Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TNA மீது புலம்பெயர் புலிப் பினாமிகள் தாக்குதல் :வியாபாரம் சரிவடையும் விரக்தியின் விளைபலன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA மீது புலம்பெயர் புலிப் பினாமிகள் தாக்குதல் :வியாபாரம் சரிவடையும் விரக்தியின் விளைபலன்?

attack on tnaகடந்த வெள்ளியன்று (09/10/2015) மாலை 4 மணியளவில் 23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் கோடீஸ்வரன்இ மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் போன்றோர் பங்கெடுத்துள்ளனர்.

இந்த ஒன்று கூடல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு நுளைந்த புலம்பெயர் புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் ஜானாவைக் குறிவைத்துத் தாக்குதல் ஒன்றை நடத்த முயன்றுள்ளனர்.

ஜனா மீதான தாக்குதலில் பிள்ளையானின் ஆதரவாளர்களும் இணைந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெலோ இயக்கத்தைச் சேர்ந்த ஜனாவின் மீது பல்வேறு வன்முறைக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. கிழக்கில் கருணா தலைமையிலான புலிகளுக்கும் எதிரான தாக்குதல்கள் பலவற்றில் ஜனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு வன்முறை மற்றும் படுகொலைகளுடன் ஜனா விற்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன.

கருணா தலைமையிலான தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவே தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜனா குழு கூறி வந்தது.

எது எவ்வாறாயினும் ஜனா வன்முறைகளோடு தொடர்புடையவர் என்பது தெளிவானது.

பிரான்சில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் என்பது, பாராளுமன்றத் தேர்தல் ஊடாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் பிரதிநிதி ஆயுதங்களின்றி நடத்திய ஒன்றுகூடல்.

எதிரியாகவிருந்தாலும் கருத்தை உள்வாங்கி எதிர்கொள்வதே வீரம். கருத்தை வன்முறையால் எதிகொள்வது என்பது எமது சமூகத்தின் சாபக்கேடு. இதுவே உலகம் முழுவதும் தமிழர்களை கொடூரமான மனோ நிலை கொண்டவரக்ளாக அறிமுகப்படுத்தியது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகளின் பிழைப்புவாத நோக்கங்களுக்காகப் பயன்படும் இந்த வன்முறையை எதிர்ப்பது ஜனாவை ஆதரிப்பதாகாது, மாறாக மக்களின் அடிப்படை ஜனநாயகத்தை ஆதரிப்பதாகும்.

இலங்கை அரசின் வன்முறைகளுக்கு எதிராகத் தண்டனை வழங்குங்கள் என்று உலக அதிகாரவர்கங்களின் காலடியில் மண்டியிடும் தமிழர்கள் மட்டும் வன்முறயை கருத்துக்களுக்கு எதிராக முன்வைப்பது அருவருக்கத்தக்கது.

புலிகளின் பெயராலும் தேசியத்தின் பெயராலும் நடத்தப்படும் இந்த வன்முறைகளே தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறது.

மனிதாபிமனமற்ற, ஜனநாயகத்தை மதிக்கத்தெரியாத வன்முறை மீது காதல்கொண்ட கும்பல்களின் போராட்டமே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்ற தவறான விம்பத்தை உலகில் போராடும் மக்களுக்கு வழங்கி வருகிறது.

கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த கோபி என்ற வன்முறையாளன் தலைமையிலான குழு ஒன்று மண்டப வாசலில் நின்றுகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஜானாவுக்கெதிரானதிரான பழிச்சொற்களுடன் கோசங்களை எழுப்பினர்.

அவ்வேளை வர்த்தக சங்கத்தலைவரான பாஸ்கரன் வெளியே சென்று அவர்களை அமைதியாக உள்ளே வந்து தங்கள் கேள்விகளை எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி உள்ளே வந்த புலிகள் என அடையாளப்படுத்தும் கோபியின் கும்பல் ஜனாவை சூழ்ந்து கொண்டு வன்முறையாக நடந்து கொள்ள முயன்றபோது, கூட்டத்தில் இருந்தவர்களால் மண்டபத்தை விட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டனர்.

உரிய நேரத்தில் பொலிசார் வருகை தந்தமையினால் ஜனா மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போலிசாரைத் மீறி ஜனாவைத் தாக்க முற்பட்ட போது வன்முறைக் கும்பலைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.

கோபி போன்ற எச்ச சொச்சங்கள் சமூகத்திலிருந்த அகற்றப்பட்டால் மட்டுமே ஜனா போன்றவர்களின் குற்றங்களை மக்கள் முன் தெளிவுபடுத்த முடியும். கோபி போன்ற வியாபாரக் கும்பல்கள் ஜனா போன்றவர்களை வாழ வைக்கிறார்கள்.

மேலும், தமிழரசுக் கட்சியின் ஆதரவு இணையங்கள் பிரான்சில் ஜனா நையப் புடைக்கப்பட்டார் எனச் செய்தி வெளியிடுகின்றன. இவ்வாறான செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளே உள்ள பிளவுகளைக் காட்டுகின்றன.

http://inioru.com/attack-on-tna-in-france/

  • கருத்துக்கள உறவுகள்

TNA மீது புலம்பெயர் புலிப் பினாமிகள் தாக்குதல் :வியாபாரம் சரிவடையும் விரக்தியின் விளைபலன்?

attack on tnaகடந்த வெள்ளியன்று (09/10/2015) மாலை 4 மணியளவில் 23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் கோடீஸ்வரன்இ மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் போன்றோர் பங்கெடுத்துள்ளனர்.

இந்த ஒன்று கூடல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு நுளைந்த புலம்பெயர் புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் ஜானாவைக் குறிவைத்துத் தாக்குதல் ஒன்றை நடத்த முயன்றுள்ளனர்.

ஜனா மீதான தாக்குதலில் பிள்ளையானின் ஆதரவாளர்களும் இணைந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெலோ இயக்கத்தைச் சேர்ந்த ஜனாவின் மீது பல்வேறு வன்முறைக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. கிழக்கில் கருணா தலைமையிலான புலிகளுக்கும் எதிரான தாக்குதல்கள் பலவற்றில் ஜனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு வன்முறை மற்றும் படுகொலைகளுடன் ஜனா விற்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன.

கருணா தலைமையிலான தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவே தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜனா குழு கூறி வந்தது.

எது எவ்வாறாயினும் ஜனா வன்முறைகளோடு தொடர்புடையவர் என்பது தெளிவானது.

பிரான்சில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் என்பது, பாராளுமன்றத் தேர்தல் ஊடாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் பிரதிநிதி ஆயுதங்களின்றி நடத்திய ஒன்றுகூடல்.

எதிரியாகவிருந்தாலும் கருத்தை உள்வாங்கி எதிர்கொள்வதே வீரம். கருத்தை வன்முறையால் எதிகொள்வது என்பது எமது சமூகத்தின் சாபக்கேடு. இதுவே உலகம் முழுவதும் தமிழர்களை கொடூரமான மனோ நிலை கொண்டவரக்ளாக அறிமுகப்படுத்தியது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகளின் பிழைப்புவாத நோக்கங்களுக்காகப் பயன்படும் இந்த வன்முறையை எதிர்ப்பது ஜனாவை ஆதரிப்பதாகாது, மாறாக மக்களின் அடிப்படை ஜனநாயகத்தை ஆதரிப்பதாகும்.

இலங்கை அரசின் வன்முறைகளுக்கு எதிராகத் தண்டனை வழங்குங்கள் என்று உலக அதிகாரவர்கங்களின் காலடியில் மண்டியிடும் தமிழர்கள் மட்டும் வன்முறயை கருத்துக்களுக்கு எதிராக முன்வைப்பது அருவருக்கத்தக்கது.

புலிகளின் பெயராலும் தேசியத்தின் பெயராலும் நடத்தப்படும் இந்த வன்முறைகளே தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறது.

மனிதாபிமனமற்ற, ஜனநாயகத்தை மதிக்கத்தெரியாத வன்முறை மீது காதல்கொண்ட கும்பல்களின் போராட்டமே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்ற தவறான விம்பத்தை உலகில் போராடும் மக்களுக்கு வழங்கி வருகிறது.

கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த கோபி என்ற வன்முறையாளன் தலைமையிலான குழு ஒன்று மண்டப வாசலில் நின்றுகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஜானாவுக்கெதிரானதிரான பழிச்சொற்களுடன் கோசங்களை எழுப்பினர்.

அவ்வேளை வர்த்தக சங்கத்தலைவரான பாஸ்கரன் வெளியே சென்று அவர்களை அமைதியாக உள்ளே வந்து தங்கள் கேள்விகளை எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி உள்ளே வந்த புலிகள் என அடையாளப்படுத்தும் கோபியின் கும்பல் ஜனாவை சூழ்ந்து கொண்டு வன்முறையாக நடந்து கொள்ள முயன்றபோது, கூட்டத்தில் இருந்தவர்களால் மண்டபத்தை விட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டனர்.

உரிய நேரத்தில் பொலிசார் வருகை தந்தமையினால் ஜனா மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போலிசாரைத் மீறி ஜனாவைத் தாக்க முற்பட்ட போது வன்முறைக் கும்பலைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.

கோபி போன்ற எச்ச சொச்சங்கள் சமூகத்திலிருந்த அகற்றப்பட்டால் மட்டுமே ஜனா போன்றவர்களின் குற்றங்களை மக்கள் முன் தெளிவுபடுத்த முடியும். கோபி போன்ற வியாபாரக் கும்பல்கள் ஜனா போன்றவர்களை வாழ வைக்கிறார்கள்.

மேலும், தமிழரசுக் கட்சியின் ஆதரவு இணையங்கள் பிரான்சில் ஜனா நையப் புடைக்கப்பட்டார் எனச் செய்தி வெளியிடுகின்றன. இவ்வாறான செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளே உள்ள பிளவுகளைக் காட்டுகின்றன.

http://inioru.com/attack-on-tna-in-france/

இப்ப இவர் என்ன சொல்ல வருகிறார் .......?

  • கருத்துக்கள உறவுகள்

பினாமி,தேசிய வியாபாரிகள்,பிழைப்புவாதிகள்......எங்கயோ கேட்ட குரலாயிருக்கே

  • கருத்துக்கள உறவுகள்

புலி இளைச்சால்.................................................................. :rolleyes:tw_angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்துக்களை மதிக்கும், ஜனநாயக முறையில் அரசியல் செய்யும் பண்பு இன்னமும் தமிழர்களிடம் வரவில்லை. வன்முறைக் கலாச்சாரத்தை விரைவில் விட்டுவிடமுடியாதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்துக்களை மதிக்கும், ஜனநாயக முறையில் அரசியல் செய்யும் பண்பு இன்னமும் தமிழர்களிடம் வரவில்லை. வன்முறைக் கலாச்சாரத்தை விரைவில் விட்டுவிடமுடியாதுதானே.

மாற்றுகருத்தாக 
கிருபன் பொம்பிளை என்று சொன்னால் நீங்கள் ஏற்றுகொள்வீர்களா ???


எவன் எவன் எதை சொல்கிறான் என்பதுதான் முக்கியம்.
மாற்று கருத்து என்பது மாயை. அதை வைத்து மாஜா ஜாலம்தான் காட்ட முடியும்.

கருத்துக்களுக்கு மாற்று கருத்து இருக்க முடியாது ...
பூமி உருண்டை என்றால் .....
முக்கோனோம் என்பதை மாற்று கருத்தாக ஏற்க முடியாது.
அது அறியாமை அல்லது விரண்டாவாதம் இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான் வைக்கிறதும் மாற்றுக் கருத்துதான்.. ஏன் உந்த சன நாய் அகம் பேசிறவை குண்டு போடினம்.. சரி தலிபான் கிடக்கட்டும்.. சதாம்.. சிரியாவில் அசாட்.. புட்டின்.. பேசுறதும் மாற்றுக் கருத்து தான். ஏன் உடன நேட்டோவை கட்டிக்கிட்டு குண்டு போட வெளிக்கிடினம்... அவை அவை தமக்கு தேவையான அளவுக்கு தான் மாற்றுக் கருத்தையும் அனுமதிப்பினம். யாழ் களம்.. இப்ப அதில தன்னிறைய அடையனுன்னு கிருபண்ணா சபதம் பூட்டிருக்கலாம். அதற்காக உலகம்.. மாற்றுக் கருத்தென்று.. தனக்கு பெரிதும்.. ஒவ்வாதது... பெருக.. நிலைக்க இடமளிக்கிறதா இல்லை. இதுதான் யதார்த்தம். tw_angry:tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மாற்றுகருத்தாக 
கிருபன் பொம்பிளை என்று சொன்னால் நீங்கள் ஏற்றுகொள்வீர்களா ???


எவன் எவன் எதை சொல்கிறான் என்பதுதான் முக்கியம்.
மாற்று கருத்து என்பது மாயை. அதை வைத்து மாஜா ஜாலம்தான் காட்ட முடியும்.

கருத்துக்களுக்கு மாற்று கருத்து இருக்க முடியாது ...
பூமி உருண்டை என்றால் .....
முக்கோனோம் என்பதை மாற்று கருத்தாக ஏற்க முடியாது.
அது அறியாமை அல்லது விரண்டாவாதம் இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

மருதங்கேணி,

ஒன்றில் வழுக்கைத் தேங்காய், இல்லாட்டி போர்த்தேங்காய் என்று நினைக்கக்கூடாது!<_<

வன்முறை அரசியலில் புலிகள் மட்டுமா ஈடுபட்டார்கள்? ரெலோ ஜனா தங்களை கருணா, பிள்ளையான் குழுக்களிடமிருந்து பாதுகாக்க வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றார். அதனால் அவரைத் தாக்க வந்தவர்களில் பிள்ளையான் ஆதரளவாளர்களும் இருந்திருக்கின்றனர். வன்முறையில் மட்டும் பிள்ளையான் கும்பலும் புலி ஆதரளவாளர்களும் மாற்றுக் கருத்துக்களை மறந்துவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாரும் சரியானவர்கள் என்று கூற வரவில்லை.
இவர்களின் பித்தலாட்டம் பற்றியதுதான் எனது கருத்து.

அவர்களுக்கு வசதி இருந்தபோது அவர்கள் அடித்தார்கள் 
இப்போ இவர்கள் கொடுக்கிறார்கள்.

இடையில் ஊரை ஏமாற்ற மாற்றுகருத்து மாஜா ஜாலம் பேசுகிறார்கள்.

மாற்றுகருத்தாக ஜேசுவின் கருத்தை ஏற்றுக்கொண்டு ....
இவர்கள் மறு கன்னத்தையும் காட்டலாமே ?? 

தங்களின் சுயநல வாழ்விற்கு எது சரிவருமோ அந்த வேஷம் போட்டுகொல்கிறார்கள்.
ஊரை எய்த்ததை தவிர இவர்கள் யாரும் ஏதும் வெட்டி புடுங்கினதும் இல்லை புடுங்க போவதும் இல்லை.

வார்த்தை ஜாலங்களை  நீங்கள் பெருந்தன்மையோடு ஏற்று கொள்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.