Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

31 தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை

Featured Replies

31 தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன்    குறித்த நபர்கள் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/articles/2015/11/11/31-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88

31 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையில் விடுதலை கிடைத்தது

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்வதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிறைச்சாலை தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

31 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை எனக்கூறி எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை அவர்களை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

31 அரசியல் கைதிகளுக்கு பிணை

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய கைதிகளுக்கு பிணை வழங்கியுள்ளார்.
தலா இரண்டு சரீரப் பிணையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டள்ளது.


ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நிரந்தர வசிப்பிட முகவரி மாற்றம் செய்யப்பட்டால் அது குறித்து நீதிமன்றில் அறிவிக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.


வெளிநாடு செல்ல இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா அல்லது கொழும்பு பயங்கரவாத தடைப் பிாிவில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இன்று காலை குறித்த தமிழ் அரசியல் கைதிகள் 32 பேர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் எவரும் நீதிமன்றில் பிரசன்னமாகாத காரணத்தினால் இவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை. அதனைத் தொடாந்து விசேட அனுமதியை பெற்றுக் கொண்டு மீளவும் இந்தக் கைதிகள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.


இந்த சந்தர்ப்பத்தில் பிணை வழங்குவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதிளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.


இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியாத காரணத்தினால் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சந்தேக நபர்கள் தொடர்பிலான வழக்கு ஜனவரி மாதம் 27ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.


இதேவேளை, பிணை வழங்கப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்களாக 26 பேர் தமிழ் அரசியல் கைதிகள் எனவும், ஏனைய 5 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் எனவும் சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125812/language/ta-IN/article.aspx

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமன்னிப்பு அடிப்படையிலான விடுதலையை கோரி நிற்கும் தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேரை மட்டும் பிணை அடிப்படையில் விடுவிப்பது என்பது மிகவும் கபடத்தனமான ஒரு செயற்பாடு. இது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிங்கள அரசு மற்றும் அதற்கு அடிவருடுபவர்கள் மீது அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எழும் அழுத்தங்களைக் குறைக்க இப்படியான தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும்.. பின் வேதாளம் முருக்கமரத்தில் மீண்டும் தொற்றிக்கொள்வதும் சொறீலங்காவின் நீண்டு நீடிக்கும் ஒரு அரசியல் பண்பாடாகிவிட்டது. 

இது குறித்து தமிழ் மக்களும்.. அரசியல்வாதிகளும்.. அரசியல் கைதிகளும் எச்சரிக்கையோடு செயற்படுவது நல்லம். பிணை விடுதலை என்பதன் பின்னால் உள்ள தார்ப்பரியங்களை விளங்கிக் கொள்ளாமல்.. இதனை அரசியல் சுயலாபத்திற்கு சுமந்திரன் சம்பந்தன் போன்றவர்கள் பயன்படுத்த முனையலாம். அதை இட்டும் எச்சரிக்கை அவசியம். 

மிகவும் நல்ல விடயம். பிணையில் வெளிவந்தவர்கள் எத்தனையோ வருடங்களின் பின்னர் வெளி உலகிற்கு வருகிறார்கள். இவர்களில் பலர் தமது இளமைக் காலத்தை சிறையில் தொலைத்தவர்கள். இவர்கள் சமுதாயத்தினுள் சங்கமமாகி, தமது எதிர்காலத்தை சுபீட்சத்துடன் வாழ வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
பிணை விதிகளை பூர்த்தி செய்ய முடியாததால் மீண்டும் கைதிகள் சிறை
 
பிணை விதிகளை பூர்த்தி செய்ய முடியாததால் மீண்டும்  கைதிகள் சிறை
பிணை வழங்கப்பட்ட கைதிகளால், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட பிணை விதிகளை உடனே பூர்த்தி செய்ய முடியாததால் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 
எனவே குறித்த பிணை விதிகளை பூர்த்தி செய்த பின் பிணையில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
(தலா ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணையிலும், குறித்த பிணையாளர்கள்,  சந்தேகநபர்களின் ஊரைச் சேர்ந்தவர்கள் என கிராம சேவகர் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
 
மேலும், சந்தேகநபர்களின் கடவுச்சீட்டுகளை தடைசெய்வதாக அறிவித்த நீதவான், இரு வாரங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் அல்லது கொழும்பிலுள்ள தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவில் சமூகமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
 
தாங்கள் தமது முகவரியை மாற்றுவதாயின், அது குறித்து தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவிற்கு அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலையில்..!

பிணையில் விடுதலை செய்யப்பட்ட 31 அரசியல் தமிழ் கைதிகளை பிணையில் எடுப்பதற்கு எவரும் முன் வராதமையால் மீண்டும் அவர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

http://www.virakesari.lk/

என்னப்பா நடக்குது

நேற்று 31பேர் விடுதலை என்றாங்கள்.
இன்று காலை பிணை இல்லையெண்டாங்கள்.
இன்று மாலை பிணையில் விடுதலை எண்டாங்கள்.
இப்ப இரவு 10 மணிக்கு பிணை எடுக்க ஆளில்லை,
உள்ளேதான் என்கிறாங்கள்.

ஒன்னுமே புரியல்ல இந்த உலகத்திலே.

இவர்களை சரீரப்பிணையில் எடுக்க இரத்த உறவுகள் வேண்டும். மற்றவர்கள் தேவையில்லாமல் தலையிடமாட்டார்கள். அப்புறம் 10 லட்சத்திற்கு இவர்கள் எங்கே போவார்கள்? விட்ட மாதிரி விட்டு, உள்ளேயே மறுபடியும் வைத்தாச்சு - விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா சுந்தரமானவர். ஆள் அவுஸி விட்டு வந்திட்டோ. கொழும்பில நிண்டால் பிழை.. பிணையெடு என்றிடுவாங்கள்.. என்று தான் கங்காரு தேசம் போய் கலாட்டா பண்ணினவரோ..?! இவரை விட ஈபிடிபி மகேஸ்வரி பறுவாயில்லைப் போலக் கிடக்கு. :rolleyes::rolleyes:

தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்படிப்படையில் விடப்பட்டால் அன்றி இதுதான் சிங்களத்தின் தமிழர்கள் மீதான மனிதநேயம்..! அந்தக் காலம் தொடக்கம்.. இன்று வரை இதுதான் தொடர்கதை. இருந்தும் இன்னும் மக்களை முட்டாளாக்க நினைக்கிறது சம் சும் கும்பல். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழுபறி அரசியல் செய்யிறதிலை எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் வலுகெட்டிக்காரர்.tw_angry:
வருத்தம் சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது.:mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டம் படிச்ச தமிழ் அரசியல் அறிவாளிகள் ஒருத்தரும் இந்த நேரத்தில் நாட்டில் இருக்க மாட்டர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
பிணை கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகள்! - அலைக்கழிக்கப்பட்ட அவலம் Top News
[Wednesday 2015-11-11 20:00]
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

  

முன்னதாக இன்று காலை தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப் பெறவில்லை என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்ததன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

31 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அனால் அவர்கள் நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை. இதனால் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இந்த நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது இவர்களை நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். அதன்படி 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் இவர்களை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலப்பிட்டிய உத்தரவிட்டார்.

சந்கேநபர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள தடைவிதித்ததுடன் அவர்களின் வதிவிட உறுதி சான்றிதழை நீதிமன்றில் சமர்பிக்கவும் நீதவான் உத்தரவிட்டார். எனினும் அவர்கள் வதிவிட உறுதி சான்றிதழை நீதிமன்றிற்கு வழங்காததன் காரணமாக பிணை வழங்கும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதனால் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். வதிவிட உறுதி சான்றிதழை நீதிமன்றிற்கு வழங்கிய பின்னர் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிணை வழங்கப்பட்ட பின்னரும், 31 அரசியல் கைதிகளும், மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

tamil-detainees-111115-seithy%20%281%29.

 

 

tamil-detainees-111115-seithy%20%282%29.

 

 

tamil-detainees-111115-seithy%20%283%29.

 

 

tamil-detainees-111115-seithy%20%284%29.

 

 

tamil-detainees-111115-seithy%20%285%29.

 

 

tamil-detainees-111115-seithy%20%286%29.

 

 

tamil-detainees-111115-seithy%20%287%29.

 

 

tamil-detainees-111115-seithy%20%288%29.

 

 

tamil-detainees-111115-seithy%20%289%29.

 

 

tamil-detainees-111115-seithy%20%2810%29
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.