Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரட்ணஜீவன் கூலின் புலம்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மகன். தேசப்பற்று மிக்க ஒருவரை தமிழ் மக்களுக்கு அளப்பெரிய சேவை செய்த ஒருவரை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து "தேசத்துரோகி" என்று முத்திரை குத்திவிட்டார்கள். இது மிகவும் கவலைக்குரிய ஒரு விசயம்.

யாழ்வினோ!!!

ஜீவன்கூலின் தேசப்பற்றை நீங்கள் அளந்ததுபோல், புலிகளின் புலனாய்வுக்கு முடியாமல் போனது கவலை தரும் விடயம் தான்.

thamilmahan இன் அளவுக்கதிகமான குருபக்த்தி வெறிதனம்தான் புலிகளின் புலனாய்வையும், தலைமையின் நடவடிக்கைகளயும் வசைபாடியதாக்கும்.

நீலன், கதிர்காமரின் புலமைக்கும் விசுவாசிகள் இல்லை என்று நினைக்கிறீர்கள் போலும்.

தமிழ்மகனின் இன்னொரு கோவமடா!

பல்கலைக்களகத்துக்கு இருக்கு தெரிவுரிமையை புலிகள் கையில் எடுப்பது முறையா?

பசித்தவன் வயிற்றிலேயே அரசியல் செய்கிற, அந்த மகிந்தவுக்கு அந்த உரிமை இருக்கும் போது, அதை யாழ்மக்கள்; கையில் எடுப்பது முறையில்லையாம்.

போங்க ஐயா!!! நீங்களும் உங்கள் பத்துவிரல் மேதாவித்தனங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

tamilmahan, jude என்பவர்களும் தான் அவரின் கூத்துக்களுக்கு குருப்பணி விசுவாசம்தான் காரணம் என்று, தலையால் நடந்தார்கள்.

இவர் என்றுமே எனது குருவாக இருந்ததில்லை. தேவன் போன்ற கூலிகள் தமது தேவைகளுக்காக கருத்துக்களை திரித்து எழுதுவது யாழ்.களத்துக்கு ஒன்றும் புதிதல்ல. ரட்ணஜீவன் ஹ_லின் தெரிவை ஜே.வி.பி. குறிப்பாக விரும்பியிருந்தததையும் அதற்கு காரணம் ஈ.பி.ஆர்.எல்.எப்.புடன் தொடர்புகளை உடைய சிறிதரனின் மூலம் ஹ_லை தாம் பயன்படுத்த முடியும் என ஜே.வி.பி. திட்டமிட்டிருக்கலாம் என்பதையும் நான் தெளிவாக எழுதியிருந்தேன்.

ஹ_லுக்கு மாற்றீடாக பிரேரிக்கப்பட்ட பேராசிரியர்களே எனது ஆசிரியர்கள். அவர்களை விடுத்து யாழ். பல்கலைக்கழக பேரவை பெரும்பான்மையாக ஹ_லை தமது பல்கலைக்கழக உபவேந்தராக வாக்களித்து பிரேரித்திருந்தது. யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தால் யாழ்ப்பாண கல்விமான்கள் மத்தியில் இருந்து தெரியப்படுபவர்கள்.

புலிகளின் புலனாய்வையும், தலைமையின் நடவடிக்கைகளயும் வசைபாடியதாக்கும்.

பல்கலைக்களகத்துக்கு இருக்கு தெரிவுரிமையை புலிகள் கையில் எடுப்பது முறையா?

பசித்தவன் வயிற்றிலேயே அரசியல் செய்கிற, அந்த மகிந்தவுக்கு அந்த உரிமை இருக்கும் போது, அதை யாழ்மக்கள்; கையில் எடுப்பது முறையில்லையாம்.

ஹ_ல் பற்றிய பிரச்சினையில் இந்த யாழ். பல்கலைக்கழக பேரவை கல்விமான்களின் படங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டி யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டு இவர்கள் யாழ் பல்கலைக்ககழக பேரவையிலிருந்து விலகவேண்டும் என்று கட்டளையிட்டு அதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக இதற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமது அமைப்பை களங்கப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு செய்யப்பபடுகின்றன என்று அறிவித்திருந்தார்கள். மேலும் இணையத்தளங்களிலும் சிறிலங்கா அரசின் கூலிகள் சிலரால் இவ்வாறான நடவடிக்கைள் தமது ஆதரவாளர்களை போல வேடமிடும் சிலரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவித்திருந்தார்கள். வாசகர்கள் அவதானமாக இருக்கவேண்டும்.

தேவன் போன்ற கூலிகளின் ஒரே நோக்கம் விடுதலைப்புலிகளை என்றும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி வைப்பதே.

விடுதலைப்புலிகள் கல்விமான்களை மிகவும் மதிப்பவர்கள். அவர்கள் கல்விமான்களுக்கு என்றுமே அச்சுறுத்தல் விடுவதில்லை. ரட்ணஜீவன் ஹ_லின் சகோதரர் யாழ்ப்பாணத்தில் இருந்தும் பின்னர் பேராதெனியாவில் இருந்தும் விடுதலைப்புலிகளுக்கு அவதூறான எத்தனையோ அறிக்கைகளை யாழ். பல்கலைக்கழகத்தின் பெயரால் வெளியிட்ட போதும் விடுதலைப்புலிகளால் தாம் அச்சுறுத்தப்பட்டதாக அவரே அறிக்கை விடவில்லை.

விடுதலைப்புலிகள் சொல்வது போல இந்த உபவேந்தர் தெரிவை சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை கல்விமான்களுக்கு எதிரானவர்களாக காட்ட பயன்படுத்துகிறது. விடுதலைப்புலிகளின் பெயரால் அரச கூலிகள் அச்சுறுத்தல் விடுகிறார்கள். இணையத்தளங்களில் இறக்கிவிடப்பட்ட தேவன் போன்ற கூலிகள் அதை உண்மை என்று வாதிடுகிறார்கள்.

Edited by Jude

  • தொடங்கியவர்

சரி அப்படி புலிகள் அச்சுறுத்தல் விட்டதாக ஏன் அவர் சொல்லவேண்டும் ஆக அதன் மூலம் அவர் சாதிக்க துடிப்பது என்ன வரிக்குவரி புலி எதிர்ப்பை முழங்கி இருகிறார் உவர்.உவரின் மேல் மதச்சாயம் பூசி விவாதம் நடத்தியதை மதன் அண்ணா தந்த பழைய இணைபில் பார்த்திருகிறேன்.தமிழன் யாரும் மதவாதிகள் அல்ல மதவாதிகளாக இருந்தகாலம் எப்போதே கரைந்துவிட்டது மதவாதத்தை பூசி விவாதம் நடத்திய நண்பர்கள் நீங்கள் சொல்லவந்தது என்ன அல்லது சாதிக்க முனைந்தது என்ன புலிகளும் யாழ் பல்கலை சமுகமும் மத வெறியர் என்பதையா??

[THE EXILE RETURNED'-A Self Portrail of Tamil Vellahlas of Jaffna என்ற அந்த பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹீலின் புத்தகத்தை வாசிக்கும் போது ஒரு ஆபாச சஞ்சிகையை வாசிக்கும் எண்ணம்தான் தோன்றுகின்றது. பொது இடங்களில் நாம் கதைக்கக் கூச்சப்படும் விடயங்கள் தான் கிளறப்பட்டிருக்கின்றன. இப் புத்தகம் Harvey Mudd College, Claremont. USA என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழரின் கலை கலாச்சாரப் பாரம்பரியங்களை உலக அரங்குகளில் வெளிக் கொணர்ந்த புத்தி ஜீவிகளைப் பற்றிக் ள்விப்பட்டிருக்கிறோம். அதைக் கிண்டலடித்துத் தன்னைப் புத்திஜீவியாகக் காட்ட நினைக்கும் புத்திஜீவிகளும் இருக்கின்றனர்.

தமிழர் பாரம்பரியத்தையும், சைவசமயத்தையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்குக் கேவலப்படுத்தியிருக்கிறது இந்த நூல். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது மதத்தில் பற்று இருக்கு வேண்டும் தான். ஆனால், அதற்காக இன்னொரு மதத்தைக் கேவலப்படுத்திக் கிண்டலடித்துத் தான் தன்து மதப்பற்றைக் காட்ட நினைப்பது வரவேற்கப்படக் கூடிய தொன்றல்ல. அது மதவேறி (Religious Fanaticism) அதனால் உருவாகக் கூடிய பின்விளைவுகளைப் பேராசிரியர் அறியாமலிருக்க முடியாது.

தன்னுடைய அந்தப் புத்தகத்தில் நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, சங்கிலியன் அரசன், சாயி பாபா என்று குறைவைக்காமல் எல்லோரையும் கிண்டலடிக்கிறார். தன்னை ஒரு இந்து சமயத்தை வேத,ஆகம,புராணங்களையெல்லாம் நன்கு கற்ற ஒரு மேதாவி போல் மேலை நாட்டாருக்குக் காட்டுவதற்காகவும் இந்து சமுதாயத்தை முடிந்தவரை கேவலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் ஆங்கிலேயரின் மொழபெயர்ப்புகளை அடிக் குறிப்பாகக் கொடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் புகுத்தியிருக்கிறார்.

வேதாகமங்களிலுள்ள எந்ந நல்ரல விஷயமும் மனிதனுடைய கண்ணுக்குத் தென்படவில்லை. யாருக்குமே தென்படாமல் இருக்கிற அவ்வளவு செக்ஸ் சம்பந்தமான விடயங்களையும் தேடிப்பிடித்திருக்கிறார்.

O'Flaherth மொழிபெயர்ந்த Shatapatha Brahmana வைத் தனது புத்தகத்தின் 239 ஆவது பக்கத்தில் குறிப்பிடுகிறார். அஸ்வமேத யாகத்தைப் பற்றிய ஒரு குறிப்பு 'ஆர்வமுள்ள வாசகருக்காக" என்று தருகிறார். யாகம் முடிவில் குதிரையைப் பலியிட்டு பட்டத்து அரசியைக் குதிரைக்கு அருகே படுக்க வைத்து (மிகுதியை அவரது புத்தகத்திலுள்ளபடியே") "The they draw our the penis of the horse and place it vagina of the chief queen while she says, "may the vigorous virile male, the layer of seed, lay the seed' this she says for sexual intercourse"

யாழ்ப்பாணத்துப் பெண்கள் தமது 42 வயது வந்தவுடன், புருஷன் வேறிடங்களில் மேயாமல் இருப்பதற்காகத் தென்பகுதியிலிருந்து கன்னிகளை வரவழைத்து வீட்டில் அக்காலத்தில் சேவைக்கு அமர்த்துவார்களாம். பிள்ளை உண்டானால், அவர்களுக்குப் பணவெகுமதிகளைக் கொடுத்துத் திருப்பி அனுப்பி விடுவார்களாம் (பக்கம் 168) எங்கோ ஒரு மூலையில் இப்படி ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் இதை வாசிக்கும் யாழ்ப்பாணத் தமிழரல்லாதவருக்கு இது எவ்விதமான உருவகத்தை ஏற்படுத்தும்? அதுதான் இதன்நோக்கமா?

கதிர்காமத்தில் கலையாடும் பெண்களைப் பற்றி Princetion University யைச் சேர்ந்த பேராசிரியர் கணநாத் ஒபயசேகர ஆராய்ந்தாராம். பக்கம் 111இல் இவர் எழுதுகிறார். ".....Well married Hindu women who went into a trance and danced, Their rapid back and forth hip movements signified that they saw themselves as in copulation with Lord Muruha.... 'கதிர்காமத்தில் கலையாடும் மணமுடிந்த பெண்களின் பின்புற அசைவு. அவர்கள் முருகனுடன் உடலுறவு கொள்ளுவதாகப் பாவனை செய்தலைக் காட்டுகிறதாம்.

Young and Jebanesan (தற்போதைய பேராயர் ஜெபனேசன்) எழுதிய "the Bible Trembled" என்ற புத்தகத்தின் 171 ஆவது பக்கத்தைக் குறிப்பிடுறார். "extensive quotations from the secular (Newa paper,the) Jaffna freeman on the robbery, and violencee including rape, accompained by opium use in the 1860s around the Nallur and Maviddaouram Temples, especially at festival time பக்கம் 104 இல் கந்தபுராணத்தில் முருகன் வள்ளியைக் கடத்தி வல்லுறவு செய்கிறாராம். பிள்ளையாரின் உதவியுடன்!

228ஆவது பக்கத்தில் பரதநாட்டியம் பற்றி "during the dance where the dancer invited Krishna to copulate with the her.. sang and danced of sex with god, and whose dances included moments when the legs would be spread...."நடன மாடும் பெண் காலை விரித்துக் கிருஷ்ணரை உடலுறவு கொள் அழைக்கின்றாராம்.

ஒரு தாழ்ந்த ஜாதிக் குடும்பத்துக்கு 'மாவீரர் குடும்பம்" ஆனதால் வந்ந மௌசைப் பற்றியும் Fasist Nafianalism பற்றியும் 316 ஆம் பக்கத்தில் விபரிக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் 227 ஆவது பக்கத்தில் யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் வளாகத்துக்கு அருகிலுள்ள கணவன்மார், கொழும்பில் வேலை பார்க்கும் வீட்டுப் பெண்களை 'விசிட்' பண்ணுவார்களாம்.

இவ்வாறு யாழ்மக்களை பற்றி இழிவாக எழுதியவர்களை யாழ்சமுக்கம் ஏற்காமல் இருப்பதில் என்ன தவறு??இவரெல்லாம் பேராசிரியரா

யாழ் வினோ உங்கள் அசிரியர் என முழங்கினீர்கள் இதுதான் உவரின் இலட்சணமா நீங்கள் அவரின் மாணவன் என்பதால் வெட்கப்படவேண்டியவர் நீங்கள் என் பது என் கருத்து.

எமது விடுதலைக்காய் போராடி மடிந்த வீர மறவர்களின் குடும்பங்களையும் தன் ஊத்தைதனத்தால் விமர்சித்த பொதி சுமக்கும் கழுதைதான் உந்த கூல் உதுக்கு வக்காளத்து வாங்குபவர்களும் உந்த உத்தைக்கு நியாயம் கற்பிப்பவர்களாகவே பார்கப்படுவார்கள்

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.

இதை பழைய கருத்துக்களத்தில் தமிழ் மகன் எழுதியது ஆமாம் யாழ் பல்கலை சமுகம் முட்டாள்கள் உவர் வானத்தில இருந்து குதித்த அதி புத்திசாலி.எத்தனையோ மேதைகளால் வளர்க்கப்பட்டதுதான் யாழ் பல்கலைகழகம் திடிரென ஒரு மாமேதை வந்து ஒண்டும் புடுங்கப்போறது இல்லை.யாழ் பல்கலைகழகத்துக்கு என ஒரு தராதரம் இருக்குது தமிழர் கலாச்சாரத்தின் விழாவாக பொங்கல் தினம் கொண்டாடுவதி கிண்டலடித்து கூலுக்கு விளக்கு பிடிக்கிறார் தமிழ்மகன்.என்ன காலமப்பா இது கண்ட கண்ட கழுசறைகெல்லாம் விளக்கு பிடிக்க யாழ்களத்திலும் ஆக்கள் இருக்கீனம்

  • கருத்துக்கள உறவுகள்

¿¡ý «È¢ó¾Å¨ÃÔõ '«Ãº ´üÈý' ±ýÚ «Å¨Ã «¨ÆôÀÐ Á¢¸×õ ¦À¡öÂ¡É ÌüÈðÎ ±É Å¡¾¢ò§¾ý. þí§¸ ¸Çò¾¢ø þÕôÀÅ÷¸û ±§¾§¾¡ ¦º¡øÄ¢ «Å÷ ЧḢ ±É Óò¾¢¨Ã Ìò¾¢É¡÷¸û. þýÚŨà ±ÉÐ ¿¢¨ÄôÀ¡ðÊø Á¡üÈõ þø¨Ä. ¾Å¢Ã×õ '§ÀîÍî ;ó¾Ãò¨¾' «Å÷ ÀÂýÀÎò¾¢Â¾ü¸¡¸ 'ЧḢ' ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀÎõ ¿¢¨Ä «ÅÕìÌ ¯ÕÅ¡¸¢Â¢ÕìÌÁ¡É¡ø, ¿¡¨Ç ¾Á¢Æ£Æõ ÁÄ÷󾡸 «í§¸ §ÀîÍî ;ó¾¢Ãõ ±ó¾ «Ç×ìÌ §À½ôÀÎõ ±ýÀ¾¢ø ÀÄò¾ ºó§¾¸õ ±Ø¸¢ÈÐ.

யாழ் களத்தில் உள்ள சில பேச்சுச் சுதந்திரத்தை வைத்து இங்குள்ள சில நபர்களின் கருத்துக்களையும் அவர்களின் தமிழ் தேசிய நிலைப்பாட்டையும் வைத்து தமிழீழத்தின் பேச்சுச் சுதந்திரம் பற்றி நீங்கள் தீர்மானிப்பதும்... சந்தேகிப்பதும் கவலை அளிக்கிறது. இது ஒரு பகுப்பறிவியல் ரீதியான அணுகுமுறையாகவும் தென்படவில்லை.

ரட்ணஜீவன் விவகாரத்தில் விடுதலைப்புலிகளின் தலையீடுகள் எதுவும் வெளிப்படையானதாக இல்லை. எனவே புலிகள் மீது எவரும் பதுங்கி இருந்து குற்றச்சாட்டுக்களைச் சொல்லலாம். அது வழமை.

தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுக்கும் பல புலம்பெயர்ந்தவர்களே விடுதலைப்புலிகளால் தாங்கள் ஊரில் வாழ முடியாதுள்ளது என்று கூறி அகதி அந்தஸ்துப் பெற்றவர்களாகக் கூட இருக்கின்றனர். இதில் ரட்ணஜீவனுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புக்கு புலிச்சாயம் பூசியோரே பொறுப்பு. இப்படித்தான் வீண்பழிகள் புலிகளின் மீது அடை மழையாகப் பொழியச் செய்யப்படுகின்றன. அதில் புலி ஆதரவாளர்களின் சுடுகுது மடியைப் பிடி என்ற பாணியிலான மேலோட்டக் கருத்துக்களே அதிகம் வசை மழை பொழியக் காரணமாகி விடுகின்றன. புலிகள் தான் இவற்றிற்கு என்ன செய்ய முடியும். மண்டையில் போட்டாலும் அடங்குதுகளா?

உண்மையில் பல சீனியர் நிலையில் உள்ள யாழ்பல்கலைக்கழக பேராசிரியர்களை ஓரங்கட்டிவிட்டு யாழ் பல்கலைக்கு வெளியில் இருந்த ரட்ணஜீவனை முன்னிலைப்படுத்தி அவரை, யாழ் பல்கலைக்கழகத்துள் புகுத்திய மகிந்தவின் செயற்பாட்டுக்கு எதிராக, தமிழ் தேசிய தளப்பார்வையோடு மாணவர்களும், தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்ற ரீதியில் பேராசிரியர்களும்... தொடுத்த எதிர்ப்புக்கள் இன்று புலிச்சாயத்தோடு புலிகள் மீது மீண்டும் ஒரு வசை மழை பொழிய சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே மனதுக்கு மிகவும் வருத்தமளிக்கும் செயல்.

அந்தப் புலிச்சாயப் பூச்சுக்கு முண்டு கொடுக்க யாழிலும் சிலர் அவரின் வருகையை புலிகள் எதிர்பதாக தமிழ் தேசியத்தளத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அவை அநாவசியமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்.

தமிழ் தேசிய தளம் புலிகளால் போடப்பட்டிருப்பினும் அது தமிழ் மக்களின் இயங்குதளம். அதை சீரழிக்க முனையும் சக்திகளை புலிகள் தான் எதிர்க்க வேண்டும் என்றில்லை. சாதாரண தமிழ் உணர்வுள்ள எவரும் எதிர்ப்பர் என்பதே யதார்த்தம். அதற்குப் புலிச்சாயம் பூசியவர்களே ரட்ணஜீவனுக்கு அவலைக் கொடுத்துள்ளனர் மென்று முழுங்க. :huh::huh:

Edited by nedukkalapoovan

ஈழவன் நீங்கள் கூறிய கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. திரு-ரட்ணஜீவன் யாழ் மக்களை பற்றி இழிவாக கருத்து வெளியிட்டார் என்பது எல்லாம் பிழையான செய்திகள், முற்றிலும் பொய்யான தகவல்கள். இப்படியான செய்திகள் ஏன் வெளிவந்துள்ளது என்பது எல்லாராலும் ஊகித்து அறிந்துகொள்ள முடியும். யாரோ திட்டமிட்டு கல்விமான்களும் புத்திஜீவிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று காட்ட முயலுகின்றார்கள். நண்பர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

A Self Portrail of Tamil Vellahlas of Jaffna இந்தப்புத்தகத்தில் பக்கம் 168,111,171,228,227,316 பக்கங்களை வாசியுங்கள் யாழ்வினோ இது கூல் அவர்கள் எழுதிய புத்தகம்

ThamilMahan, Jude, YARLVINO என்ற பெயர்களில் ஒழிந்திருப்பது

1) ஒருவரா?

2) இருவரா?

3) மூவரா?

ThamilMahan, Jude, YARLVINO என்ற பெயர்களில் ஒழிந்திருப்பது

1) ஒருவரா?

2) இருவரா?

3) மூவரா?

எத்தனை பேர் வந்து எழுதினாலும் கூல் தனது கூழ் மூட்டை கருத்தை வைத்து தனது கொடுர முகததை வெளிப்படுத்துவார் :P

மேலே ஈழவன் அண்ணா இனைத்த கூழ் மூடை கூழின் புத்தகத்தில் வந்த கருத்துக்கு ஒரு தரும் பதில் எழுதவில்லை :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூட் இதுவரை நீர் எழுதிக்கிழித்துக் கொண்டிருந்தது, அது விற்றுக்கொண்டிருந்த எயமான்விசுவாசம் எது என்பது களத்துக்கு விளங்காது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறதா உமது மேதாவித்தனம்?

Jude எழுதியது

ஹ_ல் பற்றிய பிரச்சினையில் இந்த யாழ். பல்கலைக்கழக பேரவை கல்விமான்களின் படங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டி யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டு இவர்கள் யாழ் பல்கலைக்ககழக பேரவையிலிருந்து விலகவேண்டும் என்று கட்டளையிட்டு அதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக இதற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமது அமைப்பை களங்கப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு செய்யப்பபடுகின்றன என்று அறிவித்திருந்தார்கள்.

=====================================================

அப்ப புலிகள்; விவளவு மோசமாக கூல் விமர்சனப் படுத்தப்பட்ட பிறகாவது, ஒரு போதும் அவர் அப்படிப்பட்டவர் இல்லை தேசத்துக்கு அளப்பரிய பங்காற்றியவர் என்று சொல்லி வைத்திருக்கலாமே! அப்படி சொல்லியுருக்கிறார்களா?

ஒரு துரோகியின் கொலைக்கான் பழியை, புலிகள் உரிமை கூறாவிட்டால்,அந்த துன்பத்துக்கு உங்கள் புராணம் தேசவாழ்த்துப் பாடவேண்டுமா?

இதுவரை களத்திலே உங்கள் அடிவருடித்தனம் போட்ட கூத்துக்கள் மறந்து போச்சா?

அது யாழ்பல்கலைக்களக மாணவசமூகத்தைக் வசைவாடியது.

அவர்களும் யார் எதிரியின் ஏவல் பேய்கள் என்றா?

வேறு மதவாதம்தான் காரணம் என்று ஊளை செய்தீரே அது எதற்கோ!

QUOTE(தேவன் @ Nov 30 2006, 11:41 AM)

tamilmahan, jude என்பவர்களும் தான் அவரின் கூத்துக்களுக்கு குருப்பணி விசுவாசம்தான் காரணம் என்று, தலையால் நடந்தார்கள்.

Jude எழுதியது

இவர் என்றுமே எனது குருவாக இருந்ததில்லை. தேவன் போன்ற கூலிகள் தமது தேவைகளுக்காக கருத்துக்களை திரித்து எழுதுவது யாழ்.களத்துக்கு ஒன்றும் புதிதல்ல

======================================================

அட உமது தமிழறிவு இப்படி ஒரு கருத்தை வேறு தருகிறதா?

அட இப்படிப்பட்ட மட்டமானதுகளை வைத்து எதிரி என்ன நாக்கா வழிக்கப்போகிறான்.

பாவம், பரிதாபத்துக்குரியது அவன் பிழைப்பு.

சங்கரியார் புராணமும்தான் புலிகளைத் துரோகி என்று சொல்லாமல் தன்னைத் துரோகி என்றா சொல்லும்.

இதுதான் உங்கட பிழைப்பு பேசக் கற்றுக்கொண்ட முதலாவது வசனம் அல்லவா?

சரி இன்னொரு பக்கத்தில் கல்விமான் நீலனுக்காக போய்ப் புலம்பு,

வயிற்றுப் பிழைப்புக்கு இன்னொரு தொழிலலுக்கு துவக்கம் வேண்டாமா?

Edited by தேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.