Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

Featured Replies

வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

 

2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, கடந்த 2014ம் ஆண்டை விட 10,402 இனால் அதிகரித்துள்ளது.

அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1,705 இனால் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணத் தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டம் என்பவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின், யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு 4 இலட்சத்து 50 ஆயிரத்து 153 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ம் ஆண்டு 7 ஆயிரத்து 786 இனால் அதிகரித்து 4 இலட்சத்து 57 ஆயிரத்து 939 வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 79 ஆயிரத்து 86 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 616 இனால் அதிகரித்து 81 ஆயிரத்து 702 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் இணைந்த யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 402 இனால் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

வன்னித் தேர்தல் மாவட்டத்தின், வவுனியா நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 695 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 107 இனால் அதிகரித்து, ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 802 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 83 ஆயிரத்து 224 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 731 இனால் குறைவடைந்து 78 ஆயிரத்து 493 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு 63 ஆயிரத்து 840 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 329 இனால் அதிகரித்து, 67 ஆயிரத்து 169 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேற்படி மூன்று மாவட்டங்களும் இணைந்த வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆயிரத்து 705 வாக்காளர்களினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் செயலகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 

என்ன இந்தியாவில் இருந்து வருகிறார்களா? அல்லது ஏற்கெனவே தவறவிடப்பட்டவர்களா?

1 hour ago, Iraivan said:

என்ன இந்தியாவில் இருந்து வருகிறார்களா? அல்லது ஏற்கெனவே தவறவிடப்பட்டவர்களா?

புதிதாக வந்த முஸ்லிம் வந்ததேறு  குடிகளாக இருக்கும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

வாக்காளர் தொகை அதிகரிக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்.
தொகை எப்பிடி அதிகரிக்குது எண்டதுதான் இப்போதைய கேள்வி?

ஒரு சர்வசன வாக்கெடுப்புக்கு அவங்கள் இப்பவே ரெடி போலை கிடக்கு....:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.