Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அநாதையான ஒட்டுசுட்டான் தொழிற்சாலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mullai_fac.jpg

யுத்தம்... இன்றும் பலரது வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்றும் காணப்படுகின்றது.

இதன்படி, யுத்தத்தின் பாதிப்புக்கள் முல்லைத்தீவை இன்றும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது.

இது முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை...

1968ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் - பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த காலப் பகுதியில் பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்த ஒட்டுத் தொழிற்சாலையின் ஊடாக தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு பலரது வாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுத்த இந்த ஓட்டுத் தொழிற்சாலை, இன்று அநாதையாக இருக்கின்றமை வருத்தமளிக்கின்ற விடயமாகும்.

நாட்டில் நிலைக் கொண்டிருந்த யுத்தம் இந்த ஓட்டுத் தொழிற்சாலையை மூடுவதற்கு வழி அமைத்துக் கொடுத்திருந்தது.

1990ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் தீவிரமடைய, இந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகள் படிப்படியாக வலுவிழந்து விட்டது.

இவ்வாறு படிப்படியாக வலுவிழந்த இந்த தொழிற்சாலை இன்று அநாதையாக, கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள போதிலும், இந்த தொழிற்சாலை மாத்திரம் மீளவும் கட்டியெழுப்பப்படவில்லை என்பதே மக்களின் கவலையாகும்.

13 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலையிலிருந்த பெறுமதிமிக்க உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைவிடப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை நவீன வசதிகளுடன் நிர்மாணித்துக் கொடுக்கப்படுமாக இருந்தால், அதனூடாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் அமையும் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

முல்லைத்தீவு மாத்திரமன்றி, ஏனைய பகுதி மக்களும் இந்த தொழிற்சாலையின் ஊடாக நன்மையை பெற்றுக் கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த ஓட்டுத் தொழிற்சாலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் அண்மையில் துப்பரவு செய்யப்பட்ட போதிலும், மீண்டும் அந்த பகுதி காடாக மாறியுள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், சில தினங்களுக்கு முன்னர் மின்மாற்றி ஒன்று பொருத்தப்பட்ட போதிலும், தொழிற்சாலை மீளவும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்ற போதிலும், அரசாங்கம் அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களின் தொடர்ந்தும் ஏமாற்றத்தை மாத்திரமே வழங்கி வருகின்றமை வருத்தமளிக்கும் செயற்பாடாகும்.

http://www.tamilwin.com/show-RUmtzCRdSWkx1G.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

அநாதையான ஒட்டுசுட்டான் தொழிற்சாலை!

இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால்.........

யுத்தத்தால் இழக்கப்பட்ட எமது வளங்களில் இதுவும் ஒன்று. முன்னர் செங்கல், ஓடு உற்பத்தியில் புளியங்குளம், ஒட்டிசுட்டான் பகுதிகள் புகழ் பெற்றிருந்தது. பின்னர் போரினால் அவை நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் போன்ற பகுதிகளிற்கு இடம் பெயர்ந்து விட்டது. மறுபடியும் இதனையே உருவாக்குவதைவிட புதிதாக ஏதாவது தொழிற்சாலையை உருவாக்குவது நல்லம் என்பது எனது கருத்து.  

மக்கள் அழிவு தடுக்கபட்டு விட்டது .அதுதான் மிக முக்கியம் 

உயிர்கள் போனால் வராது ஆனால் அழிந்த தொழிற்சாலைகளை  திருப்பி கட்டலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.