Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டாக்டரை புரட்டி எடுத்த கும்பல்: சிகிச்சை அளிக்க தாமதமானதால் ஆத்திரம் (வீடியோ)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு அகிலேஷ் சிங் என்ற டாக்டர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவர் நிலைகுலைந்து போனார். இதனை ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை தாக்குதலுக்குள்ளான டாக்டருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து டாக்டர் போலீசில் புகார் செய்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே வந்த நோயாளிகளை பார்த்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியுள்ளதாக கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். 
 
விபத்தில் அடிபட்ட தங்களது உறவினரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். ஏற்கனவே அவரை அழைத்து வர வந்த ஆம்புலன்ஸ் தாமதமாக வந்தது. இந்தநிலையில் தங்களின் நிலை தெரியாமல் வேறு நோயாளியை பார்த்துக்கொண்டு தாமதம் செய்தார் டாக்டர். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் டாக்டரை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
இதுகுறித்து டாக்டர் கூறியதாவது, விபத்தில் காயம் அடைந்த தங்களுடைய உறவினருக்கு முதலில் சிகிச்சை அளிக்கும்படி கூறினர். ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனை முடித்துவிட்டு வருவதாக தெரிவித்துவிட்டு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு கும்பல் வந்து என்னை தாக்கியது என்றார். 
 
இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அங்கு திரண்டனர். அவர்கள் பணியை புறக்கணிக்க முடிவு செய்து கோஷமிட்டனர். உடனடியாக அங்கு வந்த தலைமை மருத்துவ அதிகாரி ஹர்கோவிந்த் சிங், அவர்களை சமாதானப்படுத்தி பணியை தொடரச் செய்தார். 

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=151599

மானம்கெட்ட கிந்தியா இதற்குள் நமக்கு விளக்குப்பிடிக்க வந்திட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

மானம்கெட்ட கிந்தியா இதற்குள் நமக்கு விளக்குப்பிடிக்க வந்திட்டுது

 

சேர்வைத்தம்பி,

உதில இந்தியா, இலங்கை வித்தியாசம் இல்லை அப்பு.

என்ன, வைத்தியர்மார் மனிதாமிமானதினை தொலைத்து விட்டனர். காசு கொடுத்து  மெடிக்கல் சீட் வாங்கினால் பணம் தானே பேசும்.

அவசரமா வந்தவரிலும் பார்க்க, உள்ளார, ICUல் இருந்தவர் பசைப் பார்ட்டி யா இருக்கும் போல. அங்க மினக்கட்ட படியால், அடுத்த பார்ட்டியை கவனிக்க அவசரம் காட்டவில்லை போல கிடக்குது. அதால அடி வைத்திக்கு விழுந்து இருக்கு.

நம்ம ஊரில,  கொழும்புல, நவலோக ஆஸ்பத்திரியில் இதய அறுவைக்கு போன ஒருவருக்கு, மூன்று லட்சம் வாங்கி அறுவைசிகிச்சை  செய்து, வெட்டினாப் பிறகு, complication கூட, திரும்பவும் வெட்டனும், கொண்டுவா இன்னுமொரு 5 லட்சம் என்னு கேட்க, குடும்பம், இல்லாத காசை தேடி, கடனுக்கு அங்க இங்க ஓடித்திரிய அவர், திரும்ப வெட்டியதால் இந்து விட்டார்.

13 லட்சம் கட்டி இறந்தவர் உடலை கொண்டு போகுமாறு நவலோக சொல்லிவிட்டு, உடலை பணயமாக 3 வாரம் வைத்து இருந்திருகிறது.

கோர்டுக்கு போய், போன வாரம், இறந்த உடலை அடமானமாக பிடிக்கும் எந்த சட்டமூலமும் இந்த நாட்டில் இல்லை என்று உடலை உடனடியாக உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவு இடப்பட்டு உள்ளது.

இவர்கள் பிழைக்க வைப்பார்கள் என்று தானே அவர் வந்தார். மரணித்த பின்னும் அடாவடி பண்ணினால்?  :(

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் டாக்குத்தருக்கு அடித்து என்ன பிரயோசனம்.
இது இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள
அரச மற்றும் பொது நிர்வாகங்களில் உள்ள கோளாறு.
கொஞ்சப் பணத்தை ஒரு பக்கம் வைத்திருந்தால் அந்தாள் மற்றவருக்கு முன்னுரிமை கொடுத்திருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

இருந்த சீவனும் , வந்த சீவனும் இன்னும் இருக்கா , இல்லையா...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.