Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூளைக்கு வேலை

Featured Replies

கிருபன் முதற்கண் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.... விடைகளும் சரியானவை... பாராட்டுக்கள்...! :P

  • Replies 694
  • Views 54.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. காகம் எப்படி நீரை அருந்தும் என்று புரியவில்லை. பறந்து கொண்டா அல்லது இருந்து கொண்டா? குருவிகளுக்குத் தெரிந்திருக்கும்தானே.

:lol:

காகம் நீரை அருந்தும்....தக்கைகளையும் கூழாங்கற்களையும் பாத்திரத்தினுள் போட கூழான் கற்களின் கனவளவுக்கு சமனான நீரை இடம்பெயர்க்க நீர் மட்டம் பாத்திரத்தில் உள்ள துவாரம் வரை உயரும்....தண்ணி துவாரத்தினூடு வெளியேற வழிந்தோடும் தண்ணீரைக் காகம் குடிக்கும்....! :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவியிலும் பார்க்க புத்திசாலியாக தான் இருக்கு காகம் வாழ்த்துக்கள் கிருபன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

சிறு கேள்விகள்

---------------

1. ஒரு மனிதன் பார் ஒன்றுக்குள் சென்று அவசரமாக குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டான். அதற்கு பார் உரிமையாளன் திடீரென்று துவக்கு ஒன்றை எடுத்து அவனை நோக்கி நீட்டினான். வந்தவன் நன்றி கூறி வெளியேறினான். ஏன் என்று விளக்கம் தாருங்கள்.

2. ஒருவன் வீதியில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு இறந்து சொர்க்கத்தையடைந்தான். அங்கு பலர் நிர்வாணமாக தமது 21 வயதுத் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவன் உடனடியாகவே அடையாளம் கண்டு கொண்டான். யார் அந்த ஆணும் பெண்ணும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துவக்கு என்றால் என்ன நண்பரே!.

புரியவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துவக்கு என்றால் என்ன நண்பரே!.

புரியவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்.

துப்பாக்கி...... தெரியுமா
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குத் துவக்கு (GUN)தெரியாமலிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

:lol: :shock: :D :shock:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எமது பேச்சு மொழி தானே... அது பரஞ்சோதி அறிந்திருக்க மாட்டார்.

துப்பாக்கி...... தெரியுமா

என்னத்தைத் துவக்கப் போறியள்?! துவக்குங்க! துவக்குங்க!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறு கேள்விகள்

---------------

2. ஒருவன் வீதியில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு இறந்து சொர்க்கத்தையடைந்தான். அங்கு பலர் நிர்வாணமாக தமது 21 வயதுத் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவன் உடனடியாகவே அடையாளம் கண்டு கொண்டான். யார் அந்த ஆணும் பெண்ணும்?

விடை: அவன் கண்டு பிடித்தது, ஆதாமையும், ஏவாளையும் தான்.

அவர்கள் இருவருக்கு தான் தொப்புள் கொடி கிடையாது, நேரடியாக கடவுளால் படைக்கபப்ட்டார்கள் என்று சொல்வாங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துப்பாக்கி...... தெரியுமா

நன்றி கவிதன்.

உண்மையில் இப்படி ஒரு தமிழ் வார்த்தை துப்பாக்கிக்கு என்பது இன்று தான் தெரியும்.

எங்கள் பகுதியான திருநெல்வேலி தமிழ் பேசினால், நிறைய பேர் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பாங்க, எங்கே சென்னையில் தான். ஆகையால் இடத்திற்கு இடம் பலவிதமான வார்த்தைகள் உபயோகிக்கிறாங்க, இதற்கு பயந்து தான் நான் குறுக்கெழுத்து பகுதிக்கு செல்வதே இல்லை. சந்தேகம் நிறைய வருவதே காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் எனக்கும் தெரியும் ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் இவ்வாறு பல சொற்கள் உண்டு அதே போல் உங்கள் பகுதியான திருநெல்வேலியில் எமக்கு தெரியாத பல பேச்சு வழக்கிலான பதங்கள் இருக்கலாம்.. இவற்றை இவ்வாறான கருத்துகளங்களின் மூலம் அறிந்து கொள்ள முயன்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

ஆனால் குறுக்கெழுத்து பொதுவாக எழுத்து வழக்கில் உள்ளசொற்களை கொண்டு தான் அமைப்பார்கள் எனவே நீங்கள் உங்களால் முடிந்தவற்றை அங்கு கூறலாம்.. தவறு என்றால் மற்றவர்கள் சரியான விடையை கூறுவார்கள்.. எனவே அடுத்த குறுக்கெழுத்து போட்டியில் தயக்கம் இன்றி பங்கு பற்றுங்கள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

விடை: அவன் கண்டு பிடித்தது, ஆதாமையும், ஏவாளையும் தான்.

அவர்கள் இருவருக்கு தான் தொப்புள் கொடி கிடையாது, நேரடியாக கடவுளால் படைக்கபப்ட்டார்கள் என்று சொல்வாங்க.

வாழ்த்துக்கள் பரஞ்சோதி.

மற்றைய கேள்விக்கான பதிலும் இலகுவானதே.

பாராட்டுக்கள் பரஞ்சோதி அண்ணா..சத்தியமா உந்த ஆதாம் ஏவாள் தொப்புழ் கொடி விவகாரம் நீங்கள் சொன்னாப் பிறகுதான் தெரியும்....நன்றிகள்...! :P

பரஞ்சோதி சொல்லித்தான் எனக்கும் தெரியும்.

இரண்டாவதுக்கு விடை என்ன? அதையும் யாராவது சொல்லிவிடுங்கோ.:lol:

ஒருவேளை தண்ணித் துவக்கோ? :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரஞ்சோதி சொல்லித்தான் எனக்கும் தெரியும்.

இரண்டாவதுக்கு விடை என்ன? அதையும் யாராவது சொல்லிவிடுங்கோ.:lol:

ஒருவேளை தண்ணித் துவக்கோ? :mrgreen:

பேந்து என்ன விடையே சொல்லிட்டியள் போலை கிடக்கு..... பரஞ்சோதி அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கேள்விகள்

---------------

1. ஒரு மனிதன் பார் ஒன்றுக்குள் சென்று அவசரமாக குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டான். அதற்கு பார் உரிமையாளன் திடீரென்று துவக்கு ஒன்றை எடுத்து அவனை நோக்கி நீட்டினான். வந்தவன் நன்றி கூறி வெளியேறினான். ஏன் என்று விளக்கம் தாருங்கள்.

யாரும் விடையளிக்காததால் முதலாவது கேள்விக்கான பதிலை நானே தருகிறேன். :lol::D:D

தண்ணீர் கேட்டவன் விக்கலால் அவதிப் பட்டுக்கொண்டிருந்தான். துப்பாக்கியைத் திடீரென்று காட்டி மிரட்டியபோது அவன் அதிர்ச்சியடைந்ததால் விக்கல் நின்றுவிட்டது. அவனுக்கு தண்ணீர் தேவைப்படவில்லை. நன்றி கூறி விடைபெற்றான்.

8) 8) 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அடா, இது தானா விடை.

என் மனைவியார் சொன்னார், நான் அவரை நம்பவில்லை.

மனைவியின் சொல் கேட்காதவர்கள் எவ்வளவு பெரிய நஷ்டம் அடைவார்கள் என்பதை புரிந்துக் கொண்டேன்.

நன்றி நண்பர் கிருபன் அவர்களே!.

இது போன்ற புதிர்கள் நிறைய சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரஞசோதி அண்ணா சமயத்தில அண்ணியின் சொல்லையும் கேளுங்கள்.... :lol: :0

பரஞசோதி அண்ணா சமயத்தில அண்ணியின்

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.... வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை....!!!! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்ல வாறியள் குருவி.. சமயத்தில தமிழும் விளங்குது இல்லை எனக்கு...!

இல்ல... அண்ணி ஒரு குருட்டுவாக்கில சொன்னதை வைச்சு அண்ணை இப்படி......அதுதான் சொன்னம்...! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யோ குழப்புறீங்களே!

நான் புத்திசாலியா, அல்லது வெற்றி பெற்றவனா என்று குழப்பம் வந்துவிட்டது, வீட்டிற்கு சென்று அண்ணியிடம் கேட்டு தெரிந்துக் கொள்கிறேன்.

அவரை கேட்டால் வெற்றி பெற்றவர் என்று தான் சொல்வார், அதாவது அவரது புத்திசாலித்தனத்தால் நான் வெற்றிப் பெறுகிறேன் என்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்ல... அண்ணி ஒரு குருட்டுவாக்கில சொன்னதை வைச்சு அண்ணை இப்படி......அதுதான் சொன்னம்...!

_________________

ஏன் அண்ணிக்கு தெரிந்திருக்க கு}டாதா என்ன..??

அது தான் உண்மை இல்லையா அண்ணா...??

அவரை கேட்டால் வெற்றி பெற்றவர் என்று தான் சொல்வார், அதாவது அவரது புத்திசாலித்தனத்தால் நான் வெற்றிப் பெறுகிறேன் என்பார்.

_________________

அது தான் உண்மை இல்லையா அண்ணா...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.