Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலையுதிர்காலமானேன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதமான வசந்த காலம்
தன் வனப்பை இழந்து
நொடிந்து போகிறது
தெளிவான அந்த நீல வானமும்
கருமையை வேண்டி பூசிக்கொள்கிறது
குதூகலிப்புடன் பூத்து குலுங்கிய
மலர்களும் தன் சோபையை
பறிகொடுத்து வாடி வதங்குகின்றன
பச்சை வர்ண இலைகள்
மண்ணில் விழுந்து ஒப்பாரி வைக்கிறது
அதெப்படி முடிகிறது ?
வசந்தகாலத்தில் இலையுதிர்காலம்
எப்படி நுழைந்தது ?
நேற்றைய சந்தோஷ வானில்
இன்று மின்னலுடன் கூடிய பேரிடி !
நட்சத்திர விளக்குகள் அத்தனையும்
அணைந்த நிலையில்
வானமும் இருண்ட நிலையில் !
என் சந்தோஷ இறகுகள்
விரிக்க திரணியற்று வலுயிழந்து போன நிலையில்
உணர்வலைகளும் தோற்றுப் போய்விட்டன இன்று
நட்பாக வந்த நல்ல இதயம்
நஞ்சு ஊறிப்போய் தன் சுயநல போர்வையில்
நினைவுகளுக்கு சுகமான ராகம்
மீட்ட நினைத்த வேளையில்
நரம்பருந்த வீணையின் முகாரி ராகம்
உன்னிலை உனக்கு அன்றே தெரிந்திருந்தால்
நட்புக்கரம் எதற்கு ?
வீசிக் கொண்டிருந்த மென்காற்றில்
புயல் வந்து மோதியிருக்காது
நீ தந்த வலியினால் தானே
இன்று என் இலைகளை உதிர்த்து
பட்டமரமாய் காயப்பட்டு கண்ணீருடன்
காட்சியளிக்கிறேன்
ஆனாலும் பரவாயில்லை
உறைந்த பனிக்காலத்தின் பின்
மீண்டும் தளிர்கள் தளிர்க்கலாம்
சோபையிழந்த வாழ்வில் மீண்டும்
இளவேனிற்காலம் வரமாய் வரலாம்
காத்திருப்பில் காலம் கனியட்டும் .
-
மீரா குகன்
- ஜேர்மனி

 

  • கருத்துக்கள உறவுகள்

உறைந்த பனிக்காலத்தின் பின்
மீண்டும் தளிர்கள் தளிர்க்கலாம்
சோபையிழந்த வாழ்வில் மீண்டும்
இளவேனிற்காலம் வரமாய் வரலாம்
காத்திருப்பில் காலம் கனியட்டும் .

 

பிடித்திருக்கு...! :)

கவிதை அருமையிலும் அருமை!! வாழ்த்துக்கள் நண்பி!! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

இலையுதிா் மறைந்து வசந்தம் வரும். நம்பிக்கைதான் வாழ்க்கை. நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் மீராகுகுகன்

  • கருத்துக்கள உறவுகள்

அழகு புதுக்கவிதையோடு
புது உறவு மீரா குகன் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் கவிதை படைப்பு.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறைந்த பனிக்காலத்தின் பின்
மீண்டும் தளிர்கள் தளிர்க்கலாம்
சோபையிழந்த வாழ்வில் மீண்டும்
இளவேனிற்காலம் வரமாய் வரலாம்
காத்திருப்பில் காலம் கனியட்டும் .

 

பிடித்திருக்கு...! :)

மிகுந்த மகிழ்ச்சி , நன்றிகள்

அழகு புதுக்கவிதையோடு
புது உறவு மீரா குகன் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் கவிதை படைப்பு.   

நன்றிகள் பல

இலையுதிா் மறைந்து வசந்தம் வரும். நம்பிக்கைதான் வாழ்க்கை. நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் மீராகுகுகன்

மிக மகிழ்ச்சி , நன்றி

கவிதை அருமையிலும் அருமை!! வாழ்த்துக்கள் நண்பி!! :)

 

சந்தோஷம்டா , நன்றிகள் பல நண்பி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகு புதுக்கவிதையோடு
புது உறவு மீரா குகன் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் கவிதை படைப்பு.   

மிகுந்த மகிழ்ச்சி சசிவர்ணன் , நன்றிகள்

அழகு புதுக்கவிதையோடு
புது உறவு மீரா குகன் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் கவிதை படைப்பு.   

மிகுந்த மகிழ்ச்சி சசிவர்ணன் , நன்றிகள்

 

இதமான வசந்த காலம்
தன் வனப்பை இழந்து
நொடிந்து போகிறது
தெளிவான அந்த நீல வானமும்
கருமையை வேண்டி பூசிக்கொள்கிறது
குதூகலிப்புடன் பூத்து குலுங்கிய
மலர்களும் தன் சோபையை
பறிகொடுத்து வாடி வதங்குகின்றன
பச்சை வர்ண இலைகள்
மண்ணில் விழுந்து ஒப்பாரி வைக்கிறது
அதெப்படி முடிகிறது ?
 

வசந்தகாலத்தில் இலையுதிர்காலம்
எப்படி நுழைந்தது ?

 

நேற்றைய சந்தோஷ வானில்
இன்று மின்னலுடன் கூடிய பேரிடி !
நட்சத்திர விளக்குகள் அத்தனையும்
அணைந்த நிலையில்
வானமும் இருண்ட நிலையில் !
என் சந்தோஷ இறகுகள்
விரிக்க திரணியற்று வலுயிழந்து போன நிலையில்
உணர்வலைகளும் தோற்றுப் போய்விட்டன இன்று


நட்பாக வந்த நல்ல இதயம்
நஞ்சு ஊறிப்போய் தன் சுயநல போர்வையில்
நினைவுகளுக்கு சுகமான ராகம்
மீட்ட நினைத்த வேளையில்
நரம்பருந்த வீணையின் முகாரி ராகம்
உன்னிலை உனக்கு அன்றே தெரிந்திருந்தால்
நட்புக்கரம் எதற்கு ?

வீசிக் கொண்டிருந்த மென்காற்றில்
புயல் வந்து மோதியிருக்காது

 

நீ தந்த வலியினால் தானே
இன்று என் இலைகளை உதிர்த்து
பட்டமரமாய் காயப்பட்டு கண்ணீருடன்
காட்சியளிக்கிறேன்
ஆனாலும் பரவாயில்லை
உறைந்த பனிக்காலத்தின் பின்
மீண்டும் தளிர்கள் தளிர்க்கலாம்
சோபையிழந்த வாழ்வில் மீண்டும்
இளவேனிற்காலம் வரமாய் வரலாம்
காத்திருப்பில் காலம் கனியட்டும்
.
-
மீரா குகன்
- ஜேர்மனி

 

 

நல்ல கவிதை, பிரித்து வாசிக்கையில் சோகம் என் மனதையும்தான் ரணமாக்குகிறது, இழந்தது இலையுதிர் காலம் மட்டுமில்லை என்றும் புரிகின்றது - தொடருங்கள்.

சோபையிழந்த வாழ்வில் மீண்டும் 
இளவேனிற்காலம் வரமாய் வரலாம் 
காத்திருப்பில் காலம் கனியட்டும்
 .

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.11.2015, 17:53:40, ஜீவன் சிவா said:

நல்ல கவிதை, பிரித்து வாசிக்கையில் சோகம் என் மனதையும்தான் ரணமாக்குகிறது, இழந்தது இலையுதிர் காலம் மட்டுமில்லை என்றும் புரிகின்றது - தொடருங்கள்.

சோபையிழந்த வாழ்வில் மீண்டும் 
இளவேனிற்காலம் வரமாய் வரலாம் 
காத்திருப்பில் காலம் கனியட்டும்
 .

மிகவும் நன்றி ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.