Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TTN நேய கழிவு அட்டை, அவர்கள் செய்வது சரியா முறையா....

Featured Replies

இன்று 30ம் திகதி தமிழ் இணையம் தொலைக்காட்சியில் நேய அட்டை என்னும் விலைக்கழிவு அட்டை ஒன்றின் அறிமுகம் சம்பந்தமாக நிகழ்ச்சி ஒண்று லண்டன் நேரம் 9 மணியளவில் ஒளிபரப்பு செய்கிறார்கள்..

பார்த்துகொண்டே இந்த பதிவை போடுகிறேன்... விலைக்கழிவு அட்டை என்பதுதான் அந்த நேய அட்டையின் சுருக்கமான விளக்கம்... அதில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது 5% விகிதம் முதல் விலைக்கழிவை செய்கிறார்கள்..

மிகவும் நல்லதொரு திட்டம் எண்று சொல்ல முடியாதுதான்... ஆனாலும் தமிழரின் விலை கொடுத்து வாங்கும் திறனை (Buying power) ஒருங்கிணைக்கும் நல்லதொரு விடயம் எண்று சொல்லலாம்... வாங்குபவர்களும் விலைக்கழிவின் மூலம் பயன் அடைய முடியும். விற்பவர்களும் நேய அட்டை விலைக்கழிவுக்காக வரும் வாடிக்கையாளர்களின் அதிகரிப்பால் வருமானத்தை பெருக்க முடியும்..

அப்படியானால் தமிழர்கள் பயன் அடைவார்கள்... மிகவும் மகிழ்ச்சி.,

இப்போது ஒரு சிக்கல் ஒன்றை தொலைக்காட்சியில் தோன்றிய இங்கிலாந்து TTN விற்பனை முகவர் கருணலிங்கமும், ஐரோப்பிய முகவர் குருபரனும் சொன்னார்கள் இந்த அட்டையை இலங்கை இந்தியாவுக்கு எல்லாம் விரிவாக்க போகிறார்களாம்... இந்தியாவுக்கு கொண்டு போகட்டும் நல்லதுதான்... அது ஏன் இலங்கைக்கு...?? எங்களால் வரும் வருமானத்தை கொண்டு எங்களின் மண்ணில் குண்டு வீச செய்வதற்கா..???

அதோடு முக்கியமானதான ஒரு கேள்வி தெற்கு லண்டன் பகுதி நிரு எனும் கடை ஒன்றை காட்டினார்கள்..... காட்டட்டும் வேண்டாம் எண்டவில்லை... ஆனால் அந்தகடைகளில் இந்திய, இலங்கை பொருட்கள் எல்லாம் கிடைக்கும் எண்று ஒரு போடு போட்டார்கள், அதுதான் சகிக்கவில்லை...! அப்படியானால் பொருட்கள் இலங்கையில் இருந்து வருவதை அவர்கள் தடுப்பதற்கான அறிகுறிகள் இல்லைத்தானே...???

இந்த திட்டம் வெற்றிபெறுமானால் ஒரு விடயம் மட்டும் தெளிவாக நடக்க போகின்றது. நேய அட்டை பயன்படுத்தும் மக்கள் பயன் அடைவார்கள். பெரிய சுப்பர் மார்க்கட்களில் சாமான் வாங்கியவர்கள் அனேகர் விலைக்கழிவில் மகிழ்வடைந்து, நேய அட்டையை பயன்படுத்த போகிறார்கள். புலம்பெயர் தமிழர் வாங்கும் திறன் ஒருங்கிணைக்கப்பட போகின்றது... அப்படியானால் இலங்கை தயாரிப்பு பொருட்கள் அமோகமாக விற்பனையாகப்போகின்றது... அருமையான வருமானம் சிங்கள அரசுக்கும் கிடைக்க போகின்றது... தமிழர் தலைகளில் குண்டுகளாய் விழப்போவது மட்டும் உறுதி...

தொலைபேசி எடுத்து கேக்கலாம் எண்டால் இணைப்பு கிடைக்கவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொருட்கள் இன்னும் ஒஹோ எண்டு விலைப்படப்போகுது

நல்ல வழிகாட்டியாயும் அமையப்போகுது

இலங்கையில் இருந்து வரும் பொருட்களிட்கு விலைக்கழிவு கொடுக்கப்டாமல் இருந்தால், இதன் மூலம் இலங்கை பொருட்களை மக்கள் வாங்குவதை இலகுவாக தடுக்கலாம், இந்தியா,மலேசியா,சிங்கப்பூர், தாய்லாந்தில் இருந்து வரும் பொருட்களுக்கு மட்டும்தான் என அறிவித்தால், சிறீலங்காவின் பொருளாதரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்சியை உண்டு பண்ணலாம், இது சேவை அடிப்படையிலானதா? அல்லது வியாபார அடிப்படையிலானதா? தமிழர்கள் போராட்டத்துக்கு ஆதரவானதா? சிங்கள பொருளாதரத்தை வளர்கக்கூடியதா? என்னும் விடைகளுக்கு கிடைக்ககூடிய பதிலில்தான் நேயா அட்டையின் வளர்சி இருக்கிறது. :rolleyes::lol::lol:

Edited by Birundan

தல - ஒண்ணு சொலுறன்

என்னதான் முயற்சி எடுத்தாலும்...

சிறிலங்காவிலிருந்து வரும் - நுகர்வுப்பொருட்களூக்கான - புறக்கணிப்பு

சாத்தியமே இல்லை!

மறைமுகமான - கொள்வனவு எப்பவும் - தொடரலாம்!!

இங்கு சப்பு கட்டு கட்டும் - கருத்தாளர்களும்-அதற்கு உறுதுணை!

அதனால் -இறக்குமதி - & வியாபாரத்தில் ஈடுபடும் - வியாபார நிறுவனங்களும் கூட - லாப நோக்கிலான - தொடர்ச்சி!

தவறில்லயோ - தெரியல!

ஏனெனில்- புலம்பெயர் நாடுகளில் - வர்த்தக நிறுவனங்களின் -பங்களிப்பு

போராட்டத்துக்கு - வழங்கிவரும் பங்களிப்பு - அதிகம்! -தூண்!

இன்னுமொன்றை -கவனதில் எடுக்கலாம்.........

என்னதான் புறக்கணிப்பு முயற்சி - எடுத்தாலும்........

இங்கே - சிங்களவனுக்கு காவடி தூக்குறவங்க -

இறக்குமதி - செய்வாங்க- பயனடைவாங்க...........

அப்போது - எதிர்கொள்ளபோகும் - ஆபத்து பெரியது!!

வருமானம் முழுதும் - போராட்டத்துக்கு - எதிராய்!

வருமானமிருந்தால்தான் - வசதி - என்ற அடிப்படையில்-கருத்து இது!! :huh:

Edited by வர்ணன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ரிரிஎன் னிற்கு தேவை இல்லாத வேலை என்றே என்னால் கருதமுடியும். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் கள்ள அட்டை தயாரிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள்.

இரண்டாவது இவ் அட்டையாலும் அதன் மெசினாலும் ஏற்பட போகும் தொழில்நுட்பக்கோளாறு. இதனால் நிறுவனங்கள் சில தொழில்நுட்பக்கருவிகளை கொள்வனவு செய்ய வேண்டும். இப்படியான தொழில்நுட்பக்கருவிகள் சாதரணமாகவே விலையுயர்ந்தவை.

இப்படியான கருவிகள் பழுதடைந்தால் அதனை திருத்தம் செய்யும் செலவு.

இன்னுமொரு முக்கியமான விடயம்: சிறிலங்காவின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைக்க வேண்டும் என்னும் புத்தியீவிகளிற்கு. இவ் அட்டை விரைவில் கொழும்பிலுள்ள கடைகளிலும் பாவனைக்கு வரவுள்ளது. சனம் அங்க போய்ட்டு வரேக்க கொழுப்பில காசை கொட்டீட்டு சாமனை அள்ளிக்கொண்டுவரப்போகுது.

அந்த உரையாடலில ஒருத்தர் சொல்லுறார் "ரிரிஎன் லாபத்தை எதிர்பாத்து இதை செய்யவில்லை எமது நேயர்களின் மகிழ்ச்சிக்காகவே". :-)

மற்றவர் ஒருத்தர் பேட்டி காணுறார் ஒரு கடைக்காரரை. காலுக்கு மேல கால் போட்டுக்கொண்ட (பேட்டி காணுறவர்) இருந்தார். நானும் என்னமோ பெரிய அறிவுசார்ந்த கேள்வியள் கேட்கப்போறார் என்டு பாத்தா " உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்க" "ரிரிஎன் இந்த அறிமுகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" "மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்" இதெல்லாம் தேவையா??? பேட்டி காண வரேக்கையே ஒழுங்கா ஆயத்தம் செய்து கொண்டு வந்தால் என்ன குறைஞ்சா போய்விடுவீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்குபவர் மனது வைத்தால் ஓரளவு சிறீலங்கா அரசினது பொருட்களை இறக்குவதை கட்டுப்படுத்தலாம், இறக்குபவர்கள், சிறீலங்காவில் இருந்து இறக்கும் பொருட்களை அதே அளவு செலவில் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாமே. :huh::huh::lol:

வடக்கு கிழக்கு மீது பொருளாதார தடை போடும் சிறீலங்கா இனவாதம்...

வடக்கு கிழக்கில் இருந்து தரமான வெங்காயம், மாம்பழம், புகையிலை, கடல் உணவு கிடைக்காமல் சிங்களப் பகுதிகளிற்கு போய்விடும் அல்லது விலை ஏறிவிடும் என்று நினைக்கிறதா?

அதிகரித்த செலவீனத்தால் வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகையை நிவர்த்தி செய்ய வரியை அதிகரிக்கிறது. மக்களிற்கு கட்டுப்படியாத வகையில் விலை ஏறிவிடும் என்றோ வியாபார நிறுவனங்களிற்கு இலாபம் குறைந்து விடும் என்றோ அதிகரிக்காது விடுகிறதா?

இல்லை தமிழரையும் புலிகளையும் பொருளாதார தடை மூலம் தண்டிப்பதற்கும் தன்னை இராணுவரீதியில் பலப்படுத்துவதற்கான பொருளாதார வளத்தை திரட்டுவதற்குமே முன்னுரிமை கொடுக்கிறது சிறீலங்கா அரசு.

எமக்கு கவிதையிலும், இணையத்தளங்களிலும், எழுத்துக்களிலும், வெறும் மேடைப் பேச்சுகளிலும், படங்களிலும் தான் தமிழீழம் வேணும் என்றால் சிறீலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களை புறக்கணிப்பது கடினம். தமிழீழ ஆதரவு வேடத்தைப் போட்டு பொழுது போக்குவது தான் எம்மால் முடியும் என்றால் புறக்கணிப்பு என்பது முடியாது.

நிஜ வாழ்வில் தமிழீழம் வேணும் என்றால் புறக்கணிப்பை நடத்தி பொருளாதார ரீதியில் எதிரியை தண்டிக்க முயற்சிக்க வேண்டும். சொகுசான ருசியான நுகர்வின் மூலம் எதிரியைப் பலப்படுத்திக் கொண்டு போர்புரிய மோட்டு சிங்களவனால் முடியவில்லை. ஆனால் வே* ஆடும் புலம் பெயர்ந்த தமிழரால் முடியுதோ?

ஏன் போர்க்களத்தில் நிப்பது வேறு யாரோ தானே நீங்கள் அதுக்கும் ஆதரவாக கதைப்பியள் இங்காலை சிங்களவனை வலுப்படுத்திற நுகர்வையும் தொடருவியள் ஏன் என்றால் போராட்டம் ஒரு பொழுது போக்கு விளையாட்டு தானே உங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கடையின் வியாபாரிகள் தற்போது இலங்கையிலிருந்து பொருட்களை எடுப்து சற்று குறைவாக இருக்கின்றது. லீலா தயாரிப்புக்கள் காண்பது சற்று அரிதாகிக் கொண்டிருக்கின்றது (நான் போன கடையில்)

நாம் தான் அழுத்தத்தை கொடுக்கோனும்.ஒவ்வொருவரினதும

  • தொடங்கியவர்

இலங்கையில் இருந்து வரும் பொருட்களின் பார்க்க கனடாவில் தயாராகும் நிரு தயாரிப்புக்கள் விலை குறைவாக இருக்கின்றன... நிரு மட்டும் அல்ல மற்றய நிறுவனத்தாரும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை நன்கு கண்டறிந்து செயற்பட்டவாறுதான் இருக்கிறார்கள்... தரங்களை மட்டும் அவர்கள் குறிப்பாக அவதானித்து செயற்படுவார்களானால் சிறீலங்கா பொருட்களை புறக்கணிப்பது கடினம் அல்ல...!

புலம்பெயர் மூலப்பொருட்களை சிறீலங்காவில் இருந்து பெறவில்லை என்பதை எம்மவர்கள் உறுதிப்படுத்துவது அவசியம்.....!

  • கருத்துக்கள உறவுகள்

NSR நிறுவனத்தின் பொருட்கள் தென்னிந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அதே போல் மற்ற நிறுவனங்களும் செய்யலாம்.

:D முன்பங்கேயோ கேள்விப்பட்டது ...........ஊருக்கடி உபதேசம் உனக்கில்லை........என்றது போலத்தான் இந்த புறக்கணிப்பு பிரச்சாரங்களும் இங்குள்ள வியாபார நோக்கோடு மட்டுமே உள்ள அமைப்புகளும் தவிர வேறொன்றுமில்லை :(

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

<_< முன்பங்கேயோ கேள்விப்பட்டது ...........ஊருக்கடி உபதேசம் உனக்கில்லை........என்றது போலத்தான் இந்த புறக்கணிப்பு பிரச்சாரங்களும் இங்குள்ள வியாபார நோக்கோடு மட்டுமே உள்ள அமைப்புகளும் தவிர வேறொன்றுமில்லை <_<

ஸ்ரீலங்கன் நிறுவனங்களுக்கு காசு போய்விடக்கூடாது என்பதை விட, தமிழர் நிறுவனம் ஒண்றுக்கு காசு போகக்கூடாது என்னும் எவ்வளவு நல்ல பெரும் மனப்பாண்மையை வளர்த்து வைத்திருக்கிறீர்கள்.....! அப்படியே தாயகத்தமிழனின் உணர்வு மெய்சிலிர்க்க வைச்சிட்டுது....!

நல்லது அதையே தொடருங்கள்... உங்களின் உறவுக்கோ இல்லை பக்கத்து வீட்டிலோ பத்தி எரியேக்கை காப்பாத்துங்கோ எண்டு அப்ப கத்தினால் போதும்... இப்ப தேவை இல்லை...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.