Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போதைப் பொருளுடன் பிள்ளைகள் பிடிபட்டால் பெற்றோரையும் கைது செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

Featured Replies

போதைப் பொருளுடன் பிள்ளைகள் பிடிபட்டால் பெற்றோரையும் கைது செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

 

 

news
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
 
போதைப்பொருள் வழக்கு தொடர்பிலான விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்,
 
போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உணவு அடைக்கலம் கொடுத்து அவர்களைத் தட்டிக்கொடுக்கும் பெற்றோர்கள் அவர்களை கைது செய்யப்பட்டதும் பிணை கேட்டு நீதிமன்றத்துக்கு வந்து அழுவதை ஏற்கமுடியாது.
 
இச்செயல்களில் ஈடுபடும் பிள்ளைகளை உடனடியாக பெற்றோர்கள் பொலிஸில் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இச்செயல்களில் இருந்து அவர்களைத் திருத்த வேண்டும். அவர்களை பொலிஸார் கைது செய்யும் வரையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பெற்றோர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
 
போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்க போதைவஸ்து கட்டளைச் சட்டம் பரிந்துரை செய்கின்றது. எனவே போதைவஸ்து குற்றவாளியாகக் காணப்படுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும்.
 
யாழ்ப்பாணத்திலிருந்து போதைவஸ்தை ஒழிப்பதற்கு நீதிமன்ற தண்டனை அவசியம். இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பாவமன்னிப்போ பிணை கருணை விடுதலை எதுவும் வழங்கப்படமாட்டாது.
 
யாழ்ப்பாணத்தில் குறிப்பிடப்படும் சில பகுதிகள் போதைவஸ்து பாவனை செய்யப்படும் இடங்களாக உள்ளன. குருநகர், கொழும்புத்துறை, ஓட்டுமடம், பொம்மைவெளி, யாழ்.நகரம், ஆரியகுள சந்தி கோட்டை பின்புறமாகவுள்ள பூங்கா பகுதி போன்ற இடங்களில் போதைவஸ்து விற்பனை பாவனை அதிகமுள்ள இடமாக அடையாளம் காணப்படுகின்றது.
 
குறித்த இடங்களில் பொலிஸ் நடவடிக்கை மூலம் குற்றம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவராத வகையில் சிறைக்குச் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். இந்தச் செயல்களில் ஈடுபடும் சில்லறைக் கடைகள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்படும்.
 
போதைவஸ்து கலக்கப்பட்ட இனிப்பு பாக்கு இதர பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உடனடியாக அவ்விற்பனையை நிறுத்த வேண்டும். இத்தகைய பொருட்களுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்;கப்படுவதுடன் அவர்களுடைய கடைக்கு சீல் வைக்கப்படும்.
 
வாகனத்தில் போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார்.
 
/News_More.php?id=503824188508271208#sthash.TXelyfsB.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த ஊரு சட்டம் ?

இந்த நீதபதி, தனக்கு முன்னால் வரும் வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்ல மட்டுமே முடியும்.

இந்த மாதிரி பிழையான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. அதற்கு இவருக்கு அனுமதி இவருக்கு இல்லை. மேலும் பிள்ளைகளின் தவறுக்கு, பெற்றோரை கைது செய்ய சட்டம் எங்குமே இல்லை. தனது கருத்தாக மட்டுமே சொல்ல முடியும்.

அல்லது இந்த செய்தி போட்டர்வர்களுக்கு, விபரம் தெரியாமல், வழமை போல அவிச்சு இறக்கி இருக்கினமோ ? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, இப்படிப்பட்ட சட்டங்களை மற்றைய நாடுகள் ஏற்காவிட்டாலும், வடகிழக்கில் கட்டாயம் தேவை. இதில் பிழை பிடிக்காதீர்கள். இப்படியான அறிவிப்பின் மூலம் ஒன்று பெற்றோர் பிள்ளைகளை கவனமாக அவதானிப்பார்கள் அல்லது பிணை எடுக்க வரார்கள். எமதினத்தின் நல்லதற்காக இப்படியான கடுமைப்போக்கு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, இப்படிப்பட்ட சட்டங்களை மற்றைய நாடுகள் ஏற்காவிட்டாலும், வடகிழக்கில் கட்டாயம் தேவை. இதில் பிழை பிடிக்காதீர்கள். இப்படியான அறிவிப்பின் மூலம் ஒன்று பெற்றோர் பிள்ளைகளை கவனமாக அவதானிப்பார்கள் அல்லது பிணை எடுக்க வரார்கள். எமதினத்தின் நல்லதற்காக இப்படியான கடுமைப்போக்கு தேவை.

சட்டம், கடுமையான நிலைப்பாடு தேவை தான்.

எனினும், இலங்கை இந்தியாவில் உள்ள மிகத் தவறான, மனிதவுரிமை அமைப்புகளால் கண்டணம் தெரிவிக்கப்படும், சோம்பல் பொலீஸாரின் வேலை ஒன்று, சந்தேக நபர் ஒருவரை தேடி வருவது. பிடிக்க முடியாவிடில், அந்த வீட்டிலுள்ள அப்பாவியை கொண்டு போய் உள்ள போடுவது.

அயலவர்களிடம், சந்தேகநபர் வந்து தானே சரணடைந்தால், அவரது அப்பாவி உறவு விடுதலையாவார் என்று சொல்லிவைப்பது. இது பொதுவாக கையாளப்படும் தந்திரம்மாயினும் சட்டப்படி தவறு.

இந்த அநீதியை தடுக்க வேண்டிய நீதிபதி, அதையே சொல்வது தவறல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.