Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கஜேந்திரகுமாரின் புரியாத புதிருக்கு விடை என்ன?

Featured Replies

 

 

கஜேந்திரகுமாரின் புரியாத புதிருக்கு விடை என்ன?

கஜேந்திரகுமார்கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்திற்குச் சென்று சில உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்வதாகக் கூறுகின்றனர். அவர்களுடைய பேச்சுகளிலேயே ஒற்றையாட்சிப் பாராளுமன்ற எல்லைக்குள் தமக்குத் தேவையானதை கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம் என்று கூறுகின்றனர். பாராளுமன்றதால் எதையும் சாதித்துவிட முடியாது என்பதையே அவர்கள் தமது தேர்தல்கால வார்த்தைகளில் கூறுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ‘அகில இலங்கை’ கட்சியைப் பொறுத்தவரை அப்பட்டமான கோமாளித்தனமான முழக்க்ங்களை முன்வைக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமக்கும் இடையேயுள்ள ஒரே வேறுபாடு என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லிகொள்வது போர்க்குற்றவிசாரணை மட்டுமே. புலம்பெயர் நாடுகளில் புலிகளை முள்ளிவாய்க்கால் வரை அழைத்துச் சென்று முடக்கிக் கொன்று போட துணை சென்ற புலம்பெயர் தலைகளுக்காக அரசியல் நடத்தும் கஜேந்திரகுமார் குழுவிற்கு மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து எதுவும் தெரிவதில்லை. போர்க்குற்றத்தில் மட்டுமே அவர் சிறப்புத் தகமை பெற்றுள்ளார்.

கூட்டமைப்பு உள்ளக விசாரணை என்ற கருத்தை முன்வைப்பதால் தாங்கள் சர்வதேச விசாரணையை என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

கஜேந்திரகுமாரின் அலங்காரமான வார்த்தைகளின் பின்னால் ஒளிந்துள்ள போலித்தனம் மக்களை முட்டாள்களாக்கிவிடுகிறது.

சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை செய்யப் போகிறோம் என்று கஜேந்திரகுமார் சொல்வாரானால் அது அமெரிக்கா இந்தியா உட்பட அதன் துணை நாடுகள் ஊடாகவே நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா இந்தியா மற்றும் அதன் துணை நாடுகளோ உள்ளக விசாரணை போதுமானது எனத் தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்துகின்றன. வன்னப்படுகொலைகள் நடைபெற்ற காலத்திலிருந்தே அங்கு நடைபெற்றது இனப்படுகொலை என்றே இந்த நாடுகளிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. பின்னர் அவர்கள் போர்க்குற்ற விசாரணை நடத்த உதவுகிறோம் என்றார்கள். இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டதும் இனிமேல் உள்ளக விசாரணைதான் என சர்வதேசம் என அழைக்கப்படும் அமெரிக்கா மட்டும் இந்தியா உட்பட்ட நாடுகள் தான் கூறிவருகின்றன.

ஆக, சர்வதேச விசாரணை என்று கஜேந்திரகுமார் அணி கூறுவதன் உள்ளர்த்தம் என்ன? இதை அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். வெற்று கோசம் என்று கூறுவது இதுதானோ? அல்லது சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை ராஜபக்ச ஊடாக அணுகி போர்க்குற்ற விசாரணைக்கு முயற்சிக்கின்றனரா

//கூட்டமைப்பு உள்ளக விசாரணை என்ற கருத்தை முன்வைப்பதால்//:grin:

 

//அவர்களுடைய பேச்சுகளிலேயே ஒற்றையாட்சிப் பாராளுமன்ற எல்லைக்குள் தமக்குத் தேவையானதை கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம் என்று கூறுகின்றனர். //:grin:

 

//ஆக, சர்வதேச விசாரணை என்று கஜேந்திரகுமார் அணி கூறுவதன் உள்ளர்த்தம் என்ன? இதை அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். வெற்று கோசம் என்று கூறுவது இதுதானோ? //

இவ்வாறான உள்ளகப்பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் நிராகரிப்பார்களேயானால் அந்தப் பொறிமுறைக்கு சர்வதேச மட்டத்தில் எந்தப் பெறுமானமும் இருக்கப்போவதில்லை. அதற்கு பதிலாக ஒரு தீர்ப்பாயத்தையோ, சிறப்பு நீதிமன்றத்தையோ அமைக்கும் நிலை ஏற்படலாம். இந்த விடயத்தில்தான், உள்ளகப் பொறிமுறையுடனான நீதி விசாரணையை கூட்டமைப்பினர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவ விழைகிறார்கள். இவ்வாறு உதவுவதை 'நல்லிணக்க' அடிப்படையில் வெளித்தரப்புகள் வரவேற்கின்றன.

http://www.yarl.com/forum3/topic/161624-இடத்திற்கிடம்-வேறுபாடாகக்-கதைத்து-சுமந்திரன்-தப்பிக்-காெள்கிறார்/

// அதில் பாதிக்க பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதியும் முன்னேற்றம் பெற ஏதும் வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது. காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாம் சர்வதேச விசாரணையை சார்ந்தே இருக்கின்றது.//

//அவர்கள் இலங்கை அரசே விசாரணையை நடத்தும் என்றால் அது போலி நீதிமன்றமாகவே இருக்கும். அது நீதியை பெற்று தரும் என்று துளியும் நம்பிக்கை இருக்காது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதம் வர இருக்கும் நிலையில் கிடைத்துள்ள இந்த ஆவணம் அதிர்ச்சியாக உள்ளது.//

//

இந்த ஆவணத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தாலும் வட மாகாண முதல்வரிடம் இதை பற்றி நங்கள் கேட்ட போது, இந்த ஆவணத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அதற்காக ஏதும் செய்ய விரும்பவில்லை, இந்த ஆவணம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என்றும் தெரிவித்தார்.

 

அதிர்ச்சியூட்டும் இந்த ஆவணத்தை பார்க்கும்போது இதில் ஐநாவும் அல்லது ஐநாவில் இது தொடர்பில் இயங்குவோரும் இலங்கை அரசோடு சேர்ந்து திரைமறைவில் உள்நாட்டு விசாரணையை கொண்டுவருகிறார்கள் என்ற சொல்லப்பட்டு வந்த குற்றசாட்டு மேலும் உறுதியாகிறது. ஆயினும் நமக்கு தெரியும் பாதிக்கப்பட்டவர்களும் பெரும்பாலான தமிழ் அமைப்புக்களும் இதனை 'ஒரு போலி நீதிமன்றத்தை தவிர வேறொன்றும் இல்லை - நீதியை எதிர்பார்த்தவருக்கு நம்பிக்கை துரோகத்தை தவிர வேறொண்டும் இல்லை' - என்றே கருதுவார்கள்."//

 

////கூட்டமைப்பு உள்ளக விசாரணை என்ற கருத்தை முன்வைப்பதால்//:grin://

 

 

http://www.yarl.com/forum3/topic/161623-சானல்-4-அம்பலப்படுத்திய-ஐநாவின்-ஆவணம்-குறித்த-காணொளி-அதன்-தமிழாக்கம்/

 

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  காய்த்துவிட்டார்

கல்லடி அவருக்கே அதிகம் விழுகுது...

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் சொல்வது உண்மைதான் தற்போது கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவராலும் மேடைகள் தாக்கிப் பேசப்படும் ஒரே கட்சி கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழர் தேசிய மக்கள் முண்ணணியே,

தவிர புலம்பெயர் தேசத்தில் வாழும் கணிசமானவர்களது (ஒரு சிலரது மொழியில் கூறப்போனால் புலிவால்களது) ஆதரவும் அவர்களுக்குக் காணப்படுகின்றது. 

இதில் ஒருவிடையம் கவனிக்கப்படல்வேண்டும் வெறும் ஆறாயிரம் வாக்குகளையே வாங்கிய ஒரு அரசியல் அணி இப்போது முண்ணணிக்கட்சிக்குப் போட்டியாக முளைத்திருப்பது கூட்டமைப்பாலும் அவர்களை இயக்கும் "தமிழர் விரோததேசம் இந்தியாவுக்கும்" வேண்டாதவிடையம். 

சுமந்திரன் அவர்கள் ஒவ்வொரு மேடையிலுன் வேறுவேறுமாதிரியே தனது கருத்துக்களை முன்வைக்கிறார். தேர்தலுக்கான கொள்கை விளக்கத்தில் (விஞ்ஞாபனத்தில்) நாம் எந்த இலக்கைநோக்கிப்ப்போகிறோம் என பெரிசா அவர்களால் எதையுமே அழுத்த திருத்தமாகச் சொல்லமுடியவில்லை.

தவிர தமிழ்தேசிய மக்கள் முண்ணணி தேர்தல் காலத்திலல்லாது எப்போதும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கைப்பிரகடனத்தை  வெளியிடவேண்டும் என நான் எதிர்பார்த்தேன் இதுவரை ஏமாற்றமே.அப்படி அவர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிட்டிருப்பின் கூட்டமைப்புக்கு அது சாவாலான விடையமாக இருந்திருக்கும். 

இப்போது நடக்ப்பது இந்திய இராஜதந்திரத்துக்கும் வடக்குக்கிழக்கில் உதிரியாகக் காணப்படும் உள்ளூர் அரசியல் வாதிகளுக்குமான ஒரு பிரகடனப்படுத்தப்படாத இராஜதந்திர யுத்தம். 

எனினும் தெரியாத்தனமாக கூட்டமைப்பெ கஜேந்திரன் அணியினரை லைம்லைற்றில் கொண்டுவருகினம் இதன்மூலம் கஜேட்ரன் அணியினர் என்ன சொல்லவருகினம் என அறியமுற்படுவதற்கு திருவாளர் பொதுஜனங்கள் முயலலாம். இதுவே கஜேந்திரன் அணிக்குப் பலமாகவும் அமையலாம்.

தவிர புலம்பெயர்தேசத்திலுள்ள இலங்கைத்தீவின் அரசியல் விரும்பிகள் அன்றேல் புலிவால்களது வால்களை ஒட்ட நறுக்குவதற்கு கஜேந்திரன் அணியினரை பூச்சிய நிலைக்குக் கொண்டுவரவேண்டிய பலகாரணங்கள் தமிழர் விரோத தேசம் இந்தியாவுக்குக் காணப்படுகின்றது ஒட்ட நறுக்குவதன்மூலம் ஈழத்தமிழர்களது அரசியலில் உங்களது விருப்புகள் புலத்து உறவுகளால் நிறைவேற்றப்படாது எனக்கூறுவதன்மூலம் கடந்தகாலங்களில் நடந்த இனப்படுகொலை மற்ரும் இனவழிப்பு போன்றவற்ரிலிருந்து தன்னையுன் தனது தரப்பையும் காப்பாற்ரிக்கொள்ள முயல்கின்றது. அதாவது புலம்பெயர் புலிவால்களை ஒருவித சோர்வு நிலகஈக்கொண்டுவந்து ஒருபகுதியினரையாவது போராட்டகளத்திலிருந்து அகற்ருவதமூலம் அவர்களது அரசியல் ஆதிக்கத்தை வலுவிளக்கப்பண்பதற்கான ஒரு களமாகவே இந்தியா இத்தேர்தல்களத்தினைப் பயன்படுத்துகின்றது. 

ஆகவே இவ்வாரம் புலம்பெயர் தேசத்து உறவுகளுக்கு மிகவும் முக்கியமான வாரமாகும் உங்கள் தொடர்பெல்லையிலிருப்போரையும் தொடர்பெல்லைக்கு அப்பால் உள்ளவர்களையும் ஒன்றிணைத்து எமது கடமையினைச் செவ்வணே செவ்வதற்கு தமிழா நீ தயங்காதே

"உன் கடன் பணி செய்துகிடப்பதே"

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் கஜே கோஸ்டி வென்று புலத்து அன்பர்களுக்கு பெரும் சேவையாற்றுவார்கள். விசில்கள் எல்லாத்தையும் ஊதி சரிபார்த்து கொள்ளுங்கள் பெலத்தா அடிக்க வேண்டி வரும்!

கூட்டமைப்பு தமது தான் நம்பியிருந்த புலம் பெயர்ந்த முன்னாள் அமைப்பினர் பலருக்கு கூட்டமைப்பு குறிப்பாக சம்பந்தன் சுமந்திரன் தமது சொல்லுக்கு ஆடாததில் தான் கஜேந்திரகுமாரை ஆதரிக்க தொடங்கினார்கள்.நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான அமைப்பு என்று கனடாவில்  கூட்டங்கள் சில நடந்தது .அனைத்தும் அவர்கள் தான் நடாத்தினார்கள் .

புலம் பெயர் ஊடகங்களின் ஊதி பெருப்பித்தல் தான் குமார் பெயர் இவ்வளவிற்கு அடிபடக்காரணம் .

தேர்தல் முடிவு தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லவேண்டும்  

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தமது தான் நம்பியிருந்த புலம் பெயர்ந்த முன்னாள் அமைப்பினர் பலருக்கு கூட்டமைப்பு குறிப்பாக சம்பந்தன் சுமந்திரன் தமது சொல்லுக்கு ஆடாததில் தான் கஜேந்திரகுமாரை ஆதரிக்க தொடங்கினார்கள்.நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான அமைப்பு என்று கனடாவில்  கூட்டங்கள் சில நடந்தது .அனைத்தும் அவர்கள் தான் நடாத்தினார்கள் .

புலம் பெயர் ஊடகங்களின் ஊதி பெருப்பித்தல் தான் குமார் பெயர் இவ்வளவிற்கு அடிபடக்காரணம் .

தேர்தல் முடிவு தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லவேண்டும்  

பச்சை ஒன்று போட்டிருக்கின்றேன் அண்ணா

கருத்துடன் உடன்பட்டல்ல

மாற்றுக்கருத்து இவ்வாறு தான் முன் வைக்கப்படணும்

தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

1- கூட்டமைப்பு தமது தான் நம்பியிருந்த புலம் பெயர்ந்த முன்னாள் அமைப்பினர் பலருக்கு

 

2- கூட்டமைப்பு குறிப்பாக சம்பந்தன் சுமந்திரன் தமது சொல்லுக்கு ஆடாததில் தான் கஜேந்திரகுமாரை ஆதரிக்க தொடங்கினார்கள்.நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான அமைப்பு என்று கனடாவில்  கூட்டங்கள் சில நடந்தது .அனைத்தும் அவர்கள் தான் நடாத்தினார்கள் .

புலம் பெயர் ஊடகங்களின் ஊதி பெருப்பித்தல் தான் குமார் பெயர் இவ்வளவிற்கு அடிபடக்காரணம் .

3- தேர்தல் முடிவு தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லவேண்டும்  

 

இதிலிருந்து பார்த்தால்

கூட்டமைப்புடன் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பேசியுள்ளன என்பதும் 

கூட்டமைப்பில் பிரச்சினைக்குரியவர்களான சம்பந்தர் ஐயாவும் சுமேந்திரனும் (இருவர் மட்டும்) அதனை செவிமடுக்க மறுத்துவிட்டதும் தெரிகிறது.

நான் பலமுறை இங்கே எழுதியது தான்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தோற்றத்துக்கு ஒரு காரணம் இருக்கிறது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம் கூட்டமைப்பு மட்டுமே.

அதனது எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதும் கூட்டமைப்பின் நடவடிக்கைகளே..

 

3- தேர்தல் முடிவு தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லவேண்டும்  

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஊரில் இருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாகா உள்ளது .

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில் யுனி பொடியளை கஞ்சா,சராயதுத்துடன் வாக்கு கேட்க சுமந்திரன் களத்தில் இறக்கிவிட்டு உள்ளார் போனுக்குள்ளால் அவர்களின் பைலா சத்தம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.