Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா. சம்பந்தனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: அரியநேந்திரம்

Featured Replies

                                                                  

2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, வடகிழக்கில் வேட்பாளர்களை தீர்மானித்தது விடுதலைப் புலிகள் தான் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்ற கருத்தை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார். இது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

'தலைவர் இரா.சம்பந்தன் எதற்காக இக்கருத்தினை தெரிவித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. அக்கருத்தினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையால், தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று இருந்த தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

இதில் அதிகமான பங்களிப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தையே சாரும். அதில் நானும் இடம்பெற்றிருந்ததன் காரணமாகத்தான் என்னால் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 16 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர் என அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/160157/%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%9A%E

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கின முகநூலிலும் இணையங்களிலும் எழுதிக் கிழிக்கும் சிலர் தாங்க தான் உருவாக்கினதா சொல்லிக்கிறார்ய்ங்க. tw_blush: புலிங்க வெறும் புல்லுத்தான் திண்ணதா பேசிக்கிறாய்ங்க. :unsure:

ஆரம்பமாக ...

இந்திய அமைதிப்படை எனும் கொலைப்படை ஈழத்தில் தாண்டவமாடிய காலப்பகுதியில் ..

... சென்னையில் ... காஸ்ரோவின் அலுவலகத்தில் .. அப்போது காயப்பட்டிருந்த போராளிகள் சிலர் சகிதம், கிட்டண்ணா, முதன் முதலில் இதற்கு அடித்தளம் இட்டார் ... இது பலருக்குத் தெரியாது!

அப்போது தமிழர் விடுதலை கூட்டணி எனும் பெயரின் போகங்களை காலா காலமாக அனுபவித்து வந்தவர்களின் செயலதிபர் என்று அழைத்துக் கொண்டு, தமிழீழம் தான் தீர்வென்று 77/78ல் வாக்குகளையும் சுருட்டிக்கொண்டு, சிங்கள பாராளுமன்றில் எதிர்கட்சி தலைவர் எனும் உப்புச்சப்பிலாத பதவியில் அமர்ந்து தமிழீழத்தைக்க்கண்ட அமிருக்கு அழைப்பொன்றை அனுப்பியிருந்தார், ஒரு சந்திப்புக்கு!

அச்சந்திப்புக்கு சாதகமான சமிக்கையை காட்டிய பின், தான் மெதுவாக ஒதுங்கிக் கொண்டு, இப்போது தானைத்தலைவராக இருக்கும் சம்பந்தர் தலைமையில் ஓர் குழுவை அனுப்பியிருந்தார்!

அங்கு ... கிட்டண்னா ... உங்கள் இலக்கும், எங்கள் இலக்கும் ஒன்று ... நாங்கள் ஆயுத வழியில் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்! நீங்கள் அகிம்சை வழியில் என்கிறீர்கள்? ... அப்படியாயின் ஏன் இரண்டு தரப்பும் சமாந்திரமாக (ஐ.ஆர்.ஏ, சின் ஃபெயின் போன்று) பயனிக்க முடியாது? சேர்ந்து இயங்குவோமா என்று கேள்வி எழுப்பினார் என்பதற்கு மேல் வேண்டிக்கொண்டார்!

அங்கு பிரசன்னமாக இருந்த சம்பந்தரோ, அதற்கு பதிலளிக்காமல், "அண்ணாவை (அப்பாப்பிள்ளையை) கேட்டுத்தான் நாம் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி, கிளம்பினராம்! ... பதில் வரவே இல்லையாம்!

பின்னாளில் விடுதலைப்புலிகளின் ஆலோசனையில் மாமனிதர் தராகியின் மீண்டுமொடு முயற்சியில் ... இன்றைய "தமிழ் தேசிய கூட்டமைப்பு! 

எவ்வளவு காலத்துக்கு சம்பந்தர் பொய் சொல்லப்போகிறார்????????????

Edited by no fire zone

ஆனால் ... இன்றோ ..

பின்வாசல்களால் உள்நுளைக்கப்பட்டவர்கள் ... வரலாற்றை திருப்பி எழுத முற்படுகின்றார்கள் .. முழு பூசனிக்காயை ஒரு பிடி சோற்றினுள் மறைக்க பல பிரயத்தனங்கள்! ... வரலாறு மன்னிக்காது! ... 

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசியக் கூட்டமைப்பை புலிகளின் ஒரு பினாமி அமைப்பு என இந்திய தேசியத்தைக் காக்கும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை அப்போது.ஒரு செய்தி போட்டிருந்தது. அப்போது கூட்டமைப்பு புலிகளின் ஆளுமையில் மக்கள் செல்வாக்குடன் விளங்கியது.

தங்களால் ஆட்டிப்படைக்க முடியாத நிலையிலும், புலிகள் இல்லாத ஒரு நிலையிலும் மக்கள் செல்வாக்குள்ள கூட்டமைப்பை தமது பக்கமாக இந்தியா ஓரளவுக்கு இழுத்துவிட்டது. இதற்கு சிலர் உடந்தை.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தகவாலாக இருக்கிறது .....
நான் நினைத்துகொண்டு இருந்தேன் யாழ் களத்தில் இருக்கும் இரண்டுபேர்தான் 
த தே கூ வை உருவாக்கினார்கள் என்று.

தமிழ் மக்களுக்கு என்றால் கனடாவில் இருந்து உயிரையே பெடெக்ஸ் கொரியரில் அடிக்கடி அனுப்புகிறவர்கள். 
செய்தாலும் செய்திருப்பார்கள் என்று எண்ணிகொண்டு இருந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கூட்டமைப்பின் முதுகில் ஏறும்போது கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். எல்லாம் தீர்க்கதரிசனம் ஒன்று மட்டுமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.