Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் திட்டமே ஜனாதிபதியுடன் இணைந்து தமிழ்...

Featured Replies

ரணிலின் திட்டமே ஜனாதிபதியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது தான்.

-குற்றம் சாட்டுகிறார் கலாநிதி விக்கிரமபாகு-

இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னலுக்குள் விடுதலைப் புலிகளை சிக்க வைத்து, `குள்ளநரி' என்ற சான்றிதழை பிரபாகரனிடம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமே தற்போது தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் இடதுசாரி முன்னணி மேற்கத்தைய நாடுகளுக்கு சார்பான ரணிலின் மீள் எழுச்சி பெறும் இலங்கையே, இம்முறை சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டமாகும் இதற்கு தேசியவாதிகளென மார்தட்டும் ஜே.வி.பி.யும் ஆதரவு வழங்கியுள்ளமை வியப்பில் ஆழ்த்தியுள்ளதென்றும் தெரிவித்தது.

கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இடதுசாரி முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னலில் சிக்க வைத்த `குள்ள நரி' யென பிரபாகரனால் சான்றிதழ் வழங்கப்பட்ட தென்பகுதியின் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாகும். அத் திட்டமே இன்று ஜனாதிபதியுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.

எனவே, ஜே.வி.பி.யின் எம்.பி. விமல் வீரவன்சவின் சிறந்த நண்பர் ரணில் விக்கிரமசிங்கவாவார்.

கதிர்காமர் கொலையில் எந்தளவிற்கு பிரபாகரனின் தொடர்பு இருக்கின்றதோ அந்தளவு தொடர்பு தமிழர் விடுதலையாளர்களான ரவிராஜ், ஜோசப் போன்றவர்களின் கொலைகளில் அரசாங்கத்துக்கு உள்ளது.

எனவேதான், மரண அச்சுறுத்தல்களுக்கு பயந்து தொண்டமான், சந்திரசேகரன் போன்றோர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். மனோ கணேசன் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றுள்ளார்.

நீதிமன்றங்களில் நீதி இல்லை. அவை அரசாங்கத்திற்கு சார்பாக நடக்கின்றன. அரசாங்கத்தை நல்வழிப்படுத்த வேண்டிய நீதிமன்றங்கள் அரசியல் மயமாக்கப்பட்டு விட்டன.

வட,கிழக்கில் யுத்தமல்லாமல் பதில் தாக்குதல்களே நடத்தப்படுகின்றன என அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்கின்றது. இதில் உண்மையில்லை. யுத்தமே நடத்தப்படுகின்றது. எனவே, இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

முஸ்லிம் மக்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று அரசாங்கம் காட்ட முனைகிறது. அதற்காக முஸ்லிம் தலைவர்களை அச்சுறுத்தி தம்பக்கம் இழுத்தெடுக்கிறது.

வட,கிழக்குப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்றை அவர் புரிந்து கொள்ள வேண்டும்,. அவரது தலைமைத்துவத்திற்கும் இது தான் இறுதிச் சந்தர்ப்பமென்றும் விக்கிரமபாகு கருணா ரத்ன தெரிவித்தார்.

www.www.thinakkural.com

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் எப்படிப்பட்டவர் என்று தமிழ்மக்கள் நன்றாக அறிவார்கள். அவருக்கு ஜனாதிபதி ஆக முடியாததற்கு தமிழர்கள் காரணமாகி விட்டதால் இனி நேரடியாக தமிழர்களை அழிக்க உதவி புரிவார். எனினும் உட்கட்சிப் பிரச்சினைகளே மனிசனை தற்போது நித்திரை கொள்ளமுடியாமல் பண்ணியுள்ளன. அவற்றை தீர்க்கமுடியாமல் திண்டாடும் அவர் உடனடியாக தமிழர்களைப் பற்றிச் சிந்திக்கப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.