Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி: அவுஸ்திரேலிய உதவியுடன் நண்டு பதனிடும் நிலையம்

Featured Replies

article_1428496569-01.jpg

 

கிளிநொச்சி பூநகரி இரணைமாதாநகரில் அமைந்துள்ள நண்டு பதனிடும் நிலையத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி, செவ்வாய்க்கிழமை (07) பார்வையிட்டார்;. அவுஸ்திரேலிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உதவியுடன் இந்த நண்டு பதனிடும் நிலையம் இயங்கி வருகின்றது. உயர்ஸ்தானிகருடன் கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலர் சந்திரன் கிருஸ்ணேந்திரன் ஆகியோரும் சென்றனர்.

article_1428496583-02.jpg

 

article_1428496593-03.jpg

 

article_1428496611-05.jpg

 

http://www.tamilmirror.lk/143720#sthash.eQG39C4M.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

  • தொடங்கியவர்
ஊர்காவற்றுறையில் 2 கோடி ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை திறந்துவைப்பு 
 
crab%20factory%20447.jpg
 
ஊர்காவற்துறை தம்பாட்டியில் 2 கோடியே முப்பது லட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை, தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுவையும் போசாக்கு மிக்கதுமான நண்டுக்கு சர்வதேச அளவில் பெரும் சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால், உரிய பதனிடும் வசதி இல்லாததால் குடாநாட்டில் பிடிக்கப்படும் நண்டுகள் உள்ளூர் மக்களாலேயே நுகரப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நண்டுகளை ஏற்றுமதி செய்யும் நோக்கிலேயே இந்த நண்டு பதனிடும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
 
தீவகக் கடற்பரப்புகளில் மாத்திரம் அல்லாமல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பிடிக்கப்படும் நண்டுகளையும் தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கொள்வனவு செய்து இத்தொழிற்சாலையில் பதனிடவுள்ளது. இதன் பின்னர் பதனிடப்பட்ட நண்டுகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டு தகரக் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
 
நண்டு ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவதோடு, தம்பாட்டி கிராமத்தில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் இத்தொழிற்சாலை வழங்க உள்ளதாக தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
நவீன வசிதிகளுடன்கூடிய இந்த நண்டு பதனிடும் தொழிற்சாலையை இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் கிரற் லோஹீன், ஐக்கியநாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும்,ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உயர் நிர்வாக அதிகாரியுமான ஹோலியாங் ஸு, ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினை நந்தி மற்றும் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.
 
இத்தொழிற்சாலை அமைந்துள்ள ஏழு நெற்பரப்புக் காணியையும் அமரர் பொன்னுச்சாமி குமாரசாமி என்பவரின் ஞாபகார்த்தமாக அவரது குடும்ப உறவினர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
crab%20factory%20444.jpg
 
crab%20factory%20446.jpg
 
crab%20factory%20445.jpg
 
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகமிக நல்ல போற்றுதற்குரிய விடயம்

 

கடலோடு சம்பந்தப்பட்ட தீவுப்பகுதியில் அமைந்திருப்பது

அந்த மக்களுக்கும்

மக்கள் மேலும் புலம்பெயர்வதைத்தடுக்கவும் உதவும்....

  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதிக்கு மக்கள் மீள வேண்டியது அவசியம்.

ஆனால் நீர் பிரச்சினை, பள்ளிக்கூடம் அருகில், இலகு இப்படி காரணங்களுக்காக பலர் யாழ் நகரையே அண்டி வாழ விரும்புகிறார்கள்.

வேலணை-ஊறாத்துறை உள்வீதியில் பல காணிகள் புதர் மண்டிக்கிடக்கிறன. இடிந்த வீடுகளும் அப்படியே உள்ளன.

யாழ்-ஊறாத்துறை கடற்கரை வீதி 2014 மேயில் பாதி வேலை முடிந்திருந்தது. இப்போ முழுதா முடிஞ்சிருக்கும்.

நாரந்தனையில் இருந்து வெளிகிட்டா கார்பெட் ரோட்டில் 20 நிமிடத்தில் கோட்டையடியில் நிக்கலாம். ஆனாத் தீவுப்பகுதி மக்கள் நல்லூர் காணியள விலை கூட்டுறதிலேயே பிசியா நிக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்னேற்றகரமான விடயங்கள். மக்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நோராட் பலகாலமாகவே தீவுப்பகுதியில் முதலீடுகளை செய்து வருகிறது. காரைநகரில்.. ஒரு படகு கட்டும் தொழிற்சாலையும் இயங்கியது. பின்னர் வன்னியில் இயங்கியது. அவை எல்லாம் சிங்களத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.

 

தும்புத் தொழிற்சாலைகளும் இருந்தன. அவையும் அழிக்கப்பட்டன.

 

மீண்டும் இருந்தவையும்.. இன்னும் எதிர்கால நூற்றாண்டுத் தேவைகளுக்கு அவசியமானவையும் உலக தரத்தோடு எம் மக்களைப் போய் சேர்வதும்.. அங்குள்ள மனித வளம் இதற்கு பயன்படுத்தப்படுவதும்... அங்குள்ள பல்கலைக்கழகம்.. தொழில்நுட்பக் கல்லூரிகள்.. இதற்கான தொழிற்பயிற்சி பாடங்களை மாணவர்களுக்கு போதிப்பதும்.. தரம்.. சுகாதாரம் உயர்ந்த அளவில் இருப்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியமாகும்.

 

சரியான சந்தைப்படுத்தல் வசதிகள் அமைவதோடு.. உற்பத்திகளுக்கு சர்வதேச தரச் சான்றிதழ்கள்.. கிடைக்கும் வகைக்கு நடவடிக்கைகள்.. அமைவது அவசியம்.

 

சும்மா தொழிற்சாலையை திறந்திட்டு போனால் போதாது. அவை அவற்றின்.. தற்காலிக.. நீண்ட கால இலக்குகளை எட்ட நடவடிக்கைகள்.. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவது அவசியம். அவை கண்காணிக்கப்படுவதும் அவசியம். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதிக்கு மக்கள் மீள வேண்டியது அவசியம்.

ஆனால் நீர் பிரச்சினை, பள்ளிக்கூடம் அருகில், இலகு இப்படி காரணங்களுக்காக பலர் யாழ் நகரையே அண்டி வாழ விரும்புகிறார்கள்.

வேலணை-ஊறாத்துறை உள்வீதியில் பல காணிகள் புதர் மண்டிக்கிடக்கிறன. இடிந்த வீடுகளும் அப்படியே உள்ளன.

யாழ்-ஊறாத்துறை கடற்கரை வீதி 2014 மேயில் பாதி வேலை முடிந்திருந்தது. இப்போ முழுதா முடிஞ்சிருக்கும்.

நாரந்தனையில் இருந்து வெளிகிட்டா கார்பெட் ரோட்டில் 20 நிமிடத்தில் கோட்டையடியில் நிக்கலாம்.

 

ஆனாத் தீவுப்பகுதி மக்கள் நல்லூர் காணியள விலை கூட்டுறதிலேயே பிசியா நிக்கினம்.

 

தீவுப்பகுதி  மக்கள் தமது இருப்பிடங்களில் தங்க

ஏற்கனவே வெளியேறி வேறு இடங்களில் வசிப்பவர்கள் ஊர் திரும்ப...

தண்ணீர்ப்பிரச்சினை

போக்குவரத்து

பாடசாலைகள்

மற்றும் வேலைவாய்ப்பு....... இவைகள் அந்தப்பகுதியில் கிடைக்க வழி செய்யணும்....

சிறிது சிறிதாகவெனினும்

அவசரமாகச்செய்யப்படவேண்டியவை இவை.

இவற்றைச்செய்யாமல்

நாமும் ஓடி வந்துவிட்டு

அவர்களை இரு என்று கேட்கமுடியாது...

இது தாயகத்துக்கும் பொருந்தும்..

 

உப்பு இல்லாதவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்

எனவே உப்புக்கிடைக்கும் இடத்தில் கேள்வியை  உயர்த்துவது அவனது தாகம் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதி  மக்கள் தமது இருப்பிடங்களில் தங்க

ஏற்கனவே வெளியேறி வேறு இடங்களில் வசிப்பவர்கள் ஊர் திரும்ப...

தண்ணீர்ப்பிரச்சினை

போக்குவரத்து

பாடசாலைகள்

மற்றும் வேலைவாய்ப்பு....... இவைகள் அந்தப்பகுதியில் கிடைக்க வழி செய்யணும்....

சிறிது சிறிதாகவெனினும்

அவசரமாகச்செய்யப்படவேண்டியவை இவை.

இவற்றைச்செய்யாமல்

நாமும் ஓடி வந்துவிட்டு

அவர்களை இரு என்று கேட்கமுடியாது...

இது தாயகத்துக்கும் பொருந்தும்..

 

உப்பு இல்லாதவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்

எனவே உப்புக்கிடைக்கும் இடத்தில் கேள்வியை  உயர்த்துவது அவனது தாகம் தான்....

இதையெல்லாம் நாங்கள் கூடிய விரைவில் சரி செய்வோம். :D தீவுப்பகுதி மட்டுமல்ல. யாழ் குடா முழுவதையுமே நன்னீர் வசதி கொண்ட பகுதிகளாக மாற்றுவோம். இன்னும் இரண்டு வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் நாங்கள் கூடிய விரைவில் சரி செய்வோம். :D தீவுப்பகுதி மட்டுமல்ல. யாழ் குடா முழுவதையுமே நன்னீர் வசதி கொண்ட பகுதிகளாக மாற்றுவோம். இன்னும் இரண்டு வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

 

அப்பா  நல்ல செய்தி

உங்கள் வாய்க்கு சக்கரை போட்டாச்சு.. :icon_idea: .

யாரப்பா செய்வது...?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா  நல்ல செய்தி

உங்கள் வாய்க்கு சக்கரை போட்டாச்சு.. :icon_idea: .

யாரப்பா செய்வது...?

அதான் நாங்கள் செய்வோம் என்று சொல்லியிருக்கிறமில்ல.. :D (இரண்டு வருடங்கள் பொறுத்திருக்க வேணும்.. :huh:)

  • கருத்துக்கள உறவுகள்

அதான் நாங்கள் செய்வோம் என்று சொல்லியிருக்கிறமில்ல.. :D (இரண்டு வருடங்கள் பொறுத்திருக்க வேணும்.. :huh:)

 

 

அப்ப

நாங்க ஒதுங்கலாமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.