Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரமற்ற தீர்வை ஏற்போம் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்- சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரமற்ற தீர்வை ஏற்போம் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்- சம்பந்தன்- குளோபல் தமிழ் செய்தியாளர்:-

09 ஜனவரி 2016
அதிகாரமற்ற தீர்வை ஏற்போம் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்- சம்பந்தன்- குளோபல் தமிழ் செய்தியாளர்:-
தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன் அதற்கான சபையாக புதிய அரசியலமைப்புச் சபை செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்பார்ப்பதாகவும் எதிர்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

நியாயமான தீர்வொன்றை புதிய அரசாங்கம் முன்வைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சம்பந்தன் அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் கூட்டமைப்பு ஏற்கும் என எவரும் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் புதிய அரசியலமைப்பு சபையாக மாறுவது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டுவதாக அமைகிறது என்று குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எவரும் கருத்துக்களை முன் வைக்கலாம் என்றும் அவை ஆரோக்கியமாக அமையவேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீண்ட காலப் பிரச்சினையை தீர்க்கும் விதமாக புதிய அரசியலமைப்பில் அலகுகளை பிரிக்கும் சந்தர்ப்பம் உண்டென்று குறிப்பிட்ட அவர் அதிகாரப் பகிர்வின் ஊடாக ஒரு சுயாட்சியை வழங்க வேண்டும் என்றும் வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127669/language/ta-IN/article.aspx

 

26 minutes ago, கறுப்பி said:

பாராளுமன்றம் புதிய அரசியலமைப்பு சபையாக மாறுவது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டுவதாக அமைகிறது என்று குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எவரும் கருத்துக்களை முன் வைக்கலாம் என்றும் அவை ஆரோக்கியமாக அமையவேண்டும் என்றும் தெரிவித்தார்.

பேரவை கூட தமது கருத்துகளை முவைக்கலாம், அனால் ஏதோ மூடின அறைக்குள் ஓரிருவரால் எடுக்கப்படும் முடிவு அது இது என்று பேரவை தொடக்கத்தில் அறிக்கை விட்டிருக்க தேவை இல்லை.

யார் என்ன தீர்வை முன்வைத்தாலும் பொது உடன்பாடு கானபட்டு மூன்றி இரண்டு பெரும்பான்மையோடு இது நிறைவேற்றப்பட்டு கருத்துகணிப்பு வாக்கெடுப்பிலும் இது வெற்றியடையவேண்டும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்: இரா.சம்பந்தன்

 

sampanthan-7400தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் சபையாக பாராளுமன்றம் அமையவுள்ளதோடு தீர்வைத்தரும் ஆண்டாக இவ்வருடம் அமைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் என்ற விடயங்கள் தொடர்பில் மக்களுடனான கலந்துரையாடலொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நியாயமான அரசியல் தீர்வொன்று புதிய அரசாங்கத்தால் முன்வைக்கப்படுமென த.தே.கூ. நம்பிக்கை கொண்டுள்ளது. அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் நாம் ஏற்போமென யாரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் இன்றைய நிலைப்பாடுகள் எமக்கு திருப்தி அளிப்பதாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைகின்றன. பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு சபையாக மாற்றும் இன்றைய கைங்கரியமானது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டுவதாக அமைகிறது. அரசியல் அமைப்பு சபைக்கு தமிழ் மக்கள் சார்பில் யாரும் தமது ஆலோசனைகளை முன்வைக்க முடியும். அந்த ஆலோசனைகள் ஆரோக்கியம் கொண்டதாக அமைவதுடன் தென்னிலங்கை சக்திகளை குழப்பாமல் கூறப்படுமானால் நன்மை தரும்.

குறிப்பாக சிங்கள மக்களையும் சிங்களத் தலைவர்களையும் குழப்பாமல் நாங்கள் இத்தீர்வைத் தான் விரும்புகிறோமென்று கூற விரும்புகின்றவர்கள் கூறட்டும். இதற்கு கூட்டமைப்பு ஆலோசனை தெரிவிக்கப் போவதில்லை. எல்லோருடைய ஆலோசனைகளையும் நாங்கள் உள்வாங்குவோம் நிராகரிக்கமாட்டோம்.

யாழ்ப்பாணத்தில் காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது சில பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டு வந்தேன். பல இடங்களில் இராணுவமும் இல்லை மக்களின் குடியிருப்புக்களுமில்லை. ஆனால் வேலி போட்டு அடைக்கப்பட்டிருக்கிறது. அக்காணிகள் யாராலும் பயன்படுத்தப்படவில்லை.இவ்விடயம் தொடர்பில் நான் ஜனாதிபதியைச் சந்தித்து இராணுவம் பயன்படுத்தாத காணிகளை உடனே விடுவியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு அமையவே அண்மையில் காணிகள் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரப்படுகின்றன.

வலிகாமம் உள்ளிட்ட முழுப்பிரதேசங்களில் இவ்வாறு இருக்கும் காணிகளை அதானிக்க முடிந்தது. இவ்வாறு விடுவிப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதன் நிமித்தமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய ஜனாதிபதியைப் பொறுத்தவரை சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டுமென்பதை வெளிப்படையாக கூறிவருகிறார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதே போன்றே முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டிவருவதானால் நல்லதொரு சூழ்நிலை உருவாகியுள்ளது. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி வாழும் சூழ்நிலையொன்று உருவாக்கப்பட வேண்டும். அதிகாரங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே அரசாங்கத்திடமிருந்து எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காமல் எல்லாவற்றையும் புறந்தள்ளி எமது மக்கள் இருந்து வந்துள்ளார்கள். எம்மக்கள் எவ்வளவோ விடயங்களை இழந்துள்ளார்கள், அழிந்துள்ளார்கள். நல்லதொரு அரசியல் தீர்வைப் பெற வேண்டுமென்பதற்காகவே அனர்த்தங்களை அனுபவித்து அட்டூழியங்களைப் பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். எனவே அதிகாரம் அற்ற தீர்வு கிடைக்குமாயின் அத்தீர்வினால் எந்தப் பலனையும் எமது மக்கள் அடையப் போவதில்லை.

இது விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாரம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. ஜனாதிபதி திறந்த மனதுடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அனைத்து சமூகங்களையும் திருப்திபடுத்த வேண்டும், நல்லிணக்கம் காணப்பட வேண்டுமென்பதற்காக உழைத்து வருகின்றார். எந்தவொரு தீர்வும் 2016 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு வரப்பட வேண்டும், கொண்டு வரப்படவில்லையாயின் தமிழர் பிரச்சினைக்கு முடிவு காணப்படமுடியாத சூழ்நிலையே இலங்கையில் உருவாகும். இக்கருத்தை நான் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடனேயே எடுத்துக் கூறியுள்ளேன். பிரதமருக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன்.

இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் நிர்ணய சபைத் தீர்மானமானது நீண்டகால தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உதவும் என நம்புகிறேன். சில நாடுகளில் இனரீதியான, மொழி ரீதியான மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சில ஒழுங்குகள் இருக்கின்றன. வெவ்வேறு இனத்தை, மொழியைச் சார்ந்த மக்கள் தமக்கான சுய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அலகுகள் பிரிக்கப்படுவதற்கு சந்தர்ப்பங்களும் வழிமுறைகளும் உண்டு.

பெல்ஜியத்தில் வடபுலமாக டச் மொழி பேசும் மக்கள், தென்புலமாக பிரான்ஸ் மொழி பேசும் மக்கள், மேற்கு புறமாக ஜேர்மன் மொழி பேசும் மக்களும் இருக்கின்றார்கள். எனவே பிரதேச ரீதியாக இந்த மக்களுக்கு சுயாட்சியுண்டு. பிரான்ஸ் பேசும் மக்கள் மத்தியில் டச் பேசும் மக்களும் டச் பேசும் மக்கள் மத்தியில் பிரான்ஸ் பேசும் மக்களும் கூட வாழுகின்றார்கள். இங்கு இனரீதியாக, மொழி ரீதியாக அதிகாரங்கள் கொண்ட கவுன்சில்கள் உள்ளன. இவ்வித அதிகாரப் பகிர்வின் மூலமாக பிரதேச ரீதியாக மாத்திரமல்ல இனரீதியாக, மொழிரீதியாக அவர்கள் திருப்தி காணும் வகையில் சுயாட்சி வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்று பல நாடுகளில் உண்டு.

இவ்விதமான ஒழுங்கை நாம் மேற்கொள்ள முடியும். பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது வடமாகாணம் ஒரு பிராந்தியம். கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்தியங்கள். மாகாண எல்லைக்கு அப்பால் பிராந்தியங்கள் இணைய முடியாது என்பதுதான் அவ்வெப்பந்தத்தில் கூறப்பட்ட விடயமாகும். மாகாணங்களுக்கு உள் இணையலாமென்பது அதன் சாரம்சமாகும். ஆரம்பத்தில் எவ்விதமாக இணைப்பு மேற்கொள்ளப்பட்டதோ அதே போன்றதொரு நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவினால் இழைக்கப்பட்ட தீங்குகள் புதிய அரசாங்கத்தால் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.

http://varudal.com/2016/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/

  • கருத்துக்கள உறவுகள்

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேணுமெண்டு சும்மாவா சொன்னாங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேணுமெண்டு சும்மாவா சொன்னாங்கள் .

பலம்மிக்க உந்துதல் தான்.....

 

அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்! - சம்பந்தன்

 

இப்போ

இதை தமிழருக்கு சொல்லவேண்டிய அவசியம் என்ன??

யாரோ குடைகிறார்கள்

எல்லாம்  நன்மைக்கே..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் கலைஞரும் ஈழத்தில் சம்பந்தரும் இருக்கும் வரைக்கும் தமிழர்களுக்கு விடிவு கிட்டாது என்பது எனது கருத்து 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று தசாப்த இழப்புக்களைக் கொச்சப்படுத்தும் சுமந்திரன்

01/07/2016 இனியொரு..

எதிர்க்கட்சியற்ற பாராளுமன்றமே இன்று இலங்கையில் நடைமுறையிலுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக வேடமிட்டுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசை மறந்தும் விமர்சித்தது கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நடத்தும் எம்.ஏ.சுமந்திரன் என்ற அமெரிக்க அரசின் உள்ளூர் முகவர் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் தமிழர்கள் மகிழ்ந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் 26ம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் முன்மொழியப்படவிருக்கும் அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக வட-கிழக்குத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் திருப்தியடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுயநிர்ணைய உரிமை அல்லது பிரிந்து செல்லும் உரிமை என்பது தேசிய இனமொன்றின் அடிப்படை ஜனநாயக உரிமை.

மூன்று தசாப்த இழப்பும் நெருப்பும் இலங்கை அரசின் எலும்புத் துண்டுகளுக்காகக் காத்திருப்பதில் முடிவடைந்திருக்கிறது.

இன்று இலங்கையில் நிலவும் தற்காலிக அமைதி, இராணுவ நடமாட்டமற்ற வெற்றிடம் என்பன நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கப் போவதில்லை என்பதை மக்கள் வரலாற்று அனுபவங்களிலிருந்து உணர்ந்திருக்கிறார்கள்.

சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையைக் கூட முன்வைக்க மறுக்கும் சுமந்திரனும் தமிழ்த் தலைமைகளும் ஒன்றிணைந்து இதுவரைகால தியாகங்களையும் இழப்புக்களையும் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.

காலனியத்திற்கு பிந்திய காலம் முழுவதுமான தேசிய இன ஒடுக்குமுறைக்கு அதிகாரப் பரவலாக்கல் தீர்வாகாது. சிங்கள பௌத்த சிந்தனைகொண்ட அதிகாரத்தைப் பரவலாக்குவது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக மற்றொரு அழிவிற்கே அழைத்துச்செல்லும்.

 

http://inioru.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.