Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் 49 நிறுவனங்களுக்கு நிதிப்பங்கீடு

Featured Replies

 
[ புதன்கிழமை, 29 யூலை 2015, 09:38.34 AM GMT ]
thandayuthapani_thumb_001.jpg
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 49 நிறுவனங்களுக்கு பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நிதியின் கீழ் 5.7 மில்லியன் தொகை நிதியானது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தே கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி வழங்கி வைத்தார்.

இவ் ஒதுக்கீட்டின் மூலமாக மாவட்டத்திலுள்ள 30 பாடசாலைகளுக்கும் விண்ணப்பங்களின் அடிப்படையில் நிதியானது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போரின் காரணமாக கணவனை இழந்தவர்கள், காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர்கள் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குமாக தெரிவு செய்யப்பட்ட 60 நபர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான திட்டத்தினையும் விரைவில் அமுலாக்குவற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு உரை ஆற்றிய அமைச்சர் தெரிவித்தார்.

மூதூர் சீதனவெளி பகுதியில் மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டிலான 30 மில்லியன் செலவிலும் தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றினை 30 மில்லி ரூபா செலவிலும் மொத்தமாக 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான அடிப்படை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதன்மூலமாக மாகாணத்திலுள்ள 100க்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட வலயக் கல்விப்பணிப்பாளர் என்.விஜேந்திரன் மற்றும் கல்லூரி அதிபர்கள் உட்பட குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

thandayuthapani_trinco_001.jpg

thandayuthapani_trinco_002.jpg

thandayuthapani_trinco_003.jpg

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5.7m/49= 116,326.53

  • 2 months later...
  • தொடங்கியவர்
சம்பூர் மீள்குடியேற்ற பிரதேசங்களை பார்வையிட்டார் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 09 ஒக்ரோபர் 2015, 12:52.45 PM GMT ]
thandayuthapany_trinco_001.jpg
சம்பூர் மீள்குடியேற்ற பிரதேசங்களை கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் இன்று பார்வையிட்டுள்ளார்.

திருகோணமலை சம்பூர் பிரதேச மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண அரச திணைக்களங்களைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன்,  சம்பூர் மீள்குடியேற்ற பிரதேசங்களினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் பார்வையிட்டார்.

 

இதன்போது, மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்கு தேவையானவற்றினை பகுப்பாய்வு செய்தனர்.

தற்போது சம்பூர் பிரதேசத்தில் UNHCR தொண்டு நிறுவனத்தினால் 210 வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும் மற்றும் 50 வீடுகள் ARR எனும் தொண்டு நிறுவனத்தினால் கட்டப்படவுள்ளதாகவும்,

இப்பிரதேச கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் குடிநீர் மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் மீள்குடியேற்ற மக்களுள் அரச ஊழியர்களும் உள்ளடங்குவதனால் அவர்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெறாமையினால் மேற்குறிப்பிட்ட குடும்பத்தினை சேர்ந்தவர்கள் பல இன்னல்களை சந்திப்பதாக இதன்போது தெரிவித்தனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.