே மாட்டாய் ....!!!

நீ 
நெருப்பு -என்னை 
தீபமாக்கவதும் ....
சாம்பலாக்குவது ....
உன் கையில் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;812

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

இரவு புல்மேல் பனி ....
நான் அழுத்த கண்ணீர் ....
துளிகள் ...
இரவில் தானே நீ 
நினைவுகளையும் ...
தந்தாய் .....!!!

உன்னை வர்ணிக்க ...
வார்த்தைகளை தேடினேன் ...
கண்ணீராய் வருகிறது ...!!!

காதல் தூவானம் அழகு ....
எனக்கு காதல் புயல் ...
வீசிவிட்டது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;811

 

மிக்க நன்றி கருத்துரைத்தோருக்கு நன்றி 
தொடர்வோம் 

  • தொடங்கியவர்

காதல் ...
செய்ய முன் இரத்தம் ...
உடலில் ஓடியது ....!
இப்போ கண்ணீர் ...
ஓடுகிறது .....!!!


காதல் 
தண்ணீரால் ....
அபிஷேகம் செய்வாயென ...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் அபிஷேகம்....
செய்கிறாய் .....!!!

கண்ணால் காதல் .....
வருவதே வழமை ....
உன் கண்ணால் ....
காயம் வந்துவிட்டதே .....!!!



+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;813

  • தொடங்கியவர்

வலையில் சிக்கிய மீன் ...
தப்புவதற்கு வாய்ப்பு உண்டு ...
காதலில் சிக்கிய எவரும் ....
தப்பியதே இல்லை .....!!!


முகத்தில் என் உருவம் ....
இதயத்தில் உன் உருவம் ...
தாங்க முடியாமல்....
தவிக்கிறது இதயம் .....!!!


நினைவுகளை தரும்போது ....
இன்புற என் இதயமே ...
துன்பத்தை தரும்போது ....
தங்கிகொள் - அது தான் 
காதலின் தண்டனை ....!!!


+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;814

  • தொடங்கியவர்

உயிரே சற்று தூங்கு ....
அப்போதுதான் உன் கண்ணில் ...
இருந்து தப்பிக்கமுடியும் ....!!!

இன்பமாய் பயணித்த ....
காதல் படகில் எதற்கு ...
நடுகடலில்  என்னை ....
தள்ளிவிட்டாய் ....?

நான் 
வேகமாக ஓடும் ....
காதல் சாரதி .....
நீ - சிகப்பு நிற சைகை ...
விளக்கு .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;815

  • தொடங்கியவர்

சுடராக 
இருந்த நம் காதல் .....
நிழலாக மாறியதேன் ...?
நீ நிழலாக என்னை தொடர் ....
நான் வெளிச்சாக வருகிறேன் ....!!!

நம் 
காதல் பூமாலையில் ....
நார் உள்ளது பூவை யார் ....
யார் கோர்ப்பது ....?

மறந்துவிட்டேன் - நீ 
என்னை மறக்கசொன்னதை .....
மறந்துபோய் நினைத்துவிட்டேன் ....
மன்னித்துவிடு .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;816

  • தொடங்கியவர்

கருதுரைத்தவர்களுக்கு மிக்க நன்றி 

  • தொடங்கியவர்

காதல் 
ஆரம்பத்திலும் ....
முடிவிலும் ....
தலை குனிந்தது -நீ 

மழைக்கால ஓடை
மழைபொழிந்தால் அழகு ....
உன் காதலும் அதுபோல் ...
சில வேளை அழகு ....!!!

நம் 
காதல் தூக்கதில் அழகு.....
அப்போதுதானே கனவில் ....
இனிமை தருகிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;817

 

 

திக்கு தெரியாத காடு ....
தனிமையில் நின்றவன் ....
நிலைபோல் ஆகிவிட்டது ....
என் காதல் ....!!!

நான் 
வாசனையில்லாத மலர் ....
எப்படி விரும்புவாய் ....?

என்னையும் அழைத்து ....
செல் என்று அழுகிறது ....
உன்னிடம் இருக்கும் ....
என் இதயம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;818

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்
கவலை படவில்லை 
உன்னை இழந்ததால் ...!
காதலும் கவிதையும் ....
உன்னால் கிடைத்தது ....!!!

என் 
ஒவ்வொரு மூச்சும் 
உனக்கான கவிதை ....!!!

என்னை அழவைத்து ....
பார்ப்பது உனக்கு பிடிக்கும் 
என்று எனக்கு தெரியும் ....
இன்னும் தா வலியை....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;819
 

கண்ணால் விபத்து .....
கவனம் காதல் வரும் ....
காதல் வந்தால் கவனம் ....
கண்ணீரும் வரும் ....!!!

நீ 
மூச்சு விடும் இதயத்தோடு ....
வாழ்கிறாய் -காதல் இதயம் ...
வரும்போது சொல் -நான் 
காதலிக்கிறேன் .....!!!

நன்றி உயிரே ....
எனக்குள்ளும் காதல் ...
இருக்கு என்பதை ....
புரியவைத்தமைக்கு ....
உனக்கு என்ன ஆயிற்று ....?

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;820

  • தொடங்கியவர்

ஒன்றில் மறந்துவிடு 
மறக்கவைத்து விடு .....
மறந்து போயும் உன்னை ...
மறக்க முடியவில்லை ....!!!

சூரியன் 
தேவையில்லை ....
என்னை எரிக்க ....
உன் காதல் போதும் ....!!!

கல்லறையில் இருந்தும் 
கூறுவேன் -காதல் தான் 
என்னை உலகிற்கு காட்டியது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;821
 

மனதில் கவலை ....
தோன்றும் போதெல்லாம் ....
எப்படியோ நீ 
நினைவுக்கு வருகிறாய் ....!!!

வலையில் அகப்பட்ட பூச்சி ...
பிடிக்கவந்தாய் ....
வலை அறுந்துவிட்டது ....!!!

காதல் 
அலங்காரப்படுத்தும் .....
அகோரப்படுதும் ....
அலையவைக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;822

காதல் 
இள நீர் போன்றது ...
பருக பருக இனிமை ...
தூக்கி எறியப்படும் ....!!!

என்னை மறந்து ...
காற்றாடிபோல் பறக்கிறேன் ....
உன்னுடன் நூல் இருப்பதை 
மறந்துவிட்டேன் ....!!!

இறைவா ....
மறு ஜென்மத்தில் ...
காதல் இல்லாத இதயத்தை ....
தந்துவிடு ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;823

காதலை ...
தவறை தவறால் ....
மறைக்கமுடியாது ....
காதல் புனிதமானது ....!!!

பெரிய மரத்தின் கீழ் ...
சிறிய செடிபோல் ....
ஆகிவிட்டது நம் 
காதல் ......!!!

ஒவ்வொரு காதல் 
தோல்வியும் இதயத்தில் ...
புதைக்கப்படுகிறது ....
மீண்டும் துளிர்க்காது .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;824

வாழ்க்கையில் காதல் ...
வேண்டும் என்கிறாய் ...
காதலை எதிர்கிறாய் ......!!!

காதல் ரகசியமாக ....
இருக்கும் வரை ....
இன்பம் - உறவுகளிடம் ...
கூறினாய் துன்பமானது ....!!!

காதலால் உயிரை ...
துறக்ககூடாது ....
உன்னால் உயிரைத்தவிர ...
எல்லாம் இழந்துவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;825
 
  • தொடங்கியவர்
காதலியோடு .....
பூங்காவில் ...
இருந்தேன் -இப்போ ...
நினைவு மட்டும் 
இருக்கிறது ....!!!

இரண்டு இதயம் ...
ஒரு இதயமாக மாறி ....
காதல் வலியை...
சுமக்கிறேன் ....!!!

உன்னோடு வாழ்வதும் ....
விண் வெளியில் வாழ்வதும் ...
ஒன்றுதான் காற்றில்லாமல் ...
வாழ்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;826
 
  • தொடங்கியவர்
உன் பாசம் ...
எனக்கு விஷம் ...
உன் காதல் ...
எனக்கு பாச கயிறு ......!!!

காதல் தோல்வி ....
நீ ஏற்படுத்தவில்லை ....
நினைவை தந்து விட்டு ...
உடலை பிரித்துவிட்டாய் ....!!!

பூவுக்கு 
இருந்த மேன்மையை ...
கேவலபடுதிவிட்டாய் ....
காதல் பரிசாய் தந்து ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;827
 
  • தொடங்கியவர்
உன்னில்.... 
அழகான கண் ....
இருக்கிறது .....
இதயம் எங்கே .....?

உன்னிடமிருந்து ...
என்னை எடுத்துவிடு ....
என்னிடமிருந்து ....
உன்னை எடுக்கவே ....
முடியாது .....!!!

காதல் கலகலப்பில் ...
தொடங்கி ....
சலசலப்பில் ...
முடிந்து விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;828
 
  • தொடங்கியவர்

விரும்பாததை ....
விரும்பி ....
வில்லங்கப்படுகிறேன்....!!!

நீ என்னை பிரிந்து ....
கை கழுவி விட்டாய் ....
கவிதை தேவதை ....
கை கொடுக்கிறாள் ....!!!

என் 
வாழ்க்கைக்கும் ...
மரணத்துக்கும் ....
காரணம் காதல் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;829

காதல் ....
தோற்றபின் பூக்கள் 
மட்டும் வாடுவதில்லை ....
அலைந்த வண்டும் தான் ....!!!

மாதுவை இழந்தேன் ....
பரவாயில்லை ....
மதுவும் உன்னைப்போல் ....
சிற்றின்பம் தான் ....!!!

என் கண்கள் ....
அழ மறுக்கிறது ....
வேறொன்றும் இல்லை ...
கண்ணீர் இல்லை ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;830

  • தொடங்கியவர்

உன்னை 
நான் மன்னிக்கிறேன் ,,,,
எனக்கு வலிகளை...
உன்னை அறியாமலே ...
தருகிறாய் ....!!!

உன் சின்ன குழிவிழும் ...
சிரிப்புத்தான் என்னை ...
அடையாளம் அற்றவனாக்கியது ....
என்னை தொலைத்து 
உன்னை தேடுகிறேன் ....!!!

நீ 
கண் சிமிட்டும் நேரம் ....
ஒவ்வொரு நொடி இறக்கிறேன் 
நீ கண் மூடினால் ....?

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;831

  • தொடங்கியவர்

என் இதயம் ...
காதல் மயானம் ....
நீ இதயத்தில் இன்னும் ...
மூசு விட்டுக்கொண்டே ....
இருகிறாய் ....!!!

உன் இதய கதவை ...
பலமுறை தட்டினேன் ....
என்னை  பூட்டிவிட்டாய் ....
திறந்துவிடு கதவை ...!!!

உன் மறதிதான் ...
எனக்கு இன்பம் ...
கவிதையை வடிகிறேனே....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;832

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ மரத்தின் வேர் ....
நான் வெறும் கிளை ....
நீ வாடிவிட்டாய் ....
நான் பசுமையாய் ...
இருக்கிறேன் ....!!!

கானல் நீர் ...
கேள்விப்பட்டேன்   ..
என் காதலில் ...
உணர்ந்தேன் ....!!!

என் நினைவுகள் ...
உனக்கு நீர் குமிழி ...
எனக்கு நினைவுகள் ....
நீ அருவி ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;833

  • தொடங்கியவர்

நீ 
ஐந்து முக தீபம் ....
அழகாக இருகிறாய் ...
அணைத்தால் சுடுகிறாய் .....!!!

என் 
காதலில் இலை....
உதிர்காலம் - நீ
மூச்சு விடுகிறாய் -நான் 
உதிர்கிறேன் ....!!!

காதல் தலைஎழுத்து ....
நமக்கு கல் எழுத்து ....
நாம் அழியவே முடியாது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;834

  • தொடங்கியவர்
என்றும் 
அம்மா தெய்வம் 
இன்று
நீயும் தெய்வம் ....
காட்சி தா ....!!!

நீ  
மீனாக  இருந்துவிடு ...
நான் தூண்டில் புழுவாக ...
இருக்கிறேன் ....
அப்போதென்றாலும்.....
என்னை தொடு....!!!

நான் 
வாடிவிழும் மலர் ....
நீ 
புதிய மலர் தேடுகிறாய்....!!!


+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;835
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.