Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தின்போது தமிழக எதிர்ப்பு எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பது குறித்து கோத்தா விளக்கம்

Featured Replies

Gota_CI.jpg

யுத்தத்தின்போது தமிழகத்திலிருந்து எழக்கூடிய எதிர்ப்பினை எவ்வாறு இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டது என்பதனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆங்கில வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது

இராணுவத்தை பொறுத்தவரை அதன் வலுவே மிகமுக்கியமான விடயமாக காணப்பட்டது. எந்த அரசாங்கமும் இதனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.

யுத்தத்தை வெல்லவேண்டும் என்றால் படையினரின் எண்ணிக்கையை மும்மடங்காக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் நான் தெரிவித்தேன். திறைசேரி பல பிரச்சினைகளை எதிர்கொண்டபோதிலும் இதனை செய்தே ஆகவேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.

நாங்கள் பெருமளவு பணத்தை செலவிடவேண்டியிருக்கும் ஆனால் இதனை செய்யாத பட்சத்தில் நாங்கள் வெற்றிபெற முடியாது என்பதை அவரிற்கு காண்பித்தேன்.

ஆதனை செய்திராவிட்டால் நாங்கள் எந்த தந்திரோபாயத்தை பயன்படுத்தியிருந்தாலும் அது வெற்றியளித்திருக்காது.

மேலும் இராஜதந்திர ரீதியில் இந்த யுத்தத்தை தொடர்வதற்கு இந்தியா என்ற நாட்டை கருத்தில்கொள்ளவேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். இந்தியாவை எங்களுடன் வைத்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன். எந்த நாடும் எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கலாம் ஆனால்இந்தியா எங்களுக்கு எதிராக திரும்பினால் நாங்கள் யுத்தத்தை தொடரமுடியாது என்பதை நான் உணர்ந்தேன்

இதன் காரணமாக இந்தியாவை எங்களுடன் வைத்திருப்பதற்கு நாங்கள் திட்டமொன்றை வகுத்தோம். வெளிவிவகார அமைச்சை பயன்படுத்தும் பாரம்பரிய வழிமுறையை நாங்கள் பின்பற்றவில்லை.

இலங்கையை சேர்ந்த மூவரும் இந்தியாவை சேர்ந்த மூவரும் இணைந்த குழுவொன்றை உருவாக்கினோம் பல விடயங்கள் குறித்து வெளிப்படையாக விவாதித்து உணர்வுபூர்வமான பல விடயங்களுக்கு தீர்வை கண்டோம்.

கருணாநிதி உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தவேளை இந்திய குழுவிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் தாங்கள் ஜனாதிபதியை சந்திக்கவிரும்புவதாக தெரிவித்தனர். நான் ஜனாதிபதியுடன் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்,அவர்கள் சந்திப்பை மேற்கொண்ட பின்னர் நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தாமல் இராணுவநடவடிக்கையை மேற்கொள்வோம் என அறிக்கையொன்றை வெளியிட்டோம் மகிழ்சியடைந்த கருணாநிதி உண்ணாவிரதப்போரட்டத்தை கைவிட்டார் நாங்கள் யுத்தத்தை தொடர்ந்தோம். யுத்தம் முடியும் வரை இந்தியாவுடன் நெருக்கமான உறவுகள் காணப்பட்டன பின்னர் புதியநபர்கள் வந்தார்கள்உறவு முறிவடைந்தது 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118818/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்தியக் குழுவில் சிதம்பரமும் ஒருவரா என்பதை அறிய ஆவல்..!

இந்த இந்தியக் குழுவில் சிதம்பரமும் ஒருவரா என்பதை அறிய ஆவல்..!

அறிந்து   :)

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்து   :)

செய்திகளை வாசிக்கும்போது அவற்றின் பின்னணியை சுயமாகக் கோர்த்து நடப்பனவற்றை ஊகிப்பதற்கு இவை முக்கியமானவை. இது அரசியலுக்கு மட்டுமல்ல. தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொருந்தும். இதை ஞான வளர்ச்சி எனக் கொள்ளலாம்.

எப்பொருருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இதில் கூறப்படும் அந்த அறிவே ஞானம். அதாவது ஊடகங்கள் தம் அரசியல் சித்தாந்தப்படி மாந்தரை தம் வழியில் கொண்டுசெல்ல முயற்சிக்கும்போது சுய அறிவால் உணர்ந்து உண்மையை உணர்தல் ஞானம் ஆகும். இந்த ஞானத்தை அடைந்தால் முகநூல், பதிவு, பிபிசி, தமிழ்வின் என்று நம்பி இருக்க வேண்டியதில்லை.

இது ஒரு பழைய செய்தி என நினைக்கிறேன், இதை முபும் எங்கோ வாசிச்ச நினைவு. 

 

இல்லாவிட்டால் முடிந்துபோன போரை திரும்பவும் நினைவு படுத்தி சிங்கள இனவெறிக்கு தீனி போடுகிறார் இந்த கோத்தா. 

 

அப்படி பார்க்கப்போனால் மகிந்த இன்னும் திரும்பி வராலாம் என்பதில் உறுதியாக இருப்பதாக எடுக்கலாம் போல் உள்ளது. 

 

 

எது எப்படியோ கருணாநிதிக்கு இவர்கள் ஆப்படித்ததாக சொல்கிறார், ஆனால் எல்லாரும் சேர்ந்து எமக்கு ஆப்படித்ததை ஏன் மறைக்கிறார்? 

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை வாசிக்கும்போது அவற்றின் பின்னணியை சுயமாகக் கோர்த்து நடப்பனவற்றை ஊகிப்பதற்கு இவை முக்கியமானவை. இது அரசியலுக்கு மட்டுமல்ல. தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொருந்தும். இதை ஞான வளர்ச்சி எனக் கொள்ளலாம்.

எப்பொருருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இதில் கூறப்படும் அந்த அறிவே ஞானம். அதாவது ஊடகங்கள் தம் அரசியல் சித்தாந்தப்படி மாந்தரை தம் வழியில் கொண்டுசெல்ல முயற்சிக்கும்போது சுய அறிவால் உணர்ந்து உண்மையை உணர்தல் ஞானம் ஆகும். இந்த ஞானத்தை அடைந்தால் முகநூல், பதிவு, பிபிசி, தமிழ்வின் என்று நம்பி இருக்க வேண்டியதில்லை.

 

 

நீங்கள் சொல்வது கருத்துக்கு தமது கருத்தை எழுதுவோருக்கு...

எதற்கும் எதிர்க்கருத்து எழுதுவோருக்கு இது பொருந்தாது

அவர்கள் நேற்று எழுதியதே

இன்று அவர்களுக்கு எதிர்க்கருத்தாகும்... :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்து :)

புத்தகம் அடிச்சு விக்கத்தான்

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.