Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பார்வையிடுகிறார்!

Featured Replies

வெள்ளம் பாதித்த மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பார்வையிடுகிறார்!

 

jaya350d.jpgசென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் நாளை (3-ம் தேதி) காலை தமிழக முதலமைச்சர் பார்வையிடுகிறார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (30-ம் தேதி) முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சென்னையில் சாலை, ரயில், விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நாளை (3-ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (4-ம் தேதி) பொதுவிடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து தமிழக அரசு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், நாளை காலை தமிழக முதலமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ''பெருமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை இன்று (2.12.2015) பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக இந்திய வான்படைக்கு சொந்தமான விமானத்தின் விமானிகள், தற்போது மீண்டும் மழை பொழிவதால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஹெலிகாப்டர் பறக்க இயலாது என்று தெரிவித்தனர்.

எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் நாளை (3.12.2015) காலையில் பார்வையிடுவார்'' எனக் கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/55884-jayalalithaa-visit-flood-affected-districts.art

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கடமை உணர்வு !
அம்மா!

எனும்போதே பாதி துன்பம் பறந்துவிடும் ..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

என்ன ஒரு கடமை உணர்வு !
அம்மா! எனும்போதே பாதி துன்பம் பறந்துவிடும் ..

நீங்கள் சொல்லீட்டிங்க, மீரான் செய்தி போட்டுவிட்டார்..
தமிழ்நாட்டில் தேன்வெள்ளம் தான்! :unsure:

 

11036538_10207950366737975_1635355705950

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.