Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் மக்கள் மீள் குடியேற சாத்தியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் மக்கள் மீள் குடியேற சாத்தியம்.

அரசிதழில் நேற்று ஜனாதிபதி விடுத்த பிரகடனப்படி, சம்பூர் காணிகள் தொடர்பான வியாபார உடன்படிக்கைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

இதனால் அப்பகுதி மக்கள் மீள குடியமரக் கூடிய நிலை உண்டாகி உள்ளது.

இணக்க அரசியலின் பலனோ!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இணக்க அரசியல் என்பதைவிட இந்தியாவை ஓரங்கட்டுதல் எனக் கொள்ளலாம்..! :D அண்மையில் அமெரிக்க நாட்டாண்மைகள் வந்துபோனதை கவனிக்க வேண்டும்.

இந்த இடம் எப்பவும் அமெரிக்கனுக்கு கிளியரா இருக்க வேணும்.. :icon_idea::o

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே மிகப் பெரிய அரசியல் வெற்றி.

சம்பூர் அகதிகள் தொடர்பாக இந்தியா தவறான முடிவை எடுத்துவிட்டது புதிய அரசு மனச்சாட்சியுடன் செயல்பட வேண்டுமென வற்புறுத்தி வந்தவர்களுள் ஒருவன் என்கிற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சம்பந்தரை விமர்சிப்பது மட்டும் எங்கள் பணியென்று இருக்கும் சில புலம்பெயர்ந்த ஆர்வலர்களும் ஆய்வாளர்கள் சம்பூர் தொடர்பாகவேனும் சம்பந்தரை பாராட்ட முன்வர வேணும்.

 

எங்கள் பில்ளைகளின் நிலத்தையேனும் அங்குலம் அங்குலமாக மீட்டுப் பாதுகாக்கிற காலக்கட்டம் இது.

 

திருகோணமலையில் வேட்பாளரை நிறுத்திய சம்பந்தர் விரோதம் வென்றிருந்தால் திருமலையில் தமிழருக்கு பாராளுமன்ற பிரதி நிதித்துவம் இல்லாதொழிந்திருக்கும். சம்பூர் ஆக்கிரமிப்பு நிரந்தரமாக வென்றிருக்கும், இரண்டுபேர் வென்றிருக்க வேண்டிய இடத்தில் அதிஸ்ட்ட வசமாக சம்பந்தராவது வெற்றி பெற்றது இப்போது மகிழ்ச்சி தருகிறது.  

 

கூட்டமைப்பும் சம்பந்தரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்ல. அதுபோலத்தான் கஜேந்திர குமார் ஆதரவாளர்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களில்லை. அரசை விட்டுவிட்டு சம்பந்தரை எதிர்கிற போக்கை கஜேந்திரகுமார் கைவிடவேணும். கஜேந்திரகுமார் அணியினர் எங்கள் பிள்ளைகளின் நிலத்தையேனும் அங்குலம் அங்குலமாக மீட்டுப் பாதுகாக்கிற காலக்கட்டம் இது என்பதை உணர்ந்து செயல்பட வேணும். அவர் தன் வல்லமையையும் வளத்தையும் வெலிஓயாவை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும். அத்தகைய போராட்டங்கள் எதிர்காலத்தில் பரந்துபட்ட கூட்டணி அமைப்பதில் அவரது பங்கையும் உறுதிப்படுத்தும்.

 

சம்பந்தர் அடுத்து பன்குளத்தை மீட்க்கும் முயற்ச்சியில் இறங்க வேண்டும். கஜேந்திரகுமார் அவர்களே நீங்கள் அரசை நெருக்கி  வெலிஓயாவை மீட்டுத்தரும் போராட்டங்களை முன்னெடுப்பீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் ஆக்கிரமிப்பு விலகல்.. (இன்னும் முற்றாக விலகவில்லை.).. நில விடுவிப்பு என்று பரினாம வளர்ச்சி கண்டு.. வாக்கு அரசியல் மூலதனமாக்கப்பட்டு விட்டது. இது எமது நில விடுவிப்பு என்பது எனி தேர்தல் கால திருவிழா அம்சம் போலவே அமையப் போகிறது. இதனால்.. எமது நில ஆக்கிரமிப்பு விலகல் என்பது இன்னும் பல ஆண்டுகால அரசியலாக அமையப் போகிறது என்ற அபாய எச்சரிக்கையும் இதில் கலந்துள்ளது.

 

இதன் பின்னால் உள்ள அரசியலை மக்களுக்கு தெளிவுபடுத்தி.. தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு முற்றாக நிறுத்தப்பட்டு.. ஆக்கிரமிப்பு நில விடுவிப்பு என்பது எந்த முன் நிபந்தனைகளும் அரசியல் நிகழ்ச்சி நிரலும் இன்றி நடக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடம் தெளிவாக முன் வைத்து.. எமது மக்கள் சொந்த இடங்களில்.. இராணுவ ஆக்கிரமிப்பு.. இருப்பு அச்சுறுத்தல் இன்றி வாழும் சிவில் சூழலை சர்வதேச சமூகம் ஏற்படுத்திக் கொடுக்க வகை செய்ய வேண்டும்.

 

இன்றைய யாழ் பிராந்திய சிவில் அலுவலர் ஒருவரின் அறிவிப்பு.. இராணுவத்தின் மத்தியில் விடுவிக்கப்பட்ட குறிச்சிகளில் போய் இருந்து கொள்ளுங்கள். எனி அதுதான் வாழ்கை என்பது இராணுவ ஆக்கிரமிப்பை மக்கள் மத்தியில் திணித்து அதனை வழக்கப்படுத்திக் கொள்ளும்.. நில ஆக்கிரமிப்பை பல்வேறு வகைகளில் தொடரும் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கான தொடக்கமோ என்று அஞ்ச நேரிடுகிறது.

 

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சம்பந்தன் வெளிபடையாகப் பேச வாய்ப்பில்லை. ஏனெனில் அவரின் அரசியல் என்பது.. மைத்திரி நல்லாட்சி நடத்துகிறார் என்பது. அந்த வகையில்.. சிங்கள அரசுகளின் உள்நோக்கங்களுடன் கூடிய மறைமுக நகர்வுகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்க வேண்டிய பொறுப்பு.. சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு.. தமிழ் தேசிய விடுதலை முன்னணியினர் போன்ற உண்மையான தமிழ் மக்களின் விடிவில் அக்கறை கொண்டுள்ள அரசியல் தலைமைகளைச் சாரும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
60 வருடத்தில் சிங்களவர் தமிழருக்கு செய்யாததை இப்போ செய்கிறார்கள் என்றால் தமிழர் மேல் கொண்ட திடீர் அன்பாக இருக்குமா என சந்தேகம் எழுகிறது. அப்படி தமிழர் மேல் சிங்கள அரசு கருணை காட்ட தமிழர் எதையும் செய்து விடவில்லை.
 
தமிழருக்கு கிடைத்த அரசியல் வெற்றியால் சிங்கள அரசு அடிபணிந்து அல்லது வேறு வழியில்லாமல் செய்கிறதா என்றால்  அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. 
 
கடந்த பல தேர்த்தல்களில் அரசமைக்கும் முடிவை வாக்கு சீட்டுக்களால் மாற்றியவர்கள் சிறுபான்மையினர்.ஆதலால் சிறுபான்மையினரின் மனதை வெல்ல வேண்டும் என சில சலுகைகளை அளிக்க முன் வருகிறது. மற்றைய பக்கம் மகிந்த சிங்கள மக்களின் 40%க்கும் மேலான வாக்கு வங்கியை வைத்திருப்பதால் அவருடனும் சில பேச்சுவார்த்தைகளை மேற் கொள்வது போல் காட்டி அந்த வாக்குகளையும் கவர எத்தனிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.