Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் ஆனந்த சங்கரி அவர்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் ஆனந்த சங்கரி அவர்களும்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு கிடைத்த எதிர்க்­கட்சி தலைவர் பதவி என்­பது பிர­தமர் கொடுத்த பிச்­சை­யாகும். அது உரி­மை ­யாகக் கிடைக்­க­ வில்லை எனத் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் வீ.ஆனந்­த­சங்­கரி அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்.

இதுவும் மற்றொரு வளமையான ஆனந்த சங்கரி அவர்களது அர்த்தமில்லாத அறிக்கைதான்.

ரணிலுக்கு அதிகம் பிடிக்காத நபர் சம்பந்தன் ஐயாதான் என்பது உலகறிந்த ரகசியம். ரணில் ஆட விரும்புகிற ஆட்டம் வேறுமவர் ரஜபக்ச சார்பு எதிர்கட்ச்சி அமைந்தால் ஜனாதிபதி சிறிசேனாவுக்கு செக் வைப்பது சாத்தியமாகும் என கருதி இருக்க வேணும்.. இத்தகைய ஒரு சூழல் ரணிலை முடிசூடா மன்னனாக்கிவிடும். ஆனால் சிங்களவர் வரலாற்றின் ஈடு இணையற்ற ராஜதந்திரியான ஜனதிபதி மைதிரிபால சிறிசேனாவுக்கு அவ்வளவு இலகுவில் செக் வைக்க முடியுமா?

 

ராஜபக்சவுக்கும் ரணிலுக்கும் எதிரான ஒருவர் எதிர்க்கட்ச்சித் தலைவராக வரவேண்டும் அவர் யாராக இருந்தாலும் பறுவாயில்லை என்பதுதான் ஜனாதிபதியின் நிலைபாடு.  

 ரணிலுக்கும் ராஜபக்சவுக்கும் செக் வைப்பதுதான் அவரது ராஜதந்திரத்தின் அடிப்படை. , ராஜபக்சவை அரவனைக்கும் பாவனையில் ஆரம்பித்து பின்னர் தனிமைப் படுத்தி செல்லாக்காசாக்கி வரலாற்றின்குப்பைத் தொட்டியில் வீசுகிறதென்ற ஜனாதிபதியின் நிலைபாடுதான் எதிர் கட்ச்சித் தலைவருக்கான வெற்றிடத்தை உருவாக்கியது. அவசியமானால் ராஜபக்சவை போர்குற்றத்தில் மாட்டவும் ஜனாதிபதி காய் நகர்த்துகிறார். இந்த நிலையில் ராஜபக்சவுக்கு சார்பான அல்லது எதிர்காலத்தில் சார்பாகிவிடக்கூடிய யாரும் எதிர்கட்ச்சித் தலைவராகிவிடக் கூடாது என்பதில் ஜனாதிகபதி கவனமாக இருந்தார்.

 

எதிர்க் கட்சித் தலைவராகும் வாய்ப்புள்ளவர்களுக்குள் ராஜபக்சவையும் ரணிலையும் பிடிக்காத ஒருவரென்றால் அது சம்பந்தன் ஐயாதான். சம்பந்தன் எதிர்கட்ச்சித் தலைவராவ்து ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும் ரணில் ஆதரவாளர்களுக்கும் செக்காக அமையும். மேலும் அது சர்வதேச ரீதியாகவும் வரவேற்கப் படும். இது மேலதிக அனுகூலமென்று ஜனாதிபதி நினைத்திருக்க வேணும், நிலமை கட்டுக்கடங்காமல் போனால் ஒரு எதிக் கட்ச்சியை உருவாக்கி  சம்பந்தரை பதவியில் இருந்து தூக்கி எறிவதும் சாத்தியம்தான்.  தேர்தலின் பின்னர் இவற்றை எல்லாம் மனசில் வைத்தே தலை சிறந்த சிங்கள அரசியல் சதுரங்க ஆட்டக்காரரான ஜனாதிபதி காய்களை நகர்த்தியுள்ளார். ஜனாதிபதியின்  காய் நகர்த்தல்களால் ஏற்பட்ட வெற்றிடம்தான் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்ச்சி தலைவராகும் வாய்ப்பை உருவாக்கியது.

இதனை முன்னுணர்ந்து நான் எதிர்கட்ச்சி தலைவர் சம்பந்தருக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள் என எழுதியபோது சிலர் என்னைக் கிண்டல் செய்தனர்.

பாவம் திரு ஆனந்த சங்கரி அவர்கள். வளமைபோல தமிழர் விடுதலைக் கூட்டணி கடிதத் தலைப்பில் கிறுக்கி விழையாடுக்கிறார். அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதனை முன்னுணர்ந்து நான் எதிர்கட்ச்சி தலைவர் சம்பந்தருக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள் என எழுதியபோது சிலர் என்னைக் கிண்டல் செய்தனர்

ஜயா புலவரே
பலர் இந்த பதவியால் தமிழருக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்றே கூறினர் ...அதுதானே நடக்கிறது ....
எதிர்க்கட்சி தலைவரால் என்ன நடந்து விட்டது .....? வழக்கு பதியாமல் ....விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையே  விடுவிக்க முடியாமல் நொண்டுகின்றனர் .....போராட்டம் என்றாலே நெளிந்த .....சுமந்திரன் இப்போது கைதிகளை விடுதலை செய்யாவிடின்  போராட்டம் என்று கதைக்கிறார் ......தமிழ் மக்கள் போராட போனதன் விந்தையினை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை 
பாராளுமன்றத்தில் பந்தாவாக உட்காந்திருக்கவும் , இலங்கைக்கு  சர்வதேச மட்டத்தில் ஆதரவு தேடவும் ..சில பல நாடுகளுக்கு போய்வரவும் ,முக்கியமாக இந்தியாவுக்கு ஜால்ரா அடிக்கவுமே உந்த பதவி லாயக்கு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னய விவாதம் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரான ராஜதந்திர சூழலும் எதிர்க் கட்சி தலமையும் பற்றியதாகும்.  தேர்ந்த சதுரரான ஜனாதிபதி சிறிசேன மகிந்தவோடும் ரணிலோடும் ஆடும் சதுரங்கத்தில் சம்பந்தர் எதிர்கட்ச்சி தலைவராகும் வாய்ப்பு உருவாகியுள்ளதையே அன்று சுட்டிக் காட்டினேன். இது எதிர்கட்சி தலமையின் பயன்பாடு பற்றிய  விவாதமல்ல. 

கடந்த 70 வருட சுதந்திர போராட்டத்தில் குறித்த குறிப்பிட்ட வெற்றி கிடைக்கா வில்லை என்றாலும் எதிர்கொண்ட இன அழிப்பு முயற்சிகளையெல்லாம் தாண்டி இன்னும் போராட்டம் தொடர்கிறதென்றால் அதற்க்கு எழு தசப்தங்களாக நமது ஆட்ட நாயகர்கள் வகித்த பாத்திரங்கள் தான் காரணம். இது இன்னும் இலக்கை அடையாத தொடர் ஓட்டம்.

எதிர்கட்சி தலமை தொடர்பான என் முன்னுணர்தலும் வாழ்த்தும் எமது போராட்டத்தின் இராசதந்திர அரசியல் சார்ந்தது.ஏமது போராட்டத்த்ல் தொடற்ச்சியான வெற்றிடம் இது.  

தயவு செய்து அது இதுவென விவாதத்துக்கு வெளியில் போகவேண்டாம்.

எனது விவாதங்களை சிரமமெடுத்து யாழ் கிட்டங்கியின் உள்ளே நுழைந்து தேடி வாசிக்கிற கருத்தெழுதுகிற அனைவருக்கும் நன்றிகள்.

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா யாரோ யாருடனோ ஆடும் சதுரங்க ஆட்டத்தை வாய் பிளந்து பார்த்துகொண்டிருந்த சம்பந்தருக்கு குருட்டாம்போக்கில் கிடைத்தது பதவியே அன்றி வாய்ப்பல்ல ....சம்மந்தருக்கு கிடைத்த இந்த பதவி ஊடகங்களில்  அதிக முக்கியத்துவம் பெற்றது ஏன் என்பதும் உங்களுக்கு தெரியாததல்ல......மொத்தத்தில் உங்கள் கூற்றுப்படி  எதிர்க்கட்சி தலைவர் என்ற இந்த பதவியை ஒட்டு மொத்த தமிழர்களிடம் சேர்க்காமல்(தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது என்று இனத்தின் பெயரால் கூறாமல் ) சம்மந்தர் என்ற பழுத்த அரசியல் வாதிக்கு கிடைத்த தனிப்பட்ட அரசியல் கௌரவம் என்று நோக்குவது சிறந்தது. அத்துடன் எனது கேள்வி நீங்கள் குறிப்பிட்ட உங்கள் முன்னுணர்தல் என்பது சம்பந்தர் என்ற தனிப்பட்ட அரசியல்வாதிக்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் என்ற  பதவி தொடர்பானதா......?  இல்லை ஈழத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய கட்சியின் தலைவருக்கு கிடைத்திருக்கும்  எதிர்க்கட்சி தலைவர் என்ற  வாய்ப்பு தொடர்பானதா....?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் பிரதி நிதிகளை நிர்ணயிப்பது இதுபோன்ற விவாத அரங்குகளல்ல.

ஈழத்துக்கு வெளியே பாதுகாப்பாக ஒரு கிளாஸ் விஸ்கியோடு அமர்ந்து விவாதம் வளர்க்கும் எம்போன்றோர் போராட்டத்தின் அறிவு ராசந்திரம் தகவல் தொழிநுட்ப்பம் பக்கபலமாதல் போன்ற பல்வேறு துறைகளில் பெரும் பங்களிக்கலாம். 1996ல் படுவான்கரையில்  யாழ்வேந்தனைச் சந்தித்தபோது ''போராட்டத்தில் ஏன் போர்க்களத்தில்கூட போரின்  டிஜிரலைஸ் பண்ணக்குடிய அம்சங்களில் ஆற்றல் உள்ள யாரும் எந்தநாட்டில் இருந்தும் பங்குபற்றலாம்" என்பது பற்றி விவாதித்தோம். ஓயாத அலைகள் 3ல் அது வெற்றிகரமாகப் பரிசீலிக்கபட்டது.  எனவே தொடரும் போராட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ர்களது பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் எங்கள் எல்லை எங்களுக்குத் தெரிய வேண்டும்.

போராட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழரின் பங்களிப்பு முக்கியம் அது அவசியமானதும்கூட.  ஆனால் ஈழத் தமிழரின் பிரதி நிதிகளை இனக்கொலைக்குத் தப்பி தினம் தினம் செத்து பிழைக்கும் களத்து மக்கள்தான் தீர்மானிக்க முடியும்.

அவர்கள் அடுத்த தீர்மானம் எடுக்கும்வரைக்கும் சம்பந்தர் தான் அவர்களது பிரதிநிதி. அதை நிராகரிக்க நாம் யார்? அந்த அதிகார்த்தை நமக்கு யார் தந்தந்தது? 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா 
ஒரு கிளாஸ் விஸ்கியை  ஈழத்திற்கு வெளியே இருந்து விண்ணானம் போய்வருவோர்களிடமே விட்டுவிடுகிறேன் ....நான் ஈழத்திலிருந்து எழுதுபவன் ...ஏற்கனவே எமது பிரதிநிதிகளின் ராசதந்திரத்தை பார்த்து களைத்து போய் விட்டேன்  ......ஆகவே தான் இந்த பதவியின் மகிமையையும் ,பிரதிநிதிகளின் கையாலாகத்தனத்தையும் வெளிச்சம் போட்டு காட்டவேண்டியிருக்கிறது ....விவாதத்தில் புலத்திலிருந்து  நான்  மோதுவது இங்குள்ள நிலைமையை தெளிவாக எடுத்துக்காட்டவே .....?  ...நாங்கள் எங்கள்   கொலரினை தூக்கி விட்டுக்கொள்ளலாம் சம்பந்தர் எதிர் கட்சி தலைவர் என்று 
உண்மை நிலவரம் ..... வெறுமை மட்டுமே ....தேர்வு செய்த மக்களே அதையும் சுமக்கட்டும் 

Edited by அக்னியஷ்த்ரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நீங்கள் ஈழத்தில் இருந்து எழுதுவது தெரியாது. மக்கள் தெரிவுசெய்த பிரதிநிதித்துவத்தை நிராகரிக்க உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனாலும் எதிரி சம்பந்தபடும் விடயங்களில் நீங்கள் பிரதிநிதியை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஐயா 
எதிரியிடம் எங்கள் பிரதிநிதி எங்களை அல்லவா விட்டுக்கொடுக்கிறார் ......?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எதிர்கட்ச்சி தலைமை இருந்தும் கூடமைப்பால் போதிய தேசிய சர்வதேசிய அழுத்தங்கள் உருவாக்கபடவில்லை. தீவிரவாதிகள் அடுத்த தேர்தல்வரை காணாமல் போய்விட்டார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களும் இதுதொடர்பாக போதிய குரல் கொடுக்கவில்லை. 

ஆனால் இன்றைய நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்தான் ஆரம்பப்புள்ளி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.