Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ9 பாதை திறப்பு சதி வலைத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதை திறப்பு விவகாரத்தில் பின்னப்படும் சதி வலைத் திட்டம்

வடக்கில் யாழ். குடாநாட்டிலும், கிழக்கில் வாகரையிலும் பொங்கி எழுந்துள்ள பெரும் மனிதாபிமானப் பேரவலத்தைத் தீர்க்கும் விடயத்தில் இலங்கை அரசு அற்பத்தனமாக நடந்து கொள்கின்றது என்று குற்றம் சுமத்தியிருக்கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன்.

யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்துள்ள புரிந்துணர்வு ஒப் பந்த வாசகங்களுக்கு முரணாக, யாழ். குடாநாட்டுக்கான தரை வழிப் போக்குவரத்துப் பாதையை மூடியுள்ள இலங்கை அரசுத் தரப்பு, அதனால் எழுந்துள்ள மோசமான மிக மோசமான மனிதப் பேரவலத்தைத் தனது அரசியல், இராணுவ நோக்கங்களை எட்டுவதற்கு வாய்ப்பானதாக மாற்ற மிகநுட்பமாகக் காய்நகர்த் தல்களைச் செய்கின்றது.

யாழ். குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் மருந்து வகைகளை ஒரே தடவையில் எடுத்துச் செல்வதற்காக ஒரு முறை மட்டும் "ஏ9' தரை வழிப் பாதையைத் திறக்கத்தயார் என்ற மட்டுப்படுத்தலோடு கூடிய அறிவிப்பை

அதுவும், இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகள், இலங்கை அரசின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளால் எழுந்துள்ள இந்த மனிதப் பேரவலம் குறித்துக் கூடி ஆராயவிருக்கையில்

இலங்கை விடுத்திருப்பது, இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் அதன் இறுதி நேரத்தந்திரம் என்பது இப்போது வெளிப்படையாகவே புரியத் தொடங்கி விட்டது.

ஒரே சமயத்தில் பெரும் எண்ணிக்கையான லொறிகளில் அத்தியாவசியப் பொருள்களைக் குடாநாட்டுக்கு எடுத்துச் செல்வது என்ற யோசனைத் திட்டத்தை, சர்வதேச சமூகத் துக்குக் கண்துடைப்பாகக் காட்டும் முயற்சியாக இலங்கை அரசுத் தலைமை அறிவித்தாலும் கூட, அந்த அறிவிப்பின் மூலம் தனது சில கையாலாகத்தனங்களையும் அது ஒப்புக் கொண்டுள்ளது என்பது கண்கூடு.

* சமயத் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்க ளும் சுட்டிக் காட்டியபடி குடாநாட்டில் அத்தியாவசியப் பொருள் களுக்குப் பெரும் பற்றாக்குறை தட்டுப்பாடு நிலவுகின்றது.

* கடல் மார்க்கமாகப் போதிய அளவு அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்று இதுவரை அரசு காட்டிய பூச்சாண்டி முற்றிலும் தவறானது.

* எதிர்வரும் வாரங்களில் வடக்கிற்குக் கப்பலில் பொருள் களைக் கொண்டு செல்வது,சீரற்ற காலநிலை காரணமாகச் சாத் திய மற்றதாகும்.

* குடாநாட்டில் வசிக்கும் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் தேவையைக் கடல் மார்க்க விநியோகம் மூலம் நிறைவு செய்வது அசாத்தியமானது. தரைவழிப் பாதை மூலமான விநியோகம் தவிர்க்க முடியாத கட்டாயம்.

இவ்வளவு விடயங்களையும் மேற்படி தனது அறிவிப்பு மூலம் அரசுத் தலைமை ஒப்புக் கொண்டுள்ளது ஏற்றுக் கொண்டுள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவ்வாறு ஒப்புக் கொண்டு, அதன் காரணமாகப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக மட்டும், சில கட்டுப்பாடுகளோடு ஒரு தடவையில் பொருள்களை எடுத்துச் செல்லப் பாதையைத் திறக்கவும், பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்ட கையோடு அதை மூடிவிடவும் எத்தனிக்கும் அரசுத் தலைமை யின் நடவடிக்கை கூட, அதன் நோக்கம் இலக்கு குறித்து சில நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகின்றது என்பதும் கவனிக் கத்தக்கது.

* பாதையை மூடிய தனது ஒரு தலைப்பட்ச நடவடிக்கையால் எழுந்துள்ள மனிதப் பேரவலத்தைத் தற்காலிகமாகத் தணிய வைத்து, அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் தனக்கு எதிராக எழுந்துள்ள மனித உரிமை குற்றச்சாட்டுகளை இப்போதைக் குச் சமாளிப்பது.

* யாழ். குடாநாட்டுக்கு நிரந்தர விநியோக மார்க்கம் ஒன்றை வழங்காமல் அந்த மக்களையும், அவர்களது எதிர்காலத்தையும் தொடர்ந்து அந்தர நெருக்கடி நிலையில் தொங்க வைத்திருப் பது.

* குடாநாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை அத்தியாவசியப் பொருள்களை மட்டும் வழங்கி, அதன் மூலம் இவ்விடயத்தில் சர்வதேச ரீதியில் தற்போது தனக்கு எதிராக உருவாகியுள்ள கருத்தியல் நிலைப்பாட்டை ஒருபுறம் சமாளித்துக் கொண்டு, மறுபுறம் குடாநாட்டு மக்களுக்கான சுயாதீன சுதந்திர போக்குவரத்து மார்க்கங்களை அடைத்து வைத்துக் கட்டுப்படுத்தி அவர்களைத் திறந்த வெளிச்சிறையில் தொடர்ந் தும் பேணுவது.

இவ்வாறு அரசின் இந்த மட்டுப்படுத்தப்பட்ட விநியோக மார்க்கத் திட்டம் பற்றிய அறிவிப்புக்குப் பின்னால் பல சூட்சு மங்கள், அர்த்தங்கள், ஒளிவுமறைவான நோக்கங்கள், தந்திரோபாயங்கள் புதைந்து கிடக்கின்றன. இலங்கை அரசுத் தரப்பின் மனதில் உள்ள இந்த உள்ளார்ந்த எண்ணங்கள் மற்றும் கபட நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, அதன் மேற்படித் திட்டத் தைப் புலிகள் நிராகரிப்பார்கள் என்பதும் அரசுத் தலைமைக்கு நன்கு தெரியும்.

அப்படிப் புலிகள் நிராகரிப்பதை வைத்துக் கொண்டு

யாழ். குடாநாட்டில் மனிதப் பேரவலம் எழுந்துள்ளதாகக் குற்றம் சுமத்தும் விடுதலைப் புலிகள், அதைத் தீர்ப்பதற்கு நன்நோக்கோடு அரசு முன்வைத்த திட்டத்தை முறியடித்து, நிரா கரித்து, தொடர்ந்தும் யாழ். குடாநாட்டு மக்களை மேலும் மனிதப் பேரவலத்துக்குள் ஆழ்த்த எத்தனிக்கின்றனர் என்றும் பிரசாரம் செய்யலாம் என்பதும் அரசுத்தரப்பின் திட்டம்.

ஒரே தடவையில் மட்டும் பொருள்களைக் குடாநாட்டுக்கு எடுத்துச் செல்ல பாதையை ஒரு முறை மட்டும் திறப்பது என்ற அரசின் உத்தேச யோசனைக்கு அறிவிப்புக்கு பின்னால் இத்தகைய பல உள்நோக்கங்கள் புதைந்து கிடக்கின்றன.

விடுதலைப் புலிகள் தரப்பை தமிழர் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் முன்னாலும் வசமாகச் சிக்க வைக்கும் உள்நோக் கத்தோடு நேர்த்தியாகப் பின்னப்பட்ட சதிவலையே இந்த அறிவிப்பு

இந்தப் பொறியில் சிக்காமல் அதேசமயம் குடாநாட்டு மக்களின் மோசமான நெருக்கடியையும், அவல நிலையையும் நீடிக்க அனுமதித்து அவர்களினதும், ஏனைய தமிழ் மக்களினதும், சர்வதேச சமூகத்தினதும் அதிருப்திக்கும் இடமளிக்காமல் இவ்விவகாரத்தைப் புலிகளின் தலைமை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகும்.

மனிதப் பேரவலத்தை உருவாக்கி, அதை அரசியல், இராணுவத் துரும்புச் சீட்டாக மாற்றும்அதைத் தனது தந்திரோபாயச் சீட்டாக மாற்றும், வங்குரோத்து நிலைக்கு அரசு சென்றிருக்கிறது. உரிய முறையில் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுப்பது தமிழர் தரப்பின் பொறுப் பும், கடப்பாடுமாகின்றது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.