Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனின் விலை தலைக்கு மேலே!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியில்

மீனுக்குத் தட்டுப்பாடு

வடமராட்சிப் பகுதி யில் மீன் வகை களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் வடகடலில் இடம்பெற்ற மோதல்சம்பவத் தையடுத்து கரையோரப் பகுதியில் வீச்சுவலை மீன்பிடியில் ஈடுபட்ட மீன வர்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை எனத் தெரிவிக்கப்படு கிறது. இதன் காரணமாகவும் மீன்வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

-உதயன்

  • தொடங்கியவர்

நேற்று யாழில் உள்ள உறவுகளோட கதைத்த போது சின்னஞ் சிறுசுகள் இனிப்புக்கே அழுகுதுகள், காசு இருந்தாலும் இனிப்பு வகைகளே வாங்க முடியுதில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உணவுத்தடையினால் ஏற்படும் அவலங்கள் உதயன் பத்திரிகையில் இருந்து

கையிருப்பில் உள்ள பொருள்களை

பங்கீட்டுக்கு வழங்க அறிவுறுத்து

பிரதேச செயலர்களுக்கு அரச அதிபர் பணிப்புரை

ப.நோ.கூ. சங்கங்களில் கையிருப்பில் உள்ள அரிசி, சீனி, பருப்பு போன்ற பொருள்களை பங்கீட்டு அடிப்படையில் வழங்குமாறு அரச அதிபர் கே. கணேஷ் பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விநியோகத்தை மேற்கொள்ள வசதியாக

சகல ப.நோ.கூ. சங்கங்களும் தங்கள் களஞ்சியங்கள் மற்றும் கிளைகளில் நேற்று வரை கையிருப்பில் உள்ள அரிசி, சீனி, பருப்பு ஆகியவற்றின் இருப்பு விவரங்களை இன்று முற்பகல் 10 மணிக்கு முன்னர் பிரதேச செயலர்களிடம் கையளிக்கும்படி அரச அதிபர் கேட்டுள்ளார்.

இந்த விவரங்களைப் பெற்று அவற்றைப் பங்கீட்டு அடிப் படை யில் மக்களுக்கு பணத்துக்கு வழங்க ஏற்பாடு செய்யுமாறும்

இந்த விற்பனையை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன் பூர்த்தி செய்யும் படியும் அரச அதிபர் பிரதேச செயலர்களைக் கேட்டுள்ளார்.

ஒருகிலோ அரிசி 39 ரூபா, ஒரு கிலோ சீனி 68 ரூபா, ஒரு கிலோ பருப்பு 68 ரூபா ஆகிய விலைகளுக்கே விற்பனை செய்யப் படவேண்டும் என்றும் அரச அதிபர் அறிவுறுத் தியுள்ளார்

----------------------------------------------------------------------

வடமராட்சியில் பசளைக்குத் தட்டுப்பாடு

விவசாயிகள் பெருமளவில் பாதிப்பு

வடமராட்சிப் பிரதேசத்தில் காலபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பசளை வகைகள் இன்றி பெரும் சிரமங் களை எதிர்கொள்கின்றனர்.

தற்போது பெய்துவரும் பருவகால மழையை அடுத்து மேற்படி பிரதேச விவ சாயிகளும் காலபோக செய்கையில் ஆர்வத் துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நெற்பயிருக்குத் தேவை யான யூரியா, ரி.டி.எம். போன்ற பசளை வகை களைப் பெறுவதில் விவசாயிகள் பெரும் சிரமப்படுகின்றனர். பல விவசாயிகள் உரம் கிடைக்காமல் அவை இன்றியே நெற் பயிர் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

உர வகைகளைப் பெற்றுத் தருவதில் விவசாயத் திணைக்களம் உடன் கவனம் செலுத்தவேண்டும் என வடமராடசிப் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுகின் றனர்

--------------------------------------------------------------------

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடையின்

காவலாளியைக் கட்டிவிட்டுத் திருட்டு

ஊரடங்கு வேளையான இரவில் ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத வர்கள் காவலாளியை மிரட்டி கட்டி வைத்து விட்டு, ப.நோ.கூ. சங்கக் கடையை உடைத்து அங்கிருந்த பொருள்களைத் திருடிச் சென்றுள்ளதாக, கிளை முகாமை யாளரும் காவலாளியும் தெல்லிப் பழை பொலிஸில் முறைப்பாடு செய் துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தெல்லிப்பழை ப.நோ.கூ. சங்கத்தின் எட்டாம் கட்டை ஒழுங்கையில் உள்ள கிளையிலேயே இச்சம்பவம் இடம்பெற் றுள்ளது.

அன்று நள்ளிரவு வேளை ஆயுதங் களுடன் வந்த இனந்தெரியாதவர்களில் ஒருவர் காவலாளியைப் பிடித்து அங்கி ருந்த மரம் ஒன்றுடன் சேர்த்து கட்டிவிட்டு, கடையின் பின்புறக் கதவை உடைத்து அரிசி, மா, சீனி, பால்மா உட்பட பல பொருள்களை திருடிச் சென்றுள்ளனர் என்றும்

காலை வேளை காவலாளி சத்த மிட்டதைக் கேட்டு அங்கு கூடியவர்கள் காவலாளியின் கட்டை அவிட்டுவிட்ட னர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலமை இப்படியே போனால் இ;ருக்கிற ஆமியைப் பிடிச்சு சாப்பிட வேண்டியதுதான் வேறு வழியில்லை

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் உணவுப்பொருட்கள் நாளுக்குநாள் விலை உயர்வு

ஒரு முட்டை 45 ரூபா; நுளம்புத்திரி 240 ரூபா யாழ். குடாநாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் நாளுக்கு நாள் விலை அதிகரிக்கின்றது.கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் உணவுப்பொருட்கள் போதுமான அளவில் இல்லாதிருப்பதே இதற்கான பிரதான காரணமாகும்.இதேவேளை, முட்டை ஒன்று 45 ரூபாவும், நுளம்புத்திரி ஒன்று கறுப்புச் சந்தையில் 240 ரூபாவாகவும், நெருப்புப்பெட்டி 60 ரூபாவாகவும், மீன் ஒரு கிலோ 1000 ரூபாவாகவும் விற்பனையாகி வருகின்றன.

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினூடாக உலர் உணவுப்பொருட்களில் 5ஆம்கட்ட விநியோகம் இடம்பெற்று வருகின்றது. எனினும் சீனி வழங்கப்படவில்லை. அரச களஞ்சியத்தில் இருந்த சீனி முடிவடைந்து விட்டமை காரணமாகவே சீனி வழங்கப்படவில்லை என்றும் கப்பல்கள் மூலம் வந்தால் மாத்திரமே சீனி கிடைக்கும் எனவும் கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கூட்டுறவுச் சங்கங்களினூடாக விநியோகிக்கப்பட்ட நுளம்புத்திரிகள் பல குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை என யாழ். செயலகத்திற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வெவ்வேறு அளவில் நுளம்புத்திரிகள் விநியோகம் செய்யப்படுவதாகவும் இதனாலேயே பலருக்கு நுளம்புத்திரிகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக்கிளைகளில் முதல் சென்றவருக்கு நுளம்புத்திரிப் பெட்டி கிடைத்தது. இறுதியாக சென்றவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒருசோடி நுளம்புத்திரி வழங்கப்பட்டது.

தென்மராட்சியில் திருவடிச்சீட்டு மூலம் நுளம்புத்திரிகள் வழங்கப்படும் நிகழ்வுகள் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்றன. நுளம்புத்திரி பெட்டி ஒன்று கறுப்புச் சந்தையில் 240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

குடாநாட்டு கடைகளில் இனிப்பு, ரொபி, பிஸ்கட் சொக்லேட் மற்றும் குழந்தைகளுக்கான இனிப்புப் பண்டங்கள் என்பன மருந்துக்குக்கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளன. உள்ளூரில் உற்பத்தியாகும் ரொபி 1 மூன்று ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந் நிலையில் முட்டை, மீன் போன்ற உணவு வகைகள் நாளுக்கு நாள் விஷம் போல் ஏறி வருகின்றது.

-வீரகேசரி

பசி வந்தால் பத்தும் பறக்கும் - பசியால் சாவும் வந்துவிட்டது - பறக்க வேண்டியது உயிரல்ல. ஆக்கிரமிப்பு.!

- புனிதன் (அவுஸ்திரேலியா)

இலங்கைத் தீவின் தமிழ்மண், நினைவு தெரிந்த நாள் முதல் பசி, பட்டினி, பஞ்சம் போன்ற சொற்களை சொற்களாகக் கண்டதே ஒழிய அனுபவிக்கவில்லை. நேற்று (16-11-2006) வந்த யாழ் மண்ணின் “முதல் பட்டினிச் சாவு”ச் செய்தி எந்த ஈழத் தமிழ்மண்ணின் மைந்தரையும் உலுக்கவே செய்யும். இது இயற்கையின் வரட்சி போன்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டதல்ல. இது இலங்கை அரசின் மீன்பிடித் தடை, இலங்கை அரசின் உயர் பாதுகாப்பு வலயத்தால் தடைப்பட்ட விவசாயம், இலங்கைப் படையினரின் ஊர்மக்களுடன் கலந்து வாழும் விதமான அமைப்பு போன்ற செயற்கை மாற்றங்களால் ஏற்பட்டவை.

ஒவ்வொரு நாளும் எத்தனையோ பார ஊர்திகள் விவசாயப் பொருட்களையும், கடலுணவுகளையும் யாழ் குடாநாட்டிலிருந்து தென்னிலங்கைகு ஏற்றுமதி செய்தன. முன் என்றுமே அந்த மண்ணில் விளையாத உருளைக் கிழங்கு, (Beet Root) பீற்றூற், முந்திரிகைப் பழம் கூட விளைந்தன. ஏற்றுமதி செய்யப் பட்டன. ஆறில்லா அந்த ஊர் பாழாகவில்லை. அழகுற வாழ்ந்தது. வளம் பெற்றது. பழமொழியைப் பொய்ப்பித்தது அந்த மண்ணில் விளைந்த விடாமுயற்சி – தன்னம்பிக்கை. இவற்றை வேரோடு பிடுங்க நினைத்து இலங்கை அரசு அந்த மண்ணுக்கு வெளியே பொருளாதார முற்றுகை, உள்ளே அரசின் ஆயுத நாட்டாண்மை இரண்டையும் போட்டு பட்டினிச் சாவால் அடிபணிய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சர்வாதிகாரம், ஆயுத பலம், இரண்டுடனும் அரசு சர்வதேச நியதிகள் மனிதநேய விழுமியங்கள் போன்றவற்றை விழுங்கி ஏப்பம் விட முடியுமானால், பசியால் வாடி பட்டினிச் சாவை எதிர்நோக்கும் மக்களும் நீதி நியாயம் பார்க்கத் தேவையுமில்லை. ஆயுதங்கள் ஏந்தவே வேண்டும். பசிக்கும் வயிற்றுக்காக.

யாழ் மண்ணிலுள்ள உணவுக் களஞ்சியங்கள் மக்களாலேயே உடைக்கப்பட்டு உணவு ஒவ்வொரு மனிதருக்கும் பகிரப் படவேண்டும். உணவுக் களஞ்சியங்களின் காவலர்கள் ஊரைவிட்டு ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓட்டமெடுக்க வேண்டும். கடலுணவை கடல் வழியே கொண்டு செல்லாமல் ஏ-9 பாதையால் என்ன வலுவான காரணத்தால் அந்நாட்களில் கொண்டு செல்லப்பட்டதோ அதே வலுவான காரணத்தால் ஏ-9 பாதை மக்களாலேயே திறக்கப் படவேண்டும். பசிக்கும் வயிற்றுக்காக.

யாழ் மக்களினதும் வாகரை இடம் பெயர்ந்தோரினதும் அவலங்கள் கூடவேண்டும் என்று போரைக்காட்டி மகிழும் படையினரை ஊரைக்கூட்டி அவர்கள் வந்த ஊருக்கோ அல்லது திரும்பியே வரமுடியாத உலகுக்கோ அனுப்ப வேண்டும். நேரம் வந்துவிட்டது. காலம் தாழ்த்த வேண்டாம். இனிக் கழியும் ஒவ்வொரு மணித்துளியும் இரண்டாவது மூன்றாவது என்று பட்டினிச் சாவைக் கூட்டிக் கொண்டே போகும். இதுவும் பசிக்கும் வயிற்றுக்காக.

சர்வதேசத்தைப் பகைக்க வேண்டுமென்பதல்ல. சர்வதேசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரத் தடைகளை அரசுகளுக்கு எதிராகச் சர்வதேசம் செய்கின்ற பொழுது தடைகளுக்குள்ளான நாட்டு மக்களின் பசி, பட்டினி போன்ற அவலங்கள் சர்வதேசத்தை எதுவுமே செய்யவில்லை. சர்வதேசமும் அந்த அவலங்களைத் தீர்க்க எதுவுமே செய்யவில்லை. அது வட கொரியா, உகாண்டா, றுவாண்டா, லெபனான் எதுவாக இருந்தாலும் ஒரே பார்வைதான். வர்த்தகம். பசியல்ல. பட்டினியல்ல. நோயல்ல. பசிக்கும் வயிற்றுக்காக சர்வதேசத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பசி வந்தால் பத்தும் பறக்கும். பசி மட்டுமல்ல. பசியால் சாவும் வந்துவிட்டது. பறக்க வேண்டியது உயிரல்ல. ஆக்கிரமிப்பு.

- புனிதன் (அவுஸ்திரேலியா)

-தமிழ் பிரிஸ்பன்

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சியில் தேங்காய் விலை வீழ்ச்சி

தென்மராட்சி பிரதேச சந்தைகளில் தேங் காய், மாம்பழம் ஆகியவற்றின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளன.

சந்தைகளில் 90 ரூபா வரை விற்பனை யான பெரிய தேங்காய் 60 ரூபாவாகவும் 50 ரூபா வரை விற்பனையான சிறிய அளவுத் தேங்காய் 25ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தென்மராட்சி கிழக்கு, தென்மராட்சி வடக்கு ஆகிய பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் வீடுகளைப் பார்வையிட அனுமதி கிடைத்தையடுத்து அங்கு செல்வோர் தமது வளவுகளில் இருந்து பெருமளவு தேங்காய்கள் சந்தைக்கு கொண்டு வருவதையடுத்து சந்தைகளில் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

-உதயன்

  • தொடங்கியவர்

யாழ் குடாநாட்டில் எழுது தாள்களுக்கு தட்டுப்பாடு.

யாழ் குடாநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் எழுது தாள்களுக்கு காணப்படும் தட்டுப்பாடுகள் காரணமாக பெருமளவில் மாணவர்களின் கல்வி நிலமை பாதிக்கப்பட்டுள்ளது

மூன்றாம் தவனைப் பரீட்சை ஆரம்பமாகி வகுப்பேற்றப் பரீட்சை இடம் பெறும் நிலமையில் குறிப்பிட்ட எழுது தாள்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் பாடசாலைகள் பரீட்சைக்கான வினாத் தாள்களை அச்சிட முடியாமலும் விடைகளை எழுதும் தாள்களையும் பெற முடியாத நிலையில் பரீட்சை வினாத்தாள்கள் வழங்குவதற்குப் பதிலாக கரும் பலகையில் எழுதி பரீட்சை நடத்தும் நிலமை காணப்படுகின்றது.

அதே வேளையில் சில பாடசாலைகள் வினாத்தாளை சிறிய அளவில் அச்சிட்டுக் கொடுத்தும் பரீட்சையை நடத்தகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.