Jump to content

நல்லைக் கந்தன் பவனி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீலவானம்

சொரியும் மலர்களாய்

வெண்முகில் கூட்டம் கூடி

வேலவன் கோவில் தேடியோடி...!

 

கோபுரத்தை

உரசும் தென்றல்

பணிந்து வேம்பைத் தழுவி

எழுந்து பனையைத் தொட்டுச் செல்லும்...!

 

வீடுகளில்

முற்றத்தில் தோட்டத்தில்

வள்ளல்களாய் மலர் மரங்கள்

செடிகள் கொடிகள் பயிர்கள் பந்தல்கள்....!

 

நல்லூர்

வீதிதோறும் கூந்தல்களில்

மணக்கும் வண்ண வண்ண மலர்கள்

நகரும் நந்தவனங்கள் ஒயிலாய்

இடை அசைவில் சிதறும் மணிகள்...!

 

ஆறுமுகம்

அருகில் இரு தேவியரும்

அலங்காரமாய் அமர்ந்திருக்க

அழகு இரதம் புறப்பாடு ஆரம்பம்...!

 

வீதிகளில்

தேர் ஓடுவது ஊர்களிலே

மாந்தர் வியர்வையில் திளைத்து

தேர் மிதப்பது நல்லூரினிலே...!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.