Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மாறனின் ரூ742 கோடி சொத்துகள் அதிரடி முடக்கம்

Featured Replies

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மாறனின் ரூ742 கோடி சொத்துகள் அதிரடி முடக்கம்

 

டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரது சகோதரரும் சன் குழும அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிரடியாக முடக்கியுள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்தார்;

 

இதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்தனர் என்பது சிபிஐ குற்றச்சாட்டு. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மாறனின் ரூ742 கோடி சொத்துகள் அதிரடி முடக்கம் இந்த முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் கடந்த மாதம் 2-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

 

இதன் பின்னர் இந்த வழக்கு ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிரடியாக முடக்கி உள்ளது. தற்போது முடக்கப்பட்டத்தில் சன் குழுமத்தின் பங்குகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/aircel-maxis-case-ed-attaches-maran-brothers-assets-worth-223851.html

  • தொடங்கியவர்

கலாநிதியின் ரூ. 100 கோடி டெபாசிட் உள்பட முடக்கப்பட்ட 11 சொத்துகள் பட்டியல்!! 

 

சென்னை: ஏர்செல்-மேர்க்சிஸ் முறைகேடு வழக்கில் அமலாக்கப் பிரிவானது சன் குழும அதிபர் கலாநிதி மாறனின் நிரந்தர டெபாசிட் தொகையான ரூ100 கோடி, சன் நெட்வொர்க் குழுமத்தின் கட்டிடம் உட்பட ரூ742 கோடி மதிப்பிலான 11 சொத்துகளை முடக்கியுள்ளது.

 

அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ள சொத்துகள் விவரம்:

 

1) தயாநிதி மாறன் மற்றும் பலரின் நிரந்தர வைப்புத் தொகை ரூ.7.47 கோடி

 

2) சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தின் நிரந்தர வைப்புத் தொகை ரூ31.34 கோடி

 

3) செளத் ஏசியா எஃப்.எம் (எஃப்.எம் ரேடியோ) நிறுவனத்தின் நிரந்தர வைப்புத் தொகை ரூ6.19 கோடி

 

4) செளத் ஏசியா எஃப்.எம் நிறுவனத்தின் பரஸ்ர நிதி முதலீடு ரூ 15.14 கோடி

 

5) கலாநிதி மாறனின் நிரந்தர டெபாசிட் தொகை ரூ100 கோடி

 

6) கலாநிதி மாறன் பரஸ்பர நிதி முதலீடு - ரூ 2.78 கோடி

 

7) கலாநிதி மனைவி காவேரி கலாநிதியின் நிரந்தர வைப்பு நிதி- ரூ1.30 கோடி

 

8) காவேரி கலாநிதியின் பரஸ்பர நிதி முதலீடு ரூ1.78 கோடி

 

9) கல் கம்யூனிகேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டிடம் - ரூ175.55 கோடி

 

10) சன் நெட்வொர்க் குழுமத்தின் கட்டிடம் (சன் டி.வி. இடம்) மற்றும் காலி இடம் - ரூ266 கோடி

 

11) சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தின் கலாநிதி மாறனின் பங்குகள் - ரூ139 கோடி

 

இதில் சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தில்தான் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இதன் பங்குதாரர்களாக இருப்பவர்கள் கலாநிதி மற்றும் அவரது மனைவி காவேரி. இருவரும் 80% பங்குகளை வைத்துள்ளனர்.

 

சன் குழுமத்துக்குச் சொந்தமான எஃப்.எம். நிறுவனத்தில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்துக்கு 60%, ஏ.ஹெச். மல்டிசாப்ட் நிறுவனத்துக்கு 20%, மொரீசியசின் செளத் ஏசியா மல்டிமீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு 20% பங்குகள் உள்ளன.

 

சன் டிவி நெட்வொர்க்கில் கலாநிதி மாறனுக்கு 75% பங்குகள் உள்ளன. கல் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் கலாநிதி மாறனுக்கு 90%; காவேரி கலாநிதிக்கு 10% பங்குகள் உள்ளன. தயாநிதி மாறனால் ஏர்செல் மிரட்டப்பட்டு அதை வாங்கிய மேக்சிஸ் நிறுவனமானது, மொரீசியஸ் உள்ள மல்டிசாப் நிறுவனம் உள்ளிட்டவற்றின் மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தது; இதில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளது என்பதுதான் அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டு. இதனடிப்படையிலேயே தயாநிதி, கலாநிதி மாறனின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/marans-assets-seized-aircel-maxis-case-include-fixed-deposi-223852.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'யாரையோ திருப்திபடுத்த' சன் டி.வி. நிறுவன சொத்துகள் முடக்கம்: தயாநிதிமாறன் "நீண்ட" விளக்கம்

 

சென்னை: சன் டி.வி. நிறுவனத்தின் சொத்துகள் முடக்கத்தின் பின்னணியில் அரசியல் நிர்ப்பந்தம் உள்ளது. சட்டவிதிகளை மீறி யாரையோ திருப்திப்படுத்த அமலாக்கப்பிரிவு செயல்பட்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிரடியாக சன்.டி.வியின் இடம், சன் குழும அதிபர் கலாநிதி மாறனின் நிரந்தர டெபாசிட் தொகை ரூ100 கோடி உட்பட ரூ742.58 கோடி மதிப்பிலான 11 சொத்துகளை முடக்கியது. 'யாரையோ திருப்திபடுத்த' சன் டி.வி. நிறுவன சொத்துகள் முடக்கம்: தயாநிதிமாறன் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அமலாக்கத்துறை ஏடுகளுக்கு வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சொத்துக்கள் முடக்கம் குறித்து ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டுள்ளது.

 

இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாருடைய தூண்டுதல் பெயரால், அவப்பெயர் உருவாக்க நடத்தப்பட்ட விவகாரமாகவே தோன்றுகிறது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை இந்த சொத்து முடக்க விவகாரத்தில் சட்டவிதிகள் அனைத்தையும் மீறி அவசரஅவசரமாக செயல்பட்டுள்ளது என்பதே இதன் பின்னணியில் யாரோ இருப்பதைத் தெளிவாக்குகிறது. தவறான முறையில் வந்த பணத்தில் வாங்கிய சொத்துக்களைத்தான் முடக்க வேண்டும் என சட்டவிதி தெளிவாக தெரிவிக்கிறது. 2007 மார்ச்சில் நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன்.

 

ஆனால், 2007 இறுதியில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீட்டைத் தொடங்கியதாக கூறப்படும்போது, அந்தக் காலக்கட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. எனவே, 2007க்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது சட்டத்தை மீறி அமலாக்கப் பிரிவு யாரையோ திருப்திப்படுத்த செயல்படுவதை தெளிவாகக் காட்டவில்லையா? ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் இரு நிறுவனங்களுக்கு இடையே முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி முறைப்படி நடைபெற்ற ஒப்பந்த விவகாரம். அதிலே எந்தவித குற்றவியலும் இருக்க முடியாது என இரு உச்சநீதிமன்ற நீதிபதிகளான காரே, கபாடியா ஆகியோர் கருத்து தெரிவித்து அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில், சிவசங்கரனுக்கும் மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற இது தொடர்பான வழக்கில், சிவசங்கரன் மேக்சிசுடன் செய்துகொண்ட ஒப்பந்தம், சட்டப்படி நடந்த ஒன்று என்றும், அதில் எந்த தவறும் நடைபெறவில்லை எனவும் தீர்ப்பு வழங்கியதும் சிவசங்கரனும், அதை ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் எதிலும் எனக்கு பங்கோ, பாத்யதையோ இல்லாதது மட்டுமல்ல, அவைகளிடமிருந்து எனக்கு எந்தவிதப் பணப் பறிமாற்றமோ நடைபெறவில்லை என்பதை நன்கு அறிந்தும், சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடெட் மற்றும் சவுத் ஏசியன் எப்.எம். லிமிடெட் கம்பெனிகளில் எனக்கு எந்தவித உரிமையும், தொடர்பும் இல்லாதபோது தொழில் ரீதியாக மேலே குறிப்பிட்ட நிறுவனங்களிடையே நடைபெற்றுள்ள பண முதலீட்டை திசை திருப்பியிருப்பது இதன் பின்னணியினைத் தெளிவாக்கும். இரு கம்பெனிகளுக்கிடையே வெளிநாட்டில் இருந்து பண முதலீடு என்றால் அதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதியைப் பெறாமல் செய்ய முடியாது என்பது சாதாரண அறிவு படைத்தவர்களுக்கும் தெரிந்த விவகாரம். அப்படி வியாபார ரீதியாக, மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்ற பணம் முதலீட்டுக்கு வண்ணம் பூசுவது அரசியல் இல்லாமல் வேறாக இருக்க முடியாது.

 

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டவிதிகளைப் புறந்தள்ளி நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் சட்டவிதிகளை அறிந்தவர்களால் நன்கு உணரமுடியும். அமலாக்கத்துறை சட்டவிதி என்ன சொல்கிறது; ஒரு சொத்தை முடக்க வேண்டுமானால் அந்த சொத்து குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டின் விளைவாக பெற்றதாக இருந்தால்தான் அதனை முடக்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், சம்பந்தமே இல்லாத சொத்துக்களை முடக்கி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது ஒன்றே யாருடைய நோக்கத்தையோ செயலாக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டவில்லையா? முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொத்துக்களை எல்லாம் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் முதலீட்டுக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவை என்பது தெரிந்தும், முடக்கும் இந்த முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தைத்தான் தருகிறது. அமலாக்கத்துறை ஏடுகளுக்குத் தந்த செய்திக் குறிப்பில், தயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட சட்டவிரோத கைமாற்றுக்குப் பெறப்பட்ட தொகையைக் கொண்டு வாங்கிய சொத்துக்களை முடக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 

ஆஸ்ட்ரோ கம்பெனி, சன் டைரக்ட் டிவியிலும், சவுத் ஏசியா எப்எம்மிலும் முதலீடு செய்யத் தொடங்கியது 2007 இறுதியில் இருந்துதான் என்பதை அந்த நிறுவனங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. உண்மை அப்படியிருக்க, அதற்கு முன்பாக பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை இப்போது அமலாக்கத்துறை முடக்க முன்வந்துள்ளதாகக் கூறுவது விதிமுறைகளுக்கு எதிரானது அல்லவா. தவறான முறையில் வந்த பணத்தில் வாங்கிய சொத்துக்களைத்தான் முடக்க வேண்டும் என சட்டவிதி தெளிவாக தெரிவிக்கிறது. 2007 மார்ச்சில் நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன். ஆனால், 2007 இறுதியில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீட்டைத் தொடங்கியதாக கூறப்படும்போது, அந்தக் காலக்கட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை.

 

2007க்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது சட்டத்தை மீறி அமலாக்கப் பிரிவு யாரையோ திருப்திப்படுத்த செயல்படுவதை தெளிவாகக் காட்டவில்லையா? மேலும் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் இரு நிறுவனங்களுக்கு இடையே முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி முறைப்படி நடைபெற்ற ஒப்பந்த விவகாரம். அதிலே எந்தவித குற்றவியலும் இருக்க முடியாது என இரு உச்சநீதிமன்ற நீதிபதிகளான காரே, கபாடியா ஆகியோர் கருத்து தெரிவித்து அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில், சிவசங்கரனுக்கும் மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற இதன் தொடர்பான வழக்கில், சிவசங்கரன் மேக்சிசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், சட்டப்படி நடந்த ஒன்று என்றும், அதில் எந்த தவறும் நடைபெறவில்லை என தீர்ப்பு வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

சிவசங்கரனும், அதனை ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில், அமலாக்கத்துறையில் சொத்து முடக்கும் முயற்சி என்பது சட்டவிதிகளை மீறி யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதைத் தெளிவாக்குகிறது. இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு அதிலே வெற்றி பெறுவேன் என்பதையும் தெரிவித்துக் கூறிட விழைகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தயாநிதிமாறன் கூறியுள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ed-trying-please-someone-dayanidhi-maran-223951.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோடி வந்தவுடனை ஜெயலலிதா உள்ளுக்கு போனார்..... அடுத்தது  கருணாநிதி கொள்ளைக்கூட்டம் எண்டு  அப்பவே எல்லாரும் கதைச்சவைதானே  happy0193_zps0ec55089.gif

  • கருத்துக்கள உறவுகள்

மோடி வந்தவுடனை ஜெயலலிதா உள்ளுக்கு போனார்..... அடுத்தது  கருணாநிதி கொள்ளைக்கூட்டம் எண்டு  அப்பவே எல்லாரும் கதைச்சவைதானே  happy0193_zps0ec55089.gif

 

போகட்டும்

போகட்டும்

2016 எமக்கே........... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.