Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனுக்கு ஒரு வேண்டுகோள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

URGENT OPEN LATTER TO SUMANTHIRAN MP

கிழக்கை இழந்து வடக்கு என்று தேய்ந்துபோகாமல் வடகிழக்கென என ஈழ தமிழரை மீண்டும் ஒருங்கிணைத்த சம்பந்தரின் ஆழுமையின் நிழலில் அரசியலுக்கு வந்த சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள். கட்சி கொடுக்கும் குறித்த பணிகளை பொறுப்பேற்று செய்வதில் நீங்கள் திறமையுள்ளவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வடகிழக்கு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைமைத் தீர்மானம் எடுக்கும் தகுதி இன்னும் உங்களுக்கு வாய்க்கவில்லை. நீண்ட கட்ச்சிப் பணிகளின் அனுபவத்தாலும் மக்களின் நம்பிக்கையை வெல்வதாலும் மட்டுமே நீங்கள் அத்தகைய தகமையைப் பெற முடியும். மேற்க்கு நாட்டு பிரமுகர் சிலரது அனுசரணையால் ரணிலுடைய நட்ப்பினால் குறுக்கு வழியில் அந்த தகமையை நீங்கள் பெறுவது ஒருபோதும் சாத்தியமில்லை.

வரலாற்றில் இலங்கை தமிழரின் விதியோடு விழையாடுவது யாருக்கும் அத்தனை இலகுவான ஒரு ஆட்டமாக இருந்ததில்லை. இனியும் இருக்காது என்றே தோன்றுகிறது. இதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேணும்.

ரணில் எல்லாம் வல்லவருமல்ல. மேலும் தனது வல்லமைக்குள் தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்புகிறவருமல்ல என்பதை சுமந்திரனிடம் யாராவது சொல்லுங்கள், அவர் ஜேஆர் வழிவந்த ஒரு கடைந்தெடுத்த மாக்கியவல்லியன் சிங்கள அரசியல்வாதி மட்டும்தான். அவரை நம்பி தமிழருக்கு நன்மை செய்துவிடலாம் என தாங்கள் கருதினால் முதலில் அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி அவரிடம் கேழுங்கள். அதை விடுத்து அரசியல் கைதிகளை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பும் சதிக்கு உடந்தையாக இருக்காதீர்கள். அரசியல் இலக்குகளை பணயம் வைத்து ஆடுகிற சூது இராச தந்திரமல்ல எனதையும் சுமந்திரனுக்கு யாராவது கூறுங்கள். சகுனியால் பாரதப் போரை வெல்ல முடியவில்லை என்பதையும் சொல்லுங்கள்

விக்னேஸ்வரனின் பிரச்சினை சுமந்திரனின் வீட்டுச் சிறையில் இருந்து அவர் தப்பி ஓடியதுதான். மாவை சேனாதிராசா போன்ற முன்னணித் தலைவர்கள் சம்பந்தரை சுஅந்திரனின் வீட்டுச் சிறையில் இருந்து விடுதலை செய்யவேணும். சுமந்திரனுக்கு கட்ச்சியை குத்தகைக்கு கொடுக்கும் முயற்ச்சியை தலைவர்கள் கைவிட்டு சுமந்திரனைக் உடனடியாகக் கட்ச்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

சுமந்திரன் தனித்து இயங்குவதை அனுமதிக்காமல் கூட்டமைப்பு குழுவினரில் ஒருவராக இயங்க செய்தல் காலத்தின் அவசியம்.

இந்த தருணத்தில் திறமையுள்ள யாரையும் இழக்க முடியாது. அதே சமயம் எஞ்சியுள்ள எங்கள் வரலாற்ரை எந்த கொம்பனிடமும் பறி கொடுத்து விடவும் முடியாது.

தமிழ் அரசியல் கைதிகளின் பொதுமன்னிப்பு மட்டுமே சமாதானத்துக்கும் நல்லிணக்க செயல்பாடுகளுக்குமான அரசின் அழைப்பாக அமைய முடியும். அத்தகைய அழைப்பு இன்னமும் அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கோ தமிழர் கூட்டமைபுக்கோ கிடைக்கவில்லை என்பதை சம்பந்தர் மாவை சுரேஸ் பிரேமசந்திரன் செல்வம் அடைக்கலநாதன் சிறீ நேசன் விக்னேஸ்வரன் சுமந்திரன் உட்பட வடகிழக்கு தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பிரகடனப் படுத்த வேண்டிய கடைசித் தருணம் இதுதான். எங்கள் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. எனவே இலங்கை அரசு இன்னும் சமாதானத்துக்கோ நல்லிணக்கத்துக்கோ முன்வரவில்லை என்பதை கூட்டமைப்பு உலகறிய சொல்ல வேண்டிய தருணமிது. - வ.ஐ,ச,ஜெயபாலன் கவிஞன்

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்... பொயட்.  Smiley
காலத்தின் தேவை கருதி, பிரயோசனமாக  எழுதப் பட்ட கட்டுரை.  Smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி

பாராட்டுக்கள் பொயட். எனது கருத்தும் இதுதான். சுமந்திரனின் தன்னிச்சையான எவரையும் மதிக்காத சுயநல அரசியலில் இருந்து தமிழ் கட்சிகள் விடுதலை பெற வேண்டும்.  தமிழ் அரசியலில் நீண்ட கால அனுபவத்தை கொண்டிருக்கும் சம்பந்தன் கூட தவறான முடிவுகளை எடுக்க  இந்த சுமந்திரனின் சகவாசமே காரணம்.

உங்களது பகிரங்கமான கோரிக்கைக்கு நன்றி ஜெயபாலன் அய்யா.

அதே வேளை சுமந்திரன் நீங்கள் சுட்டிக் காட்டும் அனைத்தையும் அறியாத பால்குடிப் பிள்ளை இல்லை என்பதை நீங்கள் அறியாதவரல்ல என்பதையும் நம்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.