Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கு கரோலினா தேவாலயத்தினுள் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

Featured Replies

shooting.jpg

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள தேவாலயத்தினுள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

இனவெறி காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தெற்கு கரோலினாவில் ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க கிறிஸ்தவர்கள் வழிபாடு மேற்கொள்ளும் பழமைவாய்ந்த தேவாலயம் உள்ளது.

இங்கு புதன்கிழமை பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் சாலையில் ஓடத் தொடங்கினர்.

அமைதியை ஏற்படுத்த சார்லெஸ்டன் பகுதி பாதிரியார்கள் ஒன்று கூடி சாலைகளில் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்திய நபர் குறித்த மர்மம் நீடிக்கிறது. இது குறித்து சார்லெஸ்டன் தலைமை பொலிஸ் அதிகாரி கூறும்போது, “தேவாலயம் உள்ளே நுழைந்த நபரின் வயது 20 ற்கும் குறைவானதாகக் கருதப்படுகிறது, என்றார்.

http://newsfirst.lk/tamil/2015/06/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

பிறந்த நாள் பரிசாக கிடைத்த துப்பாக்கியால் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபன் 

 

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பிரார்த்தனையில் ஈடுபடும் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்தி 9 பேர் பலியாக காரணமானதாக சந்தேகிக்கப்படும், 21 வயதான வெள்ளையின நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்து, எவ்வித தகவலும் வெளிவராமல் இருந்ததால் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் ஒன்பது பேர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி சார்ல்ஸ்டன் நகர மேயர் முன்னிலையில், போலீஸ் தலைவர் க்ரெக் முல்லன் கூறுகையில், கறுப்பின மக்கள் மீதான வெறுப்பு காரணமாக இத்துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது 21 வயதுடைய அந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறிய முல்லன், காயமடைந்த இருவரில் ஒருவர் தெற்கு கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பலனளிக்காமல் பலியானதாக கூறினார். எனினும் இறந்தவர்கள் யார் யார் என்ற விவரத்தை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

இச்சம்பவத்தில் பாதிரியார் கிளமென்டா பிங்க்னி மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பலியானதாக அங்கு வசிக்கும் சிறுபான்மை சமூக தலைவரான டாட் ரூதர்போர்டு கூறினார்.

இந்நிலையில், சம்பவம் நடந்த தேவாலயத்திலிருந்து 200 மைல்கள் தொலைவில் உள்ள வடக்கு கரோலினாவில் இருக்கும் ஷெல்பி நகரில் வைத்து சந்தேகிக்கப்படும் அந்தக் குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவும், அவனது பெயர் டைலன் ஸ்டார் ரூஃப் என்றும், அவன் உபயோகித்த 45 கேலிபர் துப்பக்கி அவனது அப்பா இந்த வருடம் அவனுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கியதென்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.Ch-01-600x369.jpg Ch-02-600x389.jpg Ch-03-600x388.jpg Ch-04.jpg Ch-05-600x400.jpg Ch-600x382.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/44815.html#sthash.QvC9AhNz.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

21 வது பிறந்தநாளுக்கு துப்பாக்கி  வாங்கிக்கொடுத்ததன் மூலம்

9 பேர் இறக்கவும்

ஒரு பிள்ளை வாழ்நாள் பூராகவும் சிறையில் வாடவும் காரணமான பெற்றோருக்கு தூக்குத்தண்டனையே சரியான தீர்ப்பு... :(  :(  :(

  • தொடங்கியவர்
வெள்ளையினத்தவராய் இருந்தால் மன நோயாளி! மற்றவர்களாயின் பயங்கரவாதி! Shooters of color are called ‘terrorists’ and ‘thugs.’ Why are white shooters called ‘mentally ill’?

http://www.washingtonpost.com/posteverything/wp/2015/06/18/call-the-charleston-church-shooting-what-it-is-terrorism/?tid=pm_opinions_pop_b

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா பிறந்தநாளுக்கு துப்பாக்கியை ஆரும் பரிசாய் குடுப்பானே????? mad0228_zps796feb76.gif

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா பிறந்தநாளுக்கு துப்பாக்கியை ஆரும் பரிசாய் குடுப்பானே????? mad0228_zps796feb76.gif

 இதில் பெற்றோரின் திட்டமிட்ட சதி இருப்பதாகவே எண்ணுகிறேன்.:o

21 வயசு என்றால் அவர் ஒன்ரும் பேபி இல்லை. மேலை நாடுகளில் இந்த வயதிலேயே பல்கலை கழகம் முடித்து பட்டம் பெறுவார்கள். சிலர் நல்ல தொழிலும் பெறுவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவர் ஒரு இனவாதி என்றும் அவருடைய நண்பருடன் குடித்துக்கொண்டு இருந்த போது கறுப்பர்கள் உலகத்தை பிடிக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் சார்லஸ்டன் நகரில் அமைந்துள்ள கருப்பர் இனத்தவரின் தேவாலயத்தில் கடந்த 17-ந்தேதி வெள்ளை இன வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் குண்டு பாய்ந்து 9 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கி உள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய வெள்ளை இன வாலிபர் டிலான் ஸ்டார்ம் ரூப் (வயது 21) கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.நேற்று அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு ஜேம்ஸ் காஸ்நெல் முன்னிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தேவாலய தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர், ஒவ்வொருவராக அவரை பார்த்தனர். அனைவரும் கண்ணீருடன் அவருக்கு மன்னிப்பு வழங்கினர். இது அனைவரையும் உருக்குவதாக அமைந்தது.

இந்த தாக்குதலில் பலியானவர்களில் மிகவும் இளையவரான டிவான்ஸா சாண்டர்ஸ் (வயது 26) என்பவரின் தாயார் பெலிசியா, “ கடவுள் உன் ஆன்மா மீது கருணை கொண்டிருக்கிறார். நான் அறிந்த, மிக அழகான சிலரை கொன்று விட்டாய், எனது உடலில் உள்ள ஒவ்வொரு தசைநாரும் காயப்பட்டுள்ளது” என கூறினார்.

தனது குடும்ப உறுப்பினரை பலி கொடுத்த அந்தோணி தாம்ப்சன் என்பவர், “நான் உன்னை மன்னிக்கிறேன். என் குடும்பம் உன்னை மன்னிக்கிறது. நீ மனம் திருந்துவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அதை செய்” என கூறினார்.

பலியானவர்களின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினாலும், கொலையாளி ரூப், சட்டப்படி விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. அவருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோர்ட்டில் கோர வேண்டும் என அரசு வக்கீல்களை தெற்கு கரோலினா மாகாண கவர்னர் நிக்கி ஹேலே கேட்டுக்கொண்டார்.south-carolina-1-600x339.jpg

south-carolina 2

south-carolina 3

south-carolina

- See more at: http://www.canadamirror.com/canada/44935.html#sthash.k5IdTXOQ.dpuf

 

வானொலி தொலைக்காட்சி செய்திகளின் படி இறந்தவர்களின் நாளை நடக்கவிருக்கும்  இறுதி நிகழ்வில்  அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொள்கின்றார்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.