Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் 60 வீதமான கடத்தல்களைப் புலிகள் செய்தனர் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை

Featured Replies

dcp8478888-300x163.jpg

 

வடக்கு மாகாணத்தில் காணாமல் போதல் சம்பவங்களில் 60 வீதம் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை என காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வீதமான சம்பவங்களை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதாகவும், 5 வீதமான கடத்தல்கள் ஆயுதக் குழுக்களாலும், மிகுதியானவை அடையாளம் தெரியாத குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு, கிழக்கில் போர் நடைபெற்ற காலங்களில் அதிகளவு காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ள, மெக்ஸ்வல் பரணகம தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்தக்குழு வடக்கு, கிழக்கு முழுவதும் மாவட்டம் தோறும் விசாரணைகளை நடத்தியது.
 
நடத்தப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கை கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கை தொடர்பாக விசாரணை ஆணைக்குழு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை,
காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு படைத்தரப்பு மற்றும் நீதி அமைச்சு போன்றவை ஒத்துழைப்பு தராமை வருத்தமளிக்கின்றது.
 
சிறைச்சாலைகள், தடுப்புமுகாம்கள் போன்றவற்றில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு பாதுகாப்பு, நீதி அமைச்சுக்களிடம் எழுத்து மூலம் கோரப்பட்டது.
சிறப்பு அதிபர் ஆணைக்குழு விசாரணை சட்டங்களுக்கு கீழ், ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய பொறுப்பான அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்த போதிலும் அவர்கள் இந்தக் கோரிக்கைகளுக்கு இணக்கம் வெளியிடாமை வருத்தமளிக்கிறது.
 
இதுவரை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின்படி காணாமல் போன சம்பவங்களுக்கு இராணுவம், விடுதலைப்புலிகள், ஆயுதக் குழுக்கள், அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்கள் மீது குற்றச்;சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
 
 
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான சம்பவங்களில் 60 வீதமானவை புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 30 வீத காணாமல் போன சம்பவங்களுக்கு இராணுவத்தினரும், 5 வீத காணாமல் போன சம்பவங்களுக்கு ஆயுதக் குழுக்களும், மிகுதி 5 வீதத்தை அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்களும் மேற்கொண்டிருக்கின்றன.
 
ஆனால் பலவந்தமாக கடத்தப்பட்டது, காணாமல் போகச் செய்யப்பட்டது தொடர்பாக இராணுவ அதிகாரிகள் மீது குற்றஞ்சுமத்தி வாய்மூல சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் சட்டமா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
 
பொது அமர்வுகளின் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் படி மோசமான குற்றச்செயல்கள் குறித்து ஆழமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும். குறிப்பாக 1990 இல் நடந்த சத்துருக்கொண்டான் , கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள், 1990 இல் அம்பாறையில் 600 பொலிஸார் மீது நடத்தப்பட்ட படுகொலை, குருக்கள்மடத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஆழமான விசாரணைகள் வேண்டும்.
 
இது தொடர்பில் விசாரிக்க சிறப்பு ஆணைக்குழுவொன்றை நியமித்து இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது கட்டளையிட்ட அமைப்புகள் மீது உள்நாட்டு குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கும், நட்டஈட்டை வழங்குவதற்கும், உளநலப் பாதிப்புக்குட்பட்டவர்களின் உள மேம்பாட்டையும், சமூக விருத்தியையும் கவனிப்பிற்குட்படுத்தவும் அதிகாரிகளின் உதவியை ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

40% வீதமானவை அரசால் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், சிங்களத்தின் தோட்டத்தில் விளையும் இலவம்பழத்தைச் சாப்பிடமுடியும் என்று நிரூபிக்க முனையும் உலகம். :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.