Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்' - விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டில் இருப்பவர்கள் ஒருவரும் கஸ்டப்படாமல் முன்னுக்கு வந்திருக்க முடியாது. அப்படி வந்திருந்தால் அவர்கள் ஏதோ சட்ட விரோதமாக செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். இங்கு கொஞ்சப் பேர் படிக்க வந்தவர்கள் மட்டும் கஸ்டத்தை அனுபவிப்பது போலவும்,மற்றவர்கள் நல்ல வசதியாக இருக்கின்ற மாதிரியும் எழுதியுள்ளார்கள்.

சீவி புலத்தில் இருக்கின்ற படித்தவர்களை ஊரில் வந்து குடியேற சொல்லி கேட்கவில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் நேரத்தில் ஊருக்கு கொஞ்ச காலம்[3 வருடம்] வந்து நின்று சேவையாற்ற சொல்லித் தான் கேட்டவர். இங்கு ஒருத்தரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் ஊரில் போய் சேவையாற்ற முடியாமைக்கு உங்களுக்கு தனிப்பட்ட காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் விடுத்து சிங்களவன்,எங்கட பூமி அன்னியனின் ஆக்கிரமிப்பில் இருக்குது என்று சும்மா தேவையில்லாமல் சப்பு கட்டு கதைக்கின்ற கதைகளை விடுங்கோ!...எழுதும் போது கொஞ்சமாவது மனட்சாட்சியோடு எழுதுங்கள்...நீங்க்ள் தான் கொஞ்ச காலத்திற்கு முந்தி உங்கட சிங்கள் புரபசரை புகழ்ந்து யாழில் எழுதினீர்கள்.உங்களிட்ட நல்ல திறமையும்,அறிவும் இருந்தும் அவர்களோட தயவு இல்லாமல் புலத்திற்கு படிக்க வந்திருக்க் முடியாது இருந்திருக்கும் என நீங்கள் தான் எழுதுதினீர்கள். அவர்களுக்கு எல்லாம் நீங்கள் காட்டும் நன்றிக் கடன் என்ன? அவர்கள் என்ன சிங்களம்,தமிழ் பார்த்தா உங்களுக்கு படிப்பித்தார்கள்?...அவர்கள் 100 பேரை உருவாக்கினால் உங்களைப் போன்றவர்கள் 1000 பேரை உருவாக்கிவீர்கள் என்று தானே படிப்பித்தார்கள்.

உங்களைப் போன்றவர்கள் இங்கே இருந்து கொண்டு ஊரில் இளைஞர்கள் கூட்டம் தடம் புரண்டு போய் விட்டார்கள்,போதைவஸ்து பாவனை அதிகரித்து விட்டது என்று கூப்பாடு போடுவதில் என்ன பிரயோசனம்?...படித்தவர் கூட்டம் கொஞ்சம்,கொஞ்சமாக நாட்டை விட்டு வெளியேறினாலும் புலிகள் இருக்கும் மட்டும் கொஞ்சம் பயம் இருந்தது. புலிகள் இல்லை என்று அங்குள்ள மக்களை தவிர்க்க விட்டு விடுவீர்களா? இல்லை என்ட படியால் தானே உங்களால் முடிந்த அளவு காசு அனுப்புகிறீர்கள்.

ஊரில் போய் கொஞ்சக் காலம் நின்று சேவை செய்வதற்கு பரந்த மனசு தான் தேவை.அதை அப்படியே ஒத்துக் கொண்டு இருந்தால் திரி இப்படியே நீண்டு இருக்காது. உங்களுக்கு எல்லாம் சேவை மனப்பான்மையும், உங்கட கல்வியறிவையும் தாயக மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ட எண்ணம் இல்லை. அப்படி இருந்திருந்தால் சுனாமியின் போதே ஊரில் போய் சேவை செய்திருப்பீர்கள்.

இங்கு தான் நீங்கள் என குறிப்பிட்டது தனியே நெடுக்கரை மட்டுமல்ல,நெடுக்கரோடு ஒத்த கருத்தை கொண்டு இருந்த அனைவருக்கும் தான்.

ஒரு பாதை மாறி போகும் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற நிறைய புத்திசாலிகள்,அறிவுஜீவிகளின் உதவி தேவை...அங்குள்ள மக்களுக்கு இப்போது தேவை நிறைய உள,நல,மருத்துவ ஆலோசனைகள் வழ்ங்கக் கூடியோர்,மருத்துவர்கள்,கல்வி கற்பிக்க கூடிய ஆசான் போன்ற இன்னும் பலர்....இவர்கள் எல்லாம் ஊரில் போய் தவணை முறையில் சேவை ஆற்றினாலே வளம் மிக்க சமுதாயத்தை உருவாக்கலாம்.படித்தவர்கள் எல்லாம் ஊரை விட்டு வெளியேறுவதால் தானே சீனாக்காரனும்,இந்தியக்காரனும் அங்கே போகின்றான்...படித்தவர்கள் எல்லாம் ஊரிலே இருந்திருந்தால் கண்ட,கண்ட கழிசடை எல்லாம் எங்கட ஊரில் போய் இருக்க முடியுமா?


பி;கு; நெடுக்கு நான் ஊரிலேயே படிக்கவில்லைத் தான். அதற்காக இப்ப கவலைப்ப்டுகிறேன்.அப்படி படித்திருந்தால் இங்கே வந்து கஸ்டப்பட்டு கொண்டு இருக்க மாட்டேன். அங்கேயே நிம்மதியாய் ஒரு உத்தியோகத்தில் இருந்திருப்பேன்.



 

ராதியக்கா உங்கள் ஆவேசம் கொஞ்சம் உணர்வு பூர்வமானது.
நீண்ட கால அடிப்படையில் அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை.

என்ன செய்கிறோம் ?
எங்கு செய்கிறோம் ?
இரண்டு கேள்விகளையும் முன்னிறுத்திதான் ஒரு ஆக்கபூர்வமான ஒன்றை ஒருவர் செய்வார்.

உலகில் எந்த மூலையிலும் அரசியல் தலைமை என்பதும் அரசியல் அணுகுமுறை என்பதும் நாட்டின் 
போக்கை நிர்ணயிக்கும் மூல பலமாக இருக்கிறது.
அதில் ஒரு மாற்றம் வராத வரை விழலுக்கு யார்தான் நீர் பாய்ச்சுவான் ?
அதுதான் தற்போது  நடக்கிறது இங்கிருந்து காசை அங்கு கொட்டுகிறார்கள் இளைஞர்கள் அங்கு காவாலி ஆகிறார்கள்.
ஒரு உயரிய சிந்தனை என்பது ஈடற நாம் சிந்தித்து பிரயோசனம் இல்லை. அவர்களும் அதற்கு இசைவாக வேண்டும்.

இப்போ சீ வி அவர்கள் அங்கு முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் இப்படி ஒரு தலைப்பையே பேச முடிகிறது 
சம்மந்தன் சுமந்திரன் கூட்டு எப்போது சீ வி யை தூக்கி எறியும் என்பதை கூட யாராலும் உறுதியாக கூற முடிவதில்லை.
இங்கு யாழ் களத்தில் கூட பல திரி இருக்கிறது...
யாழில் சும்மா கலகலப்பு காட்டும் ஒரு கூட்டம் போனவாரம் சீ வி யை தூக்கி எரிய வேண்டும் என்றும் அடுத்தவாரம் அவர்தான் சிறப்பான 
ஒருவர் என்றும் தடம் புரளும். 

மில்லியன் டொலர் அளவில் கொண்டு  சென்று முதலீடு செய்ய பல தமிழர்கள் எப்போதும் காத்திருக்கிறார்கள் 
அவர்கள் கஸ்ட்ரபட்டுதான் அதை சம்மாதித்தார்கள் அது நாட்டுக்கு உதவும் என்றால் அவர்கள் செய்வார்கள். குப்பையில் கொண்டு சென்று 
எறிவது என்றால் யாராவது செய்வார்களா?  கோயில் கட்டுறம் .... தேர் கட்டுறம் என்று படம் காட்டும் நடிகர்களின் திரைக்கதைக்கு 
உகந்த நிலைமைதான் அங்கு இப்போ இருப்பது. அதனால் அது சீரும் சிறப்புமாக நடை பெறுகிறது.

இங்கிருப்பவர்கள் அரசியல் தளத்தில் மாற்றம் வேண்டி நின்றால் .......?
புலம்பெயர்ந்தவர்கள் வாயை மூடி கொண்டு இருங்கள் எமக்கு எல்லாம் தெரியும் என்பார்கள். இங்கும் சிலர் குயோ மாயோ என்று 
கத்துவார்கள். பணம் உதவி முன்னேற்றம் ... என்றால் மட்டும் புலம்பெயர்ந்தவர்கள் ஈழத்தை சேர்ந்தவர்கள் ஆகி விடுவார்கள்?

சரியான அரசியல் தலைமை இருப்பின் குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் பல மாற்றங்களை காண முடியும். 
சிங்கள அரசு அப்படி ஒரு நிலை தோன்றுவதை கடைசிவரை விரும்பாது. அவர்கள் விரும்பினாலும் ..... தற்போதைய தமிழ் 
அரசியல் தலமை அதற்கு ஒருபோதும் இடம் அழிக்க மாட்டாது. சிங்களத்தின் ஊதுகுழலாக இருக்க கிடைக்கும் ஊதியத்தை 
சொவ்காரியமாக பெற்று வாழும் வாழ்வில் சுகம் கண்டு விட்டது. இன்று நேற்றல்ல இது கடந்த 25 வருட நிலைமை. 

அரசியல் தலைமை சரியாக இருப்பின் 
நீங்களே இங்கிருந்து கஸ்ட்ரபட தேவை இல்லை. நிம்மதியாக அங்கு சென்று குறைந்த முதலீட்டுடன் நிம்மதியாக வாழலாம்.
வேறு யாருக்கும் நீங்கள் உழைக்க தேவை இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கீ.. நீங்கள் நிகழ்காலம் பற்றி சரியாக அறிந்திருக்கவில்லை.  சிங்களப் பேராசிரியரிடம் ஆசிரியர்- மாணவன் என்ற மரியாதை நட்பு உண்டே தவிர.. சிங்களப் பேராசிரியர் படிப்பித்தார்.. படித்தேன் என்பதற்காக சிங்கள அரசின் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் ஒரு மனித இனம் சீரழிவதை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் பக்குவமற்ற நிலையில் நாங்களில்லை. அவர்களும் இது விடயத்தில்.. கண்டும் காணாததும் போலவே நடந்து கொள்கிறார்கள். கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால்.. குறிப்பிட்ட சிங்களப் பேராசிரியர்கள் மீது பெரிய மரியாதை இருக்கு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாதப் பயங்கரவாதம்.. மனித அழிவுகளில் சீவிப்பு நடத்த இவர்களின் பேசாமடந்தை தனமும் ஒரு காரணமாகும்.

2004 சுனாமியின் போது இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகம் சார்ப்பாகவும் சேன்சுபரி ஊடாகவும் பணமாகச் சேகரிப்பதில் இருந்து இன்று வரை தாயக மக்களுக்கு உதவக் கூடியதை செய்து கொண்டு தான் இருக்கிறோம். (இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்..1998 இல் கொழும்பில் கல்வி கற்ற தமிழ் மாணவர்கள் சார்பில் உலர் உணவுப் பொருட்களை சேகரித்து.. அப்போது அமைச்சில் இருந்த மகேஸ்வரனின் உதவியில் பார ஊர்திகள் பெற்று அனுமதி பெற்று வன்னிக்கு அனுப்பி வந்தவர்களாகவும் நாங்கள் இருந்துள்ளோம்.)

பல இளையவர்கள் தாயகத்தில் பணியாற்றவும் தயாராக உள்ள நிலையில்.. புலம்பெயர் அமைப்புக்கள் மீதான சிங்கள அரசின் தடை.. இளையோர் அமைப்புக்கள் மீதான தடைகள்.. இவை எல்லாம் இலங்கைத் தீவை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கும்....சிங்கள பேரினவாத அரசியல் மயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள். இவற்றை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எமது மக்களுக்கு சேவைகள்.. சென்றடைய வேண்டும் என்பதில் குறியாக இருந்தாலும்.. சிங்களப் பேரினாத அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு அதனை செய்ய முடியாது.

விக்கி ஐயா அதைச் செய்யவதை தவிர்க்க முடியாது. ஏனெனில் அவர் சிங்கள அரசின் அரசியல் யாப்புக்குள்.. சிங்கள சட்டவாக்கத்தை ஏற்றுக் கொண்டு தமிழர்களுக்கு மட்டுப்படுத்திய சேவையை வழங்கி அதன் மூலம் தமிழர்களை முற்றாக அபிவிருத்தி அடையச் செய்யலாம் என்று நம்புகிறார் அல்லது நம்ப வைக்க முயல்கிறார். ஆனால் நாங்கள் அதனை நம்ப எமக்கு எந்த ஆதாரத்தையும் சிங்கள அரசியல் எமக்கு விட்டு வைக்கவில்லை.

இங்கு முல்லைத்தீவில் தென்பகுதி டாக்டர்கள் என்று கதை இணைக்கப்பட்டுள்ளது. தெற்கில் பல தமிழ் வைத்தியர்கள்.. தமிழ் பகுதிகளில் சேவை செய்ய விருப்பமின்றி அங்கு சேவை செய்கிறார்கள். அவர்களைக் கொண்டு தமிழ் பகுதிகளுக்குரிய நியமனங்களை நிரப்பினால்.. சிங்கள வைத்தியர்களின் தேவை அவசியமில்லை. ஆனால் சிங்கள அரசின் சிறீலங்கா சிங்களவருக்கானது என்ற மறைமுக தொனிப்பொருளிலான அரசியல்.. சமூக.. பொருண்மிய மயப்படுத்திய நடவடிக்கைகள்.. அதனை சாத்தியமாக்க விடாது.

இந்த நிலையில்.. வெளிநாட்டில் வாழும்.. படித்த தமிழர்களின் சேவையை சிங்கள பேரினவாத அரசின்.. இராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் தமிழ் பகுதிகளுக்கு பூரணமாக வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியே. அதற்கும் பல முட்டுக்கட்டைகள் வரும். அப்போது சிவி ஐயா சுகமாகக் கையை விரிப்பார்.. எங்களுக்குள்ள அதிகாரம் இவ்வளவு தான் என்று. அப்போது இவர்களை நம்பி ஊருக்கு சேவைக்குப் போவோர் அவமானப்படும் அவதிப்படும் நிலை தான் தோன்றும். புலிகள் காலத்தில் சேவைக்கு வந்து சேவை செய்திட்டு கொழும்பின் ஊடாக திரும்ப முடியாமல் அவதிப்பட்ட பலரை நாம் அறிவோம். புலிகளால் அவர்கள் தொந்தரவை சந்திக்கவில்லை. தம்மை மீறி புலிகளின் பகுதிக்குச் சென்று சேவை செய்வதா என்ற சிங்கள அரசின் எக்காளத்தனம் தான் பிரச்சனைக்கு முக்கியகாரணமானது. இவை கடந்து வந்த காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள். 

அதனால் தான் எங்கள் கருத்தில் தெளிவாக குறிப்பிடுகிறோம்... எமக்கான சுதந்திர.. சுயாதீன செயற்பாட்டிற்கு.. எமது மக்களின் அரசியல் உரிமைகள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும். சிங்கள மற்றும் பிராந்திய அரசுகளின் இராணுவங்களின் தலையீடுகள்.. கட்டுப்பாடுகள் எமது சுயாதீன செயற்பாடுகளை பாதிக்கக் கூடாது. இப்படியான ஒரு சூழலில் தான் அறிவை அங்கு மூலதனமாக்கிச் செயற்பட முடியும். மேற்கு நாடுகள் அப்படியான ஒரு சூழலை உருவாக்கித்தான் மூளைசாலிகளை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் சிறீலங்காவில் அந்த முன்னேற்ற கர சிந்தனை இல்லை. அங்கு பேரினவாத.. பிராந்திய வல்லாதிக்க சிந்தனைகளும் அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட அரசியல் இராணுவ முஸ்தீபுகளுமே தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலை.. கல்வி கற்றோரின் சுயாதீன.. சுதந்திர செயற்பாட்டிற்கு எவ்வளவு அனுகூலமாக அமையும் அல்லது அதை அனுமதிக்கும் என்று நீங்களே சிந்தியுங்கள். அப்படி சிந்திக்க முடியல்லைன்னா.. அது உங்கள் தவறே அன்றி வேறில்லை. tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களிலும் மூண்டு பேர் மக்களின்ர வரிப்பணத்தில படிக்காமல் ஆத்தை அப்பன்ர சொந்தக் காசில ரஷ்யாவில படிச்சவையளாம்....

அப்ப மக்களின் வரிப்பணத்தில் படிக்காமல் வந்து போட்டு சேவை செய்யினம்
என்ன தைரியம் இவர்களுக்கு ....? இவர்களை அடித்து துரத்த வேண்டும்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.