Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ-9 பாதை விவகாரமும் `கௌரவப்' பிரச்சினையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ-9 பாதை விவகாரமும் `கௌரவப்' பிரச்சினையும்

ஏ-9 பாதை விவகாரம் இன்று இலங்கை அரசியல் அரங்கை ஆக்கிரமித்து நிற்கும் பாரிய ஒரு சர்ச்சையாக மாற்றப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கு இந்த ஏ-9 விவகாரமே காரணமாயமைந்தது. இப்போது சமாதான முயற்சிகள் என்று கூறப்படுபவற்றில் எந்தவொரு முன்னோக்கிய நகர்வுமே இப்பாதை தொடர்பான சர்ச்சைக்குக் காணப்படக்கூடிய தீர்விலேயே முற்றுமுழுதாகத் தங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி முதல் ஏ-9 பாதை ஊடான போக்குவரத்தை முகமாலையில் இராணுவம் தடை செய்தது. இதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாடு நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு அங்கு பாரதூரமான மனிதாபிமான நெருக்கடி தோன்றியது. சுமார் 5 இலட்சம் மக்கள் வாழும் குடாநாட்டில் அத்தியாவசிய உணவு மற்றும் பாவனைப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சுமார் மூன்று மாத காலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுக் கிடக்கின்ற நிலையில் குடாநாட்டு மக்களின் மனிதாபிமானத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கெனக் கூறிக் கொண்டு அரசாங்கம் மேற்கொண்ட எந்தவொரு நடவடிக்கையுமே உருப்படியான பயனைத் தரவில்லை.

ஏ-9 பாதையைத் திறந்துவிட வேண்டுமென்பதை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கோரிக்கையாக மாத்திரம் பார்க்கிறது. அக்கோரிக்கை வடபகுதி மக்களினுடையது என்பதைப் பற்றிச் சிந்திக்க அரசாங்கம் தயாராயில்லை. குடாநாட்டில் தீவிரமடைந்து வருகின்ற மனிதாபிமான நெருக்கடியே ஏ-9 தொடர்பான சர்ச்சை மீது சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திருப்பியது என்பதில் சந்தேகமில்லை. `தேசிய பாதுகாப்பைக்' காரணம் காட்டி பாதையைத் திறப்பதற்கு அரசாங்கம் தெரிவித்து வருகின்ற மறுப்பு அரசாங்கம் நினைக்கின்ற அளவுக்கு வெளியுலகில் செல்லுபடியாகவில்லை. குடாநாட்டு மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து விடுக்கப்படுகின்ற நெருக்குதல்கள் காரணமாகவே ஒரு தடவை மாத்திரம் அத்தியாவசிய பாவனைப் பொருட்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டுக்காக பாதையைத் திறந்து விடத் தயாராயிருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

ஏ-9 பாதையை ஒரு தடவை திறப்பது என்ற ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை வெளியான மறுநாள் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வாவும் அது தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்தார். அரசாங்க சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித கோஹனவும் பாதை திறப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ள உத்தேசிக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார். ஏ-9 பாதையை தொடர்ந்து மூடிவைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் ஒரு தடவை மாத்திரம் திறப்பதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளுக்கான பிரதிபலிப்பை அவதானித்த பின்னர் தொடர்ந்தும் பாதையை திறந்து விடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அரசாங்கத் தரப்பினால் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

ஆனால், பாதையை நிரந்தரமாகத் திறந்து விட வேண்டுமென்பதே தங்கள் கோரிக்கை என்று தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், தற்காலிக ஏற்பாடுகளை நிராகரித்திருக்கிறார்கள். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் டோக்கியோ மகாநாட்டு கூட்டுத்தலைமை நாடுகளின் கூட்டம் வாஷிங்டனில் நடைபெறுகின்றதை மனதில் கொண்டு தான் அரசாங்கம் பாதையை ஒரு தடவை திறக்கும் அறிவிப்பை விடுத்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கிறார்கள். தென்னிலங்கையின் சிங்களப் பேரினவாத சக்திகளான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்றவை அரசாங்கம் கோழைத்தனமாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றன.

ஏ-9 பாதை திறப்பு தொடர்பான சர்ச்சையின் காரணமாக ஜெனீவா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தவேளையில், இந்த விவகாரத்தை சிங்கள மக்களின் `கௌரவத்துடனும் தன்மானத்துடனும்' சம்பந்தப்பட்ட பிரச்சினையாக உருமாற்றுவதற்கு பேரினவாத சக்திகள் முயற்சிக்கும் அபாயம் இருப்பதாக சமாதானத்தில் இதய சுத்தியான அக்கறையுடைய அரசியல் சக்திகள் எச்சரிக்கை செய்தன என்பதை இக்கட்டத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது. அந்த எச்சரிக்கை எந்தளவுக்கு சரியானது என்பதை இன்று எம்மால் நிதர்சனமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கு அவசியமான ஒரு விவகாரமாக ஏ-9 பாதைத் திறப்பை ஆரம்பம் முதலிருந்தே அரசாங்கம் அணுகியிருந்தால் பேரினவாதசக்திகளுக்கு `தீனி' கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை முன்னெடுக்க கங்கணம் கட்டி நிற்கும் பேரினவாத சக்திகளுக்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

-தினக்குரல்

நிபந்தனைகளை புலிகள் ஏற்றால் மட்டுமே

அரசு ஏ9 வீதியை நிரந்தரமாகத் திறக்கும்

அரசின் நிலைப்பாட்டை விளக்குகிறார் ரம்புக்வெல.

""ஏ9 பாதையைத் திறப்பதற்கு அரசு முன் வைத்திருக்கும் நிபந் தனைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்காவிட்டால் அப் பாதை திறக்கப்பட மாட்டாது என்ற அரசின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமுமில்லை. தற்போது இப் பாதையை ஒருநாள் மாத்திரம் திறக்க அரசு முன்வந்திருப்பது மனிதாபிமானரீதியில் யாழ். மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்பிவைப்பதற்கே. அரசின் நிபந்தனைகளைப் புலிகள் ஏற்றுக்கொண்டால் நாம் நிரந்தரமாகப் பாதையை இப்போதே திறந்துவிடத் தயார். இவ்வாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறினார்.

ஏ9 பாதை மூடப்பட்ட பின்பு கப்பலின் மூலம் அரசு யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருள்களைத் தொடர்ந்தும் அனுப்பி வருகிறது. இருந்தும் பொருள் தட்டுப்பாடு நிலவுவதாக சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மக்களின் நலன்புரி அமைப்புகள் ஆகியன கூறிவருகின்றன. உண்மையில் ஏ9 பாதை திறந்திருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப் பட்டஉணவுப்பொருட்களின் 20 வீதத் திற்கும் அதிகமான அளவு கப்பல்மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தும், கப்பலில் ஏற்றி இறக்குதல் மற்றும் விநியோகித்தல் போன்ற செயற்பாடு கள் காரணமாக இத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கவனத்திற் கொண்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருடன் கதைத்து ஏ9 வீதி ஊடாக உணவுப் பொருள்களை அனுப்பத் தீர்மானித்துள்ளார். இப்பொருட்கள் யாழ்ப்பாணத்தில் சேமித்து வைக்கப்படும். தொடர்ந்தும் கப்பல் மூலம் பொருட்கள் அனுப்பப்படும். கப்பலில் அனுப்புகின்ற பொருட்கள் போதாமல் இருந்தால் அந்த வெற்றிடத்தை நிரப்ப சேமித்து வைக்கப்படும் இந்த உணவுப் பொருட்கள்

பயன்படுத்தப்படும்.

இந்த மனிதாபிமான நோக்கத்திற்காகவே ஏ9 பாதையைத் திறக்க அரசு முடிவெடித்தது. சில வெளிநாட்டு ஊடகங்களும், உள்நாட்டு ஊடகங்களும் ஏ9 பாதை தொடர்பான தனது நிலைப்பாட்டிலிருந்து மாறிவிட்டது எனச் செய்தி வெளியிட்டிருந்தன. அரசு ஒருபோதும் இது தொடர்பான நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இப்பாதையைத் திறப்பதற்கு அரசால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளைப் புலிகள் ஏற்கவில்லை. அந்நிபந்தனைகளை ஏற்காதவரை இப்பாதை திறக்கப் படமாட்டாது என்ற அரசின் நிலைப் பாட்டில் எதுவித மாற்றமுமில்லை. புலிகள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் இப்போதே நாம் இப்பாதையைத் திறந்துவிடத் தயார் என்றார் ரம்புக்வெல.

www.uthayan.com

Edited by YARLVINO

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.