Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலித்தேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது'

Featured Replies

'புலித்தேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது'

 
 
வெளிநாட்டு பிரமுகர் சந்திப்பில் புலித்தேவன் மற்றும் நடேசன் (ஆவணப்படம்)
bbc வெளிநாட்டு பிரமுகர் சந்திப்பில் புலித்தேவன் மற்றும் நடேசன் (ஆவணப்படம்)

விடுதலைப்புலிகளின் புலித்தேவனை காப்பாற்று தேவை மஹிந்த அரசாங்கத்துக்கு இருந்ததாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார்.

 

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேறிய தீர்மானம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்தபோதே பிரதமர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, வடக்கில் மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து, மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற வைக்க உதவிய காரணத்திற்காக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளுடன் நடத்திய கொடுக்கல்வாங்கல்கள் பிழைத்துபோன காரணத்தினால் தான், இராணுவத்தின் மீது குற்றம்சாட்டுக்கள் சுமத்தப்படும் நிலை ஏற்பட்டதாகவும் இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் தொடர்பில் ஆற்றிய உரையில் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

புலித்தேவன் குழுவினர் சரணடைவதை களத்தில் உள்ள தளபதிகள் எடுக்காமல், கொழும்பில் இருந்து உத்தரவுகள் போனதால்தான் அங்கு குழப்பம் ஏற்பட்டதாக கூறிய பிரதமர் ரணில், அந்த வெள்ளைக்கொடி விவகாரம் மாத்திரம் நடக்காமல் இருந்திருந்தால் இலங்கை இராணுவத்துக்கு எதிராக எவரும் பெரிதாக குற்றங்களை கூறியிருக்க முடியாது என்ற வகையிலும் பேசியுள்ளார்.

அத்துடன், விடுதலைப்புலிகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்த ராஜபக்ஷ அரசாங்கம் அவர்களுடன் போருக்கு போக நேர்ந்தது தற்செயலாக நடந்த ஒரு விடயம் என்றும் அவர் கூறினார்.

மாவிலாறு விவகாரத்தில் பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்கள் எடுத்திருந்த நடவடிக்கைகளே அரசாங்கம் யுத்தத்திற்கு போகக் காரணம் என்றும் ரணில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நடந்த தவறுகளை திருத்திக்கொண்டு சிறந்த எதிர்காலத்தை நோக்கிசெல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இன்று நடந்த விவாதத்தில் மகிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில், விக்ரமசிங்க தனது கேள்விகளுக்கு அவரிடம் பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று பேசவில்லை.

வெள்ளைக்கொடி ஏந்திவந்த விடுதலைப்புலித் தலைவர்கள் தொடர்பில் தங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று அப்போது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/bbc-tamil/புலித்தேவனை-காப்பாற்றும்-தேவை-மஹிந்த-அரசுக்கு-இருந்தது/article7797338.ece

இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் போரை முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது மஹிந்த அரசு!

இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் போரை முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது மஹிந்த அரசு!

இந்தியாவின் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு முன்னாள் அரசால் (மஹிந்த அரசு) படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்ற தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் வெளியிட்டார். 2005 ஆகஸ்டில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், முன்னாள் அரசால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்துக்குமிடையில் தொடர்பிருக்கிறது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

இந்த விடயம் உண்மை ஆணைக்குழு ஊடாக வெளிவந்துவிடும் என அஞ்சுகின்றீர்களா என்றும் அவர் வினா எழுப்பினார். அத்துடன், இறுதிக்கட்டப் போரின்போது நடந்த முக்கிய பல விடயங்களையும் அவர் சபையில் அம்பலப்படுத்தினார். புலித்தேவன் ஏன் அரச படையினரிடம் சரணடைய வந்தார் என்பதற்கான காரணத்தையும் அவர் விவரித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

"2005 ஆம் ஆண்டு ஆகஸட் மாதம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் புலிகள் அமைப்பால் படுகொலைசெய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டு நான்கு மாதங்கள் செல்வதற்கு முன்னர் புலிகள் அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு பணம் வழங்கித்தான் 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுத்து, தேர்தலில் வெற்றிபெற்றனர். எனவே, அந்த மரணத்துக்கும் (முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் மரணம்) இதற்குமிடையில் (பணம்கொடுக்கப்பட்ட விவகாரம்) சம்பந்தம் இருக்கிறதா? இல்லை என்று சொல்லிவிடமுடியாது. அவரைக் கொலைசெய்தது (கதிர்காமரை) புலிகள்தான் என்று எமக்குத் தெரியும். இந்தச் சம்பவம் நடைபெற்ற பின்னர், அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. அதில் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். நாம் பங்கேற்கவில்லை. மேற்படி விடயங்கள் உண்மை ஆணைக்குழு ஊடாக வெளிவந்துவிடும் என அஞ்சுகின்றீர்களா? உங்களுக்கு பயம் இல்லையென்றால் அந்த விசாரணையையும் நடத்திவிடுவோம்.

அதேவேளை, மாவிலாறுவை ஏன் பிடித்தனர் என்று தெரியுமா? மாவிலாறுவை கைப்பற்றிய பின்னர் தப்பிவிடலாம் என முன்னாள் அரசு நினைத்தது. ஆனால், அரசுக்குள்ளேயே பிரச்சினைகள் உருவாகின. ஹெல உறுமய உறுப்பினர்கள், படையினர் ஆகியோர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர். ரத்தின தேரர் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இதனால்தான் யுத்தம் ஆரம்பமானது. மாறாக திட்டமிட்டவாறு திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. இதுதான் உண்மையும்கூட. கிளிநொச்சி விழுந்ததன் பின்னர் பெப்ரவரி மாதத்தில் முல்லைத்தீவு நோக்கிச் செல்வதற்கு புலிகள் முடிவெடுத்தனர். 3 இலட்சம்பேரை பணயக்கைதிகளாக கொண்டு சென்றனர். இவர்கள் இவ்வாறு செய்யாதிருந்திருந்தால் பிரச்சினை உக்கிரமடைந்திருக்காது. இந்நிலையில் இந்நதியாவிலும் பொதுத்தேர்தல் ஆரம்பமானது

. இதில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றிபெறும் என்றும், ஜெயலலிதாவுடன் இணைந்து ஆட்சியமைப்பார்கள் என்றும் அஞ்சினார்கள் (மஹிந்த அரசு). இதனால், தேர்தலுக்கு முன்னர் போரை முடித்துவிடுமாறு இங்கிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கமையவே இராணுவத்தினர் செயற்பட்டனர். வெள்ளைக்கொடி விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். புலிகள் வெள்ளைக்கொடியுடன் வரும்போது நம்பமுடியாதுதான். இவர்களை ஏற்பதா அல்லது இவர்கள் பொய்யாக செயற்படுகின்றனரா என்பது தொடர்பில் அங்கிருக்கும் கட்டளை அதிகாரிகளே தீர்மானிக்கவேண்டும்.

இந்த நடைமுறை மாற்றப்பட்டு எதற்காக கொழும்பிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது? 2005 நவம்பரில் டீல்போட்ட(பேரம்பேசிய) புலித்தேவனைக் காப்பற்ற வேண்டிய தேவை இருந்தது. எதுவாக இருந்தாலும் நாம் உண்மையைக் கதைப்போம். ஜனாதிபதித் தேர்தலின்போது பேரம் பேசியது புலித்தேவன் என்பது தெரியும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் புரியும். அப்பாவி மக்களைப் பாதுகாக்குமாறு ஐ.நா.சபை வலியுறுத்தியது. ஆனாலும், போர் தொடுக்கப்பட்டது. எனினும், இந்த அணுகுமுறை புலித்தேவனுக்குப் பொருந்தவில்லை. புலித்தேவனைக் காப்பாற்றப்போய்தான் வெள்ளைக்கொடி சர்ச்சையில் சிக்கினீர்கள். டீல் இல்லாவிட்டால் புலித்தேவன் அரச பக்கம் வந்திருக்கமாட்டார்தானே?" - என்றார்.

 http://www.malarum.com/article/tam/2015/10/23/12289/இந்தியப்-பொதுத்-தேர்தலுக்கு-முன்னர்-போரை-முடிக்குமாறு-உத்தரவிட்டிருந்தது-மஹிந்த-அரசு-.html#sthash.apghSpPu.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொறுப்பில் உள்ளவர்கள் அந்த வழக்கு குறித்துப் பேசக்கூடாது. ஆனால் உள்நாட்டு விசாரணை என்றுவிட்டு இந்தப் பிரதமரே வழக்கை கொண்டுபோகுது.. இலங்கையில் நீதி சிறப்பா இருக்கு.. :o

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்பிடி தூங்கிக் கொண்டிருந்தது இப்ப இப்பிடிப் பேசுது? எல்லாம் மகிந்தாவின் போதாத காலம். மக்களிட்டை இருந்து விரட்டாமல் விட மாட்டார் போல கிடக்கு. அண்டைக்கு பேசி இருந்தால் இண்டைக்கு எமலோகத்தில் இருந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் தற்செயலாக நடந்தது .......
அதற்கான ஏற்பாடு மாத்திரம் உலக திருவிழா மாதிரி எல்லோரும் ஒன்றுகூடி நடந்தது. 

 உண்மையை போட்டு உடைக்கிறார் ....
செவிட்டு தமிழனுக்கு யார் எதை சொன்னாலும் விளங்காது.

நான்தான் அந்த யுத்த ஏற்பாடுகளை சிறப்பாக செய்துகொண்டு இருந்தேன்.
மகிந்த வந்து புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் மட்டுமே செய்தார்.
யுத்தம் தற்செயலாக வந்துவிட்டது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.