Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2009 மே 18 இல் ஏன் கே.பி தொடர்பு கொண்டார்! கடைசி நிமிடத்தில் நடந்தவை என்ன? அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (Video)

Featured Replies

 
2009 மே 18 இல் ஏன் கே.பி தொடர்பு கொண்டார்! கடைசி நிமிடத்தில் நடந்தவை என்ன? அருட்தந்தை ஜெகத் கஸ்பர்
[ புதன்கிழமை, 17 யூன் 2015, 12:48.51 PM GMT ]
kaspar_kp.jpg
இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையும் பணியை, விடுதலைப் புலிகளின் சார்பில் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர். எனினும் இருவரும் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்

எனினும் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு ஊடாக, இராணுவ பேச்சாளராக இருந்த பாலித்த கோஹன்வுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சரணடைதல் தொடர்பாக கலந்துரையாடி இருந்தனர்.

 

 

இந்தத் தகவல் பசில் ராஜபக்ஷ ஊடாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட போரின் போரின் போது, இந்திய மத்திய அரசாங்கத்தில் இருந்த காங்கிரஸின் சுயநல அரசியல் தொடர்பாகவும், அதனுடாக விடுதலைப் புலிகளை வலைக்குள் வீழ்த்தும் உத்திகளை எவ்வாறு பிரயோகித்தனர் என்ற பல்வேறு விடயங்களை செவ்வியின் ஊடாக பகிர்ந்து கொண்டார்.

http://www.tamilwin.com/show-RUmtyGSbSUfr1F.html#

 

இப்படியான செய்திகள் தொடர்ந்து வெளிவரக் காரணம் என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான செய்திகள் தொடர்ந்து வெளிவரக் காரணம் என்ன?

 

ஒரு விதமான பிராயச் சித்தம் தேடல் போல உள்ளது!

 

அரசன் அன்று கொல்வான்... தெய்வம் நின்று கொல்லும் என்பதன் உண்மையான அர்த்தமானது.. ஒரு கொலைகாரன் அல்லது கொலைக்கு உடந்தையாயிருந்தவன் தனது திறமையாலும், சாமர்த்தியத்தாலும் தண்டனையிலிருந்து தப்பி விட்டாலும், அவனது வாழ்வு முன்னர் போல என்றுமே இருக்கப்போவதில்லை!

 

அவனது மனச்சாட்சி அல்லது ஆழ்மனது எப்போதும் அவனது செயல்களை அவனுக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்! அது 'மரண தண்டனையை' விடவும் மிகவும் கோரமானது! :o

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சியிடம் இருந்து தப்ப ஒரே வழி நீங்கள் கொன்றவர்கள் நட்டு விதைகள், பாலில் கலந்த விடத்துளிகள், துரோகிகள், புடுங்கப் பட வேண்டிய களைகள் என உங்களை நீங்களே கன்வின்ஸ் பண்ணி கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால் எந்த உலைச்சலும் இல்லாமல் நான் ஒரு தியாகி எனும் நினைப்பில் வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சியிடம் இருந்து தப்ப ஒரே வழி நீங்கள் கொன்றவர்கள் நட்டு விதைகள், பாலில் கலந்த விடத்துளிகள், துரோகிகள், புடுங்கப் பட வேண்டிய களைகள் என உங்களை நீங்களே கன்வின்ஸ் பண்ணி கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால் எந்த உலைச்சலும் இல்லாமல் நான் ஒரு தியாகி எனும் நினைப்பில் வாழலாம்.

நீங்கள் சொல்வது சரிதான் போல கிடக்கு!

 

ஏகலைவனின் கட்டை விரலைத் துரோணர் குருதட்சணையாகக் கேட்டுப் பெறுகின்றார்! இவ்வளவுக்கும் துரோணர் அவனது மானசீகக் குரு மட்டும் தான்!

 

அவரது மனச்சாட்சியைச் சாந்தப்படுத்த ஒரு காரணம்... அருச்சுனனை விட யாரும் வில்வித்தையில் சிறந்தவனாக இருக்கக் கூடாது!

 

இறுதியில் அவரது மரணம் ஒரு பேடியால் நிகழ்கிறது!  :o

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்... ஏன் மகிந்தவை எடுங்கள், ஐயோ இத்தனை அப்பாவி தமிழர்கள் என்னால் செத்தார்களே என்றா யோசித்து அழுவான். நிச்சயமாக இல்லை. நான் என் இனத்தை காக்க இதை செய்ய வேண்டி இருந்தது . என்று அவனுக்கு ஒரு நியாயம் இருக்கும். அது அவன் மனதை சாந்தப்படுத்தும்.

எம் போன்ற சாமானியர்கள்தான் இவற்றினை பற்றி யோசித்து குழம்புவது. அதிகாரத்தில் உள்ளவர்கள் ரொம்ப தெளிவாய் இருப்பார்கள்.

அத்தி பூத்தால் போல் எப்போதாவது ஒரு அதிகாரத்தில் இருப்பவர் நம்மை போல குழம்புவார்.

அசோகர் குழம்பினார் - பெளத்தம் பரவியது

அர்ஜுனன் குழம்பினார் - கீதை பிறந்தது

அண்மைய வரலாற்றில் இப்படி குழம்பியவர் கோபெபசேவ்.

அப்ப குதிரைகள்  குழ(ம்)ப்புது தேசம் பிறக்குமா ?  :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப குதிரைகள்  குழ(ம்)ப்புது தேசம் பிறக்குமா ?  :D

சுமந்த தேரரின் இரகசிய பேச்சுவார்த்தை பற்றி வாயை திறக்க அண்ணைக்கு பயமாய் கிடக்கு. இப்படியான நக்கல்களை விட்டு சமாளிக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பியவர்கள் இன்று குழம்புகிறார்கள் போல் தெரிகிறது. குழம்பியவர்கள் ஒன்றுசேர்ந்து ஈழம் பிறந்தாலும் குழப்பியவர்கள் வளர்த்துவிட்ட நச்சுச் செடிகளை அழிப்பதற்கு அவர்களுக்கே வாழும்காலம் போதாது. :(  :blink:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.