Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்கள் பேரவை ஜனநாயக விரோதச்செயல்! - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

   

‘தமிழ் மக்கள் பேரவையோ வேறு எந்த அமைப்புக்களையோ யாரும் உருவாக்கினால் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை கூற முடியாது. மக்கள் தங்களை ஒருங்கிணைத்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்வது முக்கியமான ஒரு விடயம். தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக தொடர்ச்சியாக 6 வருடங்களாக மக்கள் தமது தேர்தல்கள் மூலம் மிகத் தெளிவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வு திட்டத்திற்கு தெளிவான விரிவான அரசியல் தீர்வு திட்டத்திற்கு தங்களுடைய ஆதரவினை ஒரிரு தேர்தல்களில் மட்டுமன்றி பல தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த ஆணையை முன்னெடுக்கின்ற பொறுப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொண்டுள்ளார்கள். தொடர்ச்சியாக மக்களுடன் கலந்தாலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அவற்றினைச் செய்வோம்.

கடந்த 3 மாதத்திற்கு முன்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட மிகத் தெட்டத்தெளிவாக மக்கள் தமது முடிவினைத் தெரிவித்துள்ளார்கள். அப்படியாக மக்களினால் நிராகரிக்கப்பட்ட தீர்வு திட்டங்களை இப்படியாக தமிழ் மக்கள் பேரவை என்ற போர்வையின் கீழ் பின் கதவால் கொண்டுவந்து முன்நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயலாக பார்க்கின்றோம். அப்படி அவர்கள் செய்யாவிட்டால், நல்லது. அவ்வாறு செய்ய முனைந்தால், அது ஜனநாயக விரோதச் செயல். அப்படி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதற்கு முக்கிய காரணம். நடைபெற்று முடிந்த தேர்தலில் வித்தியாசமான நிலைப்பாடுகளை முன்நிறுத்தி போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர்கள் தமிழ் மக்கள் பேரவையில் முக்கியஸ்தர்களாக கடமையாற்றுகின்றார்கள்.’ என்றும் கூறினார்.

 

sumanthiran-jaffna-ngo-261215-seithy.JPG
 
  • கருத்துக்கள உறவுகள்

சம் முடிஞ்சு.. மாவை முடிஞ்சு.. இப்ப கொழும்பில் இருந்து கிரிக்கெட் மச் பார்த்திட்டு அரசியலுக்கு வந்தவர் தொடங்கிட்டார்.

அப்படி... என்னுங்கடா இருக்கு அந்த தமிழ் மக்கள் பேரவையில.

ஒன்னுமே இல்லைன்னா.. அது உருவாகிட்டுப் போகட்டுமேன்னு கவலையே இல்லாமல் கிடப்பியளே. இப்படி ஆளாளுக்கு குத்தி முறியுறேள்.. அதிலும் 3 பேர் கடுமையா முறியுறேள்.. அந்த வகையில்... என்னவோ இருக்குது அங்க என்பது தெளிவு.

தமிழ் மக்கள் பேரவையின் வரவு.. சோரம் போதலுக்கு எதிரான நல்ல வரவு..! அது... தமிழ் மக்கள் விரும்பும் அரசியலை.. அதன் சரியான.. திசை நோக்கி பலரை கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடுது. அறிக்கைகளின் வேகம்.. காரசாரத்தைப் பார்க்கையிலே..! tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழரசு said:
தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

   

‘தமிழ் மக்கள் பேரவையோ வேறு எந்த அமைப்புக்களையோ யாரும் உருவாக்கினால் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை கூற முடியாது. மக்கள் தங்களை ஒருங்கிணைத்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்வது முக்கியமான ஒரு விடயம். தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக தொடர்ச்சியாக 6 வருடங்களாக மக்கள் தமது தேர்தல்கள் மூலம் மிகத் தெளிவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வு திட்டத்திற்கு தெளிவான விரிவான அரசியல் தீர்வு திட்டத்திற்கு தங்களுடைய ஆதரவினை ஒரிரு தேர்தல்களில் மட்டுமன்றி பல தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த ஆணையை முன்னெடுக்கின்ற பொறுப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொண்டுள்ளார்கள். தொடர்ச்சியாக மக்களுடன் கலந்தாலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அவற்றினைச் செய்வோம்.

கடந்த 3 மாதத்திற்கு முன்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட மிகத் தெட்டத்தெளிவாக மக்கள் தமது முடிவினைத் தெரிவித்துள்ளார்கள். அப்படியாக மக்களினால் நிராகரிக்கப்பட்ட தீர்வு திட்டங்களை இப்படியாக தமிழ் மக்கள் பேரவை என்ற போர்வையின் கீழ் பின் கதவால் கொண்டுவந்து முன்நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயலாக பார்க்கின்றோம். அப்படி அவர்கள் செய்யாவிட்டால், நல்லது. அவ்வாறு செய்ய முனைந்தால், அது ஜனநாயக விரோதச் செயல். அப்படி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதற்கு முக்கிய காரணம். நடைபெற்று முடிந்த தேர்தலில் வித்தியாசமான நிலைப்பாடுகளை முன்நிறுத்தி போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர்கள் தமிழ் மக்கள் பேரவையில் முக்கியஸ்தர்களாக கடமையாற்றுகின்றார்கள்.’ என்றும் கூறினார்.

 

sumanthiran-jaffna-ngo-261215-seithy.JPG
 

இன்னும் ஒரு ஆறு வருடம் மிக தெளிவாக இருந்து வாக்கு போட்டால்...

 

அங்கால வரவர்களுக்கு வாக்கு போடுற வேலையும் இருக்காது.
வாக்கு உரிமையில் இருந்து தொடங்கலாம் ......

மக்கள் தேர்வு செய்த ஆனந்தி போன்றவர்களை
எடுத்துவிட்டு .......
பின்கதவலும் கள்ள ஓட்டாலும் வாறதுதான்
தூய்மையான ஜனநாயகம்!

 

இந்த லூசு பயலுகளுக்கு இது எங்க புரியபோகுது ....
சுமந்திரன் ஐயா இருக்கிற படியால் .... எம்மைபோல ஓர் இவருக்காவது புரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.