Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடக்கி வாசிக்கும் இணைத்தலைமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கி வாசிக்கும் இணைத்தலைமை!

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வாஷிங்ட னில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் ஒருநாள் கூட்டம் முடிந்து, வழமைபோன்று உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.

எதிர்பார்க்கப்பட்ட பல ஊகங்களுக்கு மத்தியிலும் அந்த அறிக்கையில் கனதியாகவோ, காட்டமாகவோ எதுவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூற இயலவில்லை.

கடந்தமுறை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், தெரி விக்கப்பட்ட முக்கிய விடயங்கள் மீள வலியுறுத்தப்பட்டா லும், மக்களை வாட்டும், வதைக்கும் தற்போதைய சூடான விடயங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து மிக அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடியொற்றி அவற்றை அங்கீகரிக்கும் அல்லது அவற்றுக்குத் தாளம் போடும் வகை யிலேயே இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் முடிவு கள் எட்டப்பட்டிருக்கின்றன.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் கூட்டம்

அரசின் போர் நாடும் போக்கு, ஏதிலிகளான தமிழ் மக்களை இராணுவத் தாக்குதல்கள் நடத்திக் கொன்று குவிப்பது, மற்றும் கொலைகள், ஆள்கடத்தல்கள் உட்பட்ட பல வகையான மனித உரிமை மீறல்கள், எல்லாவற்றுக்கும் மேலாக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை தமிழ்ப் பிரதேசங்களுக்கு போதிய அளவிலும், முற்றிலுமாக அனுப்பாமல் பெரும் பேரவலத்தை உருவாக்கித் தோற்று விக்கப்பட்ட மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தை வெறுமனே கண்டனம் செய்வதோடு முடிந் திருக்கிறது.

இந்தக் கண்டனம் இலங்கை அரசாங்கம் திருந்திச் செய லாற்றுவதற்கு உதவப்போவதில்லை. இந்த விடயங்களுடன் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து எந்த வகை யிலும் தொடர்பு படுத்தப்படவில்லை. காட்டமான எச்சரிக் கைத் தொனியை குறைந்த ஸ்ததியிலேனும் கேட்க முடிய வில்லை! உறைப்பாக எதுவுமே சொல்லப்படவில்லை!!

முதலாவதாக

மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான தரை மற்றும் கடல்வழிப் பாதைகளை எவ்வித நிபந்தனையும் இன்றி நிரந்தரமாகத்திறப்பதற்கு இரு தரப்பினரும் இணங்க வேண்டும் என்று இணைத்தலைமை நாடுகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஏ 9 பாதையூடாக ஒரே தடவையில் வாகனத் தொடரணி மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு உரிய பொருள் களை எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அனுமதித் துள்ளதை இணைத்தலைமை நாடுகள் வரவேற்றுள்ளன.

ஆனால் அதனைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. விடுதலைப் புலிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று மட்டுமே கேட்டுள்ளன.

மக்களின் மனிதாபிமான பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை இருந்திருப் பின், முன்னரைப் போன்று ஏ9 வீதி நிரந்தரமாகத் திறக் கப்பட வேண்டும் என்று இடித்துரைக்கும் தொனியில் கூறப்பட்டிருக்க வேண்டும்.

ஏ9 பாதை திறக்கப்படவேண்டும் என்பது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஓர் அம்சம் என்று கூறப்பட்ட போதிலும் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கண்டிப்பான வலியுறுத்தலும் இல்லை!

ஒரே தடவையில் மக்களுக்குரிய பொருள்களை எடுத் துச் செல்வதற்குப் பாதையைத் திறப்பது என்ற திட்டத்தின் பின்னால் எத்தகைய கபட நோக்கங்கள் அரசிடம் உண்டு என்பதனை நேற்று இப்பத்தியில் விலாவாரியாகக் குறிப் பிட்டிருந்தோம்.

அந்தக் கடப நோக்கங்களுக்கு ஒத்திசைவாக, அதனை தீட்டுவதில் ஒரு பங்காளியாக அல்லது ஓர் ஆலோசகராக இணைத்தலைமை நாடுகள் திரைமறைவில் செயற்பட்டிருக் கலாம் என்ற பலத்த சந்தேகம் இப்போது எழுகிறது!

போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர், யாழ்ப் பாணக் குடாநாட்டுக்குத் தரைவழிப்பாதை ஊடாகவே அத்தியாவசியப் பொருள்கள் உட்பட சகலனவும் எடுத்து வரப்பட்டன.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் மட்டுமே கடல்வழி மார்க்கத்தில் பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையில், தரை வழியோடு, கடல்வழியும் சமனாகச் சேர்க்கப்பட்டிருப் பதால், வட பிரதேசத்தில் பெரும் யுத்த நிலை மீண்டும் தோற்றுவிக்கப்படலாம் என்பதை அது ஆரூடம் சொல்கிறதா அல்லது அதற்கு ஆதரவாக இருந்து பேசுகிறதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது!

இரண்டாவதாக

இரண்டு தரப்புகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறு வதை இணைத் தலைமை நாடுகள் கண்டித்திருக்கின்றன.

ஒப்பந்தத்தில் இணங்கப்பட்டவாறு போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் பணிப்புரைகளை ஏற்று நடக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளுக்கும் ஞாபகமூட்டி உள்ளன.

இவை கடந்த தடவை நடைபெற்ற கூட்டத்திலும் வலி யுறுத்தப்பட்டவை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத்தக்க முறையில் ஆக்கபூர்வமாகப் பயன் படுத்தினால், பேச்சுவார்த்தை மூலமான ஓர் உகந்த தீர்வுக்கு வழி செய்யலாம் என்று அறிக்கை கூறுகிறது.

அதேவேளை, வடக்கு கிழக்குக்கான விசேட ஏற்பாடு களைக் குழப்பிவிடக்கூடாது என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. அந்த ஏற்பாடுகளே பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக உள்ளன. அவற்றைப் பேணுவதன் மூலமே தீர்வு ஒன்றை எட்ட வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மொத்தத்தில் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத் தில் இலங்கையின் கொதிக்கும் விவகாரங்களைக் குறைப் பதற்கோ அன்றி தீர்ப்பதற்கோ சிலாகித்துக் கூறவல்ல முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்த வகையில் தமிழ் மக்கள் கண்டிருப்பது வெறும் ஏமாற்றமே. திருப்பங்களைத் தரும் என்ற எதிர்பார்ப்புகளும் அற்றுப்போகின்றன.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.