Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலும் நட்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலும் நட்பும்

என் விரல்

நகம் கூட

என் காதலியின்

உடல் மீது படாமல்

எவ்வளவு கண்ணியமாகக்

காதலிக்கிறேன் என்பதை

என் தோழியிடம்

கூறிக் கொண்டிருந்தேன்

அவளது தோளில் சாய்ந்தபடி.

கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் எங்கேயே கேட்ட ஞாபகமாகவும் இருக்கிறது. எனக்கு ஏற்கனவே இந்தக் கவிதையை சொன்னீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருப்பேன் என்றுதான் நினைக்கின்றேன். ஒரு பேப்பரில் ஏற்கனவே வெளிவந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ சார் உங்கள் நட்பும் காதலும் கவிதை அழகு

அழகான கவிதை.

அழகான கற்பனை. ரசிக்கும்படியாக இருக்கின்றது. பாராட்டுக்கள்.

நல்ல சிந்தனையோடு கூடியவரிகள் வாழ்த்துக்கள்

மன்மதன் போலும் ;)

அறிவுமதியின் நட்புக்காலம் கவிதை தொகுப்பில் இருந்து வாசித்ததாக ஞாபகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நூல் என்னுடமும் உள்ளது. அவரே எனக்கு அதை பரிசாக தந்திருந்தார். அவருடைய வரிகளை இங்கு தருகிறேன்.

"தொடாமல் பேசுவதுதான்

காதலுக்கு நல்லது

தொட்டுப் பேசுவதுதான்

நட்புக்கு நல்லது

தொடுதலின் நடுவே கசியும்

உணர்வை

எந்த மொழி பேசும்"; என்று பாவலர் அறிவுமதி எழுதியிருப்பார்.

இரண்டு கவிதைகளின் கருப்பொருளும் ஒன்றாகத்தான் இருக்கின்றன.

திருவள்ளுவர் இன்பத்துப் பாலில் பயன்படுத்திய பிரிவாற்றாமை (விரகதாபம்) என்ற கருப்பொருளை பயன் படுத்தி இளங்கோவடிகள் முதல் கொண்டு கண்ணதாசன், வாலி, வைரமுத்து வரை அனைவரும் பாடல் புனைந்துள்ளனர். இது பிழையாகத் தெரியவில்லை.

Edited by ilango3112

  • 7 months later...

காதலும் நட்பும், மற்றும் தோழனே என்ற இருவேறு கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.

இது இளங்கோ எழுதியது....

என் விரல்

நகம் கூட

என் காதலியின்

உடல் மீது படாமல்

எவ்வளவு கண்ணியமாகக்

காதலிக்கிறேன் என்பதை

என் தோழியிடம்

கூறிக் கொண்டிருந்தேன்

அவளது தோளில் சாய்ந்தபடி.

இது வெண்ணிலா எழுதியது...

நீ எனக்கு நண்பனாக கிடைக்க

நான் ஏது தவம் செய்தேனோ?

கலகலவென நகைக்கும் வயதில்

சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை

எனக்குள் இன்றே புதைத்துவிட்டு

கள்ளமின்றிச் சிரித்திட

உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற

என்றும் உனக்கு துணையாவேன்

இன்றே விரைந்து புறப்படு

நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு

புதியதை தேடி விரைந்திடு

சோகத்தை தூக்கி எறிந்திடு

தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்

அன்பில்லையே என சலிக்காதே

நட்பைவிட வேறேது இன்பம்

நானிருப்பேன் கலங்காதே

ஒப்பீட்டளவில் இரு கவிதைகளும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கின்றது. ஆனால், இந்த கவிதையை எழுதியதால் யாழில் வெண்ணிலா பட்ட அவஸ்தையை இளங்கோ படவில்லை போல இருக்கின்றது. எனவே, இதை மீண்டும் தூசு தட்டி இணைத்துள்ளேன்... :D

வெண்ணிலா அவஸ்தைப்பட்டாளா? நெவர்

ஹீஹீ மீண்டும் ஆரம்பிச்சிட்டாங்கப்பா.

நான் இனிமேல் வரல்லை உந்த விளங்காத காதலுக்குள்ளும் நட்புக்குள்ளும். எனக்கு என் காதலும் நட்பும் போதும். நான் எஸ்கேப்

நம்மட விகடகவியையும் இதுக்க மாட்டி வைப்பம்.. ஹஹா... :D இது விகடகவி நட்புக்கு இலக்கணம் என்ற தலைப்பில் விகடகவி எழுதிய கவிதை...

நட்புக்கு இலக்கணம்

நான் கண்டு கொண்டேன்...

நங்கை அவளிடம்..

ஆணுக்கும் பெண்ணுக்கும்..

காதலும்.. காமமும்தான்

பாலம் போடுமா..

இல்லை...

நட்புப்பாலத்தில்..

நானும் அவளும்..

அவள் என் வாழ்வுக்கு

ஒளி தந்த

வெண்ணிலவு..

என் தாயைப்போல..

அவள்..என் துயருக்கு

தோள் தந்த

தோழி..

என் மனைவி போல..

அவள் என் சிரிப்புக்கு

சேதி சொன்ன

சினேகிதி

ஆருயிரைப்போல..

அவள் என் துயிலுக்கு

மடி தந்த

நாயகி

நான் மழலை போல...

அவள் என் சோர்வுக்கு

விடை தந்த

தாதி

என் தந்தை போல...

அவள் கண்ணீரால்..

என்னைக்

காயப்படுத்தியிருக்கிறாள்...

என் கண்ணீரால்

நான்

அவளைக்குணப்படுத்தியிருக்கி

அவள்..என் துயருக்கு

தோள் தந்த

தோழி..

என் மனைவி போல..

இவ்வாறு வரிகளைச் சேர்த்து கவி வடித்த கவிஞன் விகடகவியா அன்று என் தோழனே கவிதைக்குள் என்னோடு அபப்டி குற்றம் கண்டுபிடித்தார்? எல்லாம் காலம் செய்யும் கோலம்.

இல்லை எங்கள் நட்பு தூய்மை தோள் சாங்ந்தோம்..

தொட்டணைத்தோம் என்று யாராவது நிரூபிக்கமுடிந்தால் நான் அதைக் கேட்க ஆவலாக இருக்கிறான்..

அதற்காக உங்களுக்கு என் செலவில் பாராட்டு விழா நடத்துகிறேன்..

சும்மா தூய்மை..அது இதுன்னு நடிக்காதீங்கோ..

இளமையான ஆட்களாம்.. தூய்மையான நட்பாம்.. தோளில சாய்வாங்களாம்.. ஆதரவா அணைப்பாங்களாம்..

ஹார்மோன் வேலை செய்யாதாம்..

என்ன கொடுமை சார் இது..

இள ஆணுக்கும் பெண்ணுக்கும் தோளில் சாயும் தோழமையில்.. தூய்மை என்பதற்கு(காமம் இல்லா) சாத்தியமே இல்லை..

இருக்கிறது என்று நீங்கள் மட்டும் சொன்னால் போதாது.. உங்கள் நண்பனும் சொல்லவேண்டும்.. அது கால வரையரைகள் தாண்டி நிரூபணமாக வேண்டும்..

நடக்கும்?..

மற்றவர்கள்தான் ஏற்றுக்கொண்டதுண்டா..

எப்போதாவது தலைமுறை தொடும்வரை நட்பு தொடர்ந்ததுண்டா..

போங்க காலையிலேயே.. இரத்தஅழுத்தம் கூடுது..

புனிதம்- அப்டின்னா என்ன

எவ்வளவு வலிமை அதுக்கு இருக்கு

அதோட ஆயுள் எவ்வளவு காலம்

நம்ம கலாச்சாரம் பண்பாடு தாண்டி அது வாழந்த அறிகுறி எங்கேயாவது இருக்கா..(புனிதமா)

தாய் பிள்ளை பாசம் வேற...

ஒரு இளம் ஆணுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையேயான நட்பு வேற...

வார்த்தைகள்எல்லாமே யதார்த்தற்கு பொருந்தாது.... நான் அனுபவப்பட்டவன்.. சொல்லுறேன் அடம் பிடிக்ககூடாது

இங்கே விடயம் பெண் தோழி இருப்பதா இல்லையா என்பதல்ல..

தோளில் சாயும் தோழமை தமிழச்சியா இளம் வாலிபனுடன்..

சாத்தியமா..

அது புனிதமானதாக இருக்கமுடியுமா..

எல்லாப்பெண்களம் ஓம் என்று சொல்லுறத பார்த்தா பகீரென்று இருக்கு

தலை இடியும் காய்ச்சலும் அவனவன் அனுபவிச்சால் தான் தெரியும்.

அடபாவிங்களா பாவம் நிலாஅக்கா அன்றைக்கு தனிய இருந்து நட்புகாண்டி குரல் கொடுத்தா :D ...........குருவே உங்கள் நல்ல மனதை கண்டு எனக்கு அழுகை....அழுகையாக வருகிறது............... :P

அடபாவிங்களா பாவம் நிலாஅக்கா அன்றைக்கு தனிய இருந்து நட்புகாண்டி குரல் கொடுத்தா :D ...........குருவே உங்கள் நல்ல மனதை கண்டு எனக்கு அழுகை....அழுகையாக வருகிறது............... :P

:P :P அப்படி இல்லை ஜம்மு

அன்று தோளில் தலைசாயும் நட்பு தப்பென சொன்ன விகடகவி வடித்த கவிதையிலும் அதே அம்சம் பொருந்தியதை சுட்டிக்காட்டிய குருவுக்கு நிகர் யாருளர்?

குருவே நீர் வாழ்க. :P

:P :P அப்படி இல்லை ஜம்மு

அன்று தோளில் தலைசாயும் நட்பு தப்பென சொன்ன விகடகவி வடித்த கவிதையிலும் அதே அம்சம் பொருந்தியதை சுட்டிக்காட்டிய குருவுக்கு நிகர் யாருளர்?

குருவே நீர் வாழ்க. :P

ஆனா என்ட குரு கூட அந்த நட்பு பிழை என்று தான் சொன்னவர் :D அது தான் நிலா அக்கா சொன்னேன்.........நான் நினைகிறேன் அக்கா ஒவ்வொரு வயதுக்கு வர நட்பு பற்றிய கண்ணோட்ட மாறுகிறதோ. :angry: .........ஆனா என்ட நட்பு பற்றிய கண்ணோட்டம் எப்பவும் மாறாது.............. ;)

ஆனா என்ட குரு கூட அந்த நட்பு பிழை என்று தான் சொன்னவர் :D அது தான் நிலா அக்கா சொன்னேன்.........நான் நினைகிறேன் அக்கா ஒவ்வொரு வயதுக்கு வர நட்பு பற்றிய கண்ணோட்ட மாறுகிறதோ. :angry: .........ஆனா என்ட நட்பு பற்றிய கண்ணோட்டம் எப்பவும் மாறாது.............. ;)

எல்லாம் அவன் செயல்.

ம்ம் என்னோட கருத்தும் மாறாது எப்பவும். :P

எல்லாம் அவன் செயல்.

ம்ம் என்னோட கருத்தும் மாறாது எப்பவும். :P

குருவுக்கே நீங்க எல்லாம் அவன் செயல் என்று சொல்லுறீங்களோ...............பேஷ்.பேஷ்.

....... :P

குருவுக்கே நீங்க எல்லாம் அவன் செயல் என்று சொல்லுறீங்களோ...............பேஷ்.பேஷ்.

....... :P

ஆச்சிரமத்துக்கு இப்பதானே வணக்கம் சொல்லி வந்திருக்கிறன்

அங்கு ஆண் பெண் பாராபட்சமில்லையாம். குரு என்னை ஆச்சிரமத்துக்குள் அனுமதிச்சிட்டாரே. அதுதான் அங்கேயே பொறுக்கிய சொல் எல்லாம் அவன் மயம் என்பது

ஆச்சிரமத்துக்கு இப்பதானே வணக்கம் சொல்லி வந்திருக்கிறன்

அங்கு ஆண் பெண் பாராபட்சமில்லையாம். குரு என்னை ஆச்சிரமத்துக்குள் அனுமதிச்சிட்டாரே. அதுதான் அங்கேயே பொறுக்கிய சொல் எல்லாம் அவன் மயம் என்பது

ஆச்சிரம பக்கம் பெண்கள் வரகூடாது என்று எந்த சாமி தான் சொல்லி இருக்கீனம்...........ஆண்கள் வரகூடாது என்று தான் பலசாமிமார்கள் சொல்லி இருக்கீனம்...........ஆனால் அடுத்த முறை நட்பை பற்றி குருவிடம் கேட்க வேண்டும்...என்ன சொல்லுகிறார் பார்போம்.......... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.