Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நாவின் செயற்குழுவினருடன் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் பேச்சு!

Featured Replies

ஐ.நாவின் செயற்குழுவினருடன் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நாவின் செயற்குழுவை நேற்றுமுன்தினம் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் காணாமல் போகச் செய்யப்பட்டோர் மற்றும் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினரின் கரிசனைகளை சுமந்திரன் எம்.பி., ஐ.நாவின் செயற்குழுவினரிடம் எடுத்துரைத்தார். காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நீதிப் பொறிமுறை மற்றும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையின் அவசியத்தையும் இதன்போது சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தியதுடன், ஐ.நாவின் இந்தச் செயற்குழுவானது இந்தப் பொறிமுறைகள் தொடர்பான செயற்பாடுகளில் தொடர்ந்தும் தமது பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

http://malarum.com/article/tam/2015/11/18/12558/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-

 

 

  • தொடங்கியவர்

சுமந்திரன் தனது பாராளுமன்ற கன்னியுரையை "யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்திற்கு நன்றிகள்" எனத் தொடங்கியிருந்தார், அண்மையில் கூட இராணுவத்தினரைக் கெளரவிக்கும் பொபி மலரை தனது கோட்டில் குத்தி பாரளுமன்றத்திற்குச் சென்று தனது இராணுவ விசுவாசத்தினைக் காட்டியிருந்தார்.

இப்படிப் பட்ட நபர் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நாவின் செயற்குழுவை தனியே சந்தித்தது மிகவும் அபாயகரமானது, அதுவும் அவர்கள் இராணுவத்திற்கெதிரான மிக முக்கிய சாட்சியங்களை கண்டு பிடித்திருக்கும் சந்தர்ப்பத்தில் இவர் அவர்களை தனியே சந்திப்பது பலத்த சந்தேகதினை ஏற்படுத்துகிறது. இப்படியான சந்திப்புக்களில் குறைந்தது இருவராவது கலந்து கொள்வது சிறந்தது.

நேற்று முன்தினம் கூட, இவர் தனது அறிக்கையொன்றிலே

(http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125993/language/ta-IN/------.aspx)

"தமிழ் அரசியல் கைதிகள்" என்ற சொல்லுக்குப் பதிலாக  "விடுதலைப் புலி சந்தேக நபர்கள்" எனும் பதத்தினை பயண்ப்டுத்தியிருந்தார். இதன் மூலம் இவர் அரச செயலை மறைமுகமாக நியாயப் படுத்துகிறாரா?

நீண்ட கால பதவி வெறி பிடித்து அலையிது  இந்த வெறி படுகுழியில் வெகுவிரைவில் இவரை விழுத்தும்.

.ம்ம்ம்... என்ன? எஜமானர்கள் சொல்லிக்கொடுத்தபடி கதைத்திருப்பார்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த இன்னொரு சகுனி.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த இன்னொரு சகுனி.

முட்டாள் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்கள் படையைவிட சகுனி தேவலை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, வாலி said:

முட்டாள் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்கள் படையைவிட சகுனி தேவலை!

சுமந்திரன் அரசியலுக்கு வந்த நாள் முதல் இன்று வரைக்கும் ஈழத்தமிழ்மக்களுக்காக இதுவரை சாதித்தது / நிறைவேற்றியது என்னவென்று சொல்லுங்கள்?

5 minutes ago, வாலி said:

முட்டாள் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்கள் படையைவிட சகுனி தேவலை!

உங்கள் தரவளிகளின் காட்டில் இப்போ மழை! .. இவ்வளவு காலமும் மா.க.மாணிக்கங்களாக! ...  இப்போ தேசியமாம்! ... சுமந்திரனாம்! ... ஆடூ நனையுதாம் ... என்று ஏதோ ஆ ஓ என்று ஒப்பாரி வச்சுதாம்!

On 11/19/2015, 10:30:51, குமாரசாமி said:

சுமந்திரன் அரசியலுக்கு வந்த நாள் முதல் இன்று வரைக்கும் ஈழத்தமிழ்மக்களுக்காக இதுவரை சாதித்தது / நிறைவேற்றியது என்னவென்று சொல்லுங்கள்?

இப்படி கேட்டால் எப்படி மறு கருத்து வரும் ஏதாவது சும் புடுங்கி இருந்தால் தானே பதில் எழுதலாம் ஆனால் சம் சும்க்கு  தமிழனை நன்றாக வித்து பிழைக்க மாத்திரம் நன்றாக தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவின் இந்த முயற்சி பாரட்டத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, colomban said:

சுமந்திரன் ஐயாவின் இந்த முயற்சி பாரட்டத்தக்கது.

அண்டு தொடக்கம் எங்கடை தமிழ் தலைவர்மாரின்ரை முயற்சியளுக்கு பஞ்சமில்லை. ஆனால் செயல்லை காட்டுறத்துக்குத்தான் ஒரு வக்குமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகா பாரதத்தில் துரியோதனனை முட்டாளாக / முரடனாக மாற்றியதே இந்த சகுனி தான்.
சகுனிகளுக்கும் வக்காலத்து வாங்கும் ஒரு கூட்டம் ... வெளங்குன மாதிரி தான் ...

2 hours ago, colomban said:

சுமந்திரன் ஐயாவின் இந்த முயற்சி பாரட்டத்தக்கது.

அவரின் வேறு ஏதாவது முயற்சி பாராட்டத் தக்கதாக இல்லை என்று கூற ஏதும்  ...

12294750_438711173001772_303371109183555

#தமிழ்_மக்களும்_சுமந்திரன்_எம்பியும்
உண்மையில் தமிழ் மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்குமிடையில் இருக்கும் பிரச்சினை இதுதான். சுமந்திரன் எம்.பி அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு சட்ட ரீதியாக அணுகுவதற்கு முயற்சிக்கின்றார். அவ்வாறு செல்லும் போது அதற்கு முன்னால் இருக்கும் சட்டச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் சட்டத்தின் படி காட்டும் வட்டம் (சதுரம்) மக்களுக்கு வட்டமாகத் தெரியவில்லை. அதனை தமிழ் மக்கள் உடனடியாகவும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். சாத்வீக ரீதியாகவும் அறவழியிலும் போராடிய மக்களுக்கு வட்டம் வட்டமாகத்தான் தெரியும். அதனையே அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
எனவே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தான் இழுத்த இழுப்புக்கு மக்கள் வரவேண்டும் என எண்ணாமல் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக செயலாற்றவேண்டும்.

... படித்ததில் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.