Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்ப வைத்து ஏமாற்றினரே.......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ப வைத்து ஏமாற்றினரே...: அதிர்ச்சியில் இலங்கை தமிழர்கள்! 

Tamil_News_large_133004620150830003020.j
இலங்கையில், சிங்கள கட்சிகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி, கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கு, இலங்கை மத்திய அமைச்சரவையில் உரிய வாய்ப்பு கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது; இதனால், தமிழர்கள் அதிர்ச்சி அடைத்து உள்ளனர். 

3௦ அமைச்சர்கள் :

இலங்கை அரசியலமைப்பிற்கான, 19வது திருத்தச் சட்டத்தின் படி, மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை, 30 என ஏற்கனவே நிர்ணயித்துள்ளதோடு, இணை அமைச்சர்களின் எண்ணிக்கையும் வரையறுத்துஉள்ளனர். இதே காரணம் காட்டி, ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கும், அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் தரப் போவதில்லை என, ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திர கட்சியும் முடிவெடுத்துள்ளன.
இதையடுத்து, சிங்கள கட்சிகளின் தலைமைகள், தமிழர்களையும், தமிழ் பேசும், எம்.பி.,க்களையும் ஏமாற்றிவிட்டதாக, தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்துள்ள, தமிழ் எம்.பி.,க்கள், அதை வெளிக்காட்ட இயலாமல் தவிக்கின்றனர்; 'நாங்கள் நம்பிய, சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர்' என்று சொல்ல இயலாமல் தவிக்கின்றனர். அதை வெளிப்படுத்தினால், தங்களின் கவுரவம் பாதிக்கப்படும் என்பதால் வேறு காரணங்களை கூறுகின்றனர்.ஐக்கிய தேசிய கட்சியும், இலங்கை சுதந்திரா கட்சியும் இணைந்து, தேசிய அரசாங்கம் அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டதால், ஐக்கிய தேசிய கட்சியிலும், அதன் கூட்டணியிலும் போட்டியிட்ட தமிழர்களுக்கு அந்தஸ்து கிடைக்காமல் போனது.

இப்படி ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்துள்ளதற்கு காரணம், பாராளுமன்ற அமைச்சரவையில் சிங்களர்களின் ஆதிக்கம் குறைந்துவிடக் கூடாது; தமிழர்களின் ஆதிக்கம் வரவே கூடாது என்பது தான். இதை, தமிழர்கள் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான வேலாயுதம், தேசிய பட்டியலிலும், அமைச்சரவையிலும் இடம்பிடிப்பார் என்று அளித்திருந்த வாக்குறுதி, தேர்தல் முடிவுகள் வந்த பின், காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.அதேபோல, நுவரெலியா மாவட்டத்தில் வென்றுள்ள ராதாகிருஷ்ணன், திலகராஜ், திகம்பரம் ஆகியோருக்கும்; பதுளையில் வென்றுள்ள வடிவேல், சுரேஷ், அரவிந்தகுமார் ஆகியோருக்கும், அமைச்சரவையில் வாய்ப்பு தருமாறு கோரப்பட்டுள்ளது. ஆனால், இவர்களில் யாராவது ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, 'ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், அதற்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்' என, அறிவித்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சியோ, தேசிய அரசு என்ற பெயரில், இலங்கை சுதந்திரக் கட்சியோடு இணைந்துள்ளது.மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருக்கு, அதிகபட்ச அதிரடிப்படை பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. அவர், ஐக்கிய தேசிய கட்சியின் உளவாளி என்பது தேர்தலுக்கு பிறகே தெரிய வந்தது.
இதெல்லாம் தமிழர்களுக்கு, ஐக்கிய தேசிய கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைத்துவிட்டது; தமிழர்களின் ஆதரவு கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பை, 'நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டதாகவே' தமிழர்கள் கருதுகின்றனர்.

போராட வேண்டிய நிலை:

அமைச்சரவையில், தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில், அவர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற, ஏற்கனவே போராடியது போல மீண்டும் தொடர்ந்து போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது தமிழர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ராஜபக் ஷே போல இருக்கமாட்டார் என்ற நம்பிக்கை இப்போது தகர்ந்து போய்விட்டது. 

மகிந்த ராஜபக் ஷே பொதுத் தேர்தலில் போட்டியிட, மைத்திரிபால சிறிசேன வாய்ப்பு தந்தது கூட, அவரின் ஆதரவு சிங்களர்கள் மற்றும் இராணுவத்தினரின் ஓட்டுகளை பெறுவதற்காக மட்டுமல்ல, தம் கூட்டணிக்குள் வளைப்பதற்காகவே என்பதை, தமிழர்கள் இப்போது உணரத் துவங்கியுள்ளனர். இலங்கையில், சிங்களர்களைப் போல, தமிழர்களும் சகல உரிமைகளைப் பெற்று நிம்மதியுடன் வாழ, சிங்களத் தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் தமிழர்கள், பழைய சம்பவங்களை மறந்து, சிங்களர்களுடன் நல்லிணக்கமாக வாழும் மனநிலைக்கு 
மாறியுள்ளனர். இதைப் புரிந்து கொள்ளாமல் ஆதிக்கமும், அதிகாரமும் செலுத்தும் மனநிலையைத் தான், கடந்த கால் நுாற்றாண்டு காலமாக, சிங்கள தலைமைகள் கடைபிடிக்கின்றன. 

இது, தமிழர்களை மீண்டும் போராட்ட சிந்தனைக்கு செல்லத் துாண்டுவதாகவே அமையும் என்று, இலங்கையின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.  

http://www.dinamalar.com/

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வம்சாவழித் தமிழர்கள் பலர் மந்திரி சபையை அலங்கரிக்க உள்ள நிலையில் சிங்கள அரசு அவர்களை  ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லக் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கையோ ஏதோ  ஒரு ஜில்மாவிளையாட்டு  சறிக்கீட்டுது எண்டு நல்லவடிவாய் தெரியுது.....
ஒருசில நம்பேலாத தகவல்களை இந்தச்செய்தியை உறுதிப்படுத்துற மாதிரி இருக்கு :cool:

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தேர்தலுக்கு முன்பாகவே, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, 'ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், அதற்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்' என, அறிவித்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சியோ, தேசிய அரசு என்ற பெயரில், இலங்கை சுதந்திரக் கட்சியோடு இணைந்துள்ளது.மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருக்கு, அதிகபட்ச அதிரடிப்படை பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. அவர், ஐக்கிய தேசிய கட்சியின் உளவாளி என்பது தேர்தலுக்கு பிறகே தெரிய வந்தது.
இதெல்லாம் தமிழர்களுக்கு, ஐக்கிய தேசிய கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைத்துவிட்டது; தமிழர்களின் ஆதரவு கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பை, 'நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டதாகவே' தமிழர்கள் கருதுகின்றனர்.

 

http://www.dinamalar.com/

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்பவும்.. இதயத்தால் இணையவும் ஒரு முகாந்திரம் இருக்கனும். புலிகள் இருந்த போது சிங்களத்திடம் இருந்து ஒட்டுக்குழுக்களை நோக்கி தேடி வந்த பதவிகள் எல்லாம் இப்போ.. இலவு காத்த கிளி கணக்காப் போயிட்டுது. புலிகள் எத்தனை பேருக்கு அரசியல் பிச்சை போட்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவு. தமிழரசுக் கட்சி ஆக்களுக்கு அரசியல் செய்ய தளம் அமைச்சுக் கொடுத்ததும் புலிகள் தான் போல. இப்ப எல்லாமே அவைட விருப்புக்கு நடக்கிறதா தெரியல்ல. புலிகளால் மட்டும் தான் சிங்களவனின் செயலை.. சிந்தனையை மாற்ற முடியும்.. முடிந்தது. மற்ற எவராலும் அது சாத்தியமில்லை... என்ற தெளிவிருந்தால்.. இதில் ஏமாற்றம் என்ற சொல்லுங்கே இடமில்லை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பாருங்கோ இந்த காரணிகலேல்லாம் ஆட மாட்டாதவனுக்கு அரங்கு பிழை என்ற கணக்காயல்லோ இருக்கு 
அரங்கு பிழையோ ...மேடை கோணலோ 2016 இல் தீர்வு வந்தே தீரனும் ........இப்பதான் சூடு புடிக்குது .....

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பாருங்கோ இந்த காரணிகலேல்லாம் ஆட மாட்டாதவனுக்கு அரங்கு பிழை என்ற கணக்காயல்லோ இருக்கு 
அரங்கு பிழையோ ...மேடை கோணலோ 2016 இல் தீர்வு வந்தே தீரனும் ........இப்பதான் சூடு புடிக்குது .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.