Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் குமார் சுவிஸ் பிரஜை இல்லை! மறுதலிக்கின்றது சுவிஸ் அரசு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்தான் என்னவோ ஸ்விஸ் குமார், ஆள் சூம்பின கத்தரிக்காய் போல ரொம்ப சுமார் மூஞ்சி குமராக இருக்கார்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதுகளுக்கும் அசூர் கொடுப்பதால் வந்த வினை..! ஊருக்குப் போக முடியாதுன்னு.. அசூரை எடுத்திட்டு ஊரில போய் கொட்டம். இதற்கு உலக நாடுகள் முதலில் ஒரு முடிவெடுக்கனும்.  எடுத்தால்.. இந்தக் கிரிமினல்களை அசூர் கொடுத்த நாடே வைச்சு கவனிக்க வேண்டியான் இல்ல சொந்த நாட்டுக்கு விசாவை சிற்றிசன் சிப்பை.. புடுங்கிப் போட்டு.. கலைச்சு விடனும். :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

எமது தமிழ் ஊடகங்கள் சுவிஸ் குமார் என்று அவரை அழைத்து 725 ஆண்டு சுவிற்சர்லாந்தின் பாரம்பரிய பெருமையையே கேவலமாக்கி விட்டார்கள். Wilhelm Tell என்ற போராளிக்கே வெட்கக்கேடு.

Edited by tulpen

எமது தமிழ் ஊடகங்கள் சுவிஸ் குமார் என்று அவரை அழைத்து 625 ஆண்டு சுவிற்சர்லாந்தின் பாரம்பரிய பெருமையையே கேவலமாக்கி விட்டார்கள். Wilhelm Tell என்ற போராளிக்கே வெட்கக்கேடு.

 

அப்பிடித்தான் அங்கே லேபில் ஒட்டிக்கொண்டு திரியிறாங்க.

 

கனடா சுரேஷ்

கட்டார் குமார்

லண்டன் மதி

 

இப்பிடி ஒரு ஊருக்கு ஒரு பெயர் எண்டாவது இருக்கு.

இப்ப சுவிஸ் குமாரின் பாஸ்போட் biometricஆ இல்லையா.  :D  :D

 

 

சுவிஸில் பிரகாஸ் எனவும் புங்குடுதீவில் குமார் எனவும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 06.10.1971

  • 3 weeks later...

நீலப்பறவை,

அப்படியே சிறி லங்கா போய் நீங்கள் திரும்பி வருவதை கண்டு பிடித்தால் - உங்களுக்கு மரண தண்டனை நிச்சயம்.

இதையும் சேர்த்து விடுங்களேன்.

புறக்கணி சிறிலங்கா எல்லாம் குப்புற விழுந்தாப் பிறகு இப்படி பொய் சொல்லியாவது சனம் இலங்கை போறதை நிப்பாட்டப் போறியளாக்கும்?

செம காமெடி.

http://www.yarl.com/forum3/index.php?/topic/159203-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/?p=1117888

பொலிஸ் உயரதிகாரியின் உத்தரவுக்கு இணங்கியே சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்டார், விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

June 24, 20153:08 pm

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மக்களால் குற்றம் சுமத்தப்பட்ட சுவிஸ் குமார் யாழ்.மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமையவே தப்பிச்செல்ல விடப்பட்டதாக உயர் மட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை பொலிஸ்மா அதிபர் என்,கே.இலங்ககோனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் அறிக்கையை பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம் சமர்ப்பித்துள்ளனர்.

வித்தியா கொலை வழக்கு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு என்ற வகையில் மூன்று தரப்பினரின் கீழ் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் சுவிஸ் குமாரை பிரதேசவாசிகள் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பின் யாழ். மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தரவிற்கு அமைய அவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் சாட்சியம் கிடைத்துள்ளது.

அதேபோல வித்தியா காணாமல் போன நாளன்று அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்யச் சென்ற நேரத்தில் பொலிஸார் நடந்து கொண்ட விதத்தின் பிரதிபலனாகவே விசாரணை நடத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டமை தொடர்பிலும் விசாரணை ஊடாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரொருவரை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ள உயர் அதிகாரி தொடர்பில் இதுவரை எவ்வித ஒழுக்காற்று விசாரணையும் இடம்பெறவில்லை. பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

http://www.jvpnews.com/srilanka/113726.html

Edited by BLUE BIRD

சுவிஸ் குமார் தப்பிச்செல்ல பொலிஸ் உயரதிகாரிக்கு பணம் வழங்கப்பட்டது ; ரத்தினவேல் தகவல்

 

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுவிஸ் குமார் என்ற சந்தேக நபரை கொழும்புக்கு தப்பிச்செல்ல பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இதுவரை எவரும் கவனம் செலுத்தவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணி ரத்தினவேல் கவலை வெளியிட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்ககளை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

அவர் இது குறித்து தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சாதாரண சட்டத்தின் கீழ் முன்னெடுக்க முடியும். எனினும் ஓர் உள்நோக்கத்துடனேயே பயங்கரவாதத் தடைச்சட்டம் இதில் உட்படுத்தப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மரண தண்டனை இல்லை. ஆனால் ஆயுள் தண்டனை உள்ளது. அந்த வகையில் சந்தேக நபர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் பயங்கரவாதச் சம்பவமும் இல்லை.

ஆகவே இதில் பலவிதமான வலைப்பின்னல் காணப்படுகின்றது. முதலாவது குற்றச்சாட்டு பொலிஸார் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் என்ற நபரை தடுப்பிலிருந்து விடுவிப்பதற்காக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் பெருந்தொகையான பணத்தை இலஞ்சமாகப் பெற்றுள்ளார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு. இது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்.

இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்ற நிலையில் தேவையற்ற வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த வழக்கில் உட்புகுத்தப்பட்டுள்ளது – என்றார்.

http://www.jvpnews.com/srilanka/113901.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.