Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலியற்பணியாளர் மீதான தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் இதுவரை காலமும் பாலியல் தொழிலுக்கான தண்டனைக்கரியவர்களாக பாலியல்த் தொழிலாளர்களே இருந்து வந்துள்ளனர். அங்குள்ள சட்டப்படி பாலியல்த் தொழிலுக்கு அழைத்தவரே குற்ற வாளியாகின்றார்.

ஆனால் தற்போது புதிய சட்ட மசோதா ஒன்று கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் படி இனி பாலியல்த் தொழிலாளர்களிடம் சென்று வருபவர்களே தண்டனைக்குரியவர்கள். இந்த சட்ட உருவாக்கத்தை கேரளா போன்ற சில மாநிலங்கள் எதிர்க்கின்றன.

இது நாள் வரை இந்திய செய்திகளில் பாலியல் தொழிலுக்காக கைது செய்யப்பட்டு சேலையால் முகத்தை மூடிக் கொண்டிருக்கும் பெண்களை காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று வந்தவர்கள் ஆசுவாசமாக அந்த செய்திகளை தொலைக்காட்சியில் பாத்தக் கொண்டிருந்தார்கள்.

இனி அவர்களையும் வேட்டியால் முகத்தை மூடிக்கொண்டிருக்க காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனித இனம் சில சுத்தப்படுத்தல்களுக்கு இலக்காகி இருக்கிறது..! வரவேற்க வேண்டிய விடயம்..! விபச்சாரிகள் அழிப்பு தொடரட்டும்..பல வடிவங்களிலும்..! :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விபசாரிகள் என்பது போல அவர்களிடம் சென்று வருகின்றவர்களுக்கு ஏதேனும் விசேட சொற்கள் உள்ளனவா..

காலத்துக்கு ஏற்ற அதி முக்கியமான ஆய்வுப் பொருள். சரியாக ஆய்வு செய்தால் முதுமானிப் பட்டம் ஆவது குறைந்த பட்சம் எடுக்கலாம். யார் தயார் பொறுப்பாக ஆய்வு செய்து காவடிக்கு அறிக்கை சமர்பிக்க?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விபசாரிகள் என்பது போல அவர்களிடம் சென்று வருகின்றவர்களுக்கு ஏதேனும் விசேட சொற்கள் உள்ளனவா..

இதுவரைக்கும் அப்படியிருப்பதாக அறியவில்லை. நாங்களே உருவாக்கினால் என்ன? :P . அது மிகமிக அசிங்கமான வார்த்தை போல அமைந்திருக்க வேண்டும். :icon_idea:

விபசாரிகள் என்பது போல அவர்களிடம் சென்று வருகின்றவர்களுக்கு ஏதேனும் விசேட சொற்கள் உள்ளனவா..

கூத்திக்கள்ளன்... :P

யாழ்தேவியில் பண்டமாற்று முறையில் செய்துகாட்டிய மூத்தவரின் பெயர் பெருத்தமா இருக்காதா?

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரிகள்வ் விபச்சாரம் போன்ற கீழ்தரமான கேவலமான மிருகங்களை விடக் கீழான நடவடிக்கை ஒழிக்கப்பட்டாலே மற்றவர்கள் இருக்கமாட்டார்கள்..! பெயர் தேடலும் அவசியமற்றது..! சில கூட்டம்..கூட்டம் கூட பொழுதுபோக்க வழி தேடி அநியாயமாக்குகிறது சில பக்கங்களை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"சேங்கு" என்று தமிழில் ஒரு சொல் இருக்கிறது. கேள்விப்பட்டிருகின்றீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விபச்சாரத்தில் இப்போது ஓரினச்சேர்க்கை வெகு வேகமாக முன்னேறிக்கொண்டு வருகின்றதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எப்படியிருக்கு"மாடும் மானிடமும்"

மோட்டு சிங்களவன் பற்றிய செய்தி22.07.2006

இயற்கைக்கு முரணாக பசுவுடன்

புணர்ந்த இளைஞருக்கு தண்டனை

கன்று ஈன்ற பசு ஒன்றுடன் இயற்கைக்கு முரணான விதத்தில் புணர்ந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து மூன்று வருடக் கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது குருநாகல் மேல் நீதிமன்றம்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு காலம் கடூழியச் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒரு பிள்ளையின் தந்தையான ஏ.பி. சுனில் (வயது30) என்பருக்கு குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதி டியூடர் தயாரத்ன இந்தத் தண்டனையை விதித்தார். மேற்படி சம்பவத்தைக் கண்டவர் எனக் கூறப்படும் சிறுமி ஒருவரினதும், விலங்கு வைத்தியர் சாட்சியத்தின் பின்னர் மேற்படி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்தது.

சம்பந்தப்பட்ட பசுவின் மூன்று, நான்கு உடற்பாகங்களைக் கயிற்றால் வேறு நிலைகளோடு பிணைத்துக் கட்டிவிட்டு அதனுடன் இந்த நபர் இயற்கைக்கு மாறாகப் புணர்ந்தார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவியில் பண்டமாற்று முறையில் செய்துகாட்டிய மூத்தவரின் பெயர் பெருத்தமா இருக்காதா?

அது இதை விட அசிங்கம் சார். :P

வெளி உலகத்தில் பாலுணர்ச்சி பற்றி பேச கூசும் நிறைய பேர் மூடிய அறையில் நீலப்படம் விரும்பி பார்க்கத்தான் செய்கிறார்கள். பால் உறுப்புகளை பற்றி சிறு வயதில் அறிந்து கொள்ளும் இளம் மனங்கள், பல் வேறு குடும்ப மற்றும் பொருளாதார காரணங்களால் திருமணம் தள்ளிபோடப்படுகிறது. அவர்களின் பயோலஜிக்கல் தேவைகளுக்கு வடிகாலாக தாசிகள் இருக்கிறார்கள்.இவர்களில் பலர் வற்புறுத்தப்பட்டு இத்தொழிலுக்கு வந்தாலும் சிலர் விருப்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளன. இவர்கள் வடிகாலாக இருப்பதால் குடும்ப பெண்கள் தெருக்களில் நடமாட முடிகிறது.உலகின் முதல் தொழில் இது என்று கூறப்படுகிறது. ஒழிப்பதை காட்டிலும் ஒழுங்கு படுத்தி மருத்துவ வசதிகள் அளித்து அவர்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் காப்பாற்றுவது நலம் பயக்கும்.

பாலியல் தொழிலை அங்கீகரிப்பது மிக முக்கியம். இதை சட்டரீதியாக அங்கீகரித்து குறிப்பிட்ட வயதின் பின்பு ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

இதை முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளில் செய்ய வேண்டும்.

அங்கெல்லாம் இலட்சக்கணக்கான பெண்கள் இந்த தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுகிறார்கள்: அந்தப் பெண்கள் ஈட்டுகின்ற பணத்தின் பெரும்பகுதி அவர்களுக்கு போய் சேருவதில்லை. அத்துடன் மிக் கொடுமையான முறையில் நடத்தப்படுகிறார்கள்.

அத்துடன் வீதியோரங்களில் தொழில் செய்கின்ற பாலியற்பணியாளர்களின் நிலைமையும் படுமோசமாக இருக்கிறது.

இந்த தொழிலை அங்கீகரிப்பதன் மூலம் பல நன்மைகள் விளையும்.

முக்கியமாக எய்ட்ஸ் நோய் கட்டுப்படுத்தப்படும். (உலகில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையில் இன்று இந்திய முதலிடம் பெறுகிறது.)

சட்டரீதியான தொழில் செய்வதால், பாலியற்பணியாளர்களை அணுகுவது சுலபமாக இருக்கும். அவர்களுக்கு எய்ட்ஸ் பாதுகாப்பு பற்றிய வகுப்பு எடுக்க முடியும். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் அவர்களை மற்றைய கொடுமைகளில் இருந்தும் சுரண்டல்களில் இருந்தும் காப்பாற்றப்படுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வெளி உலகத்தில் பாலுணர்ச்சி பற்றி பேச கூசும் நிறைய பேர் மூடிய அறையில் நீலப்படம் விரும்பி பார்க்கத்தான் செய்கிறார்கள். பால் உறுப்புகளை பற்றி சிறு வயதில் அறிந்து கொள்ளும் இளம் மனங்கள், பல் வேறு குடும்ப மற்றும் பொருளாதார காரணங்களால் திருமணம் தள்ளிபோடப்படுகிறது. அவர்களின் பயோலஜிக்கல் தேவைகளுக்கு வடிகாலாக தாசிகள் இருக்கிறார்கள்.இவர்களில் பலர் வற்புறுத்தப்பட்டு இத்தொழிலுக்கு வந்தாலும் சிலர் விருப்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளன. இவர்கள் வடிகாலாக இருப்பதால் குடும்ப பெண்கள் தெருக்களில் நடமாட முடிகிறது.உலகின் முதல் தொழில் இது என்று கூறப்படுகிறது. ஒழிப்பதை காட்டிலும் ஒழுங்கு படுத்தி மருத்துவ வசதிகள் அளித்து அவர்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் காப்பாற்றுவது நலம் பயக்கும்.

கலவரம் நடந்தாலே எங்கே கொள்ளையடிக்கலாம் என்று சிந்திப்பது தானே மனித குணம். உலகத்தில் எங்கு டந்த கலவரத்தையும் பாருங்கள். காட்டாயம் கொள்ளை நடந்திருக்கும். இது ஏன் சொல்கின்றேன் என்றால் கொள்ளையடிப்பவர்களுக்கு மனம் நோகக் கூடாது என்பதற்காக, அரசாங்கம் அதற்கு அனுமதியோ, அல்லது அதற்கென்றே கடை நடத்த இயலுமா?

இவ்வாறே மனதை அடக்கத் தெரியாதவன், மனுசியிடம் சுகத்தை காணமுடியாதவன்கள் தெரு நாய் மாதிரி தேடிக் கொண்டு போறதை நியாயப்படுத்துவது எவ்வகை நியாயம்? தாங்கள், தாங்கள் செய்கின்ற தவறுகளை நியாயப்படுத்த அதை ஆதரிப்பது தான் இன்றைய வழக்கமாகப் போய் விட்டது. இவ்வாறு ஆண் விபச்சாரியை உருவாக்கி உங்களின் மனைவிமார்கள் போவதற்கு அனுமதிப்பீர்களா?

இவ்வாறன குற்றவாளிகளைச் சட்டங்கள் மூலம் தான் அடக்க முடியும். விபச்சாரியிடம் போறனுக்கு கடுமையான தண்டனைகளையும், தப்பித்துக் கொள்ளாத நிலையையும் உருவாக்கும்போது தான் இதை சீராக்க முடியும். அதைப் பற்றி ஏதும் பரிந்துரை செய்வீர்கள் என்று பார்த்தால் ஒண்டையும் காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்காகவும் ஆண்விபச்சாரிகள் உருவாக்கி, அவர்களையும் சட்டரீதியாக்க வேண்டும்.

முக்கியமாக எந்த ஆண் பெண்விபச்சாரிகளை நாடுகின்றானோ, அவனின் மனைவியைக் கட்டாயம் ஆண் விபச்சாரியிடம் அனுப்ப அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வர வேண்டும்.

கணவருக்கு முன்னாலேயே மற்றொருவனோடு அவள் உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அவர்களின் பெண் பிள்ளைக்கு அரிப்பெடுத்தால், அவளையும் ஆண்விபச்சாரியிடம் அனுமதிக்க அரசாங்கம் சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவியை விட்டு, அடுத்தவளை நாடுகின்ற காமுகர்களால் எயிற்ஸ் பரவுகின்றன(பாலியல்ரீதியாக) என்பதை உணராமல் அதற்கு வக்காளத்து வாங்கும் ஆட்களை நினைக்க வேதனையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட காமுகர்களுக்கு எயிற்ஸ் வருவதில் தப்பில்லை. ஆனால் பாவம் மனைவி பிள்ளைகள் அதனால் பாதிக்கப்படுவது தான் வேதனை.

விபச்சாரியை சட்டமாக்கினால் வேறு பெண்களில் கை வைக்க மாட்டான் என்பது எவ்வளவு சுத்துமாத்து. ஏனென்றால் அரிப்பு என்பது ஒருக்கால் தானே வரும். இவ்வாறன நிலை தான் வீதியில் போகின்ற பெண்களைக் கூட பாலியல் உறவு கொள்ளும் நிலமைக்கு கொண்டு செல்கின்றது. இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நாடுகளில் பார்த்தாலே தெரியும். அப்பாவிப் பெண்களைக் கடத்திக் கொண்டு போய், பாலியல் உறவு செய்து கொன்று போடும் நிலமையை. இவ்வாறன செயற்பாடுகளைத் தடுக்க முதலே இறுக்கமாக இருந்தால் தான் அடங்கிக் கொண்டு திரிவார்கள்.

ஒரு வகையில் இவ்வாறன சிந்தனைகள் ஏன் உருவாகின்றன என்று பார்த்தால் அது மற்றய பெண்கள் மீது கொண்டுள்ள காமத்தைத் தீர்ப்பதற்கு சட்டரீதியாகப் பெற முயலும் அனுமதியே. எனவே சட்டங்கள் மூலம் இவ்வாறன தேடல்களைச் செய்யும் பொறுக்கிகள் குறித்து அவதானதமாகவே இருக்க வேண்டும்.

கலாச்சாரம், கலாச்சாரம் என்று பேசுபவர்களின் மறுபக்கத்தை பார்த்து நான் பல முறை அதிர்ந்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கே அதிர்ச்சியா? நீங்கள் தானே அதைச் சட்டமாக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு திரிகின்றீர்கள். ஆனால் உங்களுக்கே அது தப்பாகத் தெரியும் அளவில் இருக்கின்றீர்கள் என்பது சந்தோசம் தான்.

விபசாரிகள் என்பது போல அவர்களிடம் சென்று வருகின்றவர்களுக்கு ஏதேனும் விசேட சொற்கள் உள்ளனவா..

தந்தை பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று இதுபோன்ற ஒரு சில காரணங்களுக்காகவே சொன்னார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த ஒரு தலைவர் இதுமாதிரி சொல்லியிருப்பது இயல்பானதே. அதே பெரியார் தான் தமிழில் சீர்திருத்தம் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஆபாச வசைபாடுதல் பொதுவாக பெண்பாலை தாக்கியே இருப்பதைக் காணலாம்.

விதவை என்பதற்கு ஆண்பால் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.....

Edited by லக்கிலுக்

  • கருத்துக்கள உறவுகள்

விதவை என்பதற்கு ஆண்பால் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.....

தபுதாரன் என்று படித்த ஞாபகம்.

விதவை என்பதும் தபுதாரன் என்பதும் தமிழ் சொற்கள் அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த சொல் தமிழில் இல்லை என்று சொல்லும்போத, அதற்குப் பொருத்தமான சொல்லையும் இடுவது நல்லம். இல்லாவிட்டால் பேசாமல் இருக்கலாம்.

மற்றய மொழிகளில் குறித்த சொல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் தமிழில் தான் இவ்வாறன பண்பு இருக்கின்றது. இதை ஒழுங்காகச் செய்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. எந்தவொரு சொல்லுக்கும் பொருத்தமான சொல்லை உருவாக்கி விட்டு, இது தான் சரியான தமிழ்சொல் என்றால் தானாகவே மக்கள் அச் சொற்களை உள்வாங்குவார்கள்.

அது ஒன்றுமே இல்லாமல், குறித்த சொல் தமிழ் இல்லை என்று சொல்லி விட்டுச் செல்வது, மக்களை நட்டாற்றில் விடுவது போன்றது. அவர்கள் எதைப் பாவிப்பது என்ற சங்கடத்தைச் சந்திப்பார்கள். இப்போது எனக்கு கூட இதே பிரச்சனை தான். விதவைக்கு கைம்பெண் என்று பாவிக்கின்றார்கள் என்று தெரியும். ஆனால் தபுதாரனுக்கு என்னவென்று தெரியவில்லை. இப்போது அதற்குச் சொல்லுத் தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றேன்.

இதனாலும் மக்கள் மற்றய மொழி மீது ஈர்ப்புக் கொள்கின்றார்கள் என்று சொல்லலாம். தமிழில் ஒன்றுமே இல்லை என்ற தோற்றம் கூட இதனால் ஏற்படுகின்றது. ஆகவே சொல்வது என்னவென்றால், இவ்வாறு தமிழ்சொற்கள் இல்லை என்று பட்டியல் போட்டால், அதற்குப் பொருத்தமான தமிழ்சொல்லையும் சொல்லுங்கள். இல்லாவிட்டால் சொல்லாமல் இருங்கள். மற்றவர்களை முழிக்க வைக்காதீர்கள்.

லக்கிலூக் விதவை என்ற சொல்லை தமிழ்சொல் என்ற அடிப்படையில் கருத்து எழுதியதால்தான், அந்த சொற்கள் தமிழ் இல்லை என்று சொன்னேன்.

விதவை என்பதை கைம்பெண் என்று தமிழில் சொல்வார்கள்.

மனைவியை இழந்தவனைக் குறிப்பதற்கு தமிழில் சொற்கள் இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலூக் விதவை என்ற சொல்லை தமிழ்சொல் என்ற அடிப்படையில் கருத்து எழுதியதால்தான், அந்த சொற்கள் தமிழ் இல்லை என்று சொன்னேன்.

விதவை என்பதை கைம்பெண் என்று தமிழில் சொல்வார்கள்.

மனைவியை இழந்தவனைக் குறிப்பதற்கு தமிழில் சொற்கள் இருப்பதாக தெரியவில்லை.

இவர் சபேசன் சமயம் தொடங்கி சாதாரண வாழ்க்கை வரைக்கும் கட்டுக்கதைகளைத்தான் அறிஞ்சு வைச்சுக்கொண்டு பினாத்தித் திரிகிறார்.

தபுதாரன் தமிழ் சொல் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம்..மிஸ்டர் சபேசன். பழைய இலக்கியங்களைப் படித்தால் பல தமிழ் சொற்கள் தற்போதைய சாதாரண தமிழ் சொற்களிலின்றும் மாறுபட்டனவாக கடினமானவையாக இருக்கும். சொற்புணர்ச்சிகள் சிக்கலானதாக இருக்கும். தபுதாரன் என்பது மனைவியை இழந்தவன் என்று தமிழ் பாடநூல்களிலையே இருக்கும் போது கட்டுக்கதை சபேசன் மட்டும் அதை எந்த ஆதாரத்தோடு முன்வைக்கிறார் என்று சொன்னால் மொழிக்கும் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கும் கொஞ்சம் பிரயோசனமாகவாவது இருக்கும்..! சும்மா அலட்டிக் கொண்டிருக்காம. :lol:

தமிழ் பாட நூல்களில் இருந்தால் அது தமிழாகத்தான் இருக்கும் என்று நம்புகின்ற உங்களை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

விதவை என்ற சொல்லும் தமிழ் பாட நூல்களில் இருக்கிறதே!

நீங்கள் ஒரு நல்ல தமிழாசிரியரிடம் இவைகளை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்டு கடைசில் தமிழ் சொற்களுக்கும் ஆதாரம் கேட்கத் தொடங்கிவிட்டீர்கள்.

இனி உருப்பட்ட மாதிரித்தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.