Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

கேள்வி ....!!!
உனக்கு எப்படி ....?
இப்படியெல்லாம் ....
கவிதை வருகுது ..?
காதலிக்கிறாயா ..? 
காதலிக்க போகிறாயா ...?
காதல் தோல்வியா ..?

பதில் ....!!!
கவிதை வருகிறது காதலால் ....
காதலுக்காக காத்திருந்தேன் ...
கவிதை தொடர்ந்து வருகிறது ....
புரியவில்லையா ...?
என்னானாலும் புரியமுடியவில்லை....
அவளின் காதலை .....!!! 

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒருமுறை சிரி உயிரே ....
உன் கன்னகுழியின்....
அழகை ரசிப்பதற்கு ....!!!

என்னை ஒருமுறை திட்டு .....
உதடுகளின் அசைவை ....
அழகை ரசிப்பதற்கு ....!!!

என்னை ஒருமுறை .....
முறைத்து பார் உயிரே ....
உன் கண்கள் கதகளி....
ஆடுவதை ரசிப்பத்தற்கு ....!!!

ஒரு முறை கோபித்துவிடு.....
உன் மௌனத்தின் வரிகளை ...
கவிதையாக வடிப்பதற்கு ....!!!

  • தொடங்கியவர்

கண்களால் ஜாடைசெய்தால் ...
காதலில் தவிர்க்க விட்டாள் ....
காதலின் வலியென்ன ...?
கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!!

அவளின் இதயம் என்னிடத்தில் 
அவள் எப்படி உயிர் வாழ்கிறாளோ ....?
நான் வாழ்கிறேனே  ......
என் இதயம் அவளிடம் ...!!!

நான்  கல்லறையில் இருக்கிறேன்
அவளின் கல்லறையை எதிர்க்கிறேன்..
வேண்டாம் வேண்டாம் அவள் வேண்டாம் ...
அவளாவது வாழட்டும்  காதலோடு ....
எனக்கும் சேர்த்து சில காலம் ..............!

  • கருத்துக்கள உறவுகள்

நட்பியல் கவிதைகள் நன்றாய் உள்ளன. பாராட்டுக்கள் இனியவன்

  • தொடங்கியவர்

நட்பியல் கவிதைகள் நன்றாய் உள்ளன. பாராட்டுக்கள் இனியவன்

நன்றி   நன்றி  

  • தொடங்கியவர்
இதயத்தால் 
கவிதை எழுதினால் .....
இன்பக்கவிதை ....!!!

கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
சோகக்கவிதை ...!!!

ஒரு இதயம் துடிக்க ....
மறு இதயம் புரியாமல் இருக்க ....
கவிதை எழுதினால் ....
ஒருதலை காதல்கவிதை ....!!!

கண்ணால் பேசி ....
சைகையால் உரையாடி ....
கவிதை எழுதினால் .....
காதல் அரும்புக்கவிதை ....!!!

இதயங்களால் பிரியாமல் ....
உறவுகளால் பிரிக்கப்பட்டால் ....
கல்லறை காதல் கவிதை ....!!!

காதல் செய் ....!!!
இன்றே செய் ....!!!
நன்றே செய் ....!!!
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நீங்க எழுதியிருக்கிறது என்ன கவிதை?:)

 

  • தொடங்கியவர்

உறுதியில்லாத வாழ்வில்.....
உறுதியான நேர்மையுடனும்.....
உறுதியான நியாயத்துடனும் ...
உண்மையாக வாழ்வாயாக ....
என் தாயின்வேண்டுகோள் ...!!!

ஆம் என்றேன்...!!!

உண்மை பேசினேன்....
உளருகிறான் என்றார்கள்....
நியாயம் சொன்னேன்...
நீ என்ன நீதிபதியா....?
வினா எழுப்பினார்கள்.....
உண்மை கூற ஓயாமல்...
உழைத்தேன் -ஆனால்....
கேட்பார் யாரும் இல்லை.....
வெடித்தது -இதயம்...
வேதனைப்பட்டேன்...
வெட்கப்பட்டேன்......!!!

ஓயவில்லை நான் ...!!!

சமூக சேவை செய்தேன்....
இந்த பூச்சாண்டி வேலையெல்லாம்.....
எங்களுக்கு காட்டாதே என்றார்கள்.....
சமூக சீர்திருத்தத்துக்காக....
சிந்தனை பேச்சு பேசினேன்....
மாரி தவளைபோல்...
கத்துகிறான் என்றார்கள்.....!!!

ஓரமாக இருந்து யோசித்தேன்...???

சமூக சிந்தனையை ...
சுய சிந்தனையாக்கினேன்..
நியாயம் இல்லாமல்...
காலில் விழுந்தேன்....
பிழைக்க தெரிந்தவன்....
என்று பாராட்டினார்கள்......!!!

பொருள் வந்தது...
பதவி வந்தது....
தலைவா,,,!!! தலைவா ,,,!!!
கூச்சல் இட......
ஒரு கூட்டமும்....
சேர்ந்தது........!!!

எல்லாம் வந்தது...
அன்னையின்...
ஆசைபோனது......!
மனிதத்தை விற்றுவிட்டு...
மனிதனாக நடிக்கிறேன்.....
என்றோ ஒருநாள்...
மனிதம் பிறக்கும்....
நானும் அம்மாவின்....
மகனாவேன் ...!!!

அதுவரை தாயே என்னை
மன்னித்துவிடு
உன்னைவிட இந்த உலகில்
மன்னிக்கும் நீதிமன்றம் இல்லை.....!!! 

  • தொடங்கியவர்

நேற்று 
வரை உனக்கு
தோல்வி .....!!!


இன்று
உனக்கு மட்டும் தான்
வெற்றி ....!!!

எழுந்துவா...
கல் எறிவிழும்...
சொல் எறிவிழும்...
உடல் காயப்படும்...
உள்ளம் காயப்படும்...
இறுதியில் ....
நீதான்
தலைவன் ...!!!

+
தன்னம்பிக்கை கவிதை 

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

மனம்....
ஆட்டிப்படைக்கும் ..
மனம்....
யாருக்கும் அடங்காது ..
ஒருவனால் .....
மட்டும் அடக்கி வைக்கமுடியும் ....
மனம் 
என்ற மந்திரிதான் அவன் ...!!!

மனதை 
நீயே மனத்தால் அடக்கு....!!!
மனமே கோயில்,,,,
மனமே குப்பை.....
மனமே தாமரை.....
மனமே சேறு......
எண்ணமே இத்தனை ....
வேஷங்கள் போடுகின்றன ....!!!
+
ஆன்மீக கவிதை 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்
முயற்சிக்க கூடியதை
முயற்சிக்காமல் இராதே....!!!

முற்சிக்க தேவையில்லாததை
முயற்சிக்காதே....!!!

முயற்சி என்றால் என்ன என்பதை
முயற்சிக்காமலே ..
மூச்சிசை விட்டவர் தான்
அதிகம் ...!!!
 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

வெற்றி 
மகிழவைக்கும் -பூவல்ல 
அடுத்தநிமிடம் -வாடும் பூ ...!!!

தொடர்ந்து விழித்திரு... 
தோல்வி தயாராக.... 
இருக்கிறது ....
வெற்றியை பறிக்க ...!!!

வெற்றி 
வாழ்க்கைதரும் ....
தோல்வி வாழ்க்கையை 
உணர்த்தும் ....!!!

தன்னம்பிக்கை கவிதை

Edited by கவிப்புயல் இனியவன்

  • மோகன் changed the title to ஆன்மீக கவிhttp://www.yarl.com/forum3/topic/163746-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/தை
  • தொடங்கியவர்

எல்லோருக்கும் 
மனம் தான்
பெரும் குப்பை தொட்டி...!!!

நிரப்புவதும்...
தடுப்பதும்.....
உன் கையில் அல்ல......
உன் எண்ணத்தில்....!!!

சிந்தனை குப்பையை
தவிர்க்கும்
பிறர் வஞ்சனை 
குப்பையை நிரம்பும்....!!!

வெள்ளியடிக்கப்பட்ட
சுவர் ஒருநாள் வெளுறும்.....
வெள்ளை அடிக்கப்பட்ட
மனசு என்றும் மிளுரும் ....!!!

  • தொடங்கியவர்

காதல் யாருக்கும்....
வலியை கொடுக்காமல்....
விட்டதில்லை -என்றாலும்....
காதலிக்காமல் யாரும்...
இருந்ததுமில்லை.....!!!

காதலால் கெட்டவர்கள்
யாருமில்லை.....
காதலர்களால்.....
கெட்டவர்கள் உண்டு....!!!

ஜாக்கிறதை ...
 I  LOVE YOU 
உலகிலேயே
மிகவும் எச்சரிக்கையான
வார்த்தை ...!!!

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வலி சுகமானது... அதுதான் ஓரிடத்தில் கருகினாலும் மீன்டும்  இன்னோர் இடத்தில் துளிர் விடுகின்றது...!

காதலர்கள் வெல்லும்போது, தோல்வியின் வலியைச் சந்திக்காத மனம் தோற்று விடுகின்றது...!!

  • தொடங்கியவர்

உண்மையை ஊமையாக்காதே ..
உறவுகளை அதிகம் நம்பாதே ..
உணர்வுகள் இறந்தாலும்....
உயிர் இத்துப்போனாலும்....
உறுதியிழந்து வாழாதே....
உறுதி கொள் -நிச்சயம்....
உறுதியான வெற்றிஉண்டென்று....
உன் முகத்தை திருத்து....
உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி....
உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்....
உதட்டில் உண்மைபேசு....
உலகம் இப்போ விலை உலகம்....
உலகமயத்தில் இது சாதாரணமப்பா ..
உன்னை நீ மதிப்பீடு செய்....
உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!

  • தொடங்கியவர்

ஏழையாக இருக்கிறேன்
ஏமாளியாக இருக்கவில்லை....!!!

ஏழ்மையில் வாழ்கிறேன்
எடுப்பார் கைப்பிள்ளையக இருக்கமாடேன்....!!!

மன்னிக்க மனம் அதிகமில்லை
மனம் புண்படுமாறு நடப்பதில்லை....!!!

கற்காதவர் மத்தியில் பேசமாட்டேன்
கற்றவர் மத்தியில் கவனமாக பேசுவேன்...!!!

அறிவாளியாக என்னை கருத மாட்டேன்
அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!!

எல்லாம் முடியும் என்னால் என்று கூறமாட்டேன்
எதுவும் முடியாது என்று இருக்கமாட்டேன்....!!!

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு...
என்பதை நிச்சயம் நம்புகிறேன் ..
முடிவு இல்லையென்றால் ......
முடிவில்லையென்று கலங்கமாட்டேன் ..!!!

+
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

நான் இறந்தால் ...
புதைப்பார்களா ...?
எரிப்பார்களா ...?
என்றோ அவளின் ....
வார்த்தையால் ...
சாம்பலாகி விட்டேன் ...!!!

அழகுக்கு
அழகுதருவது
காதல் உண்மைதான் ...
உன்னோடு இருக்கும் ..
காலத்தில் உணர்ந்தேன் ...!!!

தட்டிய தீக்குச்சி
விரைவாக
அணைந்துவிடும்
அந்த மன வேதனைதான்
எனக்கும் ...!!!

கே இனியவன் - கஸல் 

  • தொடங்கியவர்

என் வழி தனிவழி 

என் வழி தனிவழி ....
வார்த்தையால் பேசி பேசி ....
வாழ்கையை இழப்பவர்கள் ....
தன் வழி எதுவென அறியாதவர் ....!!!

தன் வழியை அறியாதவனும் ....
தன்னால் செய்ய முடியாதவற்றை ....
வார்த்தை ஜாலத்தால் செய்பவனும் ....
தானும் கேட்டு தன் செயலையும்.....
கெடுப்பான் ....!!!

+
குறள் 836
+
பேதைமை
+
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் 
பேதை வினைமேற் கொளின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 56

  • தொடங்கியவர்

சொத்தை சேர்க்காதே

அறிவுடன் செல்லவத்தை.....
சேர்ப்பதே சிறந்த அறிவு ....
அறிவில்லாமல் பேதையுடன் ....
சொத்தை சேர்க்காதே ....
நீ உண்ணாமல் ஊர் உண்ணும் ...!!!

அறிவில்லாமல் சொத்தை ....
நீ சேர்ப்பாய்யாயின்....
கைக்கு எட்டியது வாய்க்கு ....
எட்டாததுபோல் .....
உன் உறவுகள் பசியுடன் ...
வாடி வதங்குவர் -உன் ...
செல்வம் வேடிக்கை ....
பார்த்து சிரிக்கும் ....!!!

+
குறள் 837
+
பேதைமை
+
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 57

  • தொடங்கியவர்

ஒன்றுமே அறியாதவன் ...!!!

பேதை என்பவன் ...?
எது நல்லது எது கெட்டது...
ஒன்றுமே அறியாதவன் ...!!!

பேதையிடம் ....
கிடைக்கும் செல்வம் ...
பித்து பிடித்தவனிடம் ....
கிடைத்த போதைப்பொருள் ...
போன்றது ......!!!

+
குறள் 838
+
பேதைமை
+
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் 
கையொன்று உடைமை பெறின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 58

  • தொடங்கியவர்

நட்பின் பிரிவு துன்பம் இல்லை 

நட்பின் பிரிவு ஒன்றும் .....
துன்பம் இல்லை ....
அறிவற்றவருடன் நட்பு .....
கொண்டால் பிரிவு ....
துன்பமில்லையே....!!!

அறிவற்ற பேதையுடன் ....
பழகிய நட்பு இனிமை ...
அதை பிரிந்து செல்வதும் ....
இனிமையே ....!!!

+
குறள் 839
+
பேதைமை
+
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் 
பீழை தருவதொன் றில்

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 59

செந்தாமரை மத்தியில் ....

அறிஞர்கள் கூடிய ....
மகாசபையில் ....
அறிவற்றவன் ஒருவன் ....
அமர்ந்திருந்தால் .....
செந்தாமரை மத்தியில் ....
நாற்றம் எடுக்கும் பிணம் ...
போன்றது ....!!!

மஞ்சு மெத்தையில் ....
கழுவாத காலுடன் ....
மிதிப்பதுபோல் ....
பேதை ஒருவன் ....
அறிஞர்கள் மத்தியில் ....
இருப்பதாகும் .....!!!

+
குறள் 840
+
பேதைமை
+
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் 
குழாஅத்துப் பேதை புகல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 60

  • தொடங்கியவர்

காதலை மறக்காமல் ....
இருப்பதற்கு காதலில் .....
தோற்க வேண்டும் ....!!!

@

காதலில் இரண்டு துன்பம் ...
காதலை சொல்ல முன் ....
காதலை சொன்ன பின் .....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

  • தொடங்கியவர்

நினைத்-தேன் கேட்டதை தந்தாய் ...!
திகைத்-தேன் முத்தம் தந்தாய் .......!

சிரித்-தேன் காதலை தந்தாய்.......!
மகிழ்ந்-தேன் உன்னை தந்தாய் ....!

சுவைத்-தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்-தேன் உயிரை தந்தாய் ..........!

துடித்-தேன் நினைவுகள் தந்தாய் ......!
அழைத்-தேன் பிரிவை தந்தாய் ....!

  • தொடங்கியவர்
அழைத்தேன் நின்றாய் பார்த்தேன்
பார்த்தேன் என்னை மறந்தேன்

மறந்தேன் உன்னிடம் விழுந்தேன்
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன்

மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன்
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன்

சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன்
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.