Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழில்

Featured Replies

இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழில்

 
இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழில்:

3ஆம் இணைப்பு - முதலமைச்சரை தனிப்பட்ட வகையில் சந்தித்தார் முன்னாள் இந்திய அமைச்சர் பாசிதம்பரம் - குளோபல் தமிழ் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

 

GTMN

 

 


இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா சிதம்பரம் யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பயணம் குறித்து இலங்கைக்கான இந்தியாவின் யாழ் துணைத்தூதரகம் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை... இந்த பயணம் அவரது தனிப்பட்ட பயணம் எனவும், பயணத்திற்கான காரணம்  இன்னும் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரனை  தனிப்பட்ட வகையில்  முன்னாள் இந்திய அமைச்சர் பாசிதம்பரம் சந்தித்துள்ளார். பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றனது. னினும் இது குறித்து முதலமைச்சரின் அலுவலகம் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை... என்பதோ இந்தியாவின் துணைத் தூதரகமும் முன்னாள் அமைச்சர் பா. சிதம்பரத்தின் பயனம் குறித்து மௌனம் காக்கிறது...

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125125/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

"இந்திய அமைதிப்படையின் யாழ் வைத்தியசாலையின்மீது நடத்தப்பட்ட கொலைவெறியாட்டத்தின் நினைவுதினத்தை நினைவுறுத்துவதற்காக

பா சிதம்பரம் அவர்கள் யாழ் வருகை"

எனத் தலைப்பை மாற்றவும்.

  • தொடங்கியவர்
விக்னேஸ்வரன் பழுத்த அறிவாளி: யாழில் சிதம்பரம் புகழாரம்
விக்னேஸ்வரன் பழுத்த அறிவாளி: யாழில் சிதம்பரம் புகழாரம்

தமிழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த அவர் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது அமைதி ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

உண்மையில் வடமாகாண முதலமைச்சர் பழுத்த அறிவுடையவர். அவரிடம் நிதானமும், ஆற்றலும் சிறப்பாகவே இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/1628

"வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க இந்தியா விரும்பியது"

151021153012_chidambaram_vigneswaran_512

இந்திய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும்விட அதிக அளவு அதிகாரங்களை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவதற்கேற்ற வகையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் பிரேரிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னாள் இந்திய நிதியமைச்சரும், காங்கிஸ் கட்சியின் முக்கியஸ்தருமாகிய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்திருந்த சிதம்பரம், புதனன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போதே வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குவது பற்றிய விடயத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறைந்த அளவிலான அதிகாரங்களே வழங்கப்பட்டதாகவும், வழங்கப்பட்ட அதிகாரங்களிலும் பல அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது என்றும் முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் தான் தெரிவித்ததாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட பிரேரரணையின் பின்னர், இலங்கையில் மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும இடையில் நல்லுறவு ஏற்படும் என்றும், அதன் ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்கும் வழி பிறக்கும் என்றும் சிதம்பரம் நம்பிக்கை வெளியிட்டதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151021_chidambaramvigneswaran

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு யாராவது 'செருப்பு மாலை' அணிந்தால்.. மிகவும் மகிழ்ச்சியடைவேன்!

இவரது கரங்கள்.. ஈழத்தமிழரது இரத்தக் கறைகள் படிந்தவை!:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.