Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விராட் கோலியின் கோபத்துக்கு பின்னால் சிம்மராசியா?

Featured Replies

விராட் கோலியின் கோபத்துக்கு பின்னால் சிம்மராசியா?

 

ளத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் தன்னுடைய குணம்,  தனது குடும்பத்திலிருந்தே தனக்கு வந்ததாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுடனான ஜாலி உரையாடலின் போது கோலி இவ்வாறு தெரிவித்தார். மேலும் சச்சினே தான் கிரிக்கெட் விளையாட வந்ததற்கு மிகப்பெரிய காரணம் என்றும் அவர் கூறினார்.

virrraed_vc12.jpg


நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் பேட்டிகளிலும்,  போட்டிகளிலும் மோதிக்கொண்டாலும்,  கோலியும் மேக்ஸ்வெல்லும் சகஜமாகவும் ஜாலியாகவும் உரையாடிக்கொண்டனர்.

இந்திய அணியின் செயல்பாடு, கோலி – ஃபால்க்னர் உரையாடல், சச்சின், ஐ.பி.எல் என மேக்ஸ்வெல் கேட்ட கேள்விகளுக்கு கோலி பதிலளித்தார். களத்தில் தான் தைரியமாக தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதைப் பற்றிக் கேட்டதற்கு,  “அக்குணம் என் குடும்பத்திலேயே இருக்கிறது. என் தந்தை சிம்மராசிக்காரர். அவரும் அப்படித்தான். அதுமட்டுமின்றி டெல்லி கிரிக்கெட்டில் போராடித்தான் முன்னேற வேண்டும். அந்தப் போராட்ட குணமே இதற்குக் காரணம்” என்று கோலி கூறினார்.

ஜேம்ஸ் ஃபால்க்னருடன் தான் களத்தில் பேசியது பற்றிக் கேட்டதற்கு, “நாங்கள் வேடிக்கையாகத்தான் பேசிக்கொண்டோம். நாங்கள் பேசியபோது அநாகரிகமாகவோ, அசிங்கமாகவோ பேசிக்கொள்ளவில்லை. அப்படி நடந்துகொள்ளும்போது நம் முழுத் திறனும் வெளிப்படும். கடைசிப் போட்டியில் நான் கீழே விழுந்தபோது ஃபால்க்னர் கை கொடுத்து என்னை தூக்கிவிட்டார். அவரும் ஜாலியாகத்தான் பேசுவார். இதை நாங்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று சகஜமாகக் கூறினார்.

virrraed_vc3.jpg

சச்சினோடு விளையாடிய நாட்கள் தன்னால் மறக்க முடியாதவை என்றும், தன் வளர்ச்சிக்கு அவர் பெரும் பங்காற்றினார் என்றும் கோலி கூறினார். “என் ஆட்டத்தில் சிறு குறைகள் இருந்தாலும், சச்சின் தானாக வந்து என்னிடம் அதைப்பற்றிப் பேசுவார். அவ்வளவு பெரிய வீரர் ஒரு இளம் வீரரிடம் வந்து பேசவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் சச்சின் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரோடு விளையாடியது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்” என்று நெகிழ்ந்தார் கோலி.

ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர்களின் அனுபவமின்மையும், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரின் அனுபவமின்மையுமே அணிகளின் தோல்விக்குக் காரணம் என்று கோலி கூறினார். ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் எதிரணி வீரர்களிடமும் நட்பு பாராட்ட முடிகிறது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

 
 

இறுதியாக மேக்ஸ்வெல் கேட்ட ‘ரேபிட் - ஃபயர்’ கேள்விகளுக்கு கோலி கூலாக பதிலளித்தார். தனக்குப் பிடித்த பானங்களையும் பொழுதுபோக்குகளையும் கூறிய கோலி,  கிரிக்கெட் வீரர்களில் முரளியை விட வார்னேவும், லாராவை விட சச்சினுமே தனக்கு ஃபேவரிட் என்று கூறினார். பிக் பேஷ் அணிகளில் தான் விளையாடும் மெல்போர்ன் அணி பிடிக்குமா இல்லை தனது பெங்களூர் டீம்-மேட் ஸ்டார்க் விளையாடும் சிட்னி அணி பிடிக்குமா என்று மடக்கிய மேக்ஸ்வெல்லை, சிட்னி தான் பிடிக்கும் என்று சட்டென்று சொல்லி அதிர வைத்தார் கோலி.


இப்பேட்டியின் போது கோலி கூறிய ஒரு வாக்கியம் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது, “சிறு வயது முதலே எனக்குள் ஒரு எண்ணம் இருக்கும். சும்மா கிரிக்கெட் விளையாடிவிட்டு வர எனக்குப் பிடிக்காது. எதிரணியினர் என்னை வீழ்த்தப் போராடவேண்டும். என்னைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டும் என்று நான் எப்பொழுதும் நினைப்பேன்” என்றார். அந்தச் சிறுவயது எண்ணம்தான் இன்று கோலியை இந்த உயரத்தில் நிறுத்தியுள்ளதோ..?!

கோலி, மேக்ஸ்வெல் உரையாடலை முழுமையாகக் காண  https://www.youtube.com/watch?v=1V5iTZsRk-I

 

http://www.vikatan.com/news/sports/58505-kohli-and-maxwells-riveting-chat.art

  • கருத்துக்கள உறவுகள்

 “நாங்கள் வேடிக்கையாகத்தான் பேசிக்கொண்டோம். நாங்கள் பேசியபோது அநாகரிகமாகவோ, அசிங்கமாகவோ பேசிக்கொள்ளவில்லை. அப்படி நடந்துகொள்ளும்போது நம் முழுத் திறனும் வெளிப்படும். கடைசிப் போட்டியில் நான் கீழே விழுந்தபோது ஃபால்க்னர் கை கொடுத்து என்னை தூக்கிவிட்டார். அவரும் ஜாலியாகத்தான் பேசுவார். இதை நாங்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று சகஜமாகக் கூறினார்.

virrraed_vc3.jpgநீங்களும் எங்க‌ன்ட அரசியல் தலைவர்கள் போலத்தான் என்று எங்களுக்கு முதலே தெரியும்....மேடைகளில் உசுப்பேத்தி கதைப்பினம் பிறகு அவையளை கண்டால் கட்டிப்பிடிச்சு உம்மா கொடுப்பினம்.....

  • தொடங்கியவர்
42 minutes ago, putthan said:

 “நாங்கள் வேடிக்கையாகத்தான் பேசிக்கொண்டோம். நாங்கள் பேசியபோது அநாகரிகமாகவோ, அசிங்கமாகவோ பேசிக்கொள்ளவில்லை. அப்படி நடந்துகொள்ளும்போது நம் முழுத் திறனும் வெளிப்படும். கடைசிப் போட்டியில் நான் கீழே விழுந்தபோது ஃபால்க்னர் கை கொடுத்து என்னை தூக்கிவிட்டார். அவரும் ஜாலியாகத்தான் பேசுவார். இதை நாங்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று சகஜமாகக் கூறினார்.

virrraed_vc3.jpgநீங்களும் எங்க‌ன்ட அரசியல் தலைவர்கள் போலத்தான் என்று எங்களுக்கு முதலே தெரியும்....மேடைகளில் உசுப்பேத்தி கதைப்பினம் பிறகு அவையளை கண்டால் கட்டிப்பிடிச்சு உம்மா கொடுப்பினம்.....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டில இதெல்லாம் சக‌ஜமப்பா......

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்தியினை கொண்டு வந்து இணைத்தற்காக நவீனனுக்கு ஒரு சுவப்பு புள்ளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.