Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தல்

Featured Replies

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தல்

[புதன்கிழமை, 22 நவம்பர் 2006, 06:46 ஈழம்] [ச.விமலராஜா]

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்காவின் வொசிங்ரனில் நடைபெற்ற மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை:

டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளான- நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகியவை நவம்பர் 21 ஆம் நாள் வொசிங்ரனில் சந்தித்தன.

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளமை தொடர்பாகவும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவும் இணைத் தலைமை நாடுகள் எசரிக்கை விடுத்தன.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை இணைத் தலைமை நாடுகள் கண்டனம் செய்கின்றன. இருதரப்பினரும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பமாகிய 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகள் போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதை கண்டனம் செய்கிறோம். அத்தகைய பகுதிகளை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொல்வதையும் காயப்படுத்துவதையும் இணைத் தலைமை நாடுகள் கண்டனம் செய்கிறது. இருதரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து இடம்பெயர்ந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பில் இருதரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த நவம்பர் 8 ஆம் நாள் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் இணைத் தலைமை நாடுகள் அதிருப்தி கொள்கிறது.

ஏ-9 பாதை திறப்பு உள்ளிட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்றும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் இருதரப்புக்கும் நினைவூட்டுகிறோம்.

கடந்த ஒக்ரோபர் 28-29 ஆம் ஆகிய நாட்கள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களை இணைத்தலைமை நாடுகள் அங்கீகரிக்கிறது. இருப்பினும் எதுவித முன் நிபந்தனைகளும் இல்லாமல் அடுத்த கட்ட பேச்சுக்களை இனப்பிரச்சனையில் தொடர்புபட்ட இருதரப்பினரும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கானது பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களினது அபிலாசைகள் அரசியல் வழி தீர்வில் இணைக்கப்பட வேண்டும்.

சர்வதேச கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை ஆணையத்தை இணைத் தலைமை நாடுகள் வரவேற்கிறது. அனைத்து தரப்பினராலும் ஏற்படுத்தப்படுகிற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களுக்கு ஏற்படுத்தப்படுகிற அச்சுறுத்தல்களை இணைத் தலைமை நாடுகள் கண்டனம் செய்கிறது. விசாரணை ஆணையமும் சிறிலங்கா அரசாங்கமும் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இப்பிரச்சனையில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டும் உதவும் நிறுவனங்கள் அவர்களை சென்றடைய முடியாத நிலையும் உள்ளது. மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய சேவகைளை அரசாங்கம் மேற்கொள்வதை இணைத் தலைமை நாடுகள் வரவேற்கின்றன.

மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான தரை மற்றும் கடல்வழிப் பாதைகளை எதுவித நிபந்தனையுமின்றி இருதரப்பினரும் ஏற்க வேண்டும் என்றும் இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்துகிறது. ஏ-9 பாதையூடாக ஒரு வாகனத் தொடரணியை அனுமதிக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருப்பதை இணைத் தலைமை நாடுகள் வரவேற்பதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தகைய நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

நோர்வேயின் அமைதி முயற்சிக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போர் நிறுத்த ககாணிப்புக் குழுவினர் பணிக்கும் இணைத் தலைமை நாடுகளும் சர்வதேச சமூகமும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=29856

ஏ 9 பாதை திறக்க வேண்டும் என்று அரசாங்கத்தை எந்த விதத்திலும் வற்புறத்தவில்லை. பாருங்கள் சர்வதேசத்தின் நடுநிலமையை.

புலிகளை மட்டும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இருந்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்று எச்சரித்திருக்கின்.றார்கள்.

அப்படியானால் வாகரையில் குண்டு போட்டு மக்களை கொன்றதை இணைத் தலைமை நாடுகள் நியாயப்படுத்த முனைகின்றன.

தமிழரை கைவிட்ட நிலைக்குதான் இணைத்தலைமை நாடுகள் வந்துவிட்டன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் சாமாதான நடவடிக்கைகளிடம் ஒரு கேள்வி.

சகுனம் பார்க்கும் அந்தணன் பூனையை மடியில் கட்டி திரிந்த மாதிரி, உலகத்துக்கே பயங்கரவாதத்தை மொத்தமாக வியாபாரம் செய்யும் அமரிக்காவோடு ஏன் இந்தக் கூட்டுகள் வைத்து திரிவான். இவனை புறம் தள்ளிவிட்டாலே சமாதானத்தின் முக்கால் பயணம் முடிந்தமாதிரியே!

உலகம் எப்போதுதான் இந்த நல்ல முடிவை எடுக்கப் போகிறதோ.

Edited by தேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.